Showing posts with label Eanthiran - The Robot. Show all posts
Showing posts with label Eanthiran - The Robot. Show all posts

Saturday, December 20, 2008

எந்திரன்... சன்... சில பார்வைகள்!

ந்திரனை சன் குழுமம் வாங்கிவிட்டது!

இந்தச் செய்திக்கு எழுந்துள்ள எதிர்வினைகளைப் பாருங்கள்...

ரஜினி சன் நிறுவனத்திடம் பணிந்துவிட்டார்.... சன் குழுமமும் அதன் பத்திரிகைகளும் இனி ரஜினிக்கு ஜால்ரா அடித்து சம்பாதிக்கப் போகின்றன... சன் குழுமத்தைத் திட்டிய நீங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள்?

இந்த மூன்று கேள்விகளுக்குமே இனி அர்த்தமில்லை.

காரணம் இந்த ஒப்பந்தத்தை முன்நின்று முடித்துக் கொடுத்துள்ளவர் ரஜினி. அவரே இதைப் பற்றிக் கவலைப்படாத போது, வேறு யார் அதுபற்றி விசனப்படுவதும் அபத்தம்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒரு முக்கிய பிரமுகரின் விளக்கத்தைத் தரவிருக்கிறேன், அவர் அனுமதி கிடைத்தபிறகு.

ரஜினிக்கு தெரியாததையா ரசிகர்கள், ஆதரவாளர்கள் எனும் பெயரில் நீங்கள் சொல்லப் போகிறீர்கள்!

ரசிகர்கள் வருத்தப்படுவதற்கு இதில் ஒன்றுமே இல்லை. மேலே நாம் குறிப்பிட்ட இந்தக் கேள்விகள் ரஜினிக்குள் எழுந்திருக்காதா... அல்லது இவற்றைப் பற்றி யோசிக்காமலா ரஜினி கலாநிதி மாறன் வீட்டுக்குப் போயிருப்பார்!

நாம் ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயம் பற்றி தெளிவாகக் கூறியிருக்கிறோம்.
ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அவரது மிகச் சிறந்த நடிப்பை, ஸ்டைலை, நகைச்சுவையை, அதிர வைக்கும் ஸ்டன்ட் காட்சிகளைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் மட்டும்தான் ஒரு நல்ல ரசிகனுக்கு இருக்க வேண்டும்.

இதைத்தான் ரஜினியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் எல்லை தாண்டாமல், ரஜினி என்ற நடிகருக்கான ரசிகர்களாக இருங்கள் என்பதுதான் அவர் கொள்கை. அவர் அரசியலுக்கு வெளிப்படையாக வரும்போது தொண்டர்களாக மாறிக் கொள்ளுங்கள்...

அதைவிட்டுவிட்டு, அவர் எப்படி இதில் கையெழுத்திட்டார்... அப்போது யார் யாரெல்லாம் கூட இருந்தார்கள். ரஜினிக்கு இதில் எவ்வளவு பங்கு... அது மொத்தத்துக்கும் வரி கட்டினாரா... இதில் அவர் குடும்பத்தாருக்கு திருப்தியா...கலாநிதி மாறனுடன் கைதட்டி சிரித்துக் கொண்டிருக்கிறாரே அது ஏன்?

-இப்படியெல்லாம் தோண்டித் துருவிக் கொண்டிருப்பது ஒரு ரசிகனின் வேலையல்ல... அந்த உரிமையை அவர் மீடியா உள்பட யாருக்கும் தந்துவிடவில்லை. இவை ரசிகன் என்ற போர்வையில் சிலர் செய்யும் அதிகப்பிரசங்கித்தனங்கள்.

அடுத்து சன் குழுமம் குசேலனுக்கு செய்ததை மறந்துவிட்டாரா ரஜினி?

ஒருமுறை நடிகர் அஜீத் இப்படிக் குறிப்பிட்டார்:

“ரஜினி சார் மாதிரி எதையும் தொலைநோக்குப் பார்வையோட, ரசிகர்களை மட்டுமே மனசுல வச்சிக்கிட்டு முடிவு எடுக்கும் பக்குவம் நமக்கில்லை.

அவர் என்னிடம் சில நகைச்சுவை நடிகர்களைக் குறிப்பிட்டு, அவங்கெல்லாம் எனக்கு எதிரா என்னென்ன பேசினாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனால் நமக்கு ரசிகர்கள்தான் முக்கியம். அவங்க ஏமாந்துடக் கூடாது. இவர் நம்மாகூட சேர்ந்து காமெடி பண்ணியிருந்தா நல்லாருக்குமே என பேச வச்சிடக் கூடாது. அதுக்காகத்தான், நானே சிலரை அழைத்து என் படத்தில் நடிக்க வச்சேன். நீங்களும் இதை மனசுல வச்சிக்கிட்டு, எந்த காமெடியன் கூடவும் பிரச்சினை வச்சிக்காதீங்க... எல்லார் கூடவும் சேர்ந்து நடிங்க...” என்றார்.

இதுதான் ரஜினியின் மனது. எல்லாருக்கும் பொதுவான, ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றையே அவர் செய்கிறார்.

தனது லட்சியப் படமான பாபாவுக்கு எதிராக ராமதாஸ் செய்ததையே மறந்து, மீண்டும் ராமதாஸ் மற்றும் அவர் மகனிடம் நட்பு பாராட்டியவர் ரஜினி. யோசித்துப் பாருங்கள்... ராமதாஸ் பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் பாபா எத்தகைய படமாக திகழ்ந்திருக்கும் என்பதை!

அடுத்து குசேலன் விவகாரம்... அந்த விவகாரத்தில் சன் நடந்து கொண்டது தவறு என்று எழுதிய நாம், என்ன விரும்பினோம்? சன் குழுமம் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றுதானே... இதோ இப்போது அவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டே தீர வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ரஜினியின் புகழைப் பரப்பும் வலுவான மீடியாவாக சன், தினகரன் மாறும்போது அதில் ரசிகர்கள் கஷ்டப்பட என்ன இருக்கிறது...

இன்னொன்று இந்த முடிவை யாரோ ஒருவர் வந்து திணிக்கவில்லை... இது ரஜினி எடுத்த முடிவு... அந்தப் படத்துக்கு எது நல்லதோ அதை ரஜினி செய்திருக்கிறார்.

சன்-தினகரன் குழுமத்தை அவரே ஏற்றுக் கொண்ட பின், மேற்கொண்டு அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. அப்படியே இருந்தாலும், இந்த நேரத்தில் தன் சார்பாக பதில் சொல்லுங்கள் என்று ரஜினி யாருக்கும் உத்தரவிடவில்லை!

ஒரு பிரச்சினையின்போது பொதுவாக நியாயத்தைச் சொல்வது இயல்புதான். குசேலன் பிரச்சினையில் மீடியா செய்த தவறை அப்படித்தான் நாம் சுட்டிக் காட்டினோம்.
ஆனால் ஒரு வர்த்தகத்தின் இடையில் புகுந்து அதே நியாயத்தைப் பேச முடியாது.
இந்தியாவின் மிகச் சிறந்த படமாக, உலகத் தரத்தில் தயாராகும் எந்திரன் சிறப்பாக வரவேண்டும் என அவர் விரும்புகிறார்.

சிவாஜிக்கு கெட்ட பெயர் வந்த போதும் கைகட்டி நின்ற ஏவிஎம், குசேலனைக் கூறு போட்ட போது வாயில் ப்ளாஸ்டரோடு திரிந்த கவிதாலயம்... இவர்களோடு இப்போதும் ரஜினி நட்பு பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார். சொல்லமுடியாது, மீ்ண்டும் கூட நடித்துக் கொடுப்பார். இவர்கள் மாதிரி சன் இருக்காது என்று ஆற்றுதல் பட்டுக் கொள்ளுங்கள்.

படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கிய அவர்கள் நிச்சயம் கல்லா கட்டத்தான் செய்வார்கள். அதற்குத்தானே இவ்வளவு முதலீடு... இதற்கு முன் பாட்ஷா, சந்திரமுகி பரடத்தைப் போட்டு கல்லா கட்டும்போது இருந்த உரிமையை விட இப்போது அவர்களுக்கு அதிக உரிமை வந்திருக்கிறது.

எந்திரன் குறித்து சன்-தினகரன் இனி வெளியிடுவது முற்றிலும் அதிகாரப்பூர்வ செய்தியாகவே இருக்கும். எனவே இப்போதைக்கு ரஜினி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் ஒரே ஆதாரம் சன் குழும மீடியாதான்.

இந்தப் படத்தை ரஜினியே தயாரிதிருக்கலாமே... அவரிடம் இல்லாத பணமா? என்றும் சிலர் கேட்கிறார்கள்.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார்: “எழுதறவன், எந்தக் கவலையும் இல்லாம எழுதிக்கிட்டே இருக்கணும். கரன்சி நோட்டை கையில எடுத்து கணக்கு வழக்குல இறங்கினா அப்புறம் எழுத்துல உள்ள சுவாரஸ்யம் போய்டும்... அதுக்கு நாட்டுல இருக்கு நிறைய உதாரணங்கள்....”

இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நிஜ காரணம் அவரே சொன்னாலன்றி யாருக்கும் தெரியாது. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்... படம் வரும் வரை அதுகுறித்த செய்திகளை என்ஜாய் பண்ணுங்க என்று அவரே நினைக்கும்போது, நாம் எதற்கு அதுபற்றி விவாதிக்க வேண்டும்!

ரஜினி ஆதரவு தளங்களின் நிலை என்ன?

இதில் பெரிய நிலைப்பாடு எடுக்கும் அவசியம் எதுவுமில்லை. சன் குழுமம் எந்திரன் தயாரிப்பாளர். எனவே ரஜினி குறித்த அவர்கள் பார்வை அடியோடு மாறியிருக்கிறது. நேரம் வரும்போது மீண்டும் மீண்டும் யு டர்ன் எடுக்கும். இப்போதைக்கு ரஜினி பற்றி மோசமாக சித்தரிக்க மாட்டார்கள்.

ஆனால் அவர்களின் அரசியல் பார்வை, பிற செய்திகளை வெளியிடும் பாங்கு மாறாது அல்லவா... எனவே அவர்கள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்கள் நம் தளத்தில் தொடரும்.

-வினோஜாசன்

ஹாலிவுட் தரத்தில் ஃபேண்டஸி படம் எந்திரன்! - ரத்னவேலு

எந்திரன் திரைப்படம் மூலம் தன்னுடைய சீரியஸ் பட ஒளிப்பதிவாளர் இமேஜ் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஒள்ப்பதிவு இயக்குநர் ரத்னவேலு.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:

எந்திரன் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே 8 மாதங்களாக பட வேலைகளை பற்றி திட்டமிட்டு வந்தோம். ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும், எந்த லொகேஷன் உட்பட படத்தின் அனைத்து விஷயங்களையுமே தீர்மானித்துவிட்டோம். அதற்கு முக்கிய காரணம், ஷங்கரின் திட்டமிடுதல்தான்.

பெரு நாட்டில் ஒரு பாடல் காட்சியும் பிரேசிலில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கினோம். கோவா, சென்னையில் சில காட்சிகளை எடுத்துள்ளோம். அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நேற்று தொடங்கிவிட்டோம். பெரு பாடல் காட்சிகளின் ஸ்டில்களை பார்த்தவர்கள், ரஜினியை இளமையாக காட்டியிருப்பதாக பாராட்டினார்கள்.

ரஜினியுடன் இப்போதுதான் முதல்முறையாக பணியாற்றுகிறேன். மிகவும் எளிமையானவர். காட்சி நன்றாக வந்தால் உடனே பாராட்டுவார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் இப்படத்தின் மார்க்கெட்டிங் பலம் பல மடங்கு கூடியுள்ளது.

எனவே உலக அளவில் இப்படம் பேசப்படும். சேது, பிதாமகன், வாரணம் ஆயிரம் என சீரியசான படங்களில் மட்டுமே பணியாற்றுவதாக என்னை பற்றி கூறுவார்கள். எந்திரன், ஹாலிவுட் தரத்தில் உருவாகும் ஃபேன்டசி படம். எனவே இப்படம் மூலம் எனது இமேஜ் மாறும், என்கிறார் ரத்னவேலு.

நன்றி: தினகரன்

Friday, December 19, 2008

தினகரனின் இன்றைய 'எந்திரன் ஸ்பெஷல்'!


இனி சன் குழும பத்திரிகைகள் மற்றும் இதர ஊடகங்களில் எந்திரன்தான் கவர் ஸ்டோரி என ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்த ஹைப், நல்லதா... கெட்டதா என்பதை இப்போதே கணித்துச் சொல்வது அபத்தமாகிவிடும். ரஜினியே கூட இன்னும் சில தினங்களுக்கு அமைதியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறார். இதையெல்லாம் எதிர்பார்க்காமலா அவர் சன்னோடு கை கோர்த்திருப்பார்.

எனவே இப்போதைக்கு எந்திரன் குறித்த செய்திகளை ரசித்து அனுபவிப்போம். எந்திரன் – சன் புதுக் கூட்டணி குறித்த பல்வேறு பார்வைகளை விரைவில் தருகிறோம்.

இதோ தினகரனின் இன்றைய எந்திரன் ஸ்பெஷல்!

எந்திரனுக்காக சென்னையில் ஐஸ்வர்யா!

சென்னை, டிச.19: எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் சென்னை வந்துள்ளார்.

இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத மிக பிரமாண்டமான திரைப்படமாக ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

மணி ரத்னம் படத்துக்காக கேரளா சென்றிருந்த ஐஸ்வர்யா ராய், அந்த ஷெட்யூல் முடிந்து, எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார்.

பிப்ரவரி மாதம் வரை எந்திரன் படப்பிடிப்பில் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ரத்னவேலு கவனிக்கிறார்.

அடுத்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.envazhi.com

Thursday, December 18, 2008

‘பொறுத்திருந்து பாருங்க!’ - ரஜினி

ந்திரன் இந்தியாவிலேயே மிகப் பெரிய படம். பொறுத்திருந்து பாருங்க... நான் சொல்றது உங்களுக்கே புரியும் என்றார் ரஜினி.

எந்திரன் படத்தை 150 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு வேலைகளைத் துவங்கின ஈராஸ் நிறுவனமும், அய்ங்கரன் இன்டர்நேஷனலும்.

ஆனால் சர்வதேச நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்ட ஈராஸ், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. இப்படியொரு பிரமாண்ட படத்தை தனித்து நின்று தயாரிக்கவும் அய்ங்கரனால் முடியாது. எனவே மாற்று வழி யோசித்துக் கொண்டிருந்தது அந்நிறுவனம். ஆனாலும் படப்பிடிப்புக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக் கொண்டவர்கள் இருவர்.
ஒருவர் நமது சூப்பர் ஸ்டார்... அடுத்தவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

இன்னொரு பக்கம் படத்தை அய்ங்கரனை விட அதிக செலவில் தயாரிக்கும் பிரமாண்ட தயாரிப்பாளர்களையும் தேடி வந்தார் இயக்குநர் ஷங்கர்.

சில மாதங்களுக்கு முன் ரஜினி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நேரம்...

அவரை தனியாகச் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார் கலாநிதி மாறன். சன் நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்ற பிரிவை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு ரஜினி ஒரு படம் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ரஜினியும் அப்போது, கட்டாயம் படம் செய்யலாம் என்று கூறியிருந்தார்.

(இதே கோரிக்கையை ஸ்டாலின் மகன் உதய நிதியும் இரு ஆண்டுகளுக்கு முன் ரஜினியிடம் வைத்திருந்தார்.)

இப்போது, எந்திரன் படத்தையே செய்யச் சொல்லலாமே, என்ற யோசனை எழ, சன் தலைமைச் செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். அய்ங்கரன் நிறுவனம் செலழித்த தொகைக்கு மேலேயே தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதெல்லாம் நடந்தபிறகு, தீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படிச் சொன்னார் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா:

நாங்கள் இதுவரை, மற்ற நிறுவனங்கள் தயாரிப்பில் இருந்தவற்றை வாங்கி அவர்களது பேனரிலேயே வெளியிட்டு வந்திருக்கிறோம். காதலில் விழுந்தேன், தெனாவட்டு எல்லாமே அப்படித்தான். இப்போது வரவிருக்கும் சிவா மனசுல சக்தி, தீ, திண்டுக்கல் சாரதி, பூக்கடை ரவி எல்லாமே மற்றவர்கள் தயாரித்து எங்களுக்குத் தந்தவை.

ஆனால் முதல் முறையாக சன் நிறுவனம் தனது சொந்த பேனரில் முழுக்க முழுக்க தயாரிக்கும் படம் ஒன்றை அறிவிக்க உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத பிரமாண்ட படமாக அது இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். டிசம்பர் 2-ம் வாரம் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறோம், என்றார்.

சரியாக 15 நாட்களில் இந்த அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் சூப்பர் ஸ்டாரும், அவர் பெயரிலேயே அமைந்துவிட்ட இந்த பட நிறுவனமும்... (குழப்பமாக உள்ளதா... சூப்பர்ஸ்டார்=சன்... சரிதானே!)

இதுபற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியிருப்பதாவது:

சன் பிக்சர்ஸ் பேனரில் ஒரு படம் பண்ணலாம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கலாநிதி மாறன் கேட்டிருந்தார். நிச்சயம் பண்ணலாம் என்று நான் அப்போது கூறியிருந்தேன். இப்போது இந்தப் படம் பண்றோம். அதுவும் அவர்களுடைய முதல் படமா எந்திரன் அமைஞ்சிருக்கு. ரொம்ப ஆச்சயர்யமாயிருக்கு. வெயிட் பண்ணி பாருங்களேன்... நிச்சயம் பெரிய சக்ஸஸ்புல் படமா இந்தப் படம் அமையும்..., என்றார்.

இந்தப் படம் மற்றும் சன் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்களை சன் டிவி தனியாகப் பதிவு செய்துள்ளது. விரைவில் மிகப் பெரிய நிகழ்வாக அதை ஒளிபரப்பக் கூடும்.

குறிப்பு: சன் குழுமத்தின் மீது நீங்கள் வைத்த விமர்சனங்கள் என்னாச்சு என நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதுபற்றி விரிவான பதிவு விரைவில் வரும்.
http://www.envazhi.com

அசத்தும் எந்திரன்! சிறப்புப் படங்கள்!!

அசத்தல் எந்திரன் ஸ்டில்கள்... மனதை அள்ளும் ரஜினி!

ந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அசத்தல் ஸ்டில்களை சன் டிவியும் தினகரனும் இன்று வெளியிட்டுள்ளன.

சன் டிவியில் எப்படி நேற்று முழுக்க ரஜினியின் எந்திரன் சிறப்புச் செய்தியாக இருந்ததோ, அதே போல இன்று முழுக்க தினகரனில் எந்திரன் எட்டுகால தலைப்புச் செய்தி.

இதைத் தவிர இரண்டு பக்கங்களில் எந்திரன் சிறப்புப் படங்கள் (மாச்சு பிக்குவில் எடுத்த பாடல் காட்சிகள்), செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் படங்கள் ரஜினி ரசிகர்களுக்குப் புதியவை அல்லை. ஏற்கெனவே பல தளங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியாகி இருந்தன.

ரஜினியின் தோற்றம் உண்மையிலேயே அசத்தலாக இருக்கிறது இந்தப் படங்களில். பாபாவுக்கு முந்தைய ரஜினியின் தோற்றமும், இளமைத் துடிப்பும் அவர் முகத்தில் தெரிவதைப் பார்க்கலாம்.

ரகசியம் காப்பது ஷங்கரின் உத்தி என்றால், மெகா பப்ளிசிட்டி சன் நிறுவனத்தின் உத்தி.

எனவே செய்திகளுக்கோ ஸ்டில்களுக்கோ பஞ்சமிருக்காது.

இதுகுறித்து சன் தலைமைச் செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா இப்படிக் கூறுகிறார்:
ஷங்கரின் அனுமதியோடு இனி அடுத்தடுத்து, தொடர்ச்சியாக இப்படம் குறித்த செய்திகள் வெளியாகும். எனவே எந்திரன் குறித்த அனைத்தும் அதிகாரப்பூர்வமான செய்திகளாகவே மீடியா தரலாம். நோ மோர் காஸிப்ஸ்!

இது உலக அளவில் சரித்திரம் படைக்கப் போகும் படம், அதில் எந்த அளவும் சந்தேகம் வேண்டாம் என்றார்.

http://www.envazhi.com

Wednesday, December 17, 2008

எந்திரன் - சன் கூட்டு: ரஜினி – கலாநிதி மாறன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ந்திரன் – தி ரோபோ திரைப்படத்தை சன் டிவியின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனும்.

இன்று புதன்கிழமை மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான நாகராஜன் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மற்றும் சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து இதுகுறித்து இறுதி முடிவை அறிவித்தனர்.

இந்த புதிய கூட்டணி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படிக் கூறியுள்ளார்:

‘சன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக எந்திரன் – தி ரோபோ உருவாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே இது இந்தியாவின் மிகப் பெரிய படம். கலாநிதி மாறனுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி!’

கலாநிதி மாறன்:

‘சன் பிக்சர்ஸூக்கு இது மிகப் பெரிய படம். இந்தியாவிலேயே மிகப்பெரிய படமாக எந்திரன் இருக்கும் என உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையடைகிறேன். இந்தப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தைத் தொடும்.’

இயக்குநர் ஷங்கர்:

கலாநிதி மாறனின் சன் டிவியுடன் இணைவதில் பெருமையடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புகளுடன் உள்ள இந்தப் படம், சன் டிவியுடன் சேருவதால், மேலும் எதிர்பார்ப்பு கூடுவதுடன், விளம்பர வெளிச்சமும் உச்சகட்டமடையும்.

செய்திக் குறிப்பை சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பின்னர் பத்திகைகளுக்கு அனுப்பினார்.

ரஜினியும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் சந்தித்துக் கைகுலுக்கும் படம்.


இதோ அந்த அறிவிப்பு குறித்த பத்திரிகைச் செய்திக்குறிப்பு.





-வினோஜாஸன்

எந்திரன் இனி 'சன்' வசம்!

கைமாறியது ரஜினியின் எந்திரன்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!

இது அதிகாரப்பூர்வமான செய்தி...

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான எந்திரன் – தி ரோபோவை அய்ங்கரன் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவியின், சன் பிக்சர்ஸ்.

இன்று மாலை சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனை அவரது இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் கேமராமேன் ரத்னவேலு ஆகியோர் சந்திக்கின்றனர்.

ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தை அய்ங்கரன் நிறுவனம் 150 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய், ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பெரு நாட்டில் உள்ள உலக அதிசயமான மாச்சு பிக்குவில் இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அய்ங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தன. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன் விலகிக் கொண்டது.

இதனால் அய்ங்கரன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.
இந்நிலையில், இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.

பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக்க உறுதி பூண்டுள்ளது.

- நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, September 22, 2008

எந்திரன் : EXCLUSIVE...!!



சீரியஸிலிருந்து ஜில் சினிமாவுக்கு வருவோம்...

இதுவரை கமர்ஷியல் தளங்களில் எதிலும் வராத எக்ஸ்க்ளூசிவ் எந்திரன் படங்கள் இதோ...

இதோ சூப்பர் ஸ்டாரின் எந்திரன் - தி ரோபோவின் அட்டகாசமான எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்கள்.
உடனே ஒட்டு வேலைோ என சந்தேகப்பட வேண்டாம்.

படங்கள் நிஜமானவைதான் என இவற்றை அனுப்பி வைத்தவர்கள் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.

பெருநாட்டின் மாச்சு பிக்கு பின்னணியில் இளமை ததும்பும் ரஜினியும், அழகு தேவதை ஐஸ்வர்யா ராய் பச்சனும் ஆடிப் பாடும் முதல் டூயட்டின் இரு காட்சிப் பதிவுகள்.


திரை வடிவத்தை நினைத்தாலே... ஜிவ்வென்று மனம் பறக்கிறதல்லவா...

இவை அதிகாரப்பூர்வமான ஸ்டில்களா... படத்தில் இடம்பெறுமா என்பதையெல்லாம் ஷங்கர் வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் இந்தப் படத்தின் ரஜினியின் ஹேர் ஸ்டைல், அவரது உடைகள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன.

எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்கும் இந்த ஸ்டில்கள்!

Saturday, September 20, 2008

எந்திரன்: ஹவாயில் இரண்டாவது டூயட்!


சூப்பர் ஸ்டார் ரஜினி – ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கும் எந்திரன் – தி ரோபோ படத்தின் இரண்டாவது டூயட் பாடல் காட்சியை ஹவாய் தீவுகளில் படமாக்குகிறார் இயக்குநர் ஷங்கர்.

எந்திரன் படப்பிடிப்பு இப்போது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களின் எழில்மிகு இயற்கை காட்சிகளின் பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8-ம் தேதி தொடங்கிய எந்திரன் படப்பிடிப்பின் முதல் பகுதி வரும் அக்டோபர் 5-க்குள் முடிவடைகிறது.

அதற்குள் மூன்று பாடல் காட்சிகள் மற்றும் ரோபோ ரஜினியின் வடிவமைப்பு போன்றவற்றை முடித்துவிடும் திட்டத்திலிருக்கிறார் ஷங்கர்.

ஆறு பாடல்கள் இடம்பெற உள்ள இந்தப் படத்துக்கு இதுவரை 3 பாடல்களை போட்டுக் கொடுத்து விட்டாராம் ரஹ்மான். இன்னும் 3 பாடல்கள் மற்றும் ரோபோ ரஜினிக்கான அதிரடி தீம் மியூசிக் என ரஹ்மானுக்கு எக்கச்சக்க வேலை வைத்திருக்கிறாராம் ஷங்கர்.

இப்போதைக்கு ட்ராக் மட்டும்தான் போட்டுக் கொடுத்துள்ளாராம் ரஹ்மான். பின்னர் இந்தப் பாடல்களை லண்டனில் உள்ள தனது விருப்ப ஸ்டுடியோவில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து தரப் போகிறாராம்.

முதல் டூயட் பாடலை தென் அமெரிக் காவில் உள்ள பெரு நாட்டின் புகழ் பெற்ற வரலாற்று நினை விடமான மாச்சு பிக்கு மற்றும் அமேசான் காடுகளில் வைத்துப் படமாக்கிய ஷங்கர், அடுத்த டூயட் பாடலை அமெரிக்காவின் உல்லாச உலகமான ஹவாய் தீவுகளில் வைத்துப் படமாக்கி வருகிறாராம்.

மூன்றாவது பாடல் எந்திரன் ரஜினி பங்கேற்கும் அதிரடிப் பாடல். இது ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது.

Tuesday, September 16, 2008

எச்சரிக்கை -3: ரஜினி... அரசியல்... சத்தியநாராயணா!


இதில் நமது கருத்தென்று எதுவும் இல்லை. ரஜினி மன்றங்களின் தலைவர் சத்திய நாராயணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:

ரஜினி தன் மன்றத் தினரைச் சந்திப்பாரா மாட்டாரா... அல்லது வழக்கமான எதிர்பார்ப்பைக் கிளப்பும் வேலையா இது என்று மீடியாவில் விவாதம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவரான சத்திய நாராயணா கொடுத்திருக்கும் பதில் இது, அதுவும் ரஜினியின் உத்தரவோடு!

இந்நேரம் பல நிர்வாகிகளுக்கு தலைமை மன்றத்திலிருந்து ரஜினியுடனான சந்திப்பு குறித்த உத்தரவு பறந்திருக்கக் கூடும். இன்னும் 20 நாட்கள்தான் உள்ளன, ரசிகர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள.

ரஜினி ரசிகதர்களைப் பொருத்தவரை இந்த தீபாவளி வாணவேடிக்கை முழங்கும் உற்சாகத் திருநாளாகத் திகழ்வது சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகளில் இருக்கிறது. ஆனாலும் சத்திய நாராயணாவின் பேட்டியில் பொதிந்துள்ள உள்ளர்த்தம், அவர்களை இப்போதே தீபாவளி கொண்டாட வைத்துள்ளது.
நல்லது நடக்கட்டும்...

அரசியலில் ரஜினி இறங்க நீங்கள்தான் முட்டுக்கட்டையா...?

...அரசியலில் தலைவர் உடனே இறங்கவேண்டும் என ஆசைப்படும் சில மன்ற நிர்வாகிகள், அதே ஸ்பீடில் தலைவரிடம் இதுபற்றி நான் பேசி ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியல் விஷயத்தில் தன்னிச்சையாக நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம்.

ஆனால், இதை என்னுடைய இயலாமையாகவோ, திட்டமிட்ட மெத்தனமாகவோ சிலர் நினைக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான்.

அரசியலைப் பொறுத்தமட்டில் தலைவர் யாரையும் பாதிக்காத முடிவைத்தான் எடுப்பார். கடைக்கோடி ரசிகனின் நிலைப்பாடு வரை அவர் யோசிப்பார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர் செயல்பட மாட்டார். இதையெல்லாம் புரிந்துகொள்ளாத ஒருசில ரசிகர்கள் ஆதங்கப்பட்டால் நான் என்ன செய்வது?

அக்டோபர் புரட்சியாக, ரொம்ப நாளைக்கப்புறம் ரசிகர்களை ரஜினி சந்திக்கப் போவதாகச் சொல்வது உண்மைதானே…?

உண்மைதான். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளையும் ஒருசேர தலைவர் இதுநாள் வரை சந்தித்ததில்லை. ஆனால், அக்டோபர் முதல் வாரத்தில் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி இருக்கிறார்.
முதல் நாள் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், அடுத்த நாள் இதர மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். எந்திரன் ஷ¨ட்டிங்கால் ஒருசில நாட்கள் தள்ளிப் போனாலும் இந்த முறை தலைவர் கண்டிப்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார். அதில் மாற்றமே இல்லை.

சிரஞ்சீவியைப் போல் கட்சி ஆரம்பிப்பதற்கான முன்னோட்டமாக அந்த சந்திப்பு இருக்குமா?

ஓய்வாக இருக்கிற நாட்களில் தலைவர் முடிந்த மட்டும் மன்றத்தினரைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். ஒரு கட்டத்தில் வந்தவர்களே திரும்பத் திரும்ப வந்ததைக் கண்டு, தன்னை நேரில் பார்க்கவே முடியாது என ஏங்குகிற ஆட்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் எனச் சொல்வார். ஆனால், அதற்குப் பின்னர் தலைவருக்கு ஓய்வு கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.

இப்போது அவர் அனைவரையும் சந்திப்பதாகச் சொல்லி இருப்பதில் எல்லோருக்குமே மிகுந்த சந்தோஷம். ஆனால் அரசியல் குறித்தோ, வேறேதும் விவகாரங்கள் குறித்தோ அவர் என்ன பேசப் போகிறார் என்று இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தலைவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதன்படி நடக்க மட்டும்தான் எனக்குத் தெரியும்., என முடிந்துள்ளது அந்தப் பேட்டி!

ச்சும்மா அதிருதில்ல.... எனும் தலைப்பில் முன்பு வெளியான பதிவை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளவும்!

குறிப்பு: சத்தியநாராயணாவுடன் இரு தினங்களுக்கு முன் நாம் பேசியதன் அடிப்படையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மேலும் சில பதிவுகளும் வரவிருக்கின்றன.

எந்திரன் - அப்டேட்!


ஒரு சுறு சுறு, சூடான எச்சரிக்கைப் பதிவுக்கு முன்... இதோ சூப்பர் ஸ்டாரின் எந்திரன் - தி ரோபோ பற்றிய ஒரு ஜில் செய்தி.

எத்தனை முறை படித்தாலும், என்னதான் கதையாகவே இருந்தாலும் ரஜினி பற்றிய செய்திகளுக்கு இருக்கும் மவுசு தனி. இதை ரஜினி ரசிகர்களை விட நன்கு உணர்ந்திருப்பவர்கள் பத்திரிகைகளும், இதர செய்தி ஊடகங்களும்தான்...

நன்றி- தட்ஸ்தமிழ்

மாச்சு பிக்குவில் ரஜினி – ஐஸ் டூயட்!

பெரு நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான மாச்சு பிக்குவில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் ஆடிப்பாடும் டூயட் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள மிகப் புகழ்பெற்ற இடம் மாச்சு பிக்கு (Machu Picchu). ஐநாவின் யுனெஸ்கோவால் எட்டாவது உலக அதிசயமாக சிறப்பு அங்கீகாரம் தரப்பட்டுள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தலம் இது. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள முதல் படமும் எந்திரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்தபோது செல்போன் காமிராக்களில் படமெடுத்து சிவாஜி பட ரகசியங்களை சிலர் வெளியிட்டதால், மீண்டும் அப்படியொரு தவறு நடக்கக் கூடாது என்பதில் ஷங்கர் கவனமாக உள்ளார். அதனால்தான் பத்திரிகை செய்திக் குறிப்பில் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்துவதாகக் கூறிவிட்டு, இப்போது பிரேசில், பெரு மற்றும் சிலி நாடுகளில் நடத்தி வருகிறார்.

முதல் பாடல் முழுமையாக முடிவடைந்துவிட்டதாம். இரண்டாவது பாடலை ஹாலிவுட் ஸ்டுடியோவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

இது எந்திரன் (ரோபோ) ரஜினி பிரமாண்ட அரங்கங்களின் பின்னணியில் பாடும் அறிமுகப் பாடல் என்பதால் மிகுந்த கவனத்துடன் வடிவைத்துள்ளாராம் ஷங்கர். ராகவா லாரன்ஸ்தான் இதற்கு நடனம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.சிவாஜியில் பட்டையைக் கிளப்பிய அதிரடி... பாடலுக்கு இவர்தான் நடனம் அமைத்திருந்தார்.

அமேசான் நதி மற்றும் மழைக் காடுகளிலிருந்து 100 மைல் தூரத்தில் உள்ள இந்த சரித்திரப் புகழ் பெற்ற இடத்தில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் பாடும் டூயட் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுப் பாடலையும் இங்கு படமாக்கவில்லை ஷங்கர். இதன் இன்னொரு பகுதியை அமேசான் நதிப் படுகையிலும், பிரேஸில் நாட்டில் உள்ள அமேசான் காட்டின் இன்னொரு பகுதியிலும் எடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் படத்தில் ரஜினிக்கு இரண்டு ஓப்பனிங் பாடல்கள். அதே போல ரஜினிதான் படத்தின் வில்லன் கம் ஹீரோ.
முழுக் கதையும் படித்துவிடத் துடிப்பவர்கள் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ படிங்க!!

Tuesday, September 9, 2008

என் இனிய இயந்திரா!


எழுத்தாளர்களில் சூப்பர் ஸ்டார் யாரென்றால், சந்தேகமில்லாமல் அமரர் சுஜாதாதான் என்றே அனைவரும் சொல்வார்கள். அதிகமாகக் கதை எழுதியதால் கிடைத்ததல்ல இந்தப் பட்டம். நடிப்புலக சூப்பர் ஸ்டாரான ரஜினி போலவே, மிகச் சிறந்த மனிதராக அவர் வாழ்ந்ததுதான். வெறும் தொழில் திறமை மட்டுமே யாரையும் உச்சத்துக்குக் கொண்டு வருவதில்லை.

நட்சத்திர எழுத்தாளராக மாறிய பின் சுஜாதா எழுதிய மிகச் சிறந்த விஞ்ஞான – அரசியல் நாவல் என் இனிய இயந்திரா. அநேகமாக தமிழில் எழுதப்பட்ட முதல் விஞ்ஞான நாவல்.

தொடர்கதையாக ஒரு ஆண்டுக்கும் மேல் விகடனில் வெளிவந்த இந்த நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு அனைவரையும் திகைக்க வைத்துவிட்டது.

அதன் பலன், ஊரிலிருக்கிற சிறிய பெரிய எழுத்தாளர்களெல்லாம் ரோபோ கதைகள் என்ற பெயரில் ஏகப்பட்ட கதைகளை எழுதிக் குவித்தனர். மாதாமாதம் பாக்கெட் நாவல்களாக வெளிவந்து ரோபோவை மலிவாக்கத் தொடங்கின.

தமிழ் நாவல் இலக்கியத்தில் பல புரட்சிகளுக்கு முன்னோடி சுஜாதாதான் என்பதால் இதுவும் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது.

மிகுந்த விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருந்த கதையை சட்டென்று ஒரு கட்டத்தில் நிறுத்தினார் சுஜாதா, அதன் இரண்டாம் பாகத்தை ஒரு இடைவெளிக்குப் பிறகு தொடங்குவதாக உத்தேசம் என்ற அறிவிப்புடன்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முற்றிலும் வேறு ஒரு ஸ்டைலில் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார், மீண்டும் ஜீனோ எனும் பெயரில்.

இந்த இரு கதைகளுமே பலருக்கும் நன்கு பரிச்சயமானவைதான். ஆனால் புத்தக வடிவில் படிக்கும் ஆர்வம் குறைந்த ஒரு தலைமுறையுடன்தான் நாம் வசித்துக் கொண்டிருக்கிறோம். எனவே ஆன்லைனில் அந்தக் கதையையோ அதன் சுருக்கத்தையோ சொல்லி, எந்திரன் – தி ரோபோ படத்தின் எதிர்பார்ப்பை எந்த விதத்திலும் குறைக்க விருப்பமில்லை.

ரோபோக்கள் ஆளும் ஒரு யுகத்தில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள், மாற்றங்களை தனக்கே உரிய அங்கத – விஞ்ஞானம் கலந்த நடையில் சுஜாதா எழுதியிருக்கும் அழகே தனி.
தமிழில் கண்ணதாசனுக்குப் பிறகு, அத்தனை வலிமையான புதுமையான நடைக்குச் சொந்தக்காரர் சுஜாதா மட்டுமே.

அதுமட்டுமல்ல... தமிழ் இலக்கிய உலகில் தொடர்கதைகள் துவங்கும் முன் பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது மூன்று தருணங்களில்தான். அவை மூன்றுமே சுஜாதாவின் தொடருக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி கட்அவுட், பேனர் என அமர்க்களத்துடன் துவங்கிய கதை இது (இதற்கும் முன் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம் நாவல்களுக்கும் கட் அவுட் வைத்தனர்).

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நட்சத்திரக் கதை எழுதப்பட்டதே நமது உச்ச நட்சத்திரத்துக்குத்தான் போலும்!

ரஜினியின் இமேஜ் மற்றும் அவரது ரசிகர்களின் விருப்பங்களைப் புரிந்து கொண்டு சிவாஜி எனும் பிரமாண்ட பொழுது போக்குப் படத்தைத் தந்த ஷங்கரும் சுஜாதாவும் கிட்டத்தட்ட ஒருமாத காலம் உட்கார்ந்து ரஜினிக்காகவே இந்த இரு நாவல்களையும் ஒரு திரைக்கதையாக்கினார்கள். கிட்டத்தட்ட வசனங்கள் முழுமை பெறும் தருவாயில்தான் சுஜாதா நம்மை விட்டுப் பிரிந்தார்.

சுஜாதா உருவாக்கிய என் இனிய இயந்திரா திரைக்கதை இன்னும் சற்று செம்மைப்படுத்தப்பட்டு ஹாலிவுட் தரத்துடன், எந்திரனாக வருகிறது.
அதேபோல, எந்திரன் என்ற இந்த தலைப்பை வைத்ததும் மறைந்த சுஜாதாதான். சிவாஜி திரைப்படத்தின் வெள்ளி விழா மேடையிலேயே இதை அவர் ஒரு யோசனையாக அறிவித்து நினைவிருக்கலாம்.
சுஜாதாவை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்திருந்த ஷங்கர், அவருக்கு செலுத்தும் மரியாதையாக ரஜினியின் ஒப்புதலுடன் வைத்திருக்கும் தலைப்பு இது.
தமிழக அரசும் இந்தத் தலைப்புக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

அனைவர் மனதுக்கும் இனிய எந்திரனாக அமையட்டும் இந்தப் படம்!

Monday, September 8, 2008

ரஜினி - ஒன் மேன் இண்டஸ்ட்ரி!


ரஜினி என்பவர் ஒரு தனிப்பட்ட நடிகர் இல்லை. அவரைச் சுற்றித்தான் இந்த திரையுலகமே இயங்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார், ஒரு சின்ன அறிவிப்பு மூலம்!

எந்திரன் – தி ரோபோ என்ற பெயரில் ஒரேயொரு அறிவிப்புதான் வெளிவந்திருக்கிறது இதுவரை. அதற்குள் ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு புத்துணர்ச்சியோடு நிமிர்ந்து நிற்பதைப் பார்க்க முடிகிறது.

திட்டிய வாய்களெல்லாம் மீண்டும் ரஜினி புகழ்பாட தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதை நமுட்டுச்சிரிப்போடு வேடிக்கை பார்க்கத் தயாராகி விட்டனர் ரஜினி ரசிகர்கள்.

அய்ங்கரன் – ஈராஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றன. ஈராஸ் நிறுவனத்தின் பங்குகள் சர்வதேச பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. அறிவிப்பு வெளியான கையோடு அதன் பங்கு மதிப்பு 2.5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் ஐங்கரன் நிறுவனத்துக்கு வாழ்த்துக்களும் வர்த்தக விசாரிப்புகளுமாக போன் கால்கள் வந்த வண்ணமுள்ளன.

ஆனால் குசேலனில் நடந்த எந்த தவறும் இந்தப் படத்தில் நடக்காமல் கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றனர் அய்ங்கரன் நிறுவனத்தினர்.

இந்தப் படம் வழக்கமான விநியோக முறையில் தரப்படாது என்றே தெரிகிறது. அய்ங்கரன் இந்தப் படத்தை உலகம் முழுக்க தானே வெளியிடப் போகிறது. அதுமட்டுமல்ல, இது வரை தமிழ்ப் படங்களே வெளியாக பல நாடுகளிலும் கால்பதிக்கப் போகிறது ரஜினியின் எந்திரன் - தி ரோபோ.

இதுகுறித்து அய்ங்கரன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன் இப்படிக் கூறுகிறார்:

“நீங்கள் சொல்வது சரிதான். ரஜினி தனி மனிதர் அல்லது தனிப்பட்ட நடிகர் கிடையாது. அவர் ஒன்மேன் இண்டஸ்ட்ரி... அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரோபோ இந்திய சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம். இதற்கு மேல் நான் எதுவும் சொல்லக் கூடாது. அவரது தீவிர ரசிகர்களில் ஒருவனாக பல ஆண்டுகள் அவரை ரசித்தவன், அவரது படங்களை விநியோகித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். ரஜினிக்கு ஈடு இணை கிடையாது...!”