Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, December 1, 2008

எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்

75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தருவதிலும், குழந்தைகளையும் கவரும் தனித் தன்மையிலும் அமரர் எம்ஜிஆருக்குப் பின் சிறந்து விளங்குபவர் ரஜினி மட்டும்தான் என்கிறார் கார்ட்டூனிஸ்ட் மதன்.

மதனின் ஒவ்வொரு கோடுகளுக்கும் தனி அர்த்தம் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் உண்டு. ரஜினி என்ற மாபெரும் கலைருக்குள் உள்ள கலை, அரசியல், மனிதாபிமானம் பற்றி, இன்றைய பத்திரிகையாளர்களில் அதிகம் தெரிந்தவர் மதன்.

அது மட்டுமல்ல, பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் தலைக்குப் பின்னால் ஏதோ ஒரு ஒளிவட்டம் சுழல்வதாக தலைக் கனத்துடன் பேசித் திரியும் இன்றைய சூழலில் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர் மதன். ஒரு நல்ல ரசிகர், நல்ல எழுத்தாளரால்தான் இப்படி மனம் திறந்து பாராட்ட முடியும் என்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். (அவரது முகாம், அவர் வளர்ந்த பின்னணி குறித்தெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.)

ரஜினி பேரக் கேட்டாலே... எனும் தலைப்பில் தமிழில் டாக்டர் காயத்ரி எழுதிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் நேற்று மாலை சவேரா ஓட்டலில் வெளியிடப்பட்டது.

கவிஞரும் திமுக எம்பியுமான கனிமொழி கருணாநிதி முதல் பிரதியை வெளியிட, எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்டுமான மதன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவின் சிறப்பம்சம் மதன் மற்றும் எஸ்பி முத்துராமனின் சிறப்பான பேச்சுதான். ரஜினியைப் பற்றி எந்தவித அலங்காரங்களும் இல்லாத அவர்கள் பேச்சு உண்மையிலேயே நிறைவாய் இருந்தது. மற்றபடி இந்த விழாவில் சில நெருடல்களும் உண்டு. அதை பின்னர் பார்க்கலாம்!

மதன் பேச்சிலிருந்து...
நடிகரின் வாழ்க்கை வரலாறு என்றதுமே சிலர் ஆஹா என்பார்கள். இன்னும் சிலர் ஓ என்ற சின்ன பார்வையுடன் நகர்ந்து விடுவார்கள். எழுதுபவருக்குப் புகழ் கிடைத்தாலும், அவர் எழுத்துக்கு பெரும்பாலும் அங்கீகாரம் கிடைக்காது.

இதற்குக் காரணம் ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்கள். அதாவது ரெண்டுவித சிக்கல்கள் இருக்கு. பெரும்பாலும் ஏதாவது ஒரு சினிமா பத்திரிகை நிருபர் தனி வேலையாக அதை எடுத்துக் கொண்டு எழுதுவார். அதில் பெரும்பாலும் உண்மைகள் விடுபட்டு, வெறும் புகழ்ச்சிதான் மேலோங்கியிருக்கும். ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அவரது தொண்டர்கள் யாரேனும் எழுதினாலும் இந்த நிலைதான்.

இன்னொன்று பிரபல எழுத்தாளர்கள் எழுத முன்வருவதில்லை. அப்படியே எழுதினாலும் அதில் விமர்சனம் நிறைந்திருக்கும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலைப் போக்கில் எழுதப்படும் வாழ்க்கை வரலாறுகள்தான், நல்ல பதிவுகளாக அமையும்.

இந்தப் புத்தகம் அப்படிப்பட்டதுதான். நன்றாக எழுதியிருக்கிறார் காயத்ரி. ரஜினியின் வயதுக்கேற்ப அந்தஸ்து அதில் தரப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு அவரது சிறுவயது பருவ நிகழ்வுகளில் சிறுவன் ரஜினிதான். அதில் சிறப்பு மரியாதை கிடையாது. சூப்பர் ஸ்டாராக வந்த பிறகு அதற்குரிய மரியாதையோடு விளித்து எழுதியிருப்பது இந்த நூலுக்கு தனி நம்பகத் தன்மையைத் தருகிறது.

ரஜினியைப் பற்றி நிறைய சொல்லலாம். அவரை நான்கு முறை சிறப்பு நேர்காணல் செய்த பெருமை எனக்குண்டு. ஆனால் அதைப் பற்றி பேசும் மேடை இதுவல்ல.

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் காலத்துப் பாடல்களை இன்றும் கூட கேட்டு ரசிக்கலாம். அதற்குப் பிறகு எம்ஜிஆர்தான் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தந்தார். இப்போது பார்த்தாலும் அவரது படங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளன. அவருக்குப் பிறகு அந்த மேஜிக் கைவரப் பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. அதையும் தாண்டிய பல பரிமாணங்கள் ரஜினி அவர்களுக்கு உண்டு.

வெளிநாடுகளிலும் ஒரு நடிகரைப் பற்றி பல புத்தகங்கள் வருகி்ன்றன. ஆனால் இங்கே அப்படி இல்லை. ரஜினியைப் பற்றி எப்போதோ இந்த மாதிரி புத்தகங்கள் வந்திருக்க வேண்டும். டாக்டர் காயத்ரி போன்றவர்கள் ரஜினியைப் பற்றி இன்னும் பல கோணங்களில் புத்தகங்கள் எழுதலாம். ஒரு ஞாயிற்றுக் கிழமையை இதற்காக ஒதுக்கி ரஜினியுடன் சில மணிநேரங்கள் உரையாடி, அதையே புத்தகமாகவும் கொண்டுவரலாம்.

அப்படிச் செய்யும்போது, ரஜினியைப் பற்றியும், அவரது எண்ணங்கள் பற்றியும், மக்களின் ரசனை குறித்தும் மக்களுக்குத் தெரியவரும், என்றார்.

- வினோஜாஸன்
http://www.envazhi.com

Saturday, November 1, 2008

தமிழர் பிணங்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்படுகின்றன! – ரஜினி ஆவேசம்

பொதுவாகவே ஈழத் தமிழர்கள் மீது அக்கறையில்லாதவர் ரஜினி என்பது போன்ற பேச்சுக்கள் மீடியாவில் இதுவரை வலம் வந்து கொண்டிருந்தன.

ஆனால் அவற்றை தனது உணர்ச்சிப்பூர்வமான ஈழ ஆதரவுப் பேச்சு மூலம் நேற்று துடைத்தெறிந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடி போர் நிறுத்தம் கோரியும் நடிகர் நடிகைகள் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதில் ஆரம்பத்திலேயே கலந்து கொண்ட ரஜினி, இறுதியில் உணர்ச்சிப்பூர்வ உரை நிகழ்த்தினார்.

இலங்கையில் தமிழர்களது பிணங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகின்றன. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைக்கும். இலங்கை அரசையே அழிக்கும், என்றார் ரஜினி.
மேலும் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினையில் பெரிய நாடுகள் தலையிட வேண்டி வரும் என்றும் கூறினார்.

இந்தப் போராட்டத்துக்கு மாலையில்தான் ரஜினி வருவார் என்று காலையிலிருந்தே சிலர் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அதை உடைக்கும் வகையில் 11.30 மணிக்கே நடிகர் சங்க வளாகத்துக்கு வந்த ரஜினி வேட்டி, கறுப்பு சட்டை, ரேபான் கிளாஸ் சகிதம் விடுவிடுவென வேடை ஏற, அந்தப் பகுதியே அதிர்ந்தது, கீடியிருந்தவ்ரகளின் விசில் மற்றும் கரவொலியில்.

உண்ணாவிரதம் முடியும் வரை மேடையில் அமர்ந்து அனைவரது பேச்சுக்களையும் கேட்டார். பின்னர் அவர் பேசினார். அதன் முழுமையான வடிவம்:

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே...

இது மிக அருமையாக, உணர்வுப்பூர்வமான, அறிவுப்பூர்வமான உண்ணாவிரதம் இது. இந்தப் போராட்டத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவியை நான் பராட்டுகிறேன். ராதாரவி சொன்ன மாதிரி இது 3-வது கட்டப் போராட்டம்தான். அதை சரியாக செய்திருக்கிறீர்கள்.

இங்கே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால்தான் இது ரொம்ப சக்ஸஸ்புல்லா நடந்துகிட்டிருக்கு. கட்டுப்பாடில்லாத மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.
இலங்கைத் தமிழர் விஷயத்தில் நிறைய பேசலாம். பேச அவ்வளவு விஷயமிருக்கு.

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை இங்கு விளக்கிய ராதாரவி மற்றும் நண்பர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இங்கேயும் சரி, வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் பல இலங்கைத் தமிழர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இலங்கைத் தமிழ்ல திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். பாஷை மட்டுமல்ல, பழகுவதற்கும் அவ்வளவு இனிமையானவர்கள்.

அந்த நல்ல மக்கள் அவங்க நாட்ல வாழ முடியாமல் மற்ற நாடுகளில் எப்படியெல்லாம் அவதிப்பட்டு வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

தமிழர்கள் சம உரிமைக்காக போராடினார்கள். அதை அடக்க சிங்கள ராணுவம் ஆயுதமெடுத்தது. யுத்தத்தை நிறுத்த வேண்டுமென்று எல்லாருமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம இந்திய அரசும் மாநில அரசும் இதற்கு இன்னும் தீவிரமா முயற்சி எடுக்கணும்.

இங்கே நடப்பது, நாம் இங்கே பேசுவது அனைத்தும் இலங்கை அரசுக்கு, ராஜபக்சேவின் காதுகளுக்கு, அங்குள்ள எம்பிக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு கேட்டும் என்ற நம்பிக்கையில், தைரியத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்களா வீரர்கள்?

தமிழ் மக்கள் அங்கே சம உரிமைதான் கேட்டார்கள், அதற்காக போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அதை நீங்கள் கொடுக்கவில்லை.

உங்கள் சிங்கள அரசிடம் ராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளும் உள்ளன. சகல வசதிகளும் சவுகரியங்களும் உள்ளன. யுத்தத்தை நீங்கள்தான் அறிவித்தீர்கள். ரெண்டு வருஷமா அஞ்சு வருஷமா, பத்து வருஷமா... முப்பது வருஷமா உங்களால் அவர்களை ஒழிக்க முடியலன்னு சொன்னா நீங்க என்ன வீரர்கள்... ஆம்பிளைங்களா நீங்கள்?

தோல்விய ஒத்துக்க முடியலேன்னு சொல்லு. ஓகே, ஒத்துக்கறதுக்கு உங்க ஈகோ இடம் கொடுக்கலியா... சரி... நீ என்னதான் செஞ்சிருக்கே... முடியல உன்னால... ஒத்துக்கணும்.

ஏழைகள் பாதிக்கப்பட்டால்...!

இனொன்னு புரிஞ்சுக்கணும்... இலங்கை மட்டுமல்ல... எந்த நாடாக இருந்தாலும், ஏழை மக்கள், பாமர மக்கள், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் அவர்களின் வேதனை... அந்த காற்று பட்டாலும் கூட அந்த நாடு உருப்படாது. எந்த நாடகாட்டும், சாமானிய ஜனங்க பாதிக்கப்படக் கூடாது. எந்த நாடாக இருந்தாலும் சரி... எந்த விதத்திலயும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அந்த நாடு உருப்படாது, அவங்க சுவாசக் காற்று பட்டால் கூட அந்த நாடு உருப்படாது.

உங்க நாட்ல பாமர மக்கள், பெண்கள், குழந்தைகள் பல ஆண்டுகளாக உதிரம் சிந்தி மடிகிறார்கள் அந்த பூமியில.

அங்க இருக்கிற பாமர மக்கள் சாகிறாங்க... அவர்களது பிணங்கள் புதைக்கப்படறதா நினைக்கிறீங்களா... கிடையாது... விதைக்கப்படறாங்க.

நீங்க யுத்தத்திதில் அந்த மக்களை எல்லாம் அழிச்சா கூட அந்த விதை உங்களை நிம்மதியா வாழ விடாது. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைச்சி வந்து உங்களை அழிக்கும் என்பதை புரிஞ்சுக்குங்க.

நான், என்னுடையது என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு, இறங்கி வந்து எல்லாருக்கும் இணக்கமான ஒரு முடிவை எடுத்து, யுத்தத்தை நிறுத்துங்க. அது உங்களுக்கு நல்லது.
முப்பது ஆண்டுகள் ஆன பிறகு வேணாம்னு சொன்னா அது எப்படி... செத்தவங்க வந்து வாழறவங்களை சும்மா விட்டுடுவாங்களா... முடியாது. அது எப்படி விடுவாங்க.
அந்த இடத்தை அடைஞ்சே தீரணும். இதை இலங்கை அரசு புரிஞ்சிக்கணும். புரிஞ்சி நடந்துக்கணும். அப்படி புரிஞ்சிக்கலேன்னா... பெரிய நாடுகள் இலங்கை அரசுக்கு இதைப் புரிய வைக்கணும் என்றார் ரஜினிகாந்த்.

ரூ.10 லட்சம் உதவி!

பின்னர் இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதியாக தன் பங்குக்கு ரூ.10 லட்சத்தை வழங்குவதாக அறிவித்தவர், உடனடியாக அதற்கான காசோலையை சரத்குமாரிடம் வழங்கினார்.
http://www.envazhi.com

Friday, October 31, 2008

இலங்கை விவகாரம்: கேப்'டவுன்'!!

எச்சரிக்கை: இந்தக் கட்டுரை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கோ, அல்லது போர்முனையில் நிற்கும் புலிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிரானதோ அல்ல.

ஈழ ஆதரவு விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் (மலையகத் தமிழர்கள் உள்பட) சம உரிமையுடன், சிங்களர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே.

அதற்கான தீர்வு காந்தீய வழியில் வந்தாலும் சரி, நேதாஜி வழியில் கிடைத்தாலும் சரி, பெரும்பகுதி தாயகத் தமிழர்களைப் போல நமக்கும் சம்மதமே. எந்த முடிவும் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும்.

யதார்த்தமாக இலங்கை விவகாரத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய கருத்துக்களையே கொண்டிருப்பதை அறியலாம்.

ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவுக்குள் ஆயிரம் கணக்குகள் இருக்கிறது. அப்படி ஒரு கணக்கைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மற்றபடி இலங்கைப் பிரச்சினையின் உண்மைகள் குறித்து பின்னொரு சமயம் ஒரு தொடர் கட்டுரை எழுதும் விருப்பம் உள்ளது.

ரஜினிக்கு ஆதரவான இந்த தளத்தில் விஜய்காந்துக்கு எதிரான கருத்துக்கள் வருவது சகஜம்தான் என்ற மனநிலையில் உள்ளவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மையை யாரும் உரத்துச் சொல்லலாம்!

னித் தமிழீழம் மலரும் வரை நான் பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று வீர சபதம் எடுத்து, வைராக்கியமாக ‘வாழ்ந்து’ வருபவர் நம்ம விஜய்காந்த். ஈழத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இயக்குநர்கள் ஒரு பக்கம் சிறை செல்வதும், நடிகர்கள்
உண்ணாவிரதமிருப்பதுமாக திரையுலகம் பரபரவென இயங்கிக் கொண்டிருக்கையில், மகனுக்கு பிரபாகரன் பெயர் சூட்டி தன் தமிழ்ப் பற்றை பறை சாற்றிக் கொண்டிருந்த விஜய்காந்த் மட்டும் அடக்கி வாசிப்பது ஏனோ?

அரெஸ்ட் பயமா... இல்லை... இல்லவே இல்லை! அரசியல் லாப நோக்கம்தான்!

இது என்ன புதுக்கணக்கு என்கிறீர்களா...

இது புதுசல்ல... பழைய கணக்குதான். என்றைக்கு டெல்லிக்குப் போய் மேலிடப் பிரதிநிதிகளைச் சந்தித்து காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டு வந்தாரோ அன்று முதல் விஜய்காந்தின் ஈழப் பற்று ஈனஸ்வரத்தில் கேட்கத் துவங்கியிருப்பதை அரசியல் பாலபாடம் படிப்பவர்களும் கூட உணர முடியும்.

ராமேஸ்வரம் உண்ணாவிரதத்துக்கு வருவதாய் வாக்களித்த விஜய்காந்த் கடைசிவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத மர்மமும், இளைஞரணி மாநாடு முடிந்ததிலிருந்தே மந்திரித்துவிட்டவர் போல ஒரு மார்க்கமாய் திரிவதும் இந்த கூட்டணித் தேவைக்காகத்தான்.

இந்த மர்மம் புரிந்த பிறகுதான் கலைஞரும் ‘இந்திய இறையாண்மை மீதான தனது பற்றுத’லைக் காட்ட வேண்டி சில கைதுகளை அரங்கேற்றினார். இருக்கிற கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?

இப்போது உண்ணாவிரத விவகாரத்துக்கு வருவோம். நாளை உண்ணாவிரதம். முன்பு பிரபாகரனை தனது தலைவராக அறிவித்த கேப்டன், இந்த உண்ணாவிரதத்தின் போது என்ன செய்யப் போகிறார்?

எல்லோரையும் போல சும்மா வந்து போகப்போகிறார். அவ்வளவுதான். இயற்கையாகப் பெய்யும் மழையாக இருந்தாலும் சரி, தன் வீட்டுத் தெருவில் பொங்கி வழியும் சாக்கடையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் கலைர்ஞர்தான் காரணம் என்று அறிக்கையாய் விட்டுத் தள்ளும் இந்த அரிதார கேப்டன், இலங்கை விவகாரத்தில் மட்டும் தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த மறுப்பது மீடியாவுக்கு தெரியாதா...

இந்த திடீர் பதுங்கலை விமர்சித்து முடிந்தால் ஒரு ‘மனம் திறந்த மடல்’ எழுதிப் பார்க்கட்டுமே மீடியா உலக ஜோல்னா பையன்கள்...

தமிழினத்தின் ஏக போக பிரதிநிதிகளாய், தமிழர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாய் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்ளும் அஞ்ஞானிகளுக்கு இப்போது எங்கே போனது அறிவு?

அது சரி... இந்த அரிதார கேப்டனுக்கு பார்ட் டைம் ஆலோசகராகச் செயல்படும் அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

ஆனால் இந்த கபட நாடகங்களையெல்லாம் அறியாத தமிழ் மக்கள் செய்தித்தாள்களில் / மீடியாவில் பதிப்பிக்கப்படுகிற அனைத்தையும் நம்பி அல்லது அதன்பால் உணர்ச்சி வசப்பட்டு, இம்மாதிரி நிகழ்களில் கலந்து கொள்ள முடியாத அனைவரையுமே தமிழ்த் துரோகிகளாகவே வரித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்த அவலங்களைத் தோலுரித்துக் காட்ட முயல்பவர்களையும் இதே பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இங்கே நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களின் பின்னணியில் ஆயிரம் அரசியலிருக்கிறது!

இந்த வருட ஈழ ஆதரவு சீஸன் நமக்கு உணர்த்தும் பாடம் இது!


http://www.envazhi.com

Monday, September 22, 2008

எதிர்பார்த்த மாதிரியே திமுக மீது பழிபோட்ட விஜய்காந்த்!


இப்போதுதான் விஜய்காந்த் பிரஸ் மீட் முடிந்தது...

இதற்கு முந்தைய ஒரு கட்டுரைக்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்கு பதிலளித்தபோது, நிச்சயம் இது திமுக – அதிமுக சதி என்றுதான் விஜய்காந்த் கூறுவார் என கூறியிருந்தேன்.

அதில் சின்ன மாற்றம்... திமுகவின் திட்டமிட்ட சதி இது என விஜய்காந்த் தெரிவித்துள்ளார். அவருக்குத் தெரிந்த அரசியல் அது. அவரது இந்தப் பொய்யை வலுவாக, உரத்துச் சொல்ல பேருதவி புரிந்துள்ளது சன் நெட்வொர்க், தனது நேரடி ஒளிபரப்பு மூலம்!

வடிவேலு என்ன, கருணாநிதியே எதிர்த்து நின்றாலும் நான் போட்டிக்குத் தயார் என கொக்கரிக்கிறார் விஜயகாந்த் தனது பேட்டியில். எல்லாம் நேரம்!

பேட்டிக்கு வந்திருந்த நிருபர்கள் எல்லாரும் நமுட்டுச் சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். காரணம் இந்த பதில் அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதானே!

இதோ... விஜய்காந்த் பேட்டியின் சில பகுதிகள்...!

அப்போ எம்ஜிஆர்... இப்போ நான்!? (கொடுமை... கொடுமை)

இது ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் நடந்ததுள்ளது. இது கருணாநிதிக்கு கை வந்த கலை. அப்போது எம்.ஜி.ஆருக்கு எதிராக இப்படித்தான் செய்தார். எம்.ஜி.ஆர். வளர்ந்தது, கட்சியில் அவரது செல்வாக்கு வளர்ந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. சேலத்தில் ராஜேந்திரன் தாக்கப்பட்டார். பிறகு சுகுமாரன் வழக்கு. இப்படி நிறைய பொய் வழக்குகளைப் போட்டவர் கருணாநிதி. இப்போது எனக்கும் அதே மாதிரி செய்கிறார்.

கருணாநிதியின் திட்டத்திற்கு வடிவேலு பகடைக் காயாகி விட்டார். அவ்வளவுதான். அதை அவருடைய பேச்சுக்களைப் பார்த்தாலே தெரியும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர் மாறி மாறிப் பேசுகிறார்.

முதலில் கல்லால் அடித்தார்கள் என்றார், பிறகு 20 பேர் வந்தார்கள் என்றார், பிறகு 30 பேர் வந்தார்கள், ஒரு பைக்கில் நான்கு பேர் வந்தனர் என்றார். பைக் நம்பரைப் பார்க்கவில்லை என்றார். அதாவது ஆளுங்கட்சியினர் சொல்லிக் கொடுக்கக் கொடுக்க அதன்படி பேசுகிறார். தப்பு தப்பாக சொல்கிறார்.

கடைசியில் மாலை 6 மணிக்கு மேல், ஆளுங்கட்சியினர் சொன்னார்களோ என்னவோ, விஜயகாந்த் தூண்டுதல்தான் காரணம் என்கிறார்.

என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது வன்முறையான கேஸ், தவறான கேஸ்.

சக நடிகரை தாக்கலாமா என்கிறார். அவர் சக நடிகர் என்றால், எனது தங்கை கணவர் இறந்தபோது நான் இல்லாத நிலையில், அவர் நல்லது செய்திருக்கலாம். அதை செய்யவில்லை. பிரச்சினைதான் செய்தார்.

அடுத்த மாதம் நடக்கப் போகும் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டைத் தடுக்கவும், கெடுக்கவுமே இந்த சீப்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் கருணாநிதி. எனது கட்சி வளருகிறது என்று அவருக்கு கோபம்.

நேற்று காலையில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கலாம் என்றார். மாலையில் புதுச்சேரியிலும் பங்கு கேட்போம் என்கிறார். எப்போது பார்த்தாலும் அவருக்கு பதவி ஆசைதான். பதவி ஆசை அவரை விடாது (இவருக்கும் இவர் மனைவி மச்சானுக்கும் ஆசையே கிடையாது பாருங்க...) .

முதலில் தமிழ்நாட்டு காவல்துறையில் உள்ள திமுக போலீஸ், அதிமுக போலீஸ் ஒழிய வேண்டும். காவல்துறையினரின் போக்கையெல்லாம் பார்த்து விட்டு, காக்கி டிரஸ் போட்டு நடிக்கவே கூடாது என்று முடிவெடுக்கும் நிலைக்கு நான் வந்து விட்டேன். என்ன பேசினாலும் கேஸ், எத்தனை பொய் கேஸ்.

என்னை எப்படி ஒழிக்க முடியும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார். என் வீட்டைச் சுற்றி போலீஸ். நல்லதைச் சொல்லி அவரால் ஓட்டு வாங்க முடியாது. எல்லாமே ஊழல். எல்லாமே பொய்க் கேஸ். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

கருணாநிதியே போட்டியிட்டாலும் கவலை இல்லை!

வடிவேலு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார். தேர்தலில் நிற்பேன் என்கிறார். யார் வேண்டுமானாலும் நிற்கலாம், இது ஜனநாயக நாடு. கருணாநிதியே என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு தெரியும் எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று.

இந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓய மாட்டேன். தைரியத்தை சோதித்துப் பார்த்தால் அது முடியாது. நான் தைரியமானவன். மக்கள் பிரச்சினைகளுக்காக உள்ளே தூக்கிப் போட்டால் தைரியமாக போவேன்(தூக்கி உள்ளே போடுங்கப்பா முதல்ல... எத்தை நாள் தாக்குப்பிடிக்கும் இவர் கட்சி பார்க்கலாம்!)

காவல்துறை நல்லவர்களுக்காக பாடுபட வேண்டும். கெட்டவர்களுக்குத் துணை போகாதீர்கள். அடுத்த ஆட்சி மாறினால், நீங்கள் எங்கே போய் விழுவீர்கள் என்று தெரியாது. அத்தனையும் தூசு தட்டி எடுக்கப்படும். அப்போது நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நீங்கள் சம்பாதித்த காசை திரும்ப வாங்குவோம்.

இப்போது எனது பேச்சை மக்கள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பவர் கட் (!!) என எனக்கு செய்தி வந்துள்ளது. இதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம். இதுதான் சர்வாதிகார ஆட்சி என்றார் விஜயகாந்த்.

ரெம்பத்தான் கண்ணைக் கட்டுதே... என்கிறீர்களா...

வடிவேலு சொன்னதைத்தான் நானும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்னும் ஆட்சியின் அருகில்கூட வரவில்லை... அதற்குள் என்னமா சவுண்ட் விடுறார்... அடுத்த தேர்தல்ல இவருக்கு கூடுதலா ஒரு சீட் கெடச்சா கூட தமிழ் மக்களுக்கு ரொம்ப இருட்டான காலமாயிடும் போலருக்கே!

Friday, September 5, 2008

ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்! - 'இப்ப என்னங்கடா செய்வீங்க'!!


தன்னைப் பார்த்து குரைப்பவர்களைப் பற்றிக் கவலைப் படாமல், உலக அளவில் ஒரு பிரமாண்டப் படத்தை உருவாக்கும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
இயந்திரன் - தி ரோபோ என தமிழ்ப் படத்துக்குத் தலைப்பு வைத்திருக்கும் ரஜினியும் இயக்குநர் ஷங்கரும், இதன் தெலுங்கு மற்றும் இந்தி வடிவங்களை ரோபோ எனும் பெயரிலேயே வெளியிட முடிவு செய்துள்ளனர். ஷாரூக்கான் 9 தலைப்புகளைப் பதிவு செய்திருந்தாலும், அவை ஷங்கர் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்புக்கு சம்பந்தமில்லாதவை என்றே கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கமும் தி ரோபோ எனும் பெயரிலேயே ரிலீசாகப் போகிறதாம்.

இனி படம் குறித்து ஷங்கர் அதிகாரப்பூர்வமாக இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கை:

இயந்திரன் – தி ரோபோ: இந்தியாவின் முதல் சர்வதேசப் படம்!

முழுக்க முழுக்க ஹாலிவுட்டில் தயாராகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையுடன் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் படப்பிடிப்பு துவங்குகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயந்திரன் – தி ரோபோ (நேற்று எந்திரம் என்று குறிப்பிட்டிருந்தோம். அது இயந்திரன் என மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் ஷங்கரின் மீடியா மேனேஜர் நிகில்!) படத்துக்காக.
இந்தப் படத்தில் பணியாற்றுபவர்களில் பாதிக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஹாலிவுட்டில் பெரும் வெற்றிப் படங்களில் பணியாற்றியவர்கள் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இன்று ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மென் இன் பிளாக், பேட்மென்ஸ் ரிட்டர்ன், இன்ஸ்பெக்டர் காட்கெட்ஸ் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் மேரி இ வோக்ட், ரோபோவின் காஸ்ட்யூமராகப் பணியாற்றுகிறார். இவருடன் இந்தியாவின் நம்பர் ஒன் காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவும் இணைகிறார்.

இயந்திரனுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளைச் செய்யப் போகிறவர்கள் ஹாவலிவுட்டின் நெம்பர் ஒன் ஸ்டுடியோ எனப்படும் ஸ்டான் வின்ஸ்டன். இவர்கள்தான் டெர்மினேட்டர், டெர்மினேட்டர் -2, ஜூராஸிக் பார்க், பிரடேடர், பியர்ல் ஹார்பர், சமீபத்தில் உலகைகே கலக்கிய அயர்ன் மேன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு மிரட்டலான கிராபிக்ஸ் பணிகளைச் செய்தவர்கள். இந்தியப் படம் ஒன்றில் இவர்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறை.

படத்துக்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் தர ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்கள் ஐஎல்எம், கேப் இஎப்எக்ஸ், ஹாங்காங்கின் சென்ட்ரோ, மென்போர்டு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்கள்.

ஹாலிவுட்டின் எந்தப் படத்துக்கும் சவால் விடும் வகையில் ரஜினியின் இயந்திரனை உருவாக்குவதற்காகவே இவ்வளவு பெரிய முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

‘நிச்சயம் இந்தப் படம்தான் இந்திய சினிமாவின் சர்வதேச முகவரியாக இருக்கப் போகிறது. டெர்மினேட்டரை விட பல மடங்கு மிரட்டலான ஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் உலகம் முழுக்க வெளியாகப் போகிறது இயந்திரன்’ –என்கிறார் அவர்.

இனி ரஜினி டார்கெட், உலக மார்க்கெட்!

இந்த பிரமாண்டங்களுப் பின்னணியில் ஒரு முக்கியக் காரணம் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

ரஜினி படங்களின் வீச்சை இந்திய திரை உலகை விட ஹாங்காங், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ரஜினி நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இயந்திரன் என்று கூடச் சொல்லலாம். இந்தப் படத்தின் மார்க்கெட் உலகளாவியதாக இருக்கும். அப்போது தமிழ்நாடு, ஆந்திரா என்று மாநிலம் தழுவிய விற்பனை உரிமை ஒரு பொருட்டாகவே இருக்காது.

தேவையில்லாமல் சிறு விஷயங்களையும் ஊதிப் பெரிதாக்கும் போக்கும் நின்று போகும். எனவேதான் ரஜினி இத்தனை பிரமாண்டங்ககளையும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் வார்னர் பிரதர்ஸ் உருவாக்கவிருக்கும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திட்டமும் ரஜினிக்கு உள்ளது. அதற்கான வெள்ளோட்டம்தான் இயந்திரன், என்கிறார்கள்.

எப்படியோ, ரஜினியின் படம் ஒன்று முழுக்க முழுக்க ஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு இணையாகத் தயாராவது ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் வியாபார எல்லைகளையே விரிவடையச் செய்திருக்கிறது என்பதே உண்மை.

ரியலி கிரேட்!

நன்றி: எஸ்சினிமா, தட்ஸ்தமிழ்

Shankar officially announced Enthiran – The Robot!

Here is the official press release of Director Shankar on the forthcoming Grandeur of Superstar Rajinikanth’s Robot (Enthiran – The Robot).
“With Super Star Rajnikanth and Aishwarya Rai Bachan in lead rolls, the film is start rolling on September 8th at America.
The big movie production houses which involved into this grandeur venture are Ayngaran International Films Pvt Ltd. and Eros International.
Two fantastic numbers in A. R. Rahman’s music, is about to shot in beautiful locations of America and surrounding countries.
The other cast and crew: Cinematography R. Ratnavelu. Art: Sabu Cyril, Lyrics: Vairamuthu, Pa. Vijay, Editing: Antony, Choreography: Raju Sundaram, Costume Design: Manish Malhotra.
The Costume Designer of Men in Black, Batman returns, Inspector Gadget Mary E Vogt is designing the scientific outfits.
Stan Winston Studio (USA) who has worked for Predator, Jurassic Park, Pearl Harbor, Iron man, Terminator and I - Robot is doing Animatronics.
Yuen Woo Ping who handled stunt for many Hollywood movies like Crouching Tiger Hidden Dragon, Matrix and Kill Bill is currently working for Endhiran – The Robot.
All the three world renowned people working for an Indian movie is for the first time.
Hollywood companies like ILM, Tippet, Café EFX; and Hong Kong companies like Centro and Menfond are going to work in the field of VFX. Visual Effects and Animatronics co-ordination: Indian Artiste.
K. Karunamurthi and C. Arunpandian produced the film behalf of Ayngaran films international and Eros. K. Vijayakumar is the Executive Producer.

www.rajinifans.com

Thursday, September 4, 2008

இயந்திரன் ஆனது ரோபோ!


சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து ஷங்கரின் நடிக்கவிருந்த ரோபோபடத்தின் பெயர் இயந்திரன் - தி ரோபோ என மாற்றப்பட்டுள்ளது.

இதோ அதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி:

இந்தியாவின் ஷோமேன் எனப் புகழப்படும் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படமான ரோபோவுக்கு, இயந்திரன் – தி ரோபோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிவாஜிக்கு அடுத்து ரஜினிகாந்த்தும் ஷங்கரும் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்யப் போவதாக அறிவித்தனர். அதற்கு ரோபோ என்று தலைப்பும் சூட்டினர். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும், தமிழின் முதல் பிரமாண்ட விஞ்ஞானப் படம் இது.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் (சுமார் ரூ.140 கோடி) அய்ங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உருவாக்கும் இந்தப் படத்துக்கு பொருத்தமான தமிழ் தலைப்பு சூட்டப்படும் என ரஜினி முன்பு அறிவித்திருந்தார்.

தமிழில் பெயர் வைத்தால் கிடைக்கும் வரிச் சலுகைக்காக இந்தப் பெயர் மாற்றம் இல்லை என்றும், தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என தமிழக அரசின் விருப்பத்தை மதிக்கும் வகையில் இப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் ரஜினி ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இயந்திரா என்ற பெயர் முதலில் பரிசீலிக்கப்பட்டது. பின்னர் இயந்திரன் என மாற்றப்பட்டது. ஆனால் இதில் ரஜினிக்கு அவ்வளவாக திருப்தி இல்லையாம்.
கடைசியில் அவரது யோசனைப்படி இயந்திரன் – தி ரோபோ என இந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 3 போட்டோ செஷன்கள் முடிந்து விட்டன. கடந்த வாரம் அமெரிக்காவில் ஹாலிவுட் ஸ்டுடியோவில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாளை மறுதினம் முழு வீச்சில் பிரேஸ்ல் நாட்டில் படப்பிடிப்புத் துவங்குகிறது.

ஏற்கெனவே ரோபோ படப்பிடிப்புக்காக ஷங்கருடைய ஒரு குழு பிரேஸிலில் முகாமிட்டுள்ளது.
ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் நாளை புறப்படுகின்றனர். படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் நேராக பிரேஸிலுக்கு 7-ம் தேதி வந்து விடுவார் எனக் கூறப்படுகிறது.

நன்றி- தட்ஸ்தமிழ், எஸ்சினிமா