Showing posts with label Srilankan Tamils. Show all posts
Showing posts with label Srilankan Tamils. Show all posts

Monday, November 10, 2008

போலி ஞானிகள்!

ல்லதைக் கெட்டது என்றும், அநியாயத்தை நியாயம் என்றும் வெகுஜன ஊடகங்களில் தனது வக்கிரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் நோயுள்ளத்துக்குச் சொந்தக்காரரான இந்த ஞானி யார்..?

இதோ அவரை நன்கு அறிந்த ஒரு பிரபலத்தின் வரிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்...

ஒரு விதத்தில் இதுதான் அவருக்கு முறையான அறிமுகமும் கூட!


போலி ஞானிகள்!

சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…

கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவு பார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…

புலிகளின் சீருடை போட்டுக் கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்து விட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒருகேடு கெட்ட சிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்…
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…

------- ------ -----
------- ------ -----

…எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம்!

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!
எங்களால் முடியாது!

நன்றி: கவிஞர் அறிவுமதி

குறிப்பு: இந்தக் கவிதை ஞானியின் இரட்டை... அல்ல அல்ல... பன்முக வேஷத்தை உரித்துக்காட்ட கவிஞர் அறிவுமதி எழுதியது. எழுதப்பட்ட நோக்கம், சூழல் மற்றும் எழுதியவர் இயங்கும் தளம் வேறாக இருந்தாலும், ஞானி என்ற போலி பகுத்தறிவுவாதியின் நிஜ முகத்தை உலகுக்கு வெளிச்சம் போட்ட வரிகள் இவை.

கவிஞருக்கு மீண்டும் நன்றி!
http://www.envazhi.com

Sunday, November 9, 2008

ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வேண்டும்!

ஜினியை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டுமா.. கூப்பிடுங்கள் சீமானை என்றிருந்த நிலையில், குசேலன் பிரச்சினையின்போது, ரஜினிக்கு ஆதரவாகப் பேசி ஆச்சர்யப்பட வைத்தவர் இயக்குநர் சீமான்.

ஆனால் சில தினங்களில், கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டார் என ஒரு பொய்யைப் பரப்பி யாரோ தூண்டிவிட, மீண்டும் ரஜினிக்கு எதிராக விஷம் கக்கினார் இதே சீமான்.

இப்போது மீண்டும் ‘தெளிவாகி’யிருக்கிறார். குறிப்பாக ஈழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, யாரும் பேச முடியாத அளவு அழுத்தம் திருத்தமாக ரஜினி பேசியவற்றைக் கேட்ட பின் அவரை வாயாரப் புகழ்ந்திருக்கிறார் சீமான்.

‘நேரத்துக்கு ஒரு பேச்சுப் பேசும் இந்த சீமானின் புகழ்ச்சி தலைவருக்குத் தேவையா...’ என்கிற ரீதியில் சில ரசிகர்களின் குரல்கள் கேட்கக்கூடும்.

எப்பொருள் யார் யார் வாய்க்க கேட்பினும்... என்ற வள்ளுவப் பெருமானின் வாக்குமட்டுமல்ல, இங்கு சீமான் பேட்டியைத் தர வேறு ஒரு காரணமும் இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் வெளியான விஷம விகடனின் கொடுக்கு ஒன்றில் ரஜினியின் உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிட்டிருந்தனர்.

கூடவே, ரஜினியின் உண்ணாவிரதப் பேச்சை இயக்குநர் சீமானும், அமீரும் கடுமையாக எதிர்த்ததாகவும், ரஜினிக்கு கண்டன அறிக்கை விடவும் தயாரானதாகவும், அவர்களை பாரதிராஜா சமாதானப்படுத்தியதாகவும் புளுகியிருந்தனர்.

ஆனால் நிஜத்தில் நடந்தது என்ன?

இதோ... ரஜினியின் உண்ணாவிரதப் பேச்சு குறித்த சீமான் அளித்துள்ள பேட்டி. அடுத்து அமீர் பேட்டியும் வருகிறது. விரைவில் பாரதிராஜாவின் முழுமையான பேட்டியையும் வெளியிடவிருக்கிறோம்.

மீண்டும் ரஜினியின் அதே ‘நச்’ கேள்வியைத்தான் அந்த விஷமக்காரர்களைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது... ‘இப்ப உங்க மூஞ்சிங்கள என்னங்கடா போய் வச்சுக்குவீங்க...?’

ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வேண்டும்!

"இலங்கைத் தமிழர்களைக் காக்க பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராடும்போது, தங்களது திரைப்பட வர்த்தகத்தை விரிவடையச் செய்ததில் ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு என்பதை திரைப்பட நடிகர்கள் மறக்கவில்லை. அதற்கு நன்றிக்கடனாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் அது பாராட்டுதலுக்குரியதே. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே தங்கள் உ
ணர்வைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் எழுந்தே தீரும், என கமல் கூறியது சரியான வார்த்தை.

சர்வதேச ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு முப்பதாண்டுகளாகப் போராடியும் வெற்றி முடியவில்லையென்றால், நீங்க ஆம்பிளைங்களா... உங்கள் தோல்வியை ஒத்துக்கோ... என ரஜினி கூறியதும் சரியானதே.


ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வரவேண்டும். அதாவது, ரஜினியின் கருத்தை இந்தியா உணர வேண்டும் என்பதே என் விருப்பம். தமிழர்களின் உணர்வை இந்த உண்ணாவிரதம் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. நடிகர்களுக்கு சமூக அக்கறை இருப்பதை நிரூபித்திருக்கிறது..."


http://www.envazhi.com

Sunday, November 2, 2008

வன்னிக் காடுகளைத் தொட்ட ரஜினியின் பேச்சு!


லங்கைப் பிரச்சினையில் நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுபவர்களுக்குப் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கிறது...” என்று முன்பொரு பதிவில் குறிட்டிருந்தேன்.
ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சும் அந்த மக்களுக்காக அவர் செய்துள்ள நிதியுதவியும் அந்த வார்த்தைகளை மெய்ப்பித்துள்ளன.

ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சு, உலகமெங்கிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நமக்கு தனிப்பட்ட முறையில் குவியும் மின்னஞ்சல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கே கூட, ரஜினியின் இந்தப் பேச்சு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இலங்கை இனப் பிரச்சினையில் ரஜினியின் நிலை என்ன என்று கேட்டும் விமர்சித்தும் வந்த பல அரசியல் தலைவர்களும், ரஜினி எதிர்ப்பாளர்களும், அவரது தீர்க்கமான இந்த நேரிய பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போய்விட்டார்கள்.

‘இத்தனை தீர்க்கமான சிந்தனை, கூரிய அவதானிப்பு கொண்டவரா இந்த மனிதர்!’ என வியந்து மகிழ்ந்தனர், இந்தப் போராட்டத்துக்கு வாழ்த்துச் சொல்ல பழ நெடுமாறனுடன் வந்திருந்த இரு இலங்கைத் தமிழ் எம்பிக்களும்.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அதே நேரம் ஈழ மக்களுக்காக அவர்கள் நடத்தும் ஆயுதமேந்திய போராட்டத்தின் பின்னால் உள்ள நியாயத்தை தனக்கே உரிய பாணியில் அவர் பேசிய விதம் ‘வன்னிக்காடுகள்’ வரை எதிரொலித்ததாக யாழ்ப்பாணத்தில் உள்ள நமது பத்திரிகையாள நண்பர் (பிரபல நாளிதழின் இலங்கை நிருபர் அவர்) நம்முடன் பகிர்ந்து கொண்டது சிலிர்ப்பைத் தந்தது.

இலங்கையின் ஈழப் பகுதியில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் மாதத்தின் துவக்க நாள் இன்று. ஒவ்வொரு நினைவு நாளின் போதும், மாவீரர்களின் நினைவிடத்தில் ஈழ விடுதலைப் போராளிகள் கூறும் வார்த்தை, ‘இங்கே இந்த மாவீரர்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறார்கள்...’ என்பதே.

அந்த போராளிகளுக்கும், அவர்களை நம்பியுள்ள லட்சோப லட்சம் மக்களுக்கும் ரஜினியின் வார்த்தைகள் மிகுந்த ஆன்ம பலத்தைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார் அந்த இலங்கை நண்பர்.

“ஒரு தெய்வ சகுனமாகவே ரஜினியின் பேச்சு இன்று அமைந்துவிட்டது. இந்தத் தகவல்கள் எட்டியபோது தங்கள் துன்பங்களையும் மறந்து இந்தப் பகுதி மக்கள் சந்தோஷப்பட்டதைக் காண முடிந்தது. அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு, இந்த மக்கள் இத்தனை நம்பிக்கையோடு காதுகொடுத்துக் கேட்ட வார்த்தைகள் ரஜினியினுடையவைதான். நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல், ரஜினி நிச்சயம் இனி உலக சூப்பர்ஸ்டார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த ஆன்ம பலம் இந்த மக்களுக்கு இன்னும் உரத்தையும், பல போர்களைத் தாங்கும் அல்லது வெற்றி கொள்ளும் நெஞ்சுறுதியையும் தரும்...” என்றார் அவர்.

நல்ல மனிதரின் வார்த்தைகளுக்கு மட்டுமே உள்ள சக்தி அது!

சிலர் இப்படிக் கேட்கலாம்:

ரஜின் பேசியதால் மட்டுமே, ராஜபக்சே அரசு திருந்திவிடப் போகிறதா... அந்த மக்களுக்கு விடிவு காலம் பிறந்துவிடுமா... என்று.

நிறவெறிக் கொள்கைக்கு எதிராக, தனக்கு சம்பந்தமே இல்லாத ஆப்பிரிக்க மண்ணில் காந்தியடிகள் முதல் போர்க்குரல் எழுப்பியபோது அவரை நோக்கி அந்நாட்டு காவல் துறைத் தலைவர் கேட்ட கேள்வி இது. இத்தனைக்கும் அன்று காந்தி மகாத்மாவாக அறியப்பட்டிருக்கவில்லை.

அதற்கு மகாத்மா சொன்ன பதில்: “இந்தக் குரல் ஒரு புள்ளிதான். ஆனால் இந்தப் புள்ளியே பல புள்ளிகளை ஈர்க்கும் மையமாக மாறும். அது இந்த சமுதாயத்துக்கே புதிய ஆன்ம பலத்தைத் தரும். அவர்களது உரிமைகளைப் பெறத் தேவையான போராட்டத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்”.

ரஜினி உலகறிந்த ஒரு சூப்பர்ஸ்டார். அவரது பேச்சு ஈழ மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஈழ மக்களின் துயரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ரஜினியின் புகழ் பாடப்படுவதாகவும் சிலர் விமர்சிக்கக் கூடும்.

கிடைத்தற்கரிய ஒரு இடத்திலிருந்து மிக இக்கட்டான தருணத்தில் ஒரு ஆதரவு கிடைக்கும்போது, அந்த திருப்பத்துக்குக் காரணமானவர் மீதுதான் அனைவரது பார்வையும் விழும். அதுதான் இயற்கை. அந்த திருப்பமே ஒரு போராட்டத்தின் போக்கை இன்னொரு திசையில் தீவிரப்படுத்துகிறதென்றால், அதற்குக் காரணமானவரைப் புகழ்வதில் என்ன தவறு இருக்கிறது.

சிங்கள ராணுவத்தின் பேடித்தனத்தை இப்படி சம்மட்டியால் அடித்த மாதிரி இன்றுவரை ஒருவரும் கேட்டதில்லை. அதேநேரம் விடுதலைப் புலிகளின் 30 ஆண்டு கால போராட்டங்களின் வெற்றிகளை இத்தனை அழகாக யாரும் அங்கீகரித்ததுமில்லை எனப் பாராட்டுகிறார் பிரபல நாளிதழின் தலைமை நிருபர் மோகன்.

ரஜினியின் பேச்சு குறித்து திருமாவளவன் கூறியதை இங்கே முத்தாய்ப்பாகக் கூறுகிறேன்:

ரஜினி வெறும் நிழல் சூப்பர் ஸ்டார் அல்ல. அவர் நிஜமான துருவ நட்சத்திரம் என்பதை நிரூபித்துவிடார். ஈழ விடுதலைப் போரில் சற்றே அயர்வுற்றுக் கிடக்கும் நெஞ்சங்களையும் தட்டி எழுப்பியுள்ள அருமையான உரை என்றே அதைச் சொல்ல வேண்டும்.

முப்பது ஆண்டுகளாக நடந்த போரில் ஈழப் போராளிகளை சிங்கள ராணுவத்தால் வெல்லவே முடியவில்லை என்பதை, இதுவரை நடந்த எந்த ஆதரவுக் கூட்டத்திலும் யாரும் இவ்வளவு அழுத்தமாகச் சொன்னதில்லை.

இரு இனங்களுக்கு இடையே நடக்கும் ஒரு உரிமைப்போரில் சிறுபான்மைத் தரப்புக்கு கிடைக்கிற வெற்றி அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரம் இருந்தாலே ஆயிரம் யானை பலம் வந்துவிடும் ஒரு மனிதனுக்கு.

ஒரு மனிதனுக்கே இப்படியென்றால், ஒரு சமூகத்துக்கு? ஈழத் தமிழ் சமுதாயத்துக்கு அப்படியொரு பலத்தைத் தந்துள்ள பேச்சு இது. நாம் சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறோம். நம் தாய் வழிச் சொந்தங்கள் நம் பின்னால் இருக்கிறார்கள் என்ற புத்துணர்வை ஈழ மக்களுக்குத் தந்துள்ள பேச்சு.

அன்பு நண்பர் ரஜினி நீடூழி வாழ்க!, என்றார்.

திருமா மட்டுமல்ல, இன்று லட்சோப லட்சம் தமிழ் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்!
http://www.envazhi.com

Friday, October 31, 2008

இலங்கை விவகாரம்: கேப்'டவுன்'!!

எச்சரிக்கை: இந்தக் கட்டுரை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கோ, அல்லது போர்முனையில் நிற்கும் புலிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிரானதோ அல்ல.

ஈழ ஆதரவு விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் (மலையகத் தமிழர்கள் உள்பட) சம உரிமையுடன், சிங்களர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே.

அதற்கான தீர்வு காந்தீய வழியில் வந்தாலும் சரி, நேதாஜி வழியில் கிடைத்தாலும் சரி, பெரும்பகுதி தாயகத் தமிழர்களைப் போல நமக்கும் சம்மதமே. எந்த முடிவும் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும்.

யதார்த்தமாக இலங்கை விவகாரத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய கருத்துக்களையே கொண்டிருப்பதை அறியலாம்.

ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவுக்குள் ஆயிரம் கணக்குகள் இருக்கிறது. அப்படி ஒரு கணக்கைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மற்றபடி இலங்கைப் பிரச்சினையின் உண்மைகள் குறித்து பின்னொரு சமயம் ஒரு தொடர் கட்டுரை எழுதும் விருப்பம் உள்ளது.

ரஜினிக்கு ஆதரவான இந்த தளத்தில் விஜய்காந்துக்கு எதிரான கருத்துக்கள் வருவது சகஜம்தான் என்ற மனநிலையில் உள்ளவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மையை யாரும் உரத்துச் சொல்லலாம்!

னித் தமிழீழம் மலரும் வரை நான் பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று வீர சபதம் எடுத்து, வைராக்கியமாக ‘வாழ்ந்து’ வருபவர் நம்ம விஜய்காந்த். ஈழத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இயக்குநர்கள் ஒரு பக்கம் சிறை செல்வதும், நடிகர்கள்
உண்ணாவிரதமிருப்பதுமாக திரையுலகம் பரபரவென இயங்கிக் கொண்டிருக்கையில், மகனுக்கு பிரபாகரன் பெயர் சூட்டி தன் தமிழ்ப் பற்றை பறை சாற்றிக் கொண்டிருந்த விஜய்காந்த் மட்டும் அடக்கி வாசிப்பது ஏனோ?

அரெஸ்ட் பயமா... இல்லை... இல்லவே இல்லை! அரசியல் லாப நோக்கம்தான்!

இது என்ன புதுக்கணக்கு என்கிறீர்களா...

இது புதுசல்ல... பழைய கணக்குதான். என்றைக்கு டெல்லிக்குப் போய் மேலிடப் பிரதிநிதிகளைச் சந்தித்து காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டு வந்தாரோ அன்று முதல் விஜய்காந்தின் ஈழப் பற்று ஈனஸ்வரத்தில் கேட்கத் துவங்கியிருப்பதை அரசியல் பாலபாடம் படிப்பவர்களும் கூட உணர முடியும்.

ராமேஸ்வரம் உண்ணாவிரதத்துக்கு வருவதாய் வாக்களித்த விஜய்காந்த் கடைசிவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத மர்மமும், இளைஞரணி மாநாடு முடிந்ததிலிருந்தே மந்திரித்துவிட்டவர் போல ஒரு மார்க்கமாய் திரிவதும் இந்த கூட்டணித் தேவைக்காகத்தான்.

இந்த மர்மம் புரிந்த பிறகுதான் கலைஞரும் ‘இந்திய இறையாண்மை மீதான தனது பற்றுத’லைக் காட்ட வேண்டி சில கைதுகளை அரங்கேற்றினார். இருக்கிற கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?

இப்போது உண்ணாவிரத விவகாரத்துக்கு வருவோம். நாளை உண்ணாவிரதம். முன்பு பிரபாகரனை தனது தலைவராக அறிவித்த கேப்டன், இந்த உண்ணாவிரதத்தின் போது என்ன செய்யப் போகிறார்?

எல்லோரையும் போல சும்மா வந்து போகப்போகிறார். அவ்வளவுதான். இயற்கையாகப் பெய்யும் மழையாக இருந்தாலும் சரி, தன் வீட்டுத் தெருவில் பொங்கி வழியும் சாக்கடையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் கலைர்ஞர்தான் காரணம் என்று அறிக்கையாய் விட்டுத் தள்ளும் இந்த அரிதார கேப்டன், இலங்கை விவகாரத்தில் மட்டும் தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த மறுப்பது மீடியாவுக்கு தெரியாதா...

இந்த திடீர் பதுங்கலை விமர்சித்து முடிந்தால் ஒரு ‘மனம் திறந்த மடல்’ எழுதிப் பார்க்கட்டுமே மீடியா உலக ஜோல்னா பையன்கள்...

தமிழினத்தின் ஏக போக பிரதிநிதிகளாய், தமிழர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாய் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்ளும் அஞ்ஞானிகளுக்கு இப்போது எங்கே போனது அறிவு?

அது சரி... இந்த அரிதார கேப்டனுக்கு பார்ட் டைம் ஆலோசகராகச் செயல்படும் அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

ஆனால் இந்த கபட நாடகங்களையெல்லாம் அறியாத தமிழ் மக்கள் செய்தித்தாள்களில் / மீடியாவில் பதிப்பிக்கப்படுகிற அனைத்தையும் நம்பி அல்லது அதன்பால் உணர்ச்சி வசப்பட்டு, இம்மாதிரி நிகழ்களில் கலந்து கொள்ள முடியாத அனைவரையுமே தமிழ்த் துரோகிகளாகவே வரித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்த அவலங்களைத் தோலுரித்துக் காட்ட முயல்பவர்களையும் இதே பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இங்கே நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களின் பின்னணியில் ஆயிரம் அரசியலிருக்கிறது!

இந்த வருட ஈழ ஆதரவு சீஸன் நமக்கு உணர்த்தும் பாடம் இது!


http://www.envazhi.com

அடடா... என்னே தமிழுணர்வு!

குசேலன் படத்தில் ஒரு காட்சி. நரிக்குறவர் இன பிரதிநிதிகளான சின்னி ஜெயந்தும், பிரம்மானந்தமும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் மனு கொடுப்பார்கள். அப்போது ரஜினி அழகாக ஒரு வாக்கியம் சொல்வார்: ‘மனு வாங்க நான் என்ன மந்திரியா... நான் ஒரு நடிகன் அவ்வளவுதான்!’

-தன் நிலை உணர்தல் என்பதற்கு எத்தனை அழகான உதாரணம் பாருங்கள். இங்குள்ள நடிகர்கள் யாரும் தங்கள் நிலை உணர்ந்தவர்களாகவே தெரியவில்லை. உணர்வைக் காட்டுகிறோம் பேர்வழி என்று இருக்கிற பகையுணர்ச்சியைக் கிளறி விடுவதுதான் இவர்கள் செய்துவரும் வேலை.

பட்டால்தான் இவர்களுக்குப் புத்தி வருகிறது. ஒகேனக்கல் பிரச்சினையின்போது, ‘உருளுவது ரஜினி தலைதானே’ என்று பெரும்பாலான நடிகர்கள் சும்மா இருக்க, வயித்தெரிச்சல் கோஷ்டிகள் சந்தோஷமாக பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்கள்.

ரஜினி கன்னடர்களிடம் கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக மீடியாக்கள் பொய் பரப்பி, குசேலனில் தங்களுக்கு ஒரு ‘பங்கு’ கிடைக்காத கோபத்தைப் போக்கிக் கொண்டார்கள்!

ஆனால் அதே ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழக அரசு அடித்த குட்டிக் கரணங்களைப் பார்த்த பிறகுதான் பல முன்னணி நடிகர்களுக்கு, இதில் ‘புகுந்து விளையாடும்’ அரசியல் புரிய ஆரம்பித்தது. அதனால்தான் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தக் கூப்பிட்ட போது முதலில் உணர்ச்சி வேகத்தில் ஒப்புக் கொண்டவர்கள் பின்னர் சற்றே பின்வாங்கி, பின்னர் முழுசாகவே மறுத்துவிட்டனர்.

அமீர், சீமான் கைது என தமிழக அரசு போட்ட வேடத்தைப் பார்த்த பிறகு, தங்களின் எல்லை என்ன, எப்படி இனி பேச வேண்டும் என்றும் ஓரளவு ‘தெளிவாகி’ விட்டார்கள். அதன் விளைவுதான் இப்போது சரத்குமார் விடுத்துள்ள அறிக்கை.

அந்த அறிக்கையில், நடிகர் நடிகைகள் தங்கள் வரம்பு மீறி எதும் பேசக்கூடாது என்றும், தங்கள் உணர்வுகளை சுருக்கமாக வெளிப்படுத்தினால் போதும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் உணர்ச்சி வசப்பட்டு உளறக் கூடாது என்றும் அறிவித்து அதில் கையொப்பமிட்டு அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் விநியோகித்து வருகிறார்.

இதைத்தானே ஆரம்பத்திலிருந்து ரஜினி சொல்கிறார்.

கர்நாடகத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் நிரந்தரமாகத் தங்கி அந்த மாநிலத்தவர்களாகவே மாறிவிட்டிருக்கிறார்கள். பெங்களூருவில் சரிபாதி தமிழர்கள்தான். ஐடி நிறுவன ஊழியர்களில் 80 சதவிகிதம் தமிழர்கள் நல்ல சம்பளத்துடன், தமிழ்நாட்டுக்கு திரும்பும் யோசனையே இல்லாமல் செல்வாக்குடன் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இவர்களின் அமைதி கெட்டும் போகும் விதத்தில் நாம் எப்போதும் பேசக் கூடாது. அரசுகள் மட்டத்தில் ஆராய்ந்து நிதானமாக எடுக்க வேண்டிய ஒரு முடிவை கலைஞர்களாகிய நாம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி கெடுக்க வேண்டாம், என்று பல ஆண்டுகளாகக் கூறிவருகிறார் ரஜினி.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர் நலன் பாதிக்காத வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் எனக் கூறி வருகிறார்.

ஆனால் இதையெல்லாம் சொன்னதாலேயே அவரை தமிழர் விரோதியாகச் சித்தரித்தது ஒரு கும்பல். மீடியாவும் அவர்களுக்கு சொரிந்து கொடுத்தது. இப்போது அதுவே பெரிய புண்ணாகிப் போனதால், அடக்கி வாசிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

அப்படியென்றால் இலங்கைத் தமிழர்கள் மீது பரிவு காட்டக் கூடாதா... அங்கே அவர்கள் செத்து மடிகிறார்கள்.. இங்கே இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ அவர்களும்தானே காரணம், அவர்களுக்குக் குரல் கொடுக்கக் கூடாதா...?

குரல் கொடுக்கலாம்... தப்பில்லை... ஆனால் குரல் கொடுக்கச் சொல்லிவிட்டு, குரல் வளையை நெறிக்கும் வேலையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை நம்பி குரல் கொடுப்பதில் என்ன பலன்...?

ராஜீவ் காந்தியைக் கொன்றதற்காக தமிழர்கள் தண்டிக்கப்படுவது நியாயமா என முழங்கிய அரசியல்வாதிகள் தப்பிவிட்டார்கள். அதே குரலை உரத்து ஒலித்த பாரதிராஜாவைக் கைது செய்யுங்கள் என்ற முழக்கம் கேட்கிறதே... இந்த முழக்கத்துக்குப் பயந்து அவரும் அடக்கி வாசிக்கிறாரே... இதற்குப் பெயர் என்ன?

அன்று ரஜினியை விமர்சித்த அனைவரும் இன்று, ‘ரஜினி சொல்வதுதான் சரியானது. நமது உணர்வுகளை எந்த வற்புறுத்தலுக்கும் பணியாமல், அதேநேரம் யாரையும் வற்புறுத்தாமல் காட்டுவதுதான் சரியானது’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஏன்...? பச்சை சந்தர்ப்பவாதம்.

தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றதுமே, 'ரஜினி சொல்வதுதான் சரி... நாம் அப்படியே செய்யலாம்' என்று பேசத் தொடங்குகிறார்கள். இத்தகைய சந்தர்ப்பவாதம் ஒருபோதும் உதவாது.

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் மட்டுமல்ல... இம்மாதிரி உணர்ச்சிப்பூர்வமான பல்வேறு பிரச்சினைகளில் கலைஞர்கள் என்றில்லாமல், அனைவருமே ஒருமித்த குரலில் தங்கள் உணர்வுகளை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும். அதுதான் அந்த போராட்டத்துக்கு சரியான அந்தஸ்தைத் தரும். வெறும் உணர்ச்சிவசப்படல், எவ்வளவு சீரியஸான போராட்டத்தையும் கேலிக் கூத்தாக்கிவிடும்!
http://www.envazhi.com