Sunday, September 14, 2008

எச்சரிக்கை -1: இப்போது தேவை ஒற்றுமை!


இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. அந்த வட்டத்தைத் தாண்டி அவரை நேசிக்கிற, அவரால் ஒரு நல்ல மாறுதல் இந்த மாநிலத்தில் ஏற்படும் என நம்புகிற லட்சக்கணக்கான மக்களுக்காக...

இந்தப் பதிவு எத்தனைப் பேரைப் போய்ச் சேரப் போகிறது என்பதல்ல முக்கியம்... சேர்ந்தவர்கள் அனைவரும் தங்கள் நண்பர் வட்டத்தில், பொதுமக்கள் மத்தியில், நான் சொன்னதாகக் கூட அல்ல... தங்கள் கருத்தாகவே இதைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டாலும் கவலையில்லை... ஆனால் நல்ல செய்தியை பரப்ப, பரவ உதவுங்கள்.
ரஜினி ஒரு குரல் கொடுத்தால் போதும்... ஒரு நொடியில் நாட்டின் தலைப்புச் செய்தியே இதுவாகத்தான் இருக்கும். இதில் இத்தனை பீடிகை எதற்கு? என நண்பர்கள் சிலர் பின்னூட்டம் எழுதக் கூடும்.

உண்மைதான்... ஆனால் ரஜினியின் அறிவிப்பு வருவதற்குள் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் ஒரு Preparatory Measures என்று வேண்டுமானால் இதனைக் கருதிக் கொள்ளுங்கள்.

ஏனெனில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்... அல்லது அரசியலைத் தாண்டி இந்த மக்களுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என்பது பலரது கனவு. அந்தக் கனவு கிட்டத்தட்ட நிறைவேறும் சூழல் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

இம்முறை ரஜினி தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பது வெறும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல... தான் என்ன செய்ய வேண்டும் என தன் ரசிகன் எதிர்பார்க்கிறான் என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்காகவும்தான்.

வெறும் விருப்பங்கள் அல்லது கருத்துக்களை மட்டும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சமூக மாறுதலுக்கான முயற்சிகளில் அவர் இறங்க முனைந்தால் உங்கள் பங்களிப்பும் ஒற்றுமையும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இந்த சந்திப்பு.

ரஜினி பொதுவாழ்வுக்கு வருவது சம்பாதிக்க அல்ல... அதற்கு அவருக்கு அரசியல் தேவையில்லை... ‘பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, தொழில் இருக்கு. அதுக்கு இந்தப் புனிதமான அரசியலை ஏன்யா பயன்படுத்தறீங்க?’ என்று அவர் கேட்டது வெறும் சினிமா வசனம் மட்டுமல்ல... மக்கள் அதை அப்படிப் பார்க்கவும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு மனிதர்தான் தங்களுக்கு வழிகாட்டியாக வேண்டும் என 15 ஆண்டுகாலமாகக் காத்துக் கிடக்கிறார்கள்.

எனவே, தன் சொந்த வாழ்க்கைத் தரத்தையெல்லாம் தூரப்போட்டுவிட்டு, தன்னை வாழவைத்த மக்களின் வாழ்வில் ஏதாவது திருப்திகரமான மாறுதலைச் செய்ய முடியுமா... அதற்கான மாற்று வழிகள் இருக்கிறதா என்றெல்லாம் தீவிரமாக யோசித்து சில திட்டங்களை யோசித்து வைத்துள்ளார் ரஜினி. அந்தத் திட்டங்களுக்கு ரசிகர்களைச் சந்தித்த பிறகுதான் முழு வடிவம் தரப்பட உள்ளது.

மன்றத்தினரை மொத்தம் நான்கு நாட்கள் சந்திக்கப் போகிறார் ரஜினி. இந்த நான்கு நாட்களும் நீங்கள் அவரை அணுகும் விதம், உங்கள் மீது அவருக்கும் நம்பிக்கை வரும் விதத்தில் இருக்க வேண்டும். அதற்காக நடிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. முன்கூட்டியே உங்கள் மனங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டால், உங்களின் பக்குவம் அவரது நம்பிக்கையை அதிகரிக்கும்.

உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்களைக் கொண்டு கட்சி ஆரம்பித்து வெற்றிவாகை சூடியதெல்லாம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலம். அன்று பல நல்லவர்களுக்கு மத்தியில் சில புல்லுருவிகள் இருந்தார்கள். இன்றோ நிலைமை தலைகீழ். எதையும் வக்கிரத்தோடு பார்ப்பதே பகுத்தறிவு எனும் வியாதி பரவத் தொடங்கியுள்ளது.

எனவே இந்த முறை அரும்பத் தொடங்கியுள்ள மலரை நாம்தான் வேலியாய் நின்று, அது கனியாகி, விதையாய் மாற துணை நிற்க வேண்டும்...

அதற்கு நடுவில் பல குள்ளநரித்தனங்களை அதிகாரத்திலிருப்போர், அவர்களுக்கு எதிர் வரிசைகளில் இருப்போர் மற்றும் மீடியா செய்ய முயற்சிக்கக் கூடும் . அதற்காகத்தான் இந்த எச்சரிக்கை.

அது என்ன குள்ளநரித்தனம்? என்கிறீர்களா... சற்றே காத்திருங்கள்!

5 comments:

Anonymous said...

"பொதுவாழ்வுக்கு வருவது சம்பாதிக்க அல்ல... அதற்கு அவருக்கு அரசியல் தேவையில்லை... ‘பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, தொழில் இருக்கு. அதுக்கு இந்தப் புனிதமான அரசியலை ஏன்யா பயன்படுத்தறீங்க?’ என்று அவர் கேட்டது வெறும் சினிமா வசனம் மட்டுமல்ல... "
this is a movie dialogue said by the actor which is penned by somebody else.....

Vaanathin Keezhe... said...

konjam adangureengala...

Raja said...

நாம் அடங்க வேன்டும் என்று சொல்ல வேண்டாம். அடக்க தலைவர் வருவார்.

Anonymous said...

abey, one guy says, 'i'm just mouthing the script and don't take it seriously." yet some crazy buggers think that this actor is their saviour.

you ppl are paranoid and in need of strong psychiatry treatment.

Anonymous said...

hi no2(always)actors,
dei thalaivar rasigargal amaithiyaga iruppathal romba adatheenga.avar veliye varattum appuram par tamilnadu athirvathai.ithu ungalukke theriyum anal VADIVEL SOLVATHU MATHIRI ULLE PAYANTHALUM VELIYE EVVALAVU NERAMTHAN NADIPPEERGAL ENRU PARPOM.ENGA MEASSAGEJAI PARTHALAE UNGA UDAMBU OTHARATHU.ENGA THALAIVAR VELIYE VANTHU PESINAL HAHAHA...