Monday, September 8, 2008

ரஜினி - ஒன் மேன் இண்டஸ்ட்ரி!


ரஜினி என்பவர் ஒரு தனிப்பட்ட நடிகர் இல்லை. அவரைச் சுற்றித்தான் இந்த திரையுலகமே இயங்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார், ஒரு சின்ன அறிவிப்பு மூலம்!

எந்திரன் – தி ரோபோ என்ற பெயரில் ஒரேயொரு அறிவிப்புதான் வெளிவந்திருக்கிறது இதுவரை. அதற்குள் ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு புத்துணர்ச்சியோடு நிமிர்ந்து நிற்பதைப் பார்க்க முடிகிறது.

திட்டிய வாய்களெல்லாம் மீண்டும் ரஜினி புகழ்பாட தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதை நமுட்டுச்சிரிப்போடு வேடிக்கை பார்க்கத் தயாராகி விட்டனர் ரஜினி ரசிகர்கள்.

அய்ங்கரன் – ஈராஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றன. ஈராஸ் நிறுவனத்தின் பங்குகள் சர்வதேச பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. அறிவிப்பு வெளியான கையோடு அதன் பங்கு மதிப்பு 2.5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் ஐங்கரன் நிறுவனத்துக்கு வாழ்த்துக்களும் வர்த்தக விசாரிப்புகளுமாக போன் கால்கள் வந்த வண்ணமுள்ளன.

ஆனால் குசேலனில் நடந்த எந்த தவறும் இந்தப் படத்தில் நடக்காமல் கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றனர் அய்ங்கரன் நிறுவனத்தினர்.

இந்தப் படம் வழக்கமான விநியோக முறையில் தரப்படாது என்றே தெரிகிறது. அய்ங்கரன் இந்தப் படத்தை உலகம் முழுக்க தானே வெளியிடப் போகிறது. அதுமட்டுமல்ல, இது வரை தமிழ்ப் படங்களே வெளியாக பல நாடுகளிலும் கால்பதிக்கப் போகிறது ரஜினியின் எந்திரன் - தி ரோபோ.

இதுகுறித்து அய்ங்கரன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன் இப்படிக் கூறுகிறார்:

“நீங்கள் சொல்வது சரிதான். ரஜினி தனி மனிதர் அல்லது தனிப்பட்ட நடிகர் கிடையாது. அவர் ஒன்மேன் இண்டஸ்ட்ரி... அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரோபோ இந்திய சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம். இதற்கு மேல் நான் எதுவும் சொல்லக் கூடாது. அவரது தீவிர ரசிகர்களில் ஒருவனாக பல ஆண்டுகள் அவரை ரசித்தவன், அவரது படங்களை விநியோகித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். ரஜினிக்கு ஈடு இணை கிடையாது...!”

8 comments:

kppradeep said...

Hi,
Arunpandian is correct. He is the industry as far as kollywood is concerned. Just one movie from him will rejuvenate the whole industry. The evil also get benefited in the sense they can write what ever comes to their mind as he will ignore all those rubbish. And as long as we are all there-we will buy anything with thalaivar name in the cover,they will have good business.
What happened in kuselan was we did not get enough of him. Though thalaivar said he is there only in 25% of the movie, we went expecting full meals but got only a beeda.
Endiran will be unlimited meals starting from soup to beeda

Anonymous said...

Superb Posting!!..Thank you Sir.. hats of too you.

Anonymous said...

//ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு புத்துணர்ச்சியோடு நிமிர்ந்து நிற்பதைப் பார்க்க முடிகிறது. //

Ama ama ellarum sonnanga.Kuselan arambikkum podum ippadithan ninudame!!

Raja said...

ஜெயா,தியேட்டர் உரிமையாளர்களுக்கு 8-10 கோடி பணம் திருப்பி கொடுத்தால் 63 கோடிக்கு விற்ற படம் எப்படி நஷ்டமாகும். அப்ப 3 வாரத்து வசூல் கணக்கை தெரிந்து கொள்ளூங்கள். கெளரவ வேட படமே இவ்வளவு வசூல். குசேலன் படம் தான் இன்றைய மீடியாவுக்கும் தீணி.

Anonymous said...

இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் ‘மட்டுமே’ உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்…. ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்…. ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை…. இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்

Anonymous said...

super star rocks !!
thalivaa you are one and only super star.

Anonymous said...

your blog is loading very slow. try to change template. and move the tamilmanam tool bar to footer. then your site will be fast

Anonymous said...

jaya
yen aduthaveetai ottu kekkura velai. eppo u r talking something against Rajini, by the title y know this is his nes, y should have ignored reading this news. Antha alavu decency......hm m aama yaaru sonnanga Kuselan padathappo ippadi more over yeyya 6 -6.5 crorers la produce panna padam 1weekla 20crorers Saimeea's account vasool senja athu failure-a appdinnaneenga yaroda fannu sonnenganna enga friendkitta official stast-oda list of so called success films with rajini's sumaar pictures-oda tharachchollrom.