Friday, December 25, 2009

கிறிஸ்துமஸ்... சரித்திரத்துக்கும் அப்பால்!


அது
ஒரு அறுவடைக் காலம்… வாற்கோதுமை கதிர்கள் வெண்பனியில் தலை சாய்த்து அறுவடைக்குத் தயாராய் நிற்கும் குளிர் காலம்.

நாசரேத்தின் கன்னி மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ஒருநாள் கடவுளின் தூதர் கபிரியேல் மரியாளின் முன் தோன்றினார். மேலும் படிக்க...

Wednesday, October 7, 2009

Thalaivar releases SP Muthuraman Biography




The biography of veteran film director S P Muthuraman, penned by Ranimaindhan, was released on Tuesday at a simple function in Superstar Rajinikanth's residence in Poes Garden.

Titled 'AVM Thantha SPM', the book was released by B Srinivasan, publisher, ‘Vikatan’ group of magazines and Rajini received the first copy. Film producer AVM Saravanan, VSV of ‘Vikatan’ Prasuram and Ranimaindhan were present on the occasion.

The book vividly describes the experiences of SPM since he joined AVM as an editing apprentice. His rise as an editor, assistant director, director and his experiences with almost all the leading artistes of the 1960s to 90s were thoroughly covered in the book.

The filmmaker has the unique credit of directing a maximum number of Rajinikanth movies (25).

-Sanganathan

Sunday, March 15, 2009

விருதுகளைத் தாண்டிய மகா கலைஞர் இளையராஜா! - பாலமுரளி கிருஷ்ணா

.ஆர் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கினார்… மகா சந்தோஷம். அதற்காக மற்ற கலைஞர்களை குறைவாக மதிப்பிடுவது அறியாமை. இளையராஜா என்ற மகா கலைஞன் பிறக்காமல் போயிருந்தால் தமிழ் சினிமா இசையே தெரியாமல் போயிருக்கும். அவரும் எம்எஸ்வியும் இன்னும் எத்தனையோ மேதைகளும் விருதுகளையே வென்றவர்கள். அவர்களை யாரோடும் ஒப்பிட வேண்டாம், என்று கூறியுள்ளார் கர்நாடக இசை மேதை டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா.

கர்நாடக இசை கலைஞரும், திரைப்பட பாடகருமான பாலமுரளி கிருஷ்ணா 40 வருடங்களுக்கு பிறகு ‘கதை’ என்ற படத்தில் பாடகராகவே நடித்து வருகிறார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 40 வருடத்துக்கு முன்பு ‘பக்தபிரகலாதன்’ என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தேன். அது புகழ்பெற்றது. பிறகு வந்த வாய்ப்புகள் அனைத்தும் நாரதர் வேடங்களாக வந்ததால் மறுத்துவிட்டேன்.

இப்போது ‘கதை’ படத்தில் நான் பாடிய பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அந்த பாடலை பாடுவது போன்று நடிக்கிறேன். சினிமாவில் நடித்தது குறைவுதான். காரணம் என் முழு கவனமும் இசையின் பக்கம் இருந்தது. இப்போது நிறைய நேரம் இருக்கிறது. நல்ல கேரக்டரோடு வாய்ப்பு தந்தால் தொடர்ந்து நடிப்பேன்.

யாரையும் யாரோடும் ஒப்பிட வேண்டாம்!

ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியது பற்றி நிறைய கேட்டு விட்டார்கள். நானும் நிறைய சொல்லிவிட்டேன். இந்த விஷயத்தில் நான் அதிகம் சங்கடப்பட்டது விருது பெற்ற ரஹ்மானோடு இளையராஜாவையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு வந்த செய்திகள் மற்றும் அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகள்.

ரஹ்மான் ஒரு இளம் மேதை. அவர் ஆஸ்கர் விருது வாங்கியது எல்லாருக்கும் பெருமையான விஷயம்தான். ஆனால் அதற்காக மற்ற மேதைகளை சிறுமைப்படுத்தும் போக்கு, உண்மையான இசை ரசிகர்கள் செய்யும் வேலையல்ல.

இசை பொதுவானது. யாருக்கும் பட்டா போட்டுக் கொடுத்து விடவில்லை. ஆனால் தனக்குத் தெரிந்த வித்தையை மட்டுமே விஸ்தாரமாகக் காட்டிக் கொண்டிருக்காமல், இசையின் இலக்கணத்தை மீறாமல் சாதனைகள் படைத்துக் கொண்டிருப்பவர் ராஜா. அவருக்கு விருதுகள் ஒரு பெரிய விஷயமல்ல. விருதுகளைத் தாண்டிய மகா கலைஞன் அவர். நியாயமாக இப்போது உலகின் உயர்ந்த இசை விருதுகள் அவரைத் தேடி வரவேண்டும்.

இன்னொரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். உலகின் அனைத்து இசைக்கும் ஆதி இந்திய இசையே. இங்கிருந்துதான் சகலமும் ஆரம்பம். ஒரு இந்திய இசையமைப்பாளருக்கு தெரிந்த ஆத்மார்த்தமான இசையை வெளிநாட்டுக்காரனால் தரமுடியாது.

நான் உலகின் பெரும்பாலான இசையைத் தெரிந்து வைத்திருக்கிறேன். பல மொழிகளில் பாடியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இந்திய சாஸ்திரிய இசைக்கு இணையில்லை. அந்த சாஸ்திரிய இசையில் கரை கண்டவர் இளையராஜா என்றார் பாலமுரளி கிருஷ்ணா.

இளையராஜாவின் இசையில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்… என்ற காலத்தால் அழியாத இனிய பாடலைப் பாடியவர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோவை வெளியி்ட்டவரும் அவரே.

குறிப்பு: தட்ஸ்தமிழில் வந்த கட்டுரை இது. ஒரு விஷயத்தை நண்பர்கள் கவனிக்க: இளையராஜா மற்றும் ரஹ்மான் இருவரின் நலம் விரும்பி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. யாரையும் யாரோடும் ஒப்பிடக்கூடாது என்பதே அவரது இந்தப் பேட்டியின் நோக்கமாக இருந்துள்ளது. ரஹ்மானை இளம் மேதை என்றே அவர் வர்ணிக்கிறார். எனவே கருத்து எழுதும் முன் இவற்றைக் கவனத்தில் கொள்வது நலம்.

Tuesday, March 3, 2009

Cinema industry should stay away from Politics!- Rajini

Please don’t divide us. We are living like brothers. Please don’t bring politics into cinema,' this was the fervent appeal by superstar Rajnikant.

His words were welcomed with thunderous applause and shouts by the crowd on Monday, the second day of the platinum jubilee celebrations of Kannada cinema. As many as 108 personalities from various segments of the industry were felicitated.

The amity and effervescence of personalities from the Kannada, Telugu and Tamil industries sent a collective message — art transcends boundaries, languages and cultures. Rajnikant, Dasari Narayana Rao, Jayaprada, Prakash Rai, Prabhudeva and Rama Naidu shared the dais with the Kannada film fraternity and spoke in one voice against politicization of cinema.

'Politics is like an ocean, while film industry is a pond. If the ocean can’t solve its problems, how can a small pond do it?' asked Rajnikant. On Sunday, Kamal Haasan had appealed to keep politics away from cinema.

One person was sorely missed during the celebrations: Rajkumar. Every speaker remembered and praised him, from Jayaprada to Prakash Raj to ministers Shobha Karandlaje and Katta Subramanya Naidu.

Rajnikant, who was present till the end of the three-hour programme, advised Kannada film-makers to make films based on novels and stories available in Kannada.

'The industry has produced monumental films based on novels of writers like Ta Ra Su and Indira. There are so many great works by Kuvempu, Shivaram Karanth and Bendre. I don’t know why they are not being utilized. It makes me sad.'

RAJNI’S WISH TO PLAY AS DALAWAYI!

The Tamil superstar expressed his desire to work in a Kannada film. “I want to act in Dalawayi Muddanna. It suits my character. I love that character. I don’t know when I will be able to do it. I don’t know when God wills,’’ said Rajnikant.

-Sanganathan

திரையுலகில் அரசியல் வேண்டாம்! - ரஜினி







திரையுலகில் அரசியல் வேண்டாம்! - ரஜினி

தயவுசெய்து தமிழர் - கன்னடர் என திரையுலகில் அரசியலைக் கலந்து விடாதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்களாக இருப்போம், பிரிவினை வேண்டாம், என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினியின் இந்த வார்த்தைகளை கூடியிருந்த மொத்தக் கூட்டமும் பெரும் கைத்தட்டலோடு வரவேற்றது.

கன்னடத் திரையுலகின் 75 வது ஆண்டு விழாவையொட்டி, 'அம்ருத மகோத்ஸவம்' எனும் பெயரில் 3 நாள் பிரம்மாண்ட திரையுலக திருவிழா பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார்.

ரஜினியும் அன்றே கலந்து கொள்வார் எனக் கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசனைத் தவிர தமிழ் திரையுலகிலிருந்து வேறு யாரும் நேற்று கலந்து கொள்ளவில்லை.

ஹைதராபாத்தில் நடந்த தனது நண்பர் மோகன்பாபு மகன் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, இன்று கன்னட திரையுலக பவள விழாவில் பங்கேற்றார் ரஜினி.

அவர் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பது தெரிந்ததும், ஏராளமாய் கூட்டம் திரண்டுவிட்டது, விழா நடக்கும் இடத்தில்.

பெருத்த கரவொலிக்கிடையே மேடையேறினார் ரஜினி. அவருடன் தாசரி நாராயணராவ், ஜெயப்ரதா, பிரகாஷ் ராஜ், பிரபு தேவா மற்றும் ராமா நாயுடு ஆகியோரும் மேடைக்கு வந்தனர்.

பின்னர் ரஜினி பேசியதாவது:

நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லோருமே அண்ணன் தம்பிங்க மாதிரிதான். இந்த அண்ணன் தம்பிங்க அடிச்சிக்கிறதுனால எந்த நன்மையும் இல்லே.

பாருங்க... அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம் மாதிரி. நம்ம சினிமா ஒரு சின்ன குளம் மாதிரி. ஒரு சமுத்திரத்தாலேயே தன்னோட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத போது, அதை இந்த சின்னக் குளம் தீர்த்து வெச்சிட முடியுமா?

அதனால அரசியலை விட்டுடுங்க... சினிமாக்காரங்க சினிமாக்காரங்களா ஒத்துமையா இருப்போம். இதுக்காக ஜனங்க பாவம் சண்டை போட்டுக்கக் கூடாது. அவங்க கஷ்டப்படக் கூடாது. அதுதான் முக்கியம்.

தரமான படங்களை எடுங்கள்!

கன்னட திரையுலகுக்கு நான் சொல்லிக்க விரும்பறதெல்லாம், நல்ல சினிமா, நாவல்களை அடிப்படையாகக் கொண்ட சினிமா எடுங்க. தா ரா சு, இந்திரா போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளை மையமா வச்சி எவ்வளவோ நல்ல படங்கள் தர முடியும். முயற்சி பண்ணுங்க.

குவெம்பு, ஷிவ்ராம் காரத் மற்று பெண்ட்ரே போன்ற சிறந்த இலக்கியவாதிகளின் படைப்புகளை நல்ல படங்கள் எடுக்கப் பயன்படுத்திக்குங்க. இத்தனை வருஷமா இதையெல்லாம் ஏன் நீங்க செய்யலேன்னு புரியல. அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். ஒரு ரசிகனா, கலைஞனா எல்லா மொழிகள்லேயும் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்படணும் என்று விரும்புக்றேன்.

கன்னடத்தில் நடிப்பேன்!

எனக்கும் ஒரு கன்னடப் படத்துல நடிக்கணும்னு ஆசையிருக்கு. அப்படி நடிச்சா, 'தளவாய் முத்தன்னா' பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் அந்த கேரக்டர். எனக்கு ரொம்ப பிடிச்ச பாத்திரமும் கூட. ஆனால் இந்தப் படத்தை எப்போ பண்ணுவேன், எந்த நேரத்தில் அதற்கு கடவுள் உத்தரவு வரும்னு தெரியல... பார்க்கலாம்!" என்றார் ரஜினி.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடியும் வரை கிட்டத்தட்ட 3 மணி நேரம் அரங்கிலேயே இருந்தார் ரஜினி. இதனால் கூட்டமும் கடைசி வரை கலையாமல் இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபிக்கள் அனைவரும் ரஜினி சொன்ன கருத்தை வளியுறுத்திப் பேசினர். இனி அரசியல் கலப்பின்றி திரையுலகம் இயங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

விழாவில் நடிகை லட்சும், நடிகர் - இயக்குநர் பிரபுதேவா உள்ளிட்ட கலைஞர்களை ரஜினி கவுரவித்தார்.

வாய்ப்புக் கிடைத்தால் வன்னிக்கு மீண்டும் செல்வேன்!

வாய்ப்புக் கிடைத்தால் வன்னிக்கு மீண்டும் செல்வேன்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நான் சந்தித்தது பகிரங்கமான ஒன்று. அரசுக்கு கடிதம் எழுதிவிட்டேதான் வன்னிக்குச் சென்றேன். வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் செல்வேன், என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இணைந்து காணப்படும் புகைப்படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கட்டிடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு புகைப்படத்தில் விடுதலைப் புலிகளின் சீருடையை அணிந்தபடி வைகோ பிரபாகரனுடன் நின்று கொண்டு குறி பார்ப்பது போல உள்ளதாக தெரிகிறது. மற்றுமொரு புகைப்படத்தில் விடுதலைப் புலிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் வைகோ உரையாற்றுவது போலவும் இருப்பதாக கூறப்படுகிறது.

உண்மையில் இந்தப் படங்கள் எதுவும் இப்போது எடுக்கப்பட்டவை அல்ல. வைகோ திமுகவில் இருந்தபோது படகு மூலம் வன்னிககுச் சென்றபோது, பிரபாகரனுடன் எடுத்த படங்கள் இவை. இவற்றை இப்போது புதிதாக வெளியிடுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இலங்கை ராணுவம்.

இந்த சூழ்நிலையில் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து வைகோ, நேற்று மாலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜெயில் வாசலில் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

"பிரபாகரனுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த படத்தை வெளியிட்டு உள்ளனர். அவை பழைய படங்கள். இருந்தபோதிலும் அந்த படங்கள் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வன்னி பகுதிக்கு செல்வேன். விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்று அரசியல் நடத்தினால் அது விபச்சாரத்தை விட மோசமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பிரசாரத்தை பாளையங்கோட்டை ஜெயில் வாசலில் இருந்து தொடங்குகிறேன், என்றார்.

Monday, March 2, 2009

அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வாங்க வைகோ! - மணிவண்ணன்


திருப்பூர்: ஜெயலலிதா என்ற மாயையில் இருந்து மதிமுக விலக வேண்டும் என்று இயக்குனர் மணிவண்ணன் கூறினார்.

திருப்பூர் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் 'நாதியற்றவனா ஈழத்தமிழன்?' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மணிவண்ணன் பேசுகையில்,

கலைஞர் பேனா முனை என்பது வாள் என்பார். அந்த வாள் சொந்தகாரனை குத்தி கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் இனம் வாழும் பகுதி சவக்காடாக உள்ளது.

திரைப்பட இயக்குனர் சீமான் உணர்ச்சிகரமாக பேச கூடியவர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் என்று கலைஞர் கூறுகிறார். இந்த காமெடியை படத்தில் கூட வைக்க முடியாது.

தமிழக சட்டம்-ஒழுங்கை மத்திய அரசு கையில் வைத்து இருக்கிறது என்றால் கலைஞர் திமுகவை கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து விடலாம்.

ஈழத் தமிழர்களுக்காக மதிமுக குரல் கொடுத்து வருகிறது. ஆனால் ஜெயலலிதாவுடன் கூட்டணி வகிப்பதால், அரசியல் நிர்பந்தம் காரணமாக இலங்கை தமிழர் பிரச்சினையில் மதிமுக செயல்படுவதில் தடைகள் உருவாகி வருகின்றன.

இதன்காரணமாக இவ்வளவு காலம் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பாடுபட்டு வந்த மதிமுகவும் பழிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். ஜெயலலிதா என்ற மாயையில் இருந்து மதிமுக விலக வேண்டும் என்றார்.

நாடகமாடுகிறார்கள் - நெடுமாறன்!

கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன் பேசுகையில், உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களும் போலீசாரும் மோதிக் கொண்டது, திட்டமிட்ட நாடகமே.

ஈழ தமிழர்களுக்காக இங்கு யார் போராட்டம் நடத்தினாலும் எனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று கலைஞர் புலம்புகிறார். நாங்கள் உங்கள் ஆட்சியை கவிழ்க்க போராடவில்லை, ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் போராடவில்லை என்பதால் தான் இந்த இயக்கத்தை உருவாக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

ஈழத் தமிழர்களுக்கான எங்களுடன் நீங்கள் சேர்ந்து போராடினால் இன்னும் 100 ஆண்டு காலம் நீங்களும், உங்கள் கட்சியினரும் ஆட்சியில் நீடிக்க முடியும். உங்கள் மீது ஒரு துரும்பு கூட விழாமல் நாங்கள் பாதுகாப்போம்.

இலங்கை தமிழர் பிரச்சனையை வக்கீல்கள், போலீசார் மோதலை நடத்தி திசைதிருப்பி கொச்சைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் நீதிமன்ற வரலாற்றில் அழியாத ஒரு சம்பவமாக இருக்கும்.

ஒருநாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் தங்கபாலு கூறுகிறார். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இனவெறி தாக்குதல் நடந்தபோது, இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு தென்னாப்பிரிக்காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்திரா காந்தி ஆட்சியின் போது வங்கதேச பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியவில்லையா?

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது மனிதாபிமான பிரச்சினையாகத்தான் உலக நாடுகள் பார்க்க வேண்டும். இந்திய துறைமுகங்கள், விமானத் தளங்கள் மூலம் பல்வேறு நாட்டில் இருந்து ஆயுத உதவிகள் இலங்கைக்கு செல்வதை தடுத்து நிறுத்தினாலே இலங்கையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும்.

நாடாளுமன்றத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து ஒரு காங்கிரஸ் எம்.பி கூட வெற்றி பெற்று சென்று விடக்கூடாது. காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினருக்கும் இதை அறிய செய்ய வேண்டும் என்றார் நெடுமாறன்.