Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, November 10, 2008

போலி ஞானிகள்!

ல்லதைக் கெட்டது என்றும், அநியாயத்தை நியாயம் என்றும் வெகுஜன ஊடகங்களில் தனது வக்கிரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் நோயுள்ளத்துக்குச் சொந்தக்காரரான இந்த ஞானி யார்..?

இதோ அவரை நன்கு அறிந்த ஒரு பிரபலத்தின் வரிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்...

ஒரு விதத்தில் இதுதான் அவருக்கு முறையான அறிமுகமும் கூட!


போலி ஞானிகள்!

சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…

கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவு பார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…

புலிகளின் சீருடை போட்டுக் கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்து விட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒருகேடு கெட்ட சிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்…
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…

------- ------ -----
------- ------ -----

…எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம்!

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!
எங்களால் முடியாது!

நன்றி: கவிஞர் அறிவுமதி

குறிப்பு: இந்தக் கவிதை ஞானியின் இரட்டை... அல்ல அல்ல... பன்முக வேஷத்தை உரித்துக்காட்ட கவிஞர் அறிவுமதி எழுதியது. எழுதப்பட்ட நோக்கம், சூழல் மற்றும் எழுதியவர் இயங்கும் தளம் வேறாக இருந்தாலும், ஞானி என்ற போலி பகுத்தறிவுவாதியின் நிஜ முகத்தை உலகுக்கு வெளிச்சம் போட்ட வரிகள் இவை.

கவிஞருக்கு மீண்டும் நன்றி!
http://www.envazhi.com