Showing posts with label Box Office. Show all posts
Showing posts with label Box Office. Show all posts

Thursday, November 20, 2008

குசேலன் வசூல் - சில உண்மைகள்!

குசேலன் என்ற படத்தின் தகுதி, தரம் இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சியை மட்டுமே காரணமாக்கி அந்தப் படத்தை முதல் வாரத்திலேயே தோல்விப்படம் என முத்திரைக் குத்தி விட்டது மீடியா.

முன்பே சொன்னது போல, இந்தப் படத்தில் ஆளுக்கு ஒரு பங்கு வேண்டும் என மீடியா வெளிப்படையாகக் கேட்காதது ஒன்றுதான் பாக்கி. மற்றெல்லாவற்றையும் செய்துவிட்டார்கள்.
இந்தப் படம் ஓடக் கூடாது என்று வெளிப்படையாகவே வேலை பார்த்தன பத்திரிகைகளும் சில சேனல்களும்.

ரஜினியின் ரசிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல சினிமா பார்வையாளனாக குசேலன் விவகாரத்தைப் பார்த்த அனைவருமே இந்தக் கருத்தை ஒப்புக் கொள்வார்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு, அழுத கண்களோடு வெளியில் வந்த அதே பத்திரிகையாளர்கள், படம் பார்க்கும்போது இருந்த இளகிய மனதை பொறாமைக்கு அடகு வைத்து, பொய்யெழுதி தங்கள் வக்கிரத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

ரஜினி கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக பிரச்சாரம் செய்து அவருக்கு எதிரான போக்கை உருவாக்க முயற்சி செய்தார்கள். ஒரு கவுரவ வேடத்தில் நடிக்க அவர் ரூ.26 கோடி வாங்கியதாக கூசாமல் பேசினார்கள்.

எந்தப் படமாக இருந்தாலும் குறைந்தது 3 மாதங்கள் வரையாவது பொறுமை காக்கும் திரையரங்க உரிமையாளர்கள், மூன்றாவது நாளே நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி தூக்கியதுதான் கொடுமை. இந்தப் படம் தூக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு வரைகூட பெரும்பாலான திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களைப் பார்க்க முடிந்தது. 10 சதவிகிதம் கூட பார்வையாளர்கள் இல்லாத பல படங்களை 200 நாட்கள் ஓட்டி சாதனைப் படைத்த திரையரங்கு உரிமையாளர்கள் படம் தோல்வி, அதிக விலைக் கொடுத்துவிட்டோம், நஷ்ட ஈடு வேண்டும் என பத்திரிகைகள் மூலம் செய்த பிரச்சாரம் நாடறிந்தது.
போகட்டும்...

இப்போது, வெளிநாட்டில் இந்தப் படம் எந்தளவு சாதனைப் படைத்துள்ளது என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.

இங்கிலாந்தில் மட்டும் இந்தப் படம் வசூல் செய்த மொத்தத் தொகை கிட்டத்தட்ட ரூ.89 லட்சம். வெளியான முதல் வாரத்தில் 13-வது இடத்தில் இருந்தது குசேலன். கமல்ஹாசனின் தசாவதாரம் ரூ.1.07 கோடிகளை வசூலித்துள்ளது. ஒரு சூப்பர் ஹிட் படம் எனப்பட்ட தசாவதாரத்துக்கும், தோல்விப் படம் என இவர்கள் வர்ணித்த ரஜினியின் குசேலனுக்கும் இடையிலான வசூல் வித்தியாசம் ரூ.19 லட்சம்! தசாவதாரத்தைக் குறைத்துச் சொல்ல இங்கே இதைக் குறிப்பிடவில்லை. ஒரு வணிக ஒப்பீட்டுக்காகத்தான்.

மற்ற நடிகர்களின் வெற்றிப் படங்கள், ரஜினியின் தோல்விப் பட வசூலுக்குச் சமம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறோம்.
அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகச் சிறந்த படமாகப் பார்க்கப்பட்ட குசேலன், சிங்கப்பூர், மலேசியாவில் மட்டும் ரூ.5.96 கோடிகளை வசூலித்ததாக சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை முழுமையாகக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ரஜினி ஆதரவாளர்கள் சிலர். இதையே சாய்மிரா நிறுவனமும் சில தினங்களுக்கு முன் உறுதிப்படுத்தியது நினைவிருக்கலாம்.

ரஜினிக்கு பகிரங்கக் கடிதம், வேறு பெயரில் ஒளிந்து கொண்டு மோசடிக் கடிதம் என்றெல்லாம் எழுதிய அஞ்ஞானிகள், இப்போது ரஜினி கூறிய விளக்கத்தைக் கேட்டதும் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன்? அதே முக்கியத்துவத்துடன் ரஜினி விளக்கத்தையும் வெளியிட்டிருக்கலாமே!

மீடியா எப்போதும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதும், சம்பந்தப்பட்ட நபர் மீது இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு பொய் எனத் தெரிந்த பின் குறைந்த பட்சம் அதற்கான வருத்தம் கூடத் தெரிவிக்காததும் எந்த வகை தர்மத்தில் சேர்த்தி?
காலம் கடந்தாலும், உண்மைகள் இனியாவது வெளியில் வரட்டும்!
http://www.envazhi.com

Sunday, August 24, 2008

இவர்கள் பகல் கொள்ளைக்காரர்கள்!


திரைத்துறையில் ஒரு படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர்களும் எப்போதும் சொல்லும் ஒரு விஷயம்:

‘சினிமாவில் தில்லுமுல்லுகள் ஆரம்பமாகும் இடமே திரையரங்குகள்தான்!’

சினிமாவில் எல்லாருக்குமே பேராசை உண்டுதான். ஆனால் அதுவே பெருவியாதியாய் பீடித்திருப்பது திரையரங்க உரிமையாளர்கள் எனும் பிரிவினரை.

அதற்கு உதாரணம் அவர்கள் நேற்று எழுப்பிய கோரிக்கைகள். இவற்றில் ஏதாவது நியாயமுள்ளதா கூறுங்கள்:

ஒரு படத்துக்கு 10 லட்சம் கொடுத்தால், அது அடுத்த வாரமே லாபத்தோடு திரும்பக் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது, இன்றைய திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும்.

யாரோ ஒரு சிலர் நியாயமாக நடக்க முயன்றாலும் அவர்களை சங்கம் என்ற பெயரில் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.

முன்பே நான் குறிப்பிட்டது போல, 99 சதவிகிதம் தியேட்டர்காரர்கள் காட்டுவது பொய்க் கணக்குதான். இதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். உங்களுக்கும் அந்த உண்மை புரியும்.

அதிலும் மாவட்ட அளவில் உள்ள திரையரங்குகள் வருவாய்த் துறை அலுவலர்களைக் கையில் போட்டுக் கொண்டு அடிக்கும் கொள்ளை அளவில்லாதது. சென்னை போல சின்னச் சின்ன திரையரங்குகள் அல்ல, இரண்டாம் கட்ட நகரங்களில் இருப்பவை. இவற்றில் பல, 1000இருக்கைகள் கொண்டவை. ரஜினியின் படங்களுக்கு, இவற்றில் கூடுதலாக 500 பேர்வரை போட்டு அடைத்து படம் காட்டுவார்கள். பணம் பார்ப்பார்கள்.

டிக்கெட் விலையும் தாறுமாறாக இருக்கும். எல்லா கவுன்டர்களிலும் 100 ரூபாய் டிக்கெட் கொடுத்துவிட்டு, ரூ. 3.50 அல்லது ரூ.10 என டிக்கெட் விலையைக் கணக்குக் காட்டுவது இன்றும் அமோகமாக நடக்கிறது. இது அரசுக்குத் தெரியாதா அல்லது படம் பார்த்த ரசிகர்களுக்குத் தெரியாதா...

இதைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாவட்ட வருவாய் அதிகாரிகள், கலெக்டர் அலுவக பிஆர்ஓக்கள் (இவர்கள்தான் தியேட்டர் விசிட் அடிப்பார்கள்) அனைவருக்கும் படம் ஒடி முடிந்ததும் கரெக்டாக மாமூல் போய்ச் சேர்ந்துவிடும்.

தியேட்டர் அளவில் இவர்கள் அடித்த கொள்ளை போக, மீதமிருப்பதுதான் விநியோகஸ்தர்களுக்கு கணக்குக் காட்டப்படும். அதிலும் இம்மாதிரி எம்ஜி முறையில் வாங்கிய படங்களுக்கு, சூப்பர் ஹிட் என்ற லேபிளை பத்திரிகைகளும், மக்களும் குத்தினால்தான் தியேட்டர்காரர்கள் அமைதி காப்பார்கள். இல்லாவிட்டால் இப்போது போடுவது போலவே அநியாய ஆட்டம் போடுவார்கள்.

எல்லாவற்றுக்கும் இருக்கவே இருக்கிறார் ரஜினி... நீங்க ரொம்ப நல்லவர்... மனித நேயம் உள்ளவர் என்று சொல்லி போவோர் வருவோர் எல்லாம் அவரை சுரண்டப் பார்க்கிறார்கள்.
குசேலன் 80 சதவிகித நஷ்டம் எனக் கணக்கு கூறுவதை நிச்சயம் ரஜினியின் எதிரிகள் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அதிலும் இந்த அளவு அதிக தொகையைக் கேட்பதற்கு தியேட்டர்காரர்கள் சொல்லும் காரணம் இருக்கிறதே அது படு கேவலமானது. இந்த மாதிரி ஒரு ஈனப்பிழைப்பை யாரும் செய்ய மாட்டார்கள்.

இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்த காரணம் இருக்கிறது.
குசேலனுக்கு நஷ்ட ஈடு கேட்பதில்லை என விநியோகஸ்தர்கள் முடிவு செய்துவிட்டனர். அதை ரஜினியிடமும் கூறிவிட்டனர். ஆனால் இந்த தியேட்டர்காரர்களோ, அவர்களின் பங்கையும் சேர்த்து எங்களுக்கே கொடுங்கள் எனக் கூறி வருகின்றனர்.

நேற்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெட்கமே இல்லாமல் இதைத் தெரிவித்துள்ளனர்.

24.08.08 தினத்தந்தி செய்தியின் ஒரு பகுதி...

....குசேலன் படத்தை திரையிட்ட தியேட்டர் அதிபர்கள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்து பேசினோம். எங்களுடன் ரஜினிகாந்த் மனிதாபிமானத்துடன் பேசினார். ரஜினிகாந்த் மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. எங்கள் பிரச்சினைகளை சுமார் 45 நிமிடங்கள் கேட்டறிந்தார்.

தியேட்டர் அதிபர்களுக்கு 35 சதவீத நஷ்டஈடு தருவதாக உறுதி அளித்து, பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். நாங்கள் இதுபற்றி எங்கள் பொதுக்குழுவில் கலந்துபேசி முடிவை சொல்வதாக தெரிவித்தோம்.
70 சதவீதம் வேண்டும்!

இந்தத் தொகை குறைவாக இருப்பதாக எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கருத்து தெரிவித்தார்கள். 35 சதவீத நஷ்ட ஈட்டுத் தொகையை ஏற்கக் கூடாது என்றும், கூடுதல் நஷ்ட ஈடு தொகை வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி, 70 சதவீத நஷ்ட ஈடு தொகை கேட்பது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். 70 சதவீதம் என்பது எவ்வளவு தொகை? என்பதையும் கணக்கிட்டு வருகிறோம்.

விநியோகஸ்தர்கள் பங்கையும் கொடுங்கள்!

குசேலன் படத்தின் வினியோகஸ்தர்களுக்கு 35 சதவீத நஷ்ட ஈடு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். வினியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்க மாட்டோம் என்று கூறிவிட்ட காரணத்தால், வினியோகஸ்தர்களுக்கு தரப்பட இருந்த நஷ்ட ஈட்டுத் தொகையையும் சேர்த்து எங்களுக்கே தரப்பட வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
எங்கள் கோரிக்கையை ரஜினிகாந்த் மனிதாபிமானத்துடன்(!!) ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு உரிமை உள்ளது!

குசேலன் படத்துக்கு நஷ்ட ஈடு கேட்க எங்களுக்கு தார்மீக உரிமை இருக்கிறது. மலையாள படத்தில், மம்முட்டி 20 நிமிடங்கள்தான் வந்தார். அதை அப்படியே படமாக்குவதாக எங்களிடம் கூறவில்லை. ரஜினிக்காக, கதையை மாற்றி படமாக்குவதாக டைரக்டர் பி.வாசு கூறினார். ரஜினியின் குசேலன் என்றுதான் விளம்பரமும் செய்யப்பட்டது. எனவேதான் நாங்கள் ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கிறோம், என்று கூறினார் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி பன்னீர் செல்வம்.


பிரஸ் மீட் முடிந்ததும் இதை அவர்களுக்கேற்ற விதத்தில் செய்தியாகப்
போட நிருபர்களுக்கு வெயிட்டான கவனிப்பு வேறு!)

பகல் கொள்ளை


கடவுளே... தார்மீக உரிமை, மனிதாபிமானம் பற்றியெல்லாம் யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.
சம்பந்தமே இல்லாவிட்டாலும், தானாக முன்வந்து பணம் (நிச்சயம் நஷ்ட ஈடு அல்ல. குசேலன் நஷ்டமும் அல்ல. இது எரிகிற வீட்டில் பிடுங்கும் தியேட்டர்காரர்களின் பகல் கொள்ளை உத்தி) கொடுக்க ஒப்புக் கொண்டுள்ள ரஜினியை மேலும் மேலும் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொள்ளைக் கும்பல் மனிதாபிமானம் பற்றிப் பாடம் எடுக்கிறது.
நேரம்தான்!

குறிப்பு: தியேட்டர்காரர்கள் இந்த அளவு கொடூரமாக நடந்து கொள்வதன் பின்னணியில் ஒரு பிரபல நிறுவனமும் முக்கியப் புள்ளிகள் சிலரும் உள்ளனர். சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு அதைப் பதிவு செய்யும் திட்டமுள்ளது!

Saturday, August 23, 2008

அட... பரவாயில்லையே!


திரைப் பிரமுகர்கள் அத்தனை பேருக்குமே மனசாட்சி செத்துவிட்டதா... ரஜினிக்கு எதிராக இத்தனை அநியாயங்கள் நடந்தும் அவரால் பயன் பெற்ற, கோடீஸ்வரர்களான, உதவிகள் பெற்ற நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் வாய் மூடி ஊமைகளாய்க் கிடக்கின்றஎனவே எனப் பொருமிக் கொண்டிருந்தனர் ரஜினியின் ரசிகர்கள்.

லைட் மேன்களின் பிரச்சினையில் ஒரு வாரமாக பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் ராம நாராயணன் அண்ட் கோவுக்கு, குசேலனுக்கு எதிரான அநியாயங்களைக் கண்டு கொள்ள நேரமில்லை.

நண்பர்கள் சொல்வதுபோல குஷ்புவுக்கு கொசு கடித்தால்கூட ஓடோடிப்போய் கலைஞரிடம் சொல்லி அதற்கு மருந்து போடும் புண்ணிய வேலையைச் செய்யும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் துணைச் செயலாளர் சத்யராஜூக்கும் இந்தப் பிரச்சினை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

என்ன செய்வது... இவர்கள் பெவிக்காலைப் பூசிக்கொண்டு உருண்டால்கூட ஒன்றும் ஒட்டமாடேங்கிறதே... இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார். இவர்கள் அனைவரும் சும்மா ஸ்டார்கள். அந்த வயிற்றெரிச்சல் அவர்களுக்கு.

இனி சினிமாக்காரர்கள் எதற்காகவும் ரஜினியிடம் வரமாட்டார்களா... அவர்களுக்கு ரஜினியின் தேவை முடிந்துவிட்டதா... என்று எல்லோரும் ஒருவித கடுப்போடு இருந்த நேரத்தில், ஆதரவுக் குரல் கொடுத்துள்ளன, விநியோகஸ்தர்கள் சங்கங்கள்.

தமிழ் சினிமா விநியோகத்தைப் பொருத்தவரை இந்த நால்வர் வைத்ததுதான் சட்டம். அதனால் அவர்களின் குரலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது...
விநியோகஸ்தர்களுக்குத் தெரியும் ரஜினி படங்களில் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பது.

அதிலும் ரோபோவின் நாயகனல்லவா ரஜினி... அதனால் இப்போதே ஒரு பாதுகாப்புக்கு அறிக்கை விட்டு வைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் உடுக்கை இழந்த நேரத்தில் நீண்டிருக்கும் உதவிக் கரங்கள் இவை. பாராட்டுவோம்.


இனி அறிக்கை விவரம்:

ரஜினியை மிரட்டுவதா? – விநியோகஸ்தர்கள் கண்டனம்

வியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம். இதில் சம்பந்தப்பட்ட பிரமிட் சாய்மிரா நிறுவனத்தை விட்டுவிட்டு, ரோபோவின் நாயகன், சூப்பர்ஸ்டார் ரஜினியை மிரட்டிப் பார்ப்பது கண்டனத்துக்குரியது என விநியோகஸ்தர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், கோவை மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகம், கோவை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் எம்.சுப்பிரமணியம், மதுரை மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஜி.என்.அன்புசெழியன் ஆகியோர் இணைந்து நேற்று மாலை குசேலன் படம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:

குசேலன் படப் பிரச்சினை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் அறிக்கைகள், வியாபார அடிப்படை உரிமைகளை தகர்க்கும் வண்ணம் அமைவது கண்டு அதிர்ச்சி அடைகிறோம்.

காலம் காலமாக எத்தனையோ பெரிய படங்கள் எதிர்பாராத வீழ்ச்சி அடைவதும், சிறிய பெரிய படங்கள் மாபெரும் வெற்றி அடைவதும் வழக்கமான ஒன்றுதான். ஒரு படத்தின் வெற்றி-தோல்விகள் அவரவர் இட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அமைவதாகும்.

எதிர்பாராத லாபம் அடையும்போது மகிழ்வதும், வீழ்ச்சி அடையும்போது வருத்தம் அடைவதும் இயற்கையே.

குசேலன் படத்தை கவிதாலயம் தயாரிக்க, உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றது. அவர்களிடம் இருந்து வினியோகஸ்தர்கள் சில பகுதிகளுக்கு உரிமை பெற்று திரையிட்டனர். பெரும் பகுதிகளை சாய்மீரா நிறுவனமே திரையிட்டது. அப்படி உரிமை பெற்றவர்களிடம் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் பெருத்த லாபம் பெறலாம் என்று பல வழிகளில் திரையிட்டுள்ளனர்.

கவுரவ வேடம்

இன்னும் ஒரு சில தியேட்டர் அதிபர்கள் மூன்றாவது நபர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு விற்று விட்டனர். ஆரம்பம் முதல் தான் இதில் கவுரவ வேடம் ஏற்றுள்ளதாக ரஜினிகாந்த் கூறியது அனைவருக்கும் தெரியும்.

இது, ஒரு மலையாள படத்தின் மறுபதிப்பு என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்த படத்துக்கு இந்த விலை மிக அதிகம் என்று தெரிந்து பல பேர் அமைதி காக்க, ஒரு சிலர் மட்டும் இந்த படத்தை லாபம் என்ற நோக்கை மட்டும் வைத்து போட்டா போட்டி நடத்தி வாங்கியதும் அனைவருக்கும் தெரியும்.

இன்று இழப்பு என்றவுடன் போர்க்கொடி உயர்த்தி மிரட்டுவது ஏன்? பல படங்களில் அதிகப்படியாக லாபம் பெற்றபோது, அதன் வினியோகஸ்தருக்கோ அல்லது தயாரிப்பாளருக்கோ திருப்பிக் கொடுத்தது உண்டா?

படம் பெற்றது சாய்மீரா நிறுவனத்திடம் இருந்து. அதை விடுத்து ஒப்பந்தமிடாத கவிதாலயத்துக்கும், இதில் எந்த சம்பந்தமில்லாத ரோபோ படம் தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனத்தின் மீதும் பாய்வது ஏன்?

ரோபோ படத்தின் கதாநாயகனான ரஜினிகாந்தை மிரட்டிப் பார்க்கவா?

லாபமும், நஷ்டமும் வியாபார ஒப்பந்தத்தின் வழி நடக்க வேண்டிய ஒன்று. தண்டவாளத்தில் ஓட வேண்டிய ரெயில் தடம்புரண்டு ஊருக்குள் பாய்ந்தால், அதன் முடிவு எப்படி இருக்கும்? வேண்டாம் முரண்பட்ட விவாதங்கள், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்ற பலம் வாய்ந்த அமைப்புகள் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றன.

Tuesday, August 19, 2008

Rajini under (unnecessary) pressure!


குசேலன் விவகாரத்தில் இன்றை நிலவரத்தை எந்த வித இடை விவாதமுமின்றி Oneindia.in-ல் வந்திருக்கும் ஆங்கில கட்டுரை இது.

சம்பந்தமே இல்லாமல் தேரை (ரஜினியின் பெயரை) இழுத்து தெருவில் விடும் வேலை நடக்கிறது என்பதை விளக்கும் பதிவு இது.

இன்னும் கூடுதல் விவரங்களுடன் விரிவாக தமிழில் தனியாகத் தருகிறேன்.

Rajini's Kuselan Jagged!

Superstar Rajinikanth has been shocked by the theater response for his recently released Kuselan, the remake of Malayalam version of Mammootty starrer Katha Parayumbol.

Yesterday, a section of Theater Owners from Kanchipuram district assembled in Chennai and decided to get back their money from Kavithalaya and Seven Arts the producers of Kuselan.

They have announced a movement of non-cooperation against ‘Kuselan’ producers, if their problems were not not soleved properly, and are meeting on Aug 23 to chalk out our plans with regard to Rajnikanth, S. Palaniappan, head of a Exhibitors association told reporters on Monday evening.

“The loss will cross over Rs.15-20 crores in the short term, unless adequate remedial measures are initiated by the actor, who has actually taken care of the exhibitors several occasions in the past. We were taken for a ride by the producers who claimed it was a full length Rajnikanth film, which it was not. Even though Rajini sir announced that his role is just 25 percent in the film, the producers and Director have misguided us’, says Palaniyappan.

The wholesale distributor of the film, Pyramid Saimira who is the sole responsibility in this issue is non committal. A spokesman for the distribution company Pyramid Saimira, which is showing the film across Tamil Nadu and Andhra Pradesh, said the movie had so far collected Rs.220 million since its release on Aug 1 in Tamil Nadu alone.

According to Saimira sources, the overseas reports are really good and expressed confidence about ‘Kuselan’ covering the costs of Rs.600 million before being taken off theatres.

But some other sources revealed that they have already made enough profit through the overall performance of Kuselan worldwide.

While the star did not charge any fee from the Tamil producer and his mentor K. Balachander, the Telugu version's producers had paid Rajinikanth a fee of Rs.10 crores only against his actual fee Rs.25 crores (amount paid for Sivaji).

It may be recalled that the matinee idol had underwritten the losses of his earlier movie ‘Baba’ (2005) to the tune of over Rs.250 million and helped distributors and exhibitors stage a smart recovery through his subsequent release 'Chandramukhi' (2005) which created box office history.

The Exhibitors say, “We are not targeting Rajini sir to return any amount. We know his good heart and helping mind during the time of Baba. Actually we don’t have any rights to ask him to return any amount, since he plays a special appearance only in this film. And he never hides this factor too. We only requesting him to advice the producers to do justice in this issue.”

This is what (as the superstar always says) the cost he pays for retaining his numero uno status!

Source: www.entertainment.oneindia.in

Saturday, August 16, 2008

‘Kuselan’ gets rave reviews and good crowd in Malaysia!!


Though the ethnicity of Tamil hails for their knowledge and noble gesture, sometime they slipped in to devils holes with the wrong guidance of some so called arrogant, senseless Tamil activists (as they narrate themselves!).

But as usual our people now realizing the facts slowly and turn at large in the theaters where Kuselan screened.

In Tamil Nadu, the homeland of the Superstar, after the mega opening, Kuselan found a slide in few areas but now the film is going steady in most of the areas.
But in Kerala and up countries, Kuselan still rocks with decent crowd and gives hope to its distributors for a big share.

According to the latest reports from Indo Asian News Service, the film is going very well in Malaysia and Singapore.

K.N.Vijayan, a noted film critic of the South-East Asian region says that Malaysian audiences should see superstar Rajnikanth's latest film 'Kuselan' since it is a blend of a good story and fine acting.

Such is the power of a good story that it can be appreciated all over India in diverse languages, Vijayan wrote in the New Straits Times.

Urging Malaysians to ‘go see this one with the family’, Vijayan said: ‘The last few minutes of the film draw a tear or two. That’s when Rajnikanth proves how good an actor he is.

Also, whoever wrote that speech Rajnikanth makes in the film, needs a special award...’

Friday, August 15, 2008

குசேலன்: கேரளாவில் ரூ.2.16 கோடி வசூல்!


தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் பற்றி இங்கே பலவிதமான தகவல்கள் வந்தாலும், வெளிநாடுகள் மற்றும் கேரளாவில் இந்தப் படம் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாக கேரள விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை பிரமிட் சாய்மிரா நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

கேரளாவில் இந்தப் படம் 85 திரையரங்குகளில் வெளியானதாகவும் இரண்டாவது வார முடிவில் இந்தப் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு கணிசமான லாபப் பங்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் வார நிலவரப்படி இந்தப் படம் கேரளாவின் அனைத்து சென்டர்களிலும் ரூ. 2.16 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைகளின் விமர்சனங்கள் இந்தப் படத்தின் கேரள வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. உண்மையில் கேரள மீடியாவில் இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன, என்கிறார் பிரமிட் சாய்மிரா இயக்குநர்களில் ஒருவர்.

படம் வெளியாகி 15 நாட்கள் ஆகும் நிலையில் இன்னமும் எல்லா திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருப்பதால் விநியோகஸ்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதே போல இந்தப் படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர்களில் நாக்ரவி தவிர, மற்றவர்கள் நல்ல லாபம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இன்னமும் இப்படம் ஓடிக்கொண்டிருப்பதால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக பிரமிட் சாய்மிரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Courtesy: www.oneindia.thatstamil.com

Wednesday, August 13, 2008

எச்சரிக்கை!


தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றுவரை ஒரு சில ஏரியாக்களைத் தவிர மற்ற பகுதிகளில் குசேலன் நன்றாகவே போய்க் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

மீடியாக்கள் வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும்... இது மக்கள் படமாகி விடும். ஆனால் அவர்கள் வாயை அடைக்க இதுவரை (ரஜினியை வைத்து பெரிய அளவில் கல்லா கட்டிய!) தயாரிப்பாளர்கள் தரப்பிலோ, இயக்குநர் தரப்பிலோ எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

நினைவிருக்கட்டும், தமிழகத்தில் குசேலன் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான அரங்குகள் சாய்மீராவுக்குச் சொந்தமானவை. இங்கு லாப நஷ்டக் கணக்குகள் ஒளிமறைவின்றி காட்டப்படுவதில்லை என ஏற்கெனவே பல விநியோகஸ்தர்கள் குறை கூறியுள்ளனர்.

சமீபத்தில் கூட இரு தயாரிப்பாளர்கள் இதே காரணத்துக்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். (வள்ளுவன் வாசுகி படத் தயாரிப்பாளர்கள் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு போட்ட வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது!).

ஒருவேளை எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று பிரமிட் சாய்மிராவும் நஷ்டக் கணக்கு காட்டி பணத்தைத் திரும்பக் கேட்கும் காட்சிகளும் அரங்கேற வாய்ப்புள்ளது (அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன...).
அதையும் நீங்கள் பார்த்தாக வேண்டிய தருணம் இது என்பதால் முன்கூட்டியே சொல்லி வைக்கிறேன்.

குசேலன் வசூல்– மகிழ்ச்சியில் அமெரிக்க வினியோகஸ்தர்கள்!


குசேலன் பற்றி இந்த வலைப்பூவில் வந்த அத்தனை தகவல்களும் நாம் நேரில் பார்த்து, அல்லது உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு வெளியிடப்படுபவை. ரஜினி ரசிகர்களை ‘ஏத்திவிடு’வதற்காக எழுதப்படுபவை அல்ல... கீழ் வரும் கட்டுரையைப் படிக்கும்போது இதை மனதில் கொண்டே படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்!

நண்பர்களுக்கு இன்னுமொரு சந்தோஷ செய்தி...

குசேலனை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வெளியிட்ட பிரமிட் சாய்மிராவின் கிளை நிறுவனங்களும், அவர்களிடமிருந்து SUB LEASE முறையில் வாங்கிய மற்ற விநியோகஸ்தர்களும் சந்தோஷத்திலிருக்கிறார்கள்.

இருக்காதா பின்னே...

ஒரே வாரத்தில் போட்ட பணம் திரும்பக் கிடைத்துவிட்டால் சந்தோஷப்படாமல் என்ன செய்வார்கள்! அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் குசேலனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்தியர்கள் அல்லாதவர்களும், இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது... ஏன் இந்த இந்தியர்கள் இந்த நடிகருக்காக கைக் காசை இவ்வளவு செலவழிக்கிறார்கள்... எனத் தெரிந்து கொள்வதற்காகவே, தியேட்டருக்கு வந்து படம் பார்த்து பின்னர் நெகிழ்ந்து போய் திரும்பினார்களாம்.

இந்தியாவைப் போல, ஒரு படத்தின் வெற்றியை 100 நாட்கள் அளவு வைத்து அங்கே மதிப்பிடுவதில்லை. குசேலன் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் பல அமெரிக்கத் திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டுதானிருக்கிறது.
இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் நல்ல வசூல்தான் என பிரமிட் சாய்மிரா நிறுவன முக்கிய அதிகாரி நம்மிடம் தெரிவித்தார்.

இந்தப் படம் திரையிட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே விநியோகஸ்தர்களின் முதலீட்டுப் பணம் திரும்பக் கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இப்போது அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் லாபம்தான்.

இதை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களே பிரமிட் சாய்மிராவுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

வளைகுடா உரிமையை வாங்கிய நாக்ரவி மட்டும்தான் குசேலன் பற்றிக் குறை கூறி இருக்கிறார். சிவாஜிக்கும் இவர் இதே பல்லவியைத்தான் பாடினார். உண்மை என்னவென்பதை அவர்களாகவே ஒப்புக் கொண்டால்தான் உண்டு!

கர்நாடக உரிமையை வாங்கிய நிரஞ்சன் கூட, படத்துக்கு இரண்டாவது வாரத்தில் எதிர்பார்த்த மாதிரி கூட்டம் சேரவில்லை என்று கூறினாரே தவிர, இந்தப் படம் தனக்கு நஷ்டம் என்று கூறவில்லை. காரணம் அவரது முதலீடு, இந்தப் படத்தின் விற்பனை உரிமையோடு ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவு. இந்நேரம் அந்தக் கலெக்ஷனை அவர் எடுத்திருக்கக் கூடும் என்கின்றன சாய்மிரா நிறுவன தகவல்கள் (இவர்களை ஒரேயடியாக நம்பிவிடவும் முடியாது. ஏன் என்பதற்கான பதிலை அடுத்த பதிவில் பார்க்க!).

ரஜினியின் படங்கள் ஷேர் மார்க்கெட் அல்ல... எந்த நேரத்திலும் என்ன விபரீதம் வேண்டுமானாலும் நடக்க. அவை நிலத்தின் மேல் செய்யப்படும் முதலீடுகள் மாதிரி. எப்பவும் மதிப்பு கூடிக்கிட்டேதான் இருக்கும்!
ரஜினியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல... அவரது எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் உண்மை இது.

மற்றபடி, இந்த சீஸனில் ரஜினி பற்றி வந்த, இன்னும் வந்து கொண்டிருக்கும் பல அபாண்டங்களுக்கு, காலம் பதில் செல்லும்!