Wednesday, September 10, 2008

இரு பொய்யர்களின் மோதல்!


தினமலரும் சன் டிவியும் ஆரம்பத்திலிருந்தே மோதி வருகின்றன. ஒருவர் அந்தரங்கத்தை (அசிங்கத்தை) மற்றவர் அம்பலப்படுத்தி, தமிழ் மக்களுக்கு தங்கள் சுய முகங்களை வெளிப்படுத்தி வருகின்றன.

ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்வதில் இரு நிறுவனங்களுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

குசேலன் நஷ்டம்... மாபெரும் நஷ்டம், மக்கள் பார்க்க வரவில்லை என எழுதியும் பேசியும், தியேட்டர்காரர்களைத் தூண்டிவிட்டும் தன் வயிற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டன சன்டிவியும் அதன் சகோதர பத்திரிகைகளும்.

ஆனால் இன்றைக்கு சன் டிவியில் காமெடி, சிறப்புக் காட்சிகள், பாடல்கள், டாப் டென் என சகலத்திலும் குசேலன்தான் முன்னிலையில் இருக்கிறது.

மக்கள் பார்க்காத படம் என்று பிரச்சாரம் செய்துவிட்டு, இன்று அதே படக்காட்சிகளை கசாப்புக் கடைக்காரன் மாதிரி கூறுபோட்டு விற்று காசு பார்த்துக் கொண்டிருக்கிறது சன் டிவி.
அதேபோல தினமலர் நிர்வாகிகள் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது சன் நிர்வாகம், தினகரன் நாளிதழை தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்ததிலிருந்து. தினமலர் ரமேஷ் எந்த ஓட்டலில் தண்ணியடிக்கிறார் என்பதில் தொடங்கி, அவர் யார் யாரிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது வரை அந்தரங்கமான பல விஷயங்களை அம்பலப்படுத்தி வருகிறது சன்.

இதற்கு சாட்சிகளைத் தயார் செய்வதிலும் கில்லாடித்தனமாக செயல்படுகிறார்கள் சன் குழுமத்தினர்.

அதற்கு நிகராக, சன் நிர்வாகம் மற்றும் அதனைச் சார்ந்தவர்களின் ஊழல்களைப் பட்டியலிடுகிறது தினமலர்.

இப்படி பரஸ்பரம் குற்றச்சாட்டிக் கொண்டிருந்தாலும் இதுவரை ஒருவர் மீது ஒருவர் நேரடியாக போலீஸ் புகார் வரை போகாமலிருந்தனர்.

இதன் அடுத்த கட்டம், நபிகள் நாயகத்தை தினமலர் மோசமாகச் சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்துவிட்டது என்ற பிரச்சாரத்தை சன் டிவி தொடங்கியது. ஒரு நாளைக்கு நூறு முறையாவது இந்தச் செய்தியை ஒளிபரப்பியபடி இருந்தனர் சன் தரப்பில்.
இது தினமலருக்கு எதிராக வட மாவட்ட முஸ்லிம்கள் போராட்டம் நடத்தும் அளவுக்குப் போய்விட்டது.

இப்போது, மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் சன் டிவி செயல்பட்டு வருவதாக தினமலர் போலீஸில் புகார் கொடுத்துள்ளது.

சன் செய்தி ஆசிரியர் ராஜா, சன் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கவும் முடிவு செய்து களமிறங்கியுள்ளது போலீஸ்.

முதல்வர் கலைஞருக்கும் தினமலர் ஆகாத பத்திரிகைதான் என்றாலும், இப்போதைக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கையின் அடிப்படையில், போலீஸின் இந்த நடவடிக்கைக்கு கலைஞர் ஆசி உண்டென்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

இன்னும் சில தினங்களில் இது மிகப் பெரிய மீடியா யுத்தமாகவும் வெடிக்கக் கூடும்.

பத்திரிகை வாங்கமாலேயே நமக்கும் பொழுதுபோகும்!

தினமலர் கொடுத்த போலீஸ் புகார் குறித்த செய்தி:

வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வெளியானது தொடர்பாக பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி ஒளிபரப்பியதாக சன் டிவி மீது தினமலர் நாளிதழ் புகார் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சன் டிவியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வத்தை போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.

தினமலர் நாளிதழின் (சென்னை எழும்பூர் அலுவலகம்) செய்தி ஆசிரியர் பார்த்திபன் சென்னை காவல்துறை ஆணையர் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம் ஒன்று வெளியானது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்த பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.


ஆனால் இது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில், சன் டிவி செய்தி வெளியிட்டது. இது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல் ஆகும். இதுதொடர்பாக சன் டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.

இந்தப் புகார் மனு மீது அரசு வக்கீலின் ஆலோசனை பெற்று சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், 153-ஏ, 505-2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலில் செய்தி ஆசிரியர் பார்த்திபனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாதான் செய்திகளுக்கு முழுப் பொறுப்பு என்று பார்த்திபன் போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ராஜாவுக்கு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பினர். ஆனால் ராஜா வரவில்லை.


இந்த நிலையில் சன் டிவி சார்பில் நேற்றுமத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு கடிதம் தரப்பட்டது. அதில், செய்திகளுக்கு ராஜா பொறுப்பில்லை. நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம்தான் பொறுப்பு என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து முரசொலி செல்வத்திடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது.

முரசொலி செல்வம், மறைந்த முரசொலி மாறனின் தம்பி ஆவார். இவர் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தட்ஸ்தமிழ்

4 comments:

Anonymous said...

Hi Friend,
In this continuous powercut people may have a hard time to watch the serials. So thdeer thigil thiruppangal niraintha intha media war, especially Moron brothers fight and plots are so entertaining. right?

R.Gopi said...

முரசொலி செல்வம், மறைந்த முரசொலி மாறனின் தம்பி ஆவார். இவர் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------

Appadinna, MANJAL KAVIGNAR (MK) nichayamaa, Murasoli Selvam mela action edukka maattaar.......

Anonymous said...

Hi,

You must be knowing that Vikatan apologized to Jayalalitha for publishing that article. I updated my blog about this. Please visit that too.

http://pathivu.wordpress.com/2008/09/11/jv/

Mohan.

Vaanathin Keezhe... said...

Yea... I have seen that stupid 'apology'... will be carried in the next post!