Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Monday, September 22, 2008

எதிர்பார்த்த மாதிரியே திமுக மீது பழிபோட்ட விஜய்காந்த்!


இப்போதுதான் விஜய்காந்த் பிரஸ் மீட் முடிந்தது...

இதற்கு முந்தைய ஒரு கட்டுரைக்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்கு பதிலளித்தபோது, நிச்சயம் இது திமுக – அதிமுக சதி என்றுதான் விஜய்காந்த் கூறுவார் என கூறியிருந்தேன்.

அதில் சின்ன மாற்றம்... திமுகவின் திட்டமிட்ட சதி இது என விஜய்காந்த் தெரிவித்துள்ளார். அவருக்குத் தெரிந்த அரசியல் அது. அவரது இந்தப் பொய்யை வலுவாக, உரத்துச் சொல்ல பேருதவி புரிந்துள்ளது சன் நெட்வொர்க், தனது நேரடி ஒளிபரப்பு மூலம்!

வடிவேலு என்ன, கருணாநிதியே எதிர்த்து நின்றாலும் நான் போட்டிக்குத் தயார் என கொக்கரிக்கிறார் விஜயகாந்த் தனது பேட்டியில். எல்லாம் நேரம்!

பேட்டிக்கு வந்திருந்த நிருபர்கள் எல்லாரும் நமுட்டுச் சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். காரணம் இந்த பதில் அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதானே!

இதோ... விஜய்காந்த் பேட்டியின் சில பகுதிகள்...!

அப்போ எம்ஜிஆர்... இப்போ நான்!? (கொடுமை... கொடுமை)

இது ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் நடந்ததுள்ளது. இது கருணாநிதிக்கு கை வந்த கலை. அப்போது எம்.ஜி.ஆருக்கு எதிராக இப்படித்தான் செய்தார். எம்.ஜி.ஆர். வளர்ந்தது, கட்சியில் அவரது செல்வாக்கு வளர்ந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. சேலத்தில் ராஜேந்திரன் தாக்கப்பட்டார். பிறகு சுகுமாரன் வழக்கு. இப்படி நிறைய பொய் வழக்குகளைப் போட்டவர் கருணாநிதி. இப்போது எனக்கும் அதே மாதிரி செய்கிறார்.

கருணாநிதியின் திட்டத்திற்கு வடிவேலு பகடைக் காயாகி விட்டார். அவ்வளவுதான். அதை அவருடைய பேச்சுக்களைப் பார்த்தாலே தெரியும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர் மாறி மாறிப் பேசுகிறார்.

முதலில் கல்லால் அடித்தார்கள் என்றார், பிறகு 20 பேர் வந்தார்கள் என்றார், பிறகு 30 பேர் வந்தார்கள், ஒரு பைக்கில் நான்கு பேர் வந்தனர் என்றார். பைக் நம்பரைப் பார்க்கவில்லை என்றார். அதாவது ஆளுங்கட்சியினர் சொல்லிக் கொடுக்கக் கொடுக்க அதன்படி பேசுகிறார். தப்பு தப்பாக சொல்கிறார்.

கடைசியில் மாலை 6 மணிக்கு மேல், ஆளுங்கட்சியினர் சொன்னார்களோ என்னவோ, விஜயகாந்த் தூண்டுதல்தான் காரணம் என்கிறார்.

என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது வன்முறையான கேஸ், தவறான கேஸ்.

சக நடிகரை தாக்கலாமா என்கிறார். அவர் சக நடிகர் என்றால், எனது தங்கை கணவர் இறந்தபோது நான் இல்லாத நிலையில், அவர் நல்லது செய்திருக்கலாம். அதை செய்யவில்லை. பிரச்சினைதான் செய்தார்.

அடுத்த மாதம் நடக்கப் போகும் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டைத் தடுக்கவும், கெடுக்கவுமே இந்த சீப்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் கருணாநிதி. எனது கட்சி வளருகிறது என்று அவருக்கு கோபம்.

நேற்று காலையில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கலாம் என்றார். மாலையில் புதுச்சேரியிலும் பங்கு கேட்போம் என்கிறார். எப்போது பார்த்தாலும் அவருக்கு பதவி ஆசைதான். பதவி ஆசை அவரை விடாது (இவருக்கும் இவர் மனைவி மச்சானுக்கும் ஆசையே கிடையாது பாருங்க...) .

முதலில் தமிழ்நாட்டு காவல்துறையில் உள்ள திமுக போலீஸ், அதிமுக போலீஸ் ஒழிய வேண்டும். காவல்துறையினரின் போக்கையெல்லாம் பார்த்து விட்டு, காக்கி டிரஸ் போட்டு நடிக்கவே கூடாது என்று முடிவெடுக்கும் நிலைக்கு நான் வந்து விட்டேன். என்ன பேசினாலும் கேஸ், எத்தனை பொய் கேஸ்.

என்னை எப்படி ஒழிக்க முடியும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார். என் வீட்டைச் சுற்றி போலீஸ். நல்லதைச் சொல்லி அவரால் ஓட்டு வாங்க முடியாது. எல்லாமே ஊழல். எல்லாமே பொய்க் கேஸ். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

கருணாநிதியே போட்டியிட்டாலும் கவலை இல்லை!

வடிவேலு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார். தேர்தலில் நிற்பேன் என்கிறார். யார் வேண்டுமானாலும் நிற்கலாம், இது ஜனநாயக நாடு. கருணாநிதியே என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு தெரியும் எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று.

இந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓய மாட்டேன். தைரியத்தை சோதித்துப் பார்த்தால் அது முடியாது. நான் தைரியமானவன். மக்கள் பிரச்சினைகளுக்காக உள்ளே தூக்கிப் போட்டால் தைரியமாக போவேன்(தூக்கி உள்ளே போடுங்கப்பா முதல்ல... எத்தை நாள் தாக்குப்பிடிக்கும் இவர் கட்சி பார்க்கலாம்!)

காவல்துறை நல்லவர்களுக்காக பாடுபட வேண்டும். கெட்டவர்களுக்குத் துணை போகாதீர்கள். அடுத்த ஆட்சி மாறினால், நீங்கள் எங்கே போய் விழுவீர்கள் என்று தெரியாது. அத்தனையும் தூசு தட்டி எடுக்கப்படும். அப்போது நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நீங்கள் சம்பாதித்த காசை திரும்ப வாங்குவோம்.

இப்போது எனது பேச்சை மக்கள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பவர் கட் (!!) என எனக்கு செய்தி வந்துள்ளது. இதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம். இதுதான் சர்வாதிகார ஆட்சி என்றார் விஜயகாந்த்.

ரெம்பத்தான் கண்ணைக் கட்டுதே... என்கிறீர்களா...

வடிவேலு சொன்னதைத்தான் நானும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்னும் ஆட்சியின் அருகில்கூட வரவில்லை... அதற்குள் என்னமா சவுண்ட் விடுறார்... அடுத்த தேர்தல்ல இவருக்கு கூடுதலா ஒரு சீட் கெடச்சா கூட தமிழ் மக்களுக்கு ரொம்ப இருட்டான காலமாயிடும் போலருக்கே!

Tuesday, September 16, 2008

எச்சரிக்கை -3: ரஜினி... அரசியல்... சத்தியநாராயணா!


இதில் நமது கருத்தென்று எதுவும் இல்லை. ரஜினி மன்றங்களின் தலைவர் சத்திய நாராயணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:

ரஜினி தன் மன்றத் தினரைச் சந்திப்பாரா மாட்டாரா... அல்லது வழக்கமான எதிர்பார்ப்பைக் கிளப்பும் வேலையா இது என்று மீடியாவில் விவாதம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவரான சத்திய நாராயணா கொடுத்திருக்கும் பதில் இது, அதுவும் ரஜினியின் உத்தரவோடு!

இந்நேரம் பல நிர்வாகிகளுக்கு தலைமை மன்றத்திலிருந்து ரஜினியுடனான சந்திப்பு குறித்த உத்தரவு பறந்திருக்கக் கூடும். இன்னும் 20 நாட்கள்தான் உள்ளன, ரசிகர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள.

ரஜினி ரசிகதர்களைப் பொருத்தவரை இந்த தீபாவளி வாணவேடிக்கை முழங்கும் உற்சாகத் திருநாளாகத் திகழ்வது சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகளில் இருக்கிறது. ஆனாலும் சத்திய நாராயணாவின் பேட்டியில் பொதிந்துள்ள உள்ளர்த்தம், அவர்களை இப்போதே தீபாவளி கொண்டாட வைத்துள்ளது.
நல்லது நடக்கட்டும்...

அரசியலில் ரஜினி இறங்க நீங்கள்தான் முட்டுக்கட்டையா...?

...அரசியலில் தலைவர் உடனே இறங்கவேண்டும் என ஆசைப்படும் சில மன்ற நிர்வாகிகள், அதே ஸ்பீடில் தலைவரிடம் இதுபற்றி நான் பேசி ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியல் விஷயத்தில் தன்னிச்சையாக நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம்.

ஆனால், இதை என்னுடைய இயலாமையாகவோ, திட்டமிட்ட மெத்தனமாகவோ சிலர் நினைக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான்.

அரசியலைப் பொறுத்தமட்டில் தலைவர் யாரையும் பாதிக்காத முடிவைத்தான் எடுப்பார். கடைக்கோடி ரசிகனின் நிலைப்பாடு வரை அவர் யோசிப்பார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர் செயல்பட மாட்டார். இதையெல்லாம் புரிந்துகொள்ளாத ஒருசில ரசிகர்கள் ஆதங்கப்பட்டால் நான் என்ன செய்வது?

அக்டோபர் புரட்சியாக, ரொம்ப நாளைக்கப்புறம் ரசிகர்களை ரஜினி சந்திக்கப் போவதாகச் சொல்வது உண்மைதானே…?

உண்மைதான். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளையும் ஒருசேர தலைவர் இதுநாள் வரை சந்தித்ததில்லை. ஆனால், அக்டோபர் முதல் வாரத்தில் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி இருக்கிறார்.
முதல் நாள் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், அடுத்த நாள் இதர மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். எந்திரன் ஷ¨ட்டிங்கால் ஒருசில நாட்கள் தள்ளிப் போனாலும் இந்த முறை தலைவர் கண்டிப்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார். அதில் மாற்றமே இல்லை.

சிரஞ்சீவியைப் போல் கட்சி ஆரம்பிப்பதற்கான முன்னோட்டமாக அந்த சந்திப்பு இருக்குமா?

ஓய்வாக இருக்கிற நாட்களில் தலைவர் முடிந்த மட்டும் மன்றத்தினரைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். ஒரு கட்டத்தில் வந்தவர்களே திரும்பத் திரும்ப வந்ததைக் கண்டு, தன்னை நேரில் பார்க்கவே முடியாது என ஏங்குகிற ஆட்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் எனச் சொல்வார். ஆனால், அதற்குப் பின்னர் தலைவருக்கு ஓய்வு கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.

இப்போது அவர் அனைவரையும் சந்திப்பதாகச் சொல்லி இருப்பதில் எல்லோருக்குமே மிகுந்த சந்தோஷம். ஆனால் அரசியல் குறித்தோ, வேறேதும் விவகாரங்கள் குறித்தோ அவர் என்ன பேசப் போகிறார் என்று இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தலைவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதன்படி நடக்க மட்டும்தான் எனக்குத் தெரியும்., என முடிந்துள்ளது அந்தப் பேட்டி!

ச்சும்மா அதிருதில்ல.... எனும் தலைப்பில் முன்பு வெளியான பதிவை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளவும்!

குறிப்பு: சத்தியநாராயணாவுடன் இரு தினங்களுக்கு முன் நாம் பேசியதன் அடிப்படையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மேலும் சில பதிவுகளும் வரவிருக்கின்றன.

Sunday, August 24, 2008

இது தெரியுமா உங்களுக்கு...!


ஜாக் டிவி... ஜாக் டிவி என்று ஒரு லோக்கல் கேபிள் சேனல் ஓடிக்கொண்டிருக்கிறது வட தமிழ் மாவட்டங்களில்.

சென்னை தொடங்கி, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ரொம்பப் பிரபலம் இந்த சேனல்.

ராஜ் டிவிக்காரர்களையே மிரட்டி, கண்ணில் விரல்விட்டு ஆட்டிய (பல நாட்கள் தலைமறைவு வாழக்கை வாழ்ந்திருக்கிறார்கள் ராஜ் டிவிக்காரர்கள், இந்த தாதா சேனலின் அடக்குமுறைக்கு பயந்து!) அந்த ‘மீடியா பயங்கரவாதிகள்’, இந்த ஜேக் டிவியையும் விலை பேசினார்கள்.

ஜேக் ஜெயராமன் மசிவதாக இல்லை... இன்னும் ஜோராக பிரபல நடிகர்களை அழைத்து லைவ் ஷோ நடத்த ஆரம்பித்துவிட்டார் ஜேக் டிவியில்.

அடுத்த அஸ்திரத்தை ஏவினார்கள். இது ஆளையே காலி பண்ணும் அஸ்திரம்.
ரூ.12 கோடிக்கு அவர் நிலமோசடி செய்துவிட்டதாக தங்கள் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் போட்டுத் தாக்கி வருகிறார்கள்.

இந்த நவீன வன்முறைக்கு பயந்து அவர் தலைமறைவாகத் திரிய வேண்டிய நிலை. இத்தனைக்கும் ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர் இந்த ஜெயராமன். ராணிப்பேட்டை காந்தியின் பார்ட்னர். வேறு வழியில்லாமல், ரூ.3.5 கோடி பணத்தை ரொக்கமாகக் கட்டி முன்ஜாமீன் எடுத்திருக்கிறார், இந்த மீடியா பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிக்க!

மக்கள் எப்போதும் போல் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்!

Saturday, August 23, 2008

சிங்கம் சிங்கிளாகவே ஜெயிக்கும்!


ஆம்... கடவுள் நிறைய சோதித்துப் பார்த்து கடைசியில் கைவிடாமல் ரஜினி என்ற நல்லவரைக் காப்பாற்றியிருக்கிறார். (ஆனாலும் இது ஒரு தற்காலிக காப்பாற்றல்தான். இன்னும் நிறைய சோதனைகள் காத்திருக்கின்றன. அதற்கு முன் ரஜினி செய்ய வேண்டிய காரியங்களும் நிறைய உள்ளன. அடுத்து வரும் பதிவுகளில் அவற்றைப் பார்க்கலாம்.)

பேராசை பிடித்த திரையரங்கு உரிமையாளர்களின் நச்சரிப்பு மற்றும் மீடியாக்களின் பொய்ப் பிரச்சாரங்களை முழுமையாக நிறுத்த ரஜினியே முன் வந்து திரையரங்கு உரிமையாளர்களின் பிரிதிநிதிகளைச் சந்தித்து ஒரு சமரசத் தீர்வு கண்டிருக்கிறார்.

திரையுலகின் பவர்புல் அமைப்புகள் என்று பீற்றிக்கொள்ளும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவு்சில், பிலிம் காட்டும் பிலிம் சேம்பர்... போன்ற அமைப்புகளின் தயவில்லாமல் தனியாகச் சாதித்திருக்கிறார் ரஜினி இம்முறையும். இந்த முயற்சியில் ஆரம்பத் தடைகள் இருந்தாலும் நாளை காலைக்குள் பிரச்சிநை முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ஆரம்பத்தில் வந்த செய்தி, அதன் பின்னர் ஏற்பட்ட திருப்பங்கள் ஆகியவற்றின் முழு வடிவத்தையும் அப்படியே தருகிறோம். அதற்கு முன் சில விஷயங்களில் ஒரு தெளிவு காண்பது நல்லது.

இனி விஜய், அஜீத், கமல் படங்களுக்கும் இதே சுறுசுறுப்பைக் காட்டுவார்களா தியேட்டர்காரர்கள்.... (மும்பை எக்ஸ்பிரசுக்கு என்ன கணக்கு?)

விஜயகாந்தின் 7 படங்கள் வரிசையாகத் தோல்விப் படங்களே... இந்த நஷ்டம் எப்படி ஈடுகட்டப்பட்டது என்ற பேருண்மையைச் சொல்வார்களா...

வெற்றிப் படங்களுக்கு பதில் வெற்றுப் படங்களை மட்டுமே தந்து கொண்டிருக்கும் சரத்குமாரின் படங்களை திரையிடும் போதும் இந்த நடைமுறை தொடருமா...

மேலே நாம் கூறிய அத்தனை நடிகர்களின் தோல்விப் பட நஷ்டங்களையும் ஈடு கட்டியவை ரஜினியின் படங்கள்தான். இன்று அவர் படத்துக்கே பொய்க் கணக்கு காட்டி நஷ்ட ஈடு கேட்டு மிரட்டிப் பார்க்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

எல்லாம் நேரம்தான்...

இனி அந்த செய்தியின் ஒரு பகுதி- (From thatstamil.com)

குசேலன் விவகாரம் – சுமூகமாக முடித்து வைத்த ரஜினி!!

ஒரு வழியாக குசேலன் பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. குசேலன் படத்தின் நாயகன் ரஜினியே முன் நின்று இந்த நஷ்ட விவகாரத்தில் சுமுகமான தீர்வு கண்டு, திரையரங்க உரிமையாளர்களையும் திருப்தியோடு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனாலும் சிலரது அதிருப்தி முணுமுணுப்புகள் ஓய்ந்தபாடில்லை...!

இந்தப் படத்தைத் திரையிட்ட பிரமிட் சாய்மிரா நிறுவன திரையரங்குகள் தவிர, மற்ற திரையரங்குகளின் உரிமையாளர்கள் தாங்கள் செலுத்திய மினிமம் கேரண்டி தொகையை எடுக்க முடியாமல் நஷ்டத்துக்கு உள்ளானதாகக் குரல் எழுப்பினர்.

படம் வெளியாகி 23 நாட்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், படம் ஓட அவகாசம் தராமல், மக்களைப் படம் பார்க்க வரவிடாமல் தடுக்கும் வகையில் தியரையரங்க உரிமையாளர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

பதிலுக்கு, இந்த தயாரிப்பாளர்களுக்கு எதிர்வரும் நாட்களில் ஒத்துழைக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் சென்னையில் திரண்ட இவர்கள் அனைவரும், தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினிகாந்த் உதவ வேண்டும் எனக் கோரினர்.

நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தங்களுக்கு 70 சதவிகித மினிமம் கியாரண்டி தொகையைத் திரும்பத் தரவேண்டும் எனக் கோரினர்.

இறுதியில் பிரமிட் சாய்மிரா அல்லாத திரையரங்குகளுக்கு மட்டும் விற்கப்பட்ட தொகையைக் கணக்கிட்டு, அவர்களிடம் பெற்ற மினிமம் கியாரண்டி தொகையில் 33 சதவிகிதம் வரை அதாவது 7 கோடி ரூபாய் வரை திருப்பித் தர ஏற்பாடு செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். அதை பன்னீர்செல்வம் தலைமையிலான திரையரங்கு உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தனர்.

இந்தத் தொகையை ரஜினிகாந்த் செலுத்த வேண்டியதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமிட் சாய்மிராவிடமிருந்து வாங்கிக் கொடுத்தால் போதும் என்றும் இந்தப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆனால் பாலச்சந்தரிடம் எக்காரணம் கொண்டும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தானே அந்தப் பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் ரஜினி கூறியதாக திரையரங்க உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தற்போது பிரமிட் சாய்மிரா மற்றும் ஜிபி விஜயகுமார் இருவரும் இந்தத் தொகையில் ஒரு பகுதியைத் தர முன்வந்துள்ளனர். இதைத்தவிர பிரமிட் சாயம்மிராவின் சரோஜா படத்தையும் குறைந்த விலையில் தர ஒப்புக் கொண்டுள்ளார்களாம். நஷ்ட ஈடு வேண்டாதவர்களுக்கு மட்டும் சரோஜாவை முழுவதும் இலவசமாகத் தருவதாகத் திட்டம்.

ஒரு பிரிவினர் எதிர்ப்பு:

மேற்கண்ட செய்தி வெளியான சிலமணி நேரங்களில், மீண்டும் ஒரு கும்பல் பிரஸ் மீட் என்ற பெயரில் நடத்திய நாடகம் பற்றிய குறிப்பு இது.

ரஜினியின் சமரச முயற்சியை அவர் எதிரில் ஒப்புக் கொண்டுவிட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல நேர்மையற்ற முறையில் நடக்க ஆரம்பித்து விட்டனர் சில தியேட்டர்காரர்கள்.

இவர்களில் 25 பேர் மட்டும் சமரசத் தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளனர்.

தங்களுக்கு 75 சதவிகித தொகை வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்த 75 சதவிகிதம் 80 ஆகிவிட்டது (சன் குழும கைங்கர்யம்?)

இப்படிப் பார்த்தால், ஒரு பைசா கூட வசூலாகவில்லை. மொத்த பணத்தையும் கொடுங்கள் என்கிறார்களா... அப்படியெனில் தியேட்டர்களில் முதல் வாரம் முழுக்க நாம் பார்த்தது ஆட்டு மந்தைக் கூட்டமா.. யாரும் காசு கொடுத்து டிக்கெட்டே வாங்கவில்லையா...

அடப் பாவிகளா... ரஜினி இந்த கொள்ளைக் கும்பலை அழைத்துப் பேசியதுதான் தவறு.

இந்த நிலை குறித்து கலைப்புலி சேகரன் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து, தான் ஒரு சிறந்த மனிதன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினி.

ஆனால் இதையும் ஒப்புக்கொள்ளாமல் பிரச்சினை செய்தால், மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் தரப்பில் ரஜினிக்கு ஆதரவு தொடரும் என விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன் தெரிவித்துள்ளார்.

அட... பரவாயில்லையே!


திரைப் பிரமுகர்கள் அத்தனை பேருக்குமே மனசாட்சி செத்துவிட்டதா... ரஜினிக்கு எதிராக இத்தனை அநியாயங்கள் நடந்தும் அவரால் பயன் பெற்ற, கோடீஸ்வரர்களான, உதவிகள் பெற்ற நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் வாய் மூடி ஊமைகளாய்க் கிடக்கின்றஎனவே எனப் பொருமிக் கொண்டிருந்தனர் ரஜினியின் ரசிகர்கள்.

லைட் மேன்களின் பிரச்சினையில் ஒரு வாரமாக பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் ராம நாராயணன் அண்ட் கோவுக்கு, குசேலனுக்கு எதிரான அநியாயங்களைக் கண்டு கொள்ள நேரமில்லை.

நண்பர்கள் சொல்வதுபோல குஷ்புவுக்கு கொசு கடித்தால்கூட ஓடோடிப்போய் கலைஞரிடம் சொல்லி அதற்கு மருந்து போடும் புண்ணிய வேலையைச் செய்யும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் துணைச் செயலாளர் சத்யராஜூக்கும் இந்தப் பிரச்சினை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

என்ன செய்வது... இவர்கள் பெவிக்காலைப் பூசிக்கொண்டு உருண்டால்கூட ஒன்றும் ஒட்டமாடேங்கிறதே... இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார். இவர்கள் அனைவரும் சும்மா ஸ்டார்கள். அந்த வயிற்றெரிச்சல் அவர்களுக்கு.

இனி சினிமாக்காரர்கள் எதற்காகவும் ரஜினியிடம் வரமாட்டார்களா... அவர்களுக்கு ரஜினியின் தேவை முடிந்துவிட்டதா... என்று எல்லோரும் ஒருவித கடுப்போடு இருந்த நேரத்தில், ஆதரவுக் குரல் கொடுத்துள்ளன, விநியோகஸ்தர்கள் சங்கங்கள்.

தமிழ் சினிமா விநியோகத்தைப் பொருத்தவரை இந்த நால்வர் வைத்ததுதான் சட்டம். அதனால் அவர்களின் குரலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது...
விநியோகஸ்தர்களுக்குத் தெரியும் ரஜினி படங்களில் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பது.

அதிலும் ரோபோவின் நாயகனல்லவா ரஜினி... அதனால் இப்போதே ஒரு பாதுகாப்புக்கு அறிக்கை விட்டு வைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் உடுக்கை இழந்த நேரத்தில் நீண்டிருக்கும் உதவிக் கரங்கள் இவை. பாராட்டுவோம்.


இனி அறிக்கை விவரம்:

ரஜினியை மிரட்டுவதா? – விநியோகஸ்தர்கள் கண்டனம்

வியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம். இதில் சம்பந்தப்பட்ட பிரமிட் சாய்மிரா நிறுவனத்தை விட்டுவிட்டு, ரோபோவின் நாயகன், சூப்பர்ஸ்டார் ரஜினியை மிரட்டிப் பார்ப்பது கண்டனத்துக்குரியது என விநியோகஸ்தர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், கோவை மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகம், கோவை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் எம்.சுப்பிரமணியம், மதுரை மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஜி.என்.அன்புசெழியன் ஆகியோர் இணைந்து நேற்று மாலை குசேலன் படம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:

குசேலன் படப் பிரச்சினை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் அறிக்கைகள், வியாபார அடிப்படை உரிமைகளை தகர்க்கும் வண்ணம் அமைவது கண்டு அதிர்ச்சி அடைகிறோம்.

காலம் காலமாக எத்தனையோ பெரிய படங்கள் எதிர்பாராத வீழ்ச்சி அடைவதும், சிறிய பெரிய படங்கள் மாபெரும் வெற்றி அடைவதும் வழக்கமான ஒன்றுதான். ஒரு படத்தின் வெற்றி-தோல்விகள் அவரவர் இட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அமைவதாகும்.

எதிர்பாராத லாபம் அடையும்போது மகிழ்வதும், வீழ்ச்சி அடையும்போது வருத்தம் அடைவதும் இயற்கையே.

குசேலன் படத்தை கவிதாலயம் தயாரிக்க, உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றது. அவர்களிடம் இருந்து வினியோகஸ்தர்கள் சில பகுதிகளுக்கு உரிமை பெற்று திரையிட்டனர். பெரும் பகுதிகளை சாய்மீரா நிறுவனமே திரையிட்டது. அப்படி உரிமை பெற்றவர்களிடம் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் பெருத்த லாபம் பெறலாம் என்று பல வழிகளில் திரையிட்டுள்ளனர்.

கவுரவ வேடம்

இன்னும் ஒரு சில தியேட்டர் அதிபர்கள் மூன்றாவது நபர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு விற்று விட்டனர். ஆரம்பம் முதல் தான் இதில் கவுரவ வேடம் ஏற்றுள்ளதாக ரஜினிகாந்த் கூறியது அனைவருக்கும் தெரியும்.

இது, ஒரு மலையாள படத்தின் மறுபதிப்பு என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்த படத்துக்கு இந்த விலை மிக அதிகம் என்று தெரிந்து பல பேர் அமைதி காக்க, ஒரு சிலர் மட்டும் இந்த படத்தை லாபம் என்ற நோக்கை மட்டும் வைத்து போட்டா போட்டி நடத்தி வாங்கியதும் அனைவருக்கும் தெரியும்.

இன்று இழப்பு என்றவுடன் போர்க்கொடி உயர்த்தி மிரட்டுவது ஏன்? பல படங்களில் அதிகப்படியாக லாபம் பெற்றபோது, அதன் வினியோகஸ்தருக்கோ அல்லது தயாரிப்பாளருக்கோ திருப்பிக் கொடுத்தது உண்டா?

படம் பெற்றது சாய்மீரா நிறுவனத்திடம் இருந்து. அதை விடுத்து ஒப்பந்தமிடாத கவிதாலயத்துக்கும், இதில் எந்த சம்பந்தமில்லாத ரோபோ படம் தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனத்தின் மீதும் பாய்வது ஏன்?

ரோபோ படத்தின் கதாநாயகனான ரஜினிகாந்தை மிரட்டிப் பார்க்கவா?

லாபமும், நஷ்டமும் வியாபார ஒப்பந்தத்தின் வழி நடக்க வேண்டிய ஒன்று. தண்டவாளத்தில் ஓட வேண்டிய ரெயில் தடம்புரண்டு ஊருக்குள் பாய்ந்தால், அதன் முடிவு எப்படி இருக்கும்? வேண்டாம் முரண்பட்ட விவாதங்கள், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்ற பலம் வாய்ந்த அமைப்புகள் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றன.

Sunday, August 10, 2008

Cho blasts Rajini’s critics!


Veteran journalist and Thuglak Magazine Cho S Ramasamy slammed the anti-Rajini protestors inside the film and media world.
He says that every one want to take advantage in Rajini issue just because of free publicity.
He says, “The hunger strike organized by the film world was conducted like a film shooting and everyone stayed in the stage have acted sentimentally. Some actors have gone beyond their limit! After seeing all these happenings, Rajini also delivered some words emotionally. But I didn’t found anything wrong in his speech.
But on the very next day itself Rajini gave an explanation to his speech through a Kannada Channel and conveyed his regrets also. That time no one has raised this as an issue. Now situation forced him to convey his explanation to Kannada people to pacify the situation in the state.
I gave a detailed story on this issue in Thuglak.
After seeing all these developments, I thought that Rajini could be started a political party. Definitely it will become a safeguard to him in this kind of critical situation.
If he had a political outfit, at least thousands of his loyalties have ready to do anything for their leader. Some buses may be burnt and his opponents realized his strength and shut their mouth! This is not my suggestion, but is the common practice here!
But Rajini is a good man. That is the only big problem to him! Media also unnecessarily targeted him. Every one shows their real face in this issue. Rajini’s opponents always expecting a situation like this and the media helps a lot to them!
I think Karunanithi is the happiest man while seeing all these developments!
I hope Rajini will come back with a clean image gain like in the earlier incidents.”

Saturday, August 9, 2008

இதில் தமிழ் துரோகம் எங்கே வந்தது? - சோ


ரஜினியை வேண்டுமென்றே தாக்கும் கூட்டத்துக்கு இப்போது குஷியான நேரம். அதனால்தான் செய்யாத ஒரு செயலுக்காக அவர் குறி வைக்கப்படுகிறார். தன் பேச்சுக்கு அவர் விளக்கம் தெரிவித்ததும், நல்ல விஷயத்துக்கா வருத்தம் தெரிவித்ததும் தமிழ்த் துரோகமா... என்கிறார் துக்ளக் ஆசிரியர் சோ எஸ்.ராமசாமி.

இதுகுறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:

ஒகேனக்கல் விவகாரத்துக்காக உண்ணாவிரதம் இருந்தது ஒரு சினிமா காட்சி மாதிரிதான். மேடையில் இருந்தவர்களெல்லாம் ஓவராக உணர்ச்சி வசப்பட்டுப் பேச, ரஜினியும் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

இதில் பிரச்சினையே உதைக்க வேண்டாமா... என்று அவர் பேசியதுதான்.
இதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும், கர்நாடகத்தில் எந்தமாதிரி ரியாக்ஷன் இருக்கும் என்றெல்லாம் கேள்வி - பதில் பகுதியில் அப்போதே விரிவாகக் கூறிவிட்டேன். இந்த இதழ் துக்ளக்கிலும் கூட எழுதியிருக்கிறேன்.

இதற்குப் பேசாமல் அவர் கட்சி ஆரம்பித்திருக்கலாம். அவர் பங்குக்கு காரசாரமாக பதிலாவது சொல்லியிருப்பார். பஸ்களைக் கொளுத்த அவருக்கும் ஆயிரம் தொண்டர்கள் இருந்திருப்பார்கள்! நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, ரொம்ப நல்லவரா எப்போதும் இருக்கக் கூடாது என்ற உண்மை மட்டும் நன்கு புரிகிறது!!

இன்னொன்று ரஜினி ஏற்கெனவே தனது பேச்சுக்கு கன்னட தொலைக்காட்சியில் விளக்கம் கூறிவிட்டார். அதே விளக்கத்தை இன்னொரு முறை சொல்லியிருக்கிறார்.
இதில் தமிழ்த் துரோகம் எங்கே வந்துவிட்டது!

ரஜினி என்ற நல்ல மனிதரின் குணம் தெரியாமல் இவர்களாகவே கற்பனை செய்து கொண்டு பேசுகிறார்கள். இதில் மீடியாவின் பங்கும், பரபரப்புக்காக தவறான செய்திகளைப் பரப்பும் அவர்களின் குணமும்கூட முக்கியப் பங்கு வகிக்கிறது.

வரவர பத்திரிகைகள் யோசிக்கும் திராணியையே இழந்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது.

இதுபோன்ற சூழலைத்தானே கருணாநிதி எதிர்பார்த்திருப்பார்... அவருக்கு சந்தோஷமாக இருக்கும்!

ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் வேண்டும், அவரைத் தாக்கிப் பேச.
இதிலிருந்தும் அவர் மீண்டு வருவார், என்று கூறியுள்ளார் சோ.

பத்திரிகை எரிப்பு; ரஜினி ரசிகர்கள் கொதிப்பு!



பொறுத்தது போதுமன்று பொங்கி எழுந்து விட்டார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினிக்கெதிராகக் கட்டுரை வெளியிட்ட இரண்டு வாரமிருமுறை இதழ்களைக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பைக் காட்டியதோடு அவற்றின் அலுவலகஙகளுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துவிட்டனர்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக தான் பேசிய பேச்சுக்கு, குசேலன் வெளியீட்டின் போது விளக்கமளித்து வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி.
ஆனால் அவர் கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்று கூறி சில நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் பெரும்பாலான திரையுலகப் பிரமுகர்களும், ரஜினி மீது எந்தத் தவறுமில்லை என்றும், இந்த விஷயத்தில் தேவையில்லாமல் ரஜினிக்கு எதிராகப் பேசவேண்டாம் எனவும் கருத்துக் கூறியுள்ளனர். பிலிம்சேம்ர் தலைவரும் இதுகுறித்து அறிக்கைவிடுத்துள்ளார்.

இந்நிலையில், ஒரு வாரமிருமுறை பத்திரிகையில் ரஜினியை விமர்சித்து எழுதப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றின் பிரதிகளைக் கொளுத்தியுள்ளனர். மேலும் இரண்டு வாரப் பத்திரிகைகளின் இதழ்களையும் இவ்வாறு கொளுத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம், சேலம் மற்றும் கோவை நகரங்களில் இச்சம்பவங்களை நடத்திய ரஜினி ரசிகர்கள், போலீசார் வந்ததையொட்டி போராட்டைத்தை நிறுத்திக் கொண்டனர்.
ரஜனிக்கெதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ள குறிப்பிட்ட பத்திரிகை அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் ரஜினி ரசிகரான இம்மானுவேல் கூறியதாவது:

பத்திரிகைகளில் எவ்வளவோ விஷயங்களை எங்களுக்கெதிராக எழுதுகிறார்கள். ஆனால் தலைவர் அமைதியாக இருந்து குடும்பத்தைக் கவனிக்கச் சொல்வதால் நாங்கள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இனியும் பொறுக்க முடியாது.

தலைவர் சொன்னாலும்கூட கேட்கப் போவதில்லை. கண்டிப்பாக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தியே தீருவோம், என்றார்.
மேலும் மாவட்ட வாரியாக இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், ரஜினி ரசிகர் மன்றங்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சத்தியநாராயணாவிடம் கேட்டோம்.

ரஜினி சார் இந்த மாதிரி ஆர்ப்பாட்டங்களை எப்போதும் விரும்பமாட்டார். எந்தப் பிரச்சினையிலும் தன் ரசிகர்களை முன்நிறுத்தமாட்டார். இந்தப் பிரச்சினை அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவே ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருப்பார்கள் என்று நம்புவோம். குசேலன் வெற்றியை அனுபவிப்போம், என்றார்.

Monday, April 7, 2008

மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை - ரஜினி உறுதி




திங்கள்கிழமை, ஏப். 7, 2008

பெங்களூர்: எனது படங்களைக் கர்நாடகத்தில் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி பேசுகையில், தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பினரை உதைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரஜினியின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஜினி இனிமேல் கர்நாடகத்திற்குள் நுழையக் கூடாது. அவரது படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ், ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சா.ரா.கோவிந்து ஆகியோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் உதயா டிவிக்கு ரஜினிகாந்த் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த 2 நாட்களாக என்னைப் பற்றி கர்நாடகத்தில் தவறான பிரசாரம் நடக்கிறது. கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் சொன்னதாக பிரசாரம் செய்கிறார்கள்.

உதைக்க வேண்டாமா என்று நான் பேசினேன். ஆனால் யாரைப் பேசினேன். சில விஷக் கிருமிகளை, தமிழ்நாடு, கர்நாடக அமைதியைக் கெடுக்கும் விஷ கிருமிகளை உதைக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.

சிறு சிறு விஷயங்களுக்காக பஸ்களைக் கொளுத்துவது, தியேட்டர்களை உடைப்பது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் அவ்வாறு சொன்னேன்.

மற்றபடி கர்நாடக மக்களை உதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் சொல்லவே இல்லை. 5 கோடி மக்களை உதைக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. விவேகம் இல்லாதவன் அல்ல.

எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்கத் தயார். ஆனால் அந்தளவுக்கு நான் ஒரு தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

பர்வதம்மா ராஜ்குமார் (ராஜ்குமாரின் மனைவி), விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ், கிரீஷ் கர்னாட், அஸ்வத் (இசையமைப்பாளர்) ஆகிய பெரிய மனிதர்கள் தங்களது மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், நான் தவறு செய்ததாக. அவர்கள் சொன்னால் மன்னிப்பு கேட்கிறேன்.

என்னை மன்னிப்பு கேட்கச் சொல்லும் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த நான்கைந்து பேர் ஒட்டுமொத்த கர்நாடகத்தின் 5 கோடி மக்களின் பிரதிநிதிகள் அல்ல.

எனது படத்தை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் என்கிறார்கள். கர்நாடகத்தில் ரஜினிகாந்த் படத்தைத் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் எனது படத்தைப் பார்க்கவில்லை. அங்குள்ள கன்னடர்களும்தான் பார்க்கிறார்கள்.

எனவே இந்தப் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வையுங்கள் என்றார் ரஜினிகாந்த்.

-எஸ்.எஸ்