Showing posts with label Vijaykanth. Show all posts
Showing posts with label Vijaykanth. Show all posts

Tuesday, November 25, 2008

‘அட, மெய்யாலுமே ரூம் போட்டு யோசிக்கிறாய்ங்க!’


லங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் பெறும் விதத்தில் பேசியது...

அடுத்த சில தினங்களில் ரசிகர் சந்திப்பு என்னும் பெயரில் அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டது...

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல, ஈழ மக்களின் கண்ணீர் துடைக்க ஒரு முன் முயற்சியாக இருக்கட்டும் என்ற நோக்கில் தன் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாமென ரசிகர்களுக்கு கட்டளையிட்டு, அறிக்கை விட்டது...

இப்படி டெண்டுல்கர் 20 ஆண்டுகள் அடித்த ஸ்கோர்களை இரண்டே வாரங்களில் சூப்பர் ஸ்டார் மொத்தமாய் அள்ளிவிட, நம்ம உள்ளூர் ஸ்டார்களுக்கு ஜுரமே வந்துவிட்டது. அந்த ஜுர வேகத்திலேயே நாமும் ஏதாவது செய்தாக வேண்டுமே என, அடுத்து கட்சி ஆரம்பிக்கக் காத்திருக்கும் கோலிவுட் ‘தலைவர்கள்’ மாலை நேர பார்ட்டிகளில் ஆலோசனை செய்து வருவதாகக் கேள்வி!

இவர்களுக்கு ஒரே பிரச்சினை... ரஜினியை எப்படி ஓவர்டேக் செய்வது. அட ரஜினியை ஓவர்டேக் பண்ண முடியலைன்னாலும் பரவாயில்லை... அவர் ரசிகர்களை எப்படி ஓவர் டேக் பண்ணுவது.... தனித்தனியாய் யோசித்துப் பார்த்து ஒண்ணும் வேலைக்காகவில்லை.
‘ரூம் போட்டு’ யோசித்தால் ஒருவேளை ஏதாவது ஐடியா வருமோ என யோசித்ததன் விளைவு, விஜய்காந்தின் லீக் கிளப்பில் ரூம் ரெடி.

அல்டிமேட் ஸ்டார் அஜீத், ஸ்டாலின் இளவல் (அட.. அதாங்க இளையதளபதி!) விஜய், தம்மாத்துண்டு ஸ்டார் சிம்பு, திடீர் நாயகன் ஜேகே ரித்தீஸ் என ‘தலைவர்கள்’ உச்சி மாநாட்டுக்குத் தயாராகிறார்கள்.

இவர்களுடன் மைனஸ் ஸ்கோரில் நொண்டியடித்துக் கொண்டிருக்கும் விஜய்காந்தும் சேர்ந்து கொள்ள, கச்சேரி களை கட்டுகிறது!

வி.காந்த்: வாங்க தம்பிங்களா... உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா... தமிழ்நாட்டுல இருக்கிறது ஏழு கோடி பேரு. அதுல மூணே முக்கால் லச்சம் ஆண்கள், மூணே கால் லச்சம் பெண்கள். ரெண்டரை லச்சம் ஆண் வாக்காளர்கள்...

விஜய் (அஜீத்திடம்): அடடா... வந்துட்டாரு, சென்சஸ் பார்ட்டி. இந்தாள பேச விட்டோம்னா... பேசியே நம்மை டயர்டாக்கிவிடுவாரு. சீக்கிரம் ஏதாவது உருப்படியான ஐடியா இருந்தா அவுத்துவிட்டு ஆஃப் பண்ணுப்பா அந்தாளை...

அஜீத் (தனக்குள்): ஆமா... இவனும் இவங்கப்பனும் புது நடிகர்களுக்கு வளரும்போதே உஷாரா ஆப்பு வைப்பாங்க. அது இந்தாளுகிட்ட வேகலை போலிருக்கு.
(பின்னர் சத்தமாக...) ஜோசப்... எனக்கும் அவருக்கும் சிங்கப்பூர்லருந்தே செட் ஆகல... என்னெக் கேட்டா ஸினமாவ ஸினமாவா இருக்க விடணும்... இத இப்போவே சொல்லிட்டு வெளிநடப்பு செய்ட்டா... அது!

விஜய்: நேரங் காலம் தெரியாம ‘அது... அது’ன்னு சொல்லாதய்யா... எல்லாரும் என்னவோ ஏதோன்னு பார்க்கப் போறாங்க. ஜனங்க கிட்ட ரஜினிய விட அதிகமா பேர் வாங்குற மாதிரி உருப்படியா ஏதாவது சொல்லு...

விஜய்காந்த்: (இன்னமும் தொடர்கிறார்...) அதனால இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்காக பாண்டிச்சேரில ஒரு மாநாடு நடத்தப் போறேன். இந்த ஒரே மாநாட்டுல மொத்த ஓட்டும் அள்ளிடப் போறேன். தவறாம நீங்கள்லாம் கலந்துக்கணும். ஆனா நமக்குள்ள எந்தக் கூட்டணியும் கிடையாது. கண்டிப்பா எல்லாம் வந்துடுங்க... தவறாம நின்னு என்கூட போட்டோ எடுத்துக்கணும். அப்பத்தான் ஒரு ‘இதுவா’ இருக்கும். போட்டோகிராபர் தயாரா வச்சிருக்கேன். தம்பி விஜய், அப்பாட்டச் சொல்லிடு... வரும்போது... வேணாம்... நீ மட்டும் வந்தா போதும்!

விஜய்: ண்ணா... நீங்க பாண்டிச்சேரில மாநாடு நடத்துற ரகசியம் தெரிதுங்ணா... உங்க இளைஞரணிக்காரங்க மெட்ராஸ கொஞ்சமா நாறடிச்சிட்டாங்கன்ற கோபத்துல, பாண்டிச்சேரிக்கே கூட்டிட்டுப் போற உங்க குணம் யாருக்குங்ணா வரும். நமக்கு நேரா சிஎம் சீட்டுக்குப் போயிடணும். அதானுங்கணா ஒரே ஆசை!

நானும் ரெண்டு உண்ணாவிரதம் இருந்துப் பார்த்துட்டேன். ஒண்ணும் வேலைக்காகல... ரஜினி பேசுனா அதைச் தலைப்புச் செய்தியாக்கி வன்னிக்காடு வரை ஓட விடறாங்க. நம்ம உண்ணா விரதத்தை இந்த பரங்கிக்காடு கூட தாண்ட விட மாட்டேங்குறாங்க. இந்தப் பத்திரிகைக்காரனுங்களுக்கும் ஏகப்பட்ட லொள்ளு. படத்தையெல்லாம் போட்டு கூடவே கேவலமா கமெண்ட் வேற... தந்தி குடுக்கச் சொன்னா காமெடியாக்கிட்டாங்ணா...

ஒண்ணுமே புரியலைங்ணா... இந்த கூட்டத்தை நம்பி மாவட்டம் மாவட்டமா கல்யாண மண்டபம் கட்டிக்கிட்டு வரேன்... செந்தூரப் பாண்டியான நீங்கதான் நமக்கும் ஒரு வழி சொல்லணும்...

வி.காந்த்: அய் அஸ்கு புஸ்கு... சாட்சின்னு ஒரு படம் எடுத்துட்டு, அதை வெச்சியே எங்கிட்ட டப்பா படத்துக்கெல்லாம் கால்ஷீட் வாங்கி உங்கப்பா சம்பாதிச்சாரு. இது சினிமா இல்லப்பா... இலவச ஐடியாவெல்லாம் வேலைக்காகாது. ஒவ்வொரு ஐடியாவுக்கும் பண்ருட்டிக்கு நான் கொடுக்குற வெலை இருக்கே... அதுக்காக பிரேமா கிட்ட நான் படற பாடு உனக்கெங்க தெரியப் போகுது.

விஜய்: அது என்னங்னா... ஒகேனக்கல் உண்ணாவிரதம்னாலும் ரஜினிதான் பின்றாரு... இலங்கைத் தமிழர் உண்ணாவிரதம்னாலும் அந்தாளுதான் கடைசில ஜெயிக்கிறாரு... அட ரசிகர்கள் கிட்டயாவது கெட்ட பெயரெடுப்பார்னு பார்த்தா... ரசிகர்களுக்கு பதில் சொல்ற சாக்கில நம்ம பொழப்பை காலி பண்ணிட்டாரு. என்ன மாயம் பண்ணார்னே தெரியல... ஒரு மணி நேரத்துல அவர்தான் கடவுள்னு தூக்கி வெச்சிக்கிட்டு ஆடறாங்க.

ஒரு பேப்பரையும் திறக்க முடியல. எதுல பார்த்தாலும் ரஜினி புராணம்... என்னால முடியல...முடியல... தாங்க முடியல... நாம ஒரு தட்ல சாப்பிட்டு வளர்ந்தவங்க இல்லையா... நீயாவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா அஜீத்!

அஜீத்: அட புலம்பாதய்யா, பேச்சைக் குறை... என்னைப் பொறுத்தவரை... சினிமா வேற... மத்ததெல்லாம் வேற வேற. இப்பதான் அவங்களும் (ரஜினி ரசிகர்களும்) என்னை போனா போகட்டும்னு விட்டிருக்காங்க. இந்த நேரத்துல இது தேவையா எனக்கு... அய்யோ...இதெல்லாம் தெரியாம வந்திட்டேன் நான். எனக்கு விஷ்ணுவர்தன் கூட அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கு. பிரபு வரச் சொல்லியிருக்கார். வர்ட்டா... (கிரேட் எஸ்கேப்)!

சரியாக அந்த நேரம் பார்த்து என்ட்ரி கொடுக்கிறார்கள் சிம்புவும் (கூடவே சினேகா உல்லல்!) ரித்தீஸூம்!

சிம்பு: என்ன பண்றதுண்ணே தெரியல விஜய். லிட்டில்னு எந்த நேரத்துல எங்கப்பன் வச்சான்னே தெரியல. இன்னும் லிட்டில் லிட்டிலாவே போய்க்கிட்டிருக்கேன். லைப்ல ஒரு மாற்றமும் இல்லை. எனக்குன்னு எங்கப்பன் ஆரம்பிச்ச கட்சியும் என்னை மாதிரியே லிட்டிலாதான் இருக்கு...

விஜய்: வாடா வம்பு வாயா... புள்ளையாரே எலுமிச்சம் பழத்துக்கு சிங்கியடிக்கிறாராம். இதுல சுண்டெலிக்கு ஆப்பிள் கேக்குதா! போடா...போய் அப்படி ஓரமா குந்து...
சிம்பு: ண்ணேய்... நான் ஓரமா உக்கார்ற ஆளுல்ல... உங்களையே அசத்தப் போற ஆளு. பவர்ல தேளு. நான் சொல்றதக் கேளு...

வி.காந்த்: ஏம்பா விஜய்.... இந்தப் பையன் எப்படி உங்கப்பாகிட்டருந்து தப்பிச்சான்... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல... அவர்ட்ட சொல்லி எப்படியாவது இவன் கால்ஷீட்ட வாங்கிடச் சொல்லு. ஒரு எதிர்கால அரசியல் கட்சி ஒழிஞ்சதுங்கிற நிம்மதியாவது மிச்சமாகும்!

சிம்பு: திருநெல்வேலிக்கே அல்வாவா... இந்த சிம்புவுக்கே சொம்பா... அதெல்லாம் நடக்காதுண்ணே... இந்த விசயத்துல நான் எங்கப்பன் கிட்டேருந்தே நைசா தப்பிச்சிட்டேன். எஸ்ஏசி கிட்ட மாட்டுவனா...

விஜய்: சரி.. சரி... சாமியாடனது போதும்... பிளானச் சொல்லு!

சிம்பு: இப்ப என் டார்கெட்ல மூணு புது ஹீரோயின்ஸ், ரெண்டு ‘ஆன்ட்டி’ ஹீரோயின்ஸ் இருக்காங்க. அவங்களோட டிஸ்கஷன் முடிஞ்சதும் முழு வீச்சுல இறங்கிட வேண்டியதுதான்... லட்சிய திமுக பேரை மாத்திட்டு, சிம்பு திமுகவாக்கப் போறேன். நம்ம கட்சி லேடீஸ் ஸ்பெஷல்... புல்லா ஃபீமேல்ஸ்தான்... என்னைத் தவிர நோ மேல்ஸ்!

வி.காந்த்: சரிப்பா... போய்ட்டு வா. உன்னை ஏதாவது ஒரு ஆஸ்பத்திரில பாத்துக்கிடறேன்!
ஜே.கே.ரித்தீஸ்: யண்ணே... ரஜினிய விடுங்க. நாம தனி ரூட்ல போலாம். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கண்ணே... எனக்கு தனியா கச்சி நடத்தி பளக்கமில்லண்ணே... நீங்க ஒப்புக்கிட்டா... சுதீஷ் இடத்துக்கு வந்திடறேன். மொத்தச் செலவையும் நான் பாத்துக்கிடறேண்ணே... ஆச்சி மாறும்போது நான் உங்கக்கிட்டயிருந்தா ஸேப்பா இருப்பேண்ணே...

வி.காந்த்: தம்பி நல்ல யோசனதான்... ஆனா அதுல முடிவெடுக்கிற அதிகாரம் என்கிட்ட இல்லே. கேட்டுச் சொல்றேன். ஆனா, சுதீஷ் இடத்துக்கு வர்றதா சொல்லி, நாயகன் படத்துல ரமணாவக் காலி பண்ண மாதிரி வேலையில இறங்கினா நான் என்ன பண்ணுவேன்... உன் கேஸ் கொஞ்சம் சந்தேகமால்ல இருக்கு!
ரஜினியை மிஞ்சற மாதிரி ஏதாவது தடாலடியா ஒரு யோசனை சொல்லுப்பா... மத்ததை பிறகு பேசிக்கிடலாம்!

ரித்தீஸ்: சரிண்ணே... ஆனா ரஜினி மேட்டர் வேணாம்னே. பளக்க தோசத்துல ‘ரஜினி வாள்க’ன்னு கோஸம் போட்டாலும் போட்டுடுவேன்.
உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நீங்க கச்சி நடத்துறது எதுக்கு... சம்பாதிக்கத்தானே... நான் வேணா ஒரு ஆயிரம் கோடி கொடுத்திடறேன். பிரேமா அக்காவையும், சுதீஷையும் நீங்க வச்சிக்கிட்டு கச்சியை எங்கிட்ட குடுத்திடுங்கண்ணே... கஸ்டப்படாம காசு பார்த்தா மாதிரி இருக்கும்.

வி.காந்த்: இந்த சில்லுண்டி வேலைய விருத்தாசலம் எம்எல்ஏகிட்ட வெச்சுக்காதப்பு... கெளம்பு கெளம்பு...

விஜய் (தனக்குள்): நாமதான் ரஜினியை ஓவர்டேக் பண்ண பாயைப் பிறாண்டிக்கிட்டு இருக்கோம்னா... இவரு கேஸ் நம்ம விட மோசமா இருக்கும் போலிருக்கே... கட்சி ஆரம்பிச்சாலும் இதே நிலைதானா...

வி.காந்த் (தனக்குள்): எல்லாப் பயலும் நம்ம பார்க்கும் போதெல்லாம் என்னமோ கேப்டன் கேப்டன்னும் நெஞ்சை நக்குறாங்களேன்னு பாத்தா... எல்லாம் நம்ம பங்காளிகளாவே இருக்கானுங்களே... ரஜினியை மிஞ்ச உருப்படியா ஒரு ஐடியா கொடுக்கத் துப்பில்ல...

அட ரஜினி சும்மா இருந்தாலும் இந்த ரசிகர்களும் அரசியல்வாதிகளும் விடமாட்டேங்கறாங்க. கூட்டணி வெச்சுக்க ரெடின்னு, எத்தனை முறைதான் இந்த பிஜேபிக்கு சொல்லிவிடறது...

ஆனா இந்த அத்வானி நேரா போயஸ் கார்டன் போய் ரஜினியப் பார்த்தா, அப்புறம் ஒரு பய நம்மை மதிப்பானா! அந்தாள சினிமாவுல எந்தக் காலத்திலும் ஓவர் டேக் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிதான் முன்கூட்டியே அரசியலுக்கு வந்தேன். இப்ப இங்கேயும் வரேங்கிறாரு. அடுத்து நான் எங்கதான் போறது?

விஜய்: சரிங்ணா... நம்மள இந்த பத்திரிகைக்காரங்கதான் நல்ல ஐடியா கொடுத்து காப்பாத்தணும். அடுத்த மீட்டிங்குக்கு ஆவி, அஞ்ஞானி, தினப்பொய்மலர், கோயபல்ஸ் சன் குரூப், இத்துப்போன எக்ஸ்பிரஸ்னு ஒரு குரூப்பை பிடிச்சிடலாம். கண்டிப்பா கிரிமினல் ஐடியாக்கள் நிறைய கிடைக்கும். அதுவரைக்கும் கச்சிய பாத்துக்கங்ணா... வர்ட்டா...

வி.காந்த்: யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பார்க்கும்னு சொல்றது இதானா... சரி... உருப்படியா ஒரு யோசனை சொல்லியிருக்கே. இல்லாததையும் சரியா இட்டுக் கட்டி லாஜிக்கோட எழுதறவங்க அவங்கதான். கூட்டிட்டுவா... பேசலாம்!

இருவரும் மனதுக்குள் வன்மமும் வாய் நிறைய புன்னகையுமாய் கலைகிறார்கள்!

அடுத்த பகுதி தொடரும்... ஆனா, ஒரு வாரம் கேப் கொடுங்க... (இத்தனை பொய்யர்களையும் ஒண்ணா சேர்க்கணும்ல!)

-வினோஜாஸன்

http://www.envazhi.com

Friday, October 31, 2008

இலங்கை விவகாரம்: கேப்'டவுன்'!!

எச்சரிக்கை: இந்தக் கட்டுரை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கோ, அல்லது போர்முனையில் நிற்கும் புலிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிரானதோ அல்ல.

ஈழ ஆதரவு விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் (மலையகத் தமிழர்கள் உள்பட) சம உரிமையுடன், சிங்களர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே.

அதற்கான தீர்வு காந்தீய வழியில் வந்தாலும் சரி, நேதாஜி வழியில் கிடைத்தாலும் சரி, பெரும்பகுதி தாயகத் தமிழர்களைப் போல நமக்கும் சம்மதமே. எந்த முடிவும் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும்.

யதார்த்தமாக இலங்கை விவகாரத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய கருத்துக்களையே கொண்டிருப்பதை அறியலாம்.

ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவுக்குள் ஆயிரம் கணக்குகள் இருக்கிறது. அப்படி ஒரு கணக்கைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மற்றபடி இலங்கைப் பிரச்சினையின் உண்மைகள் குறித்து பின்னொரு சமயம் ஒரு தொடர் கட்டுரை எழுதும் விருப்பம் உள்ளது.

ரஜினிக்கு ஆதரவான இந்த தளத்தில் விஜய்காந்துக்கு எதிரான கருத்துக்கள் வருவது சகஜம்தான் என்ற மனநிலையில் உள்ளவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மையை யாரும் உரத்துச் சொல்லலாம்!

னித் தமிழீழம் மலரும் வரை நான் பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று வீர சபதம் எடுத்து, வைராக்கியமாக ‘வாழ்ந்து’ வருபவர் நம்ம விஜய்காந்த். ஈழத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இயக்குநர்கள் ஒரு பக்கம் சிறை செல்வதும், நடிகர்கள்
உண்ணாவிரதமிருப்பதுமாக திரையுலகம் பரபரவென இயங்கிக் கொண்டிருக்கையில், மகனுக்கு பிரபாகரன் பெயர் சூட்டி தன் தமிழ்ப் பற்றை பறை சாற்றிக் கொண்டிருந்த விஜய்காந்த் மட்டும் அடக்கி வாசிப்பது ஏனோ?

அரெஸ்ட் பயமா... இல்லை... இல்லவே இல்லை! அரசியல் லாப நோக்கம்தான்!

இது என்ன புதுக்கணக்கு என்கிறீர்களா...

இது புதுசல்ல... பழைய கணக்குதான். என்றைக்கு டெல்லிக்குப் போய் மேலிடப் பிரதிநிதிகளைச் சந்தித்து காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டு வந்தாரோ அன்று முதல் விஜய்காந்தின் ஈழப் பற்று ஈனஸ்வரத்தில் கேட்கத் துவங்கியிருப்பதை அரசியல் பாலபாடம் படிப்பவர்களும் கூட உணர முடியும்.

ராமேஸ்வரம் உண்ணாவிரதத்துக்கு வருவதாய் வாக்களித்த விஜய்காந்த் கடைசிவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத மர்மமும், இளைஞரணி மாநாடு முடிந்ததிலிருந்தே மந்திரித்துவிட்டவர் போல ஒரு மார்க்கமாய் திரிவதும் இந்த கூட்டணித் தேவைக்காகத்தான்.

இந்த மர்மம் புரிந்த பிறகுதான் கலைஞரும் ‘இந்திய இறையாண்மை மீதான தனது பற்றுத’லைக் காட்ட வேண்டி சில கைதுகளை அரங்கேற்றினார். இருக்கிற கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?

இப்போது உண்ணாவிரத விவகாரத்துக்கு வருவோம். நாளை உண்ணாவிரதம். முன்பு பிரபாகரனை தனது தலைவராக அறிவித்த கேப்டன், இந்த உண்ணாவிரதத்தின் போது என்ன செய்யப் போகிறார்?

எல்லோரையும் போல சும்மா வந்து போகப்போகிறார். அவ்வளவுதான். இயற்கையாகப் பெய்யும் மழையாக இருந்தாலும் சரி, தன் வீட்டுத் தெருவில் பொங்கி வழியும் சாக்கடையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் கலைர்ஞர்தான் காரணம் என்று அறிக்கையாய் விட்டுத் தள்ளும் இந்த அரிதார கேப்டன், இலங்கை விவகாரத்தில் மட்டும் தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த மறுப்பது மீடியாவுக்கு தெரியாதா...

இந்த திடீர் பதுங்கலை விமர்சித்து முடிந்தால் ஒரு ‘மனம் திறந்த மடல்’ எழுதிப் பார்க்கட்டுமே மீடியா உலக ஜோல்னா பையன்கள்...

தமிழினத்தின் ஏக போக பிரதிநிதிகளாய், தமிழர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாய் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்ளும் அஞ்ஞானிகளுக்கு இப்போது எங்கே போனது அறிவு?

அது சரி... இந்த அரிதார கேப்டனுக்கு பார்ட் டைம் ஆலோசகராகச் செயல்படும் அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

ஆனால் இந்த கபட நாடகங்களையெல்லாம் அறியாத தமிழ் மக்கள் செய்தித்தாள்களில் / மீடியாவில் பதிப்பிக்கப்படுகிற அனைத்தையும் நம்பி அல்லது அதன்பால் உணர்ச்சி வசப்பட்டு, இம்மாதிரி நிகழ்களில் கலந்து கொள்ள முடியாத அனைவரையுமே தமிழ்த் துரோகிகளாகவே வரித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்த அவலங்களைத் தோலுரித்துக் காட்ட முயல்பவர்களையும் இதே பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இங்கே நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களின் பின்னணியில் ஆயிரம் அரசியலிருக்கிறது!

இந்த வருட ஈழ ஆதரவு சீஸன் நமக்கு உணர்த்தும் பாடம் இது!


http://www.envazhi.com

Monday, October 20, 2008

தேமுதிக மாநாட்டு ‘சாதனை’!


விஜய்காந்த் ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாய் சட்டசபை, நாடாளுமன்ற செட் போட்டு எடுத்த ‘இளைஞர் அணி மாநாடு சினிமா ரிசல்ட்’ என்ன?

வழக்கமாக சினிமாக்காரர்கள், சீசனில் படம் ரிலீஸானதும் ஒரு டயலாக் சொல்வார்கள்:

‘படம் பிரமாதமா இருக்குன்னு தமிழ்நாடே பாராட்டுது சார்...நல்ல கலெக்ஷன். தீபாவளி ரிலீஸ்லயே இந்தப் படம்தான் நம்பர் ஒன்...’
-இப்படி பேட்டி கொடுத்த மூன்றாவது நாளே படம் தியேட்டரைவிட்டு ஓடியிருக்கும்!

இந்த இளைஞரணி 'மாநாடு சினிமாவும்' இந்த லட்சணத்தில்தான் அமைந்தது.

நான் வித்தியாசமானவனாக்கும்... என்று மஞ்சள் கொடியோடு வந்து நின்ற விஜய்காந்த், இன்றைக்கு கழகங்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பொய்யிலும் புனை சுருட்டிலும் ஓங்கி நிற்கிறார். பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதில் இன்றைய தேதிக்கு இவரை அசைச்சுக்க முடியாது!

இவரது தொண்டர்கள் மட்டும் சளைத்தவர்களா... ராவண ராஜ்யத்தில் வானரப் படைகள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் ராமாயணக் காட்சிகள்தான் மனக் கண்ணில் நிற்கின்றன. அப்படியொரு ஆட்டம் போட்டிருக்கிறார்கள் இந்த விஜய்காந்த் சேனைகள், சிங்காரச் சென்னையில்...
ஒரு நபருக்கு 300 ரூபாய் கூலி, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி கொடுத்து இந்த கொள்கைச் சிங்கங்களைக் கூட்டி வந்திருக்கிறார் அவர்களின் கேப்டன்!

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தட்ஸ்தமிழ் செய்திகளைப் பாருங்கள்!


தேமுதிக மாநாட்டு சாதனை!

...விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.

கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.

திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.

இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.

'தொண்டர்கள் எனும் பெயரில் இவர்கள் செய்திருந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்ய நியாயமாக சென்னை மாநகராட்சிக்கு பெரிய தொகையை வழங்கியிருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர். அரசியல் கட்சி என்ற பெயரில் இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்', என்று அதிருப்தி தெரிவித்தார் இந்த மண்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
கடற்கரையே இப்படியென்றால் தீவுத்திடல்....?
அங்கு இதை விட பலமடங்கு மோசமான நிலை. இதையும் மாநகராட்சிதான் சுத்தம் செய்தாக வேண்டும்.
இன்னொரு பக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரத்துக்கும் மேலாக நடுச் சாலையில் மழையில் அவதிப்பட்டனர் பொதுமக்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய மாநாடுகளை அனுமதிக்கக் கூடாது என பலவேறு மக்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் அரசு கேட்பதாக இல்லை. அதனால்தான் மக்களுக்கு இவ்வளவு தொல்லை!


நெரிசலில் விழிபிதுங்கிய சென்னை!

ஒரு சின்ன மழைக்கே கடும் போக்கு வரத்து நெரிசலில் திணறும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டது சென்னை நகரம்.

இதில் அவ்வப்போது மாநாடு, பேரணிகள் என்று அரசியல்வாதிகள் விளையாடுவார்கள். நேற்று விஜய்காந்தின் முறை.

பிற்பகல் அவர் கட்சியின் மாநாடு துவங்குவதற்கு முன் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு தாண்டியும் நீடித்தது.

வார இறுதி, தீபாவளி சீசன், கூடவே இந்த மாநாட்டு கலாட்டக்களும் சேர்ந்து கொண்டதால் கிண்டியிலிருந்து, தி.நகர், பீச், அண்ணாசாலைக்கு சென்ற பலரும் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு முன்னேறவும் முடியாமல் பின்செல்லவும் வழியில்லாமல் தவித்தனர்.

பேருந்துகளில் சென்றோர் சாதாரண தூரத்தைக் கடக்கவே பல மணி நேரம் ஆனது. வாகனங்களைத் திருப்பிவிட வழியின்றி போக்குவரத்து போலீசார் மிகவும் திணறிப்போனார்கள்.

கடற்கரை காமராஜர் ரோடு, அண்ணாசாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் பலர் அதிருப்தியுடன் திட்டியபடி வாகனங்களில் பல மணி நேரம் ஊர்ந்து சென்றனர்.


-இதுக்குமேல வித்தியாசமான கட்சிய, தலைவரை உலகத்துல எங்காவது உங்களால காட்ட முடியுமா...!

குறிப்பு: தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தொண்டர்கள் குடிக்காமல் இருக்கிறார்கள்... திமுக, அதிமுக, மது ஒழிப்பு மாநாடு நடத்தும் பாமக, காந்தியடிகளைத் தலைவராகப் போட்டுக் கொள்ளும் காங்கிரஸ்... இப்படி எல்லா கட்சித் தொண்டர்களுமே குடிப்பதில் பிஎச்டியே வாங்கியிருக்கும் போது, விஜய்காந்தையும் அவர் கட்சிக்காரர்களையும் மட்டும் குடிகாரர்கள் என திட்டுவது சரியா என பல நண்பர்கள் கருத்து எழுதக் கூடும்.

அப்படி எழுதும் முன், 'நான் வித்தியாசமானவனுங்கோ... எங்க கட்சி வித்தியாசமோ வித்தியாமுங்கோ...' என்றெல்லாம் கவுண்டர் ஸ்டைலில் கூப்பாடு போட்டு வரும் விஜய்காந்தைக் கொஞ்சம் மனக் கண்ணில் நிறுத்திப் பார்க்கவும்.

அதே பதவி வெறி, அதே பணப் பேராசை, அதே துஷ்பிரயோகம், அதே கட்சிகளுடன் கூட்டு... அப்புறம் எதற்கு இந்தக் கருமம் வேறு... ஏற்கெனவே உள்ள கழகங்களே போதுமே!

தெரிந்து கொள்ளுங்கள் இந்த பதவி வெறியரை!

மாமன்னர் அக்பர் ஒரு முறை, ஒரு பெரிய கோட்டை அழிக்காமல் சின்னதாக்கிக் காட்ட முடியுமா என்றார்.

அதற்கு பீர்பால் பதிலேதும் பேசாமல், பெரிய கோட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னக் கோடு போட்டு, “மன்னா... இப்போது பெரிய கோடு அழிக்காமலேயே சின்னதாகிவிட்டது. அதேநேரம் சின்னக் கோடு இருப்பதாலேயே பெரிய கோட்டின் மகத்துவமும் புரிகிறதல்லவா...!” என்றாராம்.

இது கதையல்ல...மாமன்னர் அக்பரின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் ஒன்று. பரவலாக நீங்களும் கேள்விப்பட்டதும் கூட.

நல்ல மனிதர்களின் புகழை, பெருமையை அவர்களது நலம் விரும்பிகள் மூலம் அல்லாமல் தெரிந்து கொள்வது எப்படி?

சில மோசமான மனிதர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம்.
தமிழக மக்களுக்கு, குறிப்பாக வாக்குச் சாவடிகளில் மணிக்கணக்கில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

நல்ல மனிதர்கள் யார் என்பதைத் தாமதமாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் கெட்டவர்களை உடனே தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்தில் சற்றே எட்டிப்பார்க்கத் துவங்கியிருக்கிற ஒரு தீய சக்தி விஜய்காந்த்!

இதைப் படிக்கும்போது, ‘ரஜினியின் புகழ் பரப்ப தளம் நடத்துபவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று சிலர் முணுமுணுப்பது புரிகிறது.

பரந்து விரிந்த இநத வானத்தின் கீழே நடக்கும் அத்தனை நல்லது கெட்டதுகளையும் என்வழியில் அலச வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனாலேயே முன்பு விஜய் காந்த் – வடிவேலு சண்டையையும், எந்தளவு கீழ்த்தரமான அரசியல்வாதி விஜய்காந்த் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தேன்.

இப்போது மாநாடு எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் வித்தைக்காரன் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் இவரின் நிஜமுகத்தை அம்பலப்படுத்துவது அவசியமல்லவா!

இந்த மாநாடு எதற்காக?

சில தனியார் தொழிலதிபர்களின் தயவோடும், மீடியா உலக ஆக்டோபஸாகத் திகழும் சன் குழுமம் ஆதரவோடும் விஜய்காந்த் இப்படியொரு மாநாட்டை சென்னையில் நடத்தக் காரணம் என்ன?

தனக்கு சென்னை மக்களிடம் உள்ள செல்வாக்கைக் காட்டவும், தமிழகம் முழுக்க உள்ள தன் இளைஞர் சேனையை சென்னை மக்களுக்குக் காட்டவும்தான் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார் விஜய்காந்த்.

உலகத்தில் இப்படியொரு அற்ப காரணத்துக்காக மாநாடு நடத்திய ஒரே நபர் விஜய்காந்தாகத்தான் இருப்பார்.

ஒருவிதத்தில் அவர் அன்று உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.

இந்த மாநாட்டை இப்போது நடத்த ஒரு காரணமும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கண்டித்து எல்லோரும் கறுப்பு பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லவா ரூ.10 கோடி செலவில் இப்படியொரு மாநாடு கூட்டினார்! அப்படியென்றால் எதற்கு இத்தனை வெட்டிச் செலவு... ஒரு அறிக்கையில் முடிக்க வேண்டிய விஷயமல்லவா இது!

மின்வெட்டு, வேலைவாய்ப்பு, கூட்டணி... இதெல்லாம் இன்று மக்கள் அறிந்தவை. அன்றாடம் விவாதிக்கிற பிரச்சினைகள். இதில் இந்த அரசின் பக்கம் உண்மையில் தவறு இருந்தால் மக்கள் தேர்தலில் பார்த்துக் கொள்வார்கள். இதை மாநாடு கூட்டிச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. தினம் நான்கு முறை இந்த விஷயங்களுக்காகத்தானே இவர் அறிக்கை விட்டு பப்ளிசிட்டி தேடி வருகிறார்!

ஆமா... பதவிதான் முக்கியம்!

நிஜத்தில் எந்த கொள்கையும் இல்லாத, பதவி வெறியும், பணப் பேராசையும் கொண்ட ஒரு மனிதர் இவர்.

இதை இந்த திடீர் தலைவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்! அவரது மாநாட்டு அறிவிப்பைப் பாருங்கள்:

“விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததே ஆட்சியை பிடிக்கத்தான் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தொடங்குவது ஆட்சியை பிடிக்காமல், காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போகவா?

ஓர் இடத்தை அடைய வேண்டுமானால் குறிக்கோள் இருக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்கவே கட்சியை ஆரம்பித்தோம். ஆட்சியைப் பிடிக்க ஏன் ஆசைப்படக்கூடாது? ஆட்சியைப் பிடிக்கவே கட்சி. நான் மறைக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் நெருங்குகிறது. அதற்குத் தயாராகுங்கள். கட்சியினர் ஒவ்வொருவரும் நூறு ஓட்டுகளையாவது வாங்கித்தர வேண்டும். தேர்தலில் எதற்கும், யாருக்கும் பயப்படக்கூடாது.
மக்களே... தேமுதிகவை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு, அப்புறம் பாருங்கள்!”

-அப்புறம் என்னத்தைப் பார்ப்பது... இவரும், இவர் மனைவி – மைத்துனர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தைப் பட்டா போட்டு விற்கும் கோலாகலக் காட்சியையா?

குறிப்பு: தேமுதிக மாநாட்டின் ‘சாதனை’களை அடுத்த பதிவில் பார்க்க!

http://www.envazhi.com

Friday, September 26, 2008

கருத்துக் கணிப்பு: ஒரு நாள் கூத்து!


ஜனநாயக நாட்டில் அவ்வப்போது மக்களின் மனதைப் படம் பிடிக்க கருத்துக் கணிப்புகள் நடத்துவதும் அதற்கேற்ப சில நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சகஜம்தான்.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் இத்தகைய கணிப்புகள் சில கருத்துத் திணிப்புகளுக்குக் காரணமாகிவிடுவதுதான் பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. ரஜினிக்கு எதிராக இந்த கருத்துக் கணிப்புகள் வந்துவிட்டதால் இப்படிச் சொல்வதாக நினைக்க வண்டாம். நாம் எந்தக் கணிப்பையும் ஆதரிப்பதில்லை.

பலமுறை இந்தக் கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையாவது திசை திருப்ப உதவியிருக்கின்றன.

இதனால்தான் கருத்துக் கணிப்பு என்ற நடவடிக்கைக்கே தடை போடும் முயற்சியில் இறங்கி உள்ளது தேர்தல் கமிஷன்.

லயோலா கல்லூரி முடிவுகளைப் பொறுத்தவரை, பல முரண்பாடுகள் உள்ளன.

தமிழக அரசின் இலவசத் திட்ட அறிவிப்புகளை 82 சதவிகித மக்கள் வரவேற்கின்றனர்.

ஆனால் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை 52 சதவிகிதம் பேர் எதிர்க்கிறார்கள்.

லயோலாவின் முன்னாள் மாணவரான விஜய்க்கு ரஜினியை விட 0.02 சதவிகித அதிக ரசிகர்கள் ஆதரவு இருக்கிறதாம். சரி... எஸ்.ஏ. சந்திரசேகர் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும். ஆனால் இந்த ரேஸில், விஜய்யைவிட அதிக ரசிகர்களைக் கொண்டவராகக் கூறப்படும் அஜீத் நிலை என்ன?

ரஜினியின் திரை உலகப் போட்டியாளர் கமல்ஹாசன் முதல் 5 இடங்களுக்குள் கூட இல்லையா? விஜய்காந்துக்கு (10 சதவிகிதமாம்!) உள்ளதை விட கமல்ஹாசனுக்கு ரசிகர் பலம் குறைவு என்று சொல்ல வருகிறதா... இந்தக் கணிப்பு? இது ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம்தானா...

அதிமுக - திமுகவை விட, ரஜினி –கமலை விட இவர்கள் முக்கியமாக எடுத்துக் கொண்டது விஜய்காந்தைத்தான்.

இல்லாவிட்டால் ஒருபடமும் ஓடாத, வரிசையாக 7 மெகா பிளாப்புகளைக் கொடுத்த விஜய்காந்துக்கு கமல்ஹாசனை விட அதிக செல்வாக்கு என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன?

6.5 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்துக்கு 2700 பேரை மட்டுமே பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த சாம்ப்ளிங் அடிப்படை மகா தவறான ஒன்று.

எந்த ஒரு இலக்குமின்றி wide spectrum-ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவதே அபத்தம். இதில் ரஜினி பற்றிய கேள்வி எதற்கு? அவர் கட்சி ஆரம்பித்துவிட்டாரா? தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தாரா? அட, குறைந்தபட்சம் அதுபற்றிப் பேசுவது கூட இல்லையே... பிறகு ஏன் அவர் பெயரை உபயோகப்படுத்துகிறார்கள்...

ரஜினி என்ற மூன்றெழுத்தைத் தொடாமல் அவர்கள் இந்தக் கணிப்பை நடத்தியிருந்தால் அதுபற்றிப் பேச ஒருவரும் முன் வந்திருக்க மாட்டார்கள்.
நிறைய முரண்கள், கேள்விகள் உள்ளன இந்தக் கணிப்பில்.

ஏதோ சின்னப்புள்ளத்தனமாக சில குறிப்புகளைக் கொட்டியிருக்கிறார்கள் இந்தக் கல்லூரி மாணவர்கள். அவற்றை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ராஜநாயகத்தின் விசுவாசம், நம்பகத் தன்மையின் லட்சணம் நமக்கும் தெரியும். இவர்களது கணிப்பு இதற்கு முன்பு எத்தனை முறை தலைகீழானது என்பதும் நாம் பார்த்ததுதான்.

இந்தக் கருத்துக் கணிப்பின் பலன் நமது மீடியாவுக்கு ஒருநாள் கழிந்த நிம்மதி... அவ்வளவுதான்!

Monday, September 22, 2008

ஏன்? ஏன்? ஏன்?


விஜய்காந்துக்கு எதிராக திடீரென்று ஏன் இத்தனைப் பதிவுகள்...
திடீரென்று திமுகவுக்கு ஆதரவாகக் குரல் ஒலிக்கிறதே என்றெல்லாம் நண்பர்கள் பின்னூட்டங்களில் கருத்துப் பதிந்துள்ளார்கள்.

அவர்களுக்கு ஒரு விளக்கம்!

நான் திமுக அனுதாபி இல்லை.

ரஜினி பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறோம்... என்பதற்கான விளக்கங்கள்தான் நீங்கள் இங்கே படித்த விஜய்காந்த் - வடிவேலு மோதல்கள் குறித்த பதிவுகள்.

சக நடிகர் ஒருரால் தாக்கப்பட்டவுடன் நான் அரசியலுக்கு வந்து அவரை தோற்கடிப்பேன் என காமெடியன் ஒருவரே இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்.

இந்த தாக்குதலுக்குக் காரணமாகக் காட்டப்படும் கதாநாயகனோ, இது கலைஞரின் வேலை என்று, அரசியல் மற்றும் பதவியிலேயே குறியாக இருக்கிறார்.

வடிவேலுவுக்கும் விஜய்காந்துக்குமாவது பகை இருக்கிறது... ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்ள முகாந்திரமுள்ளது.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் அரசியல் என்ற ஒன்றை மட்டுமே காரணமாக வைத்து கலைஞர் மீது, அதுவும் ஒரு மாநில முதல்வர் மீது விஜய்காந்த் குற்றம் சாட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

வடிவேலு வீட்டு மீது கல்லெறியச் சொன்னதும் கலைஞர்தான், பின்னர் வடிவேலுவை போலீசில் புகார் தரச் சொன்னதும் கலைஞர்தான் என்று சொல்ல வருகிறாரா விஜய்காந்த்?
அல்லது, வடிவேலுவே தன்வீட்டு மீது கல்லெறிந்து கொண்டார் என்கிறாரா?

கலைஞர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல... மாநில முதல்வர். அவருக்கு எதிராக விஜய்காந்த் இப்படிக் குற்றம் சாட்ட என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்?

மாநில முதல்வர் மீது ஆதாரமில்லாமல் இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறியதற்காக இவரை இப்போதே சிறையில் தூக்கிப் போட சட்டம் இடம் தருகிறதே...
இப்படிப்பட்ட அரை வேக்காடுகளைத்தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் என்றெல்லாம் சிலர் தூக்கிப் பிடித்து வருகிறார்கள். அதை நம்மால் முடிந்தவரை எக்ஸ்போஸ் செய்யவே இத்தனை பதிவுகள்.

ஆனால்-

ரஜினி?

ஒரு கண்ணியமான மனிதர். நல்லவர். தனிப்பட்ட காரணங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு மக்களைத் தூண்டிவிடாதவர். பாபா படத்துக்கு நேர்ந்தது போல ஒரு நிலை வடிவேலுவுக்கோ விஜய்காந்துக்கோ நேர்ந்திருந்தால்... சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஆனால் ரஜினி அப்போதும் நிதானம் காத்தார். ரசிகர்களைத் தூண்டிவிட்டு வன்முறை செய்யச் சொல்லவில்லை. ராமதாஸ் வீட்டு மீது கல்லெறியச் சொல்லவில்லை.
அல்லது குசேலனை இப்படி குறிவைத்து தாக்கினார்களே என்று பத்திரிகைகளே வாங்காதீர்கள் என தன் ரசிகர்களுக்கு கட்டளையிடவில்லை அவர்.

ரஜினி என்ற நல்ல மனிதர்தான் இந்த நாட்டு அரசியலுக்கு இப்போது தேவை என்பதாலேயே இங்கே இவற்றைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி, ரஜினியோடு வேறு யாரையும் ஒப்பிடவும் முடியாது, ஒப்பிடவும் கூடாது.

பதினைந்து ஆண்டுகளாக ஒரு மாநிலத்தின் பெரும்பான்மை மக்களே அரசியலுக்கு வா... வா... என வருந்தி வருந்தி அழைத்தும், இன்னமும் அமைதி காக்கிறாரே... அந்தப் பக்குவம் வேறு யாருக்கு வரும்?

சினிமா, அரசியல் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்களுக்கு பெரிய அளவில் நன்மை செய் வேண்டும் என்ற ஒரு லட்சியம் ரஜினிக்கு இருக்கிறது. தமிழ் மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்... விஜய்காந்த் மாதிரி சில்லறை அரசியல்வாதிகளைப் புறம் தள்ள வேண்டும்!

'விஜய்காந்தை முதல்வர்னு வாழ்த்தணுமாம்'!!


விஜயகாந்த்துக்கு எதிராக என்னை யாரும் தூண்டி விடவில்லை. இப்போதும் சொல்கிறேன், அவரை விட எனக்கே மக்கள் செல்வாக்கு அதிகம். இதை நான் வருகிற தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிட்டு, அவரைத் தோற்கடித்து ஜெயிப்பேன் என்கிறார் வடிவேலு.

முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில்தான் வடிவேலு புகார் கூறுகிறார், முதல்வருடைய விளையாட்டில் வடிவேலு பகடைக்காயாகி விட்டார் என்றெல்லாம் காலையில் வடிவேலு மீது குற்றம் சாட்டியிருந்தார் விஜய்காந்த்.

ஆனால் வடிவேலுவோ இதைக் கேட்டு இன்னும் கொதித்துப் போய்விட்டார்.

சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று ஆஜராகி விஜயகாந்துக்கு எதிராக சாட்சியம் அளித்த வடிவேலு (முந்தைய வழக்கில்) செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அடிச்சது என் வீட்டை. என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு என் கண்ணெதிரே வந்த ஆபத்து இது. இதைப் பார்த்துட்டு நான் சும்மா இருப்பேனா... இதை வெளியே சொன்னா முதலமைச்சர் தூண்டுதல்னு சொல்றதா... நல்லாருக்கு நியாயம்.

நான் யாருடைய தூண்டுதலின் பேரிலும் புகார் கூறவில்லை. நடந்ததை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னோட பிரச்சினையை நான் சொல்றேன். அதுக்குக் காரணம் அவர்தான்னு எனக்கு நல்லா தெரியும்.

எனக்கு எல்லா மக்களுடைய ஆதரவும், எல்லா ஹீரோக்களின் ஆதரவும், எல்லா ஹீரோக்களின் ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. நான் தமிழக மக்களின் வீட்டுப் பிள்ளை. அவர்களுடைய ரேஷன் கார்டுகளில் மட்டும்தான் எனது பெயர் இல்லை. மத்தபடி அவங்க குடும்பத்துல நானும் ஒருத்தன்.

நான் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு ஜோக்கர். எல்லாக் கட்சிக்கும் பொது நான். எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

விஜய்காந்தை முதல்வர்னு சொல்லணுமாம்!!

மக்களிடம் விஜயகாந்தை விட எனக்குத்தான் செல்வாக்கு அதிகம். நிச்சயமா அடுத்த தேர்தல்ல நான் அவரை எதிர்த்து நிற்பேன். அவர் எங்க நின்னாலும் அவரை தோற்கடிப்பேன். இதுல எந்த மாற்றமும் கிடையாது.

இதுக்கெல்லாம் காரணம் அவரோட 4 படங்கள்ல நான் தொடர்ந்து நடிக்க மறுத்ததுதான். அவரை முதல்வர்னு வாழ்த்திப் பேசணும்னு தருமபுரி, கஜேந்திரா, சபரி, பேரரசு படங்கள்ல கேட்டாங்க. நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். நான் யாராயும் அப்படியெல்லாம் சொல்ல முடியாது. எனக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் நண்பர்கள்தான்...!, என்கிறார் வடிவேலு உறுதியாக.

இது எப்படி இருக்கு!

எதிர்பார்த்த மாதிரியே திமுக மீது பழிபோட்ட விஜய்காந்த்!


இப்போதுதான் விஜய்காந்த் பிரஸ் மீட் முடிந்தது...

இதற்கு முந்தைய ஒரு கட்டுரைக்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்கு பதிலளித்தபோது, நிச்சயம் இது திமுக – அதிமுக சதி என்றுதான் விஜய்காந்த் கூறுவார் என கூறியிருந்தேன்.

அதில் சின்ன மாற்றம்... திமுகவின் திட்டமிட்ட சதி இது என விஜய்காந்த் தெரிவித்துள்ளார். அவருக்குத் தெரிந்த அரசியல் அது. அவரது இந்தப் பொய்யை வலுவாக, உரத்துச் சொல்ல பேருதவி புரிந்துள்ளது சன் நெட்வொர்க், தனது நேரடி ஒளிபரப்பு மூலம்!

வடிவேலு என்ன, கருணாநிதியே எதிர்த்து நின்றாலும் நான் போட்டிக்குத் தயார் என கொக்கரிக்கிறார் விஜயகாந்த் தனது பேட்டியில். எல்லாம் நேரம்!

பேட்டிக்கு வந்திருந்த நிருபர்கள் எல்லாரும் நமுட்டுச் சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். காரணம் இந்த பதில் அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதானே!

இதோ... விஜய்காந்த் பேட்டியின் சில பகுதிகள்...!

அப்போ எம்ஜிஆர்... இப்போ நான்!? (கொடுமை... கொடுமை)

இது ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் நடந்ததுள்ளது. இது கருணாநிதிக்கு கை வந்த கலை. அப்போது எம்.ஜி.ஆருக்கு எதிராக இப்படித்தான் செய்தார். எம்.ஜி.ஆர். வளர்ந்தது, கட்சியில் அவரது செல்வாக்கு வளர்ந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. சேலத்தில் ராஜேந்திரன் தாக்கப்பட்டார். பிறகு சுகுமாரன் வழக்கு. இப்படி நிறைய பொய் வழக்குகளைப் போட்டவர் கருணாநிதி. இப்போது எனக்கும் அதே மாதிரி செய்கிறார்.

கருணாநிதியின் திட்டத்திற்கு வடிவேலு பகடைக் காயாகி விட்டார். அவ்வளவுதான். அதை அவருடைய பேச்சுக்களைப் பார்த்தாலே தெரியும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர் மாறி மாறிப் பேசுகிறார்.

முதலில் கல்லால் அடித்தார்கள் என்றார், பிறகு 20 பேர் வந்தார்கள் என்றார், பிறகு 30 பேர் வந்தார்கள், ஒரு பைக்கில் நான்கு பேர் வந்தனர் என்றார். பைக் நம்பரைப் பார்க்கவில்லை என்றார். அதாவது ஆளுங்கட்சியினர் சொல்லிக் கொடுக்கக் கொடுக்க அதன்படி பேசுகிறார். தப்பு தப்பாக சொல்கிறார்.

கடைசியில் மாலை 6 மணிக்கு மேல், ஆளுங்கட்சியினர் சொன்னார்களோ என்னவோ, விஜயகாந்த் தூண்டுதல்தான் காரணம் என்கிறார்.

என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது வன்முறையான கேஸ், தவறான கேஸ்.

சக நடிகரை தாக்கலாமா என்கிறார். அவர் சக நடிகர் என்றால், எனது தங்கை கணவர் இறந்தபோது நான் இல்லாத நிலையில், அவர் நல்லது செய்திருக்கலாம். அதை செய்யவில்லை. பிரச்சினைதான் செய்தார்.

அடுத்த மாதம் நடக்கப் போகும் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டைத் தடுக்கவும், கெடுக்கவுமே இந்த சீப்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் கருணாநிதி. எனது கட்சி வளருகிறது என்று அவருக்கு கோபம்.

நேற்று காலையில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கலாம் என்றார். மாலையில் புதுச்சேரியிலும் பங்கு கேட்போம் என்கிறார். எப்போது பார்த்தாலும் அவருக்கு பதவி ஆசைதான். பதவி ஆசை அவரை விடாது (இவருக்கும் இவர் மனைவி மச்சானுக்கும் ஆசையே கிடையாது பாருங்க...) .

முதலில் தமிழ்நாட்டு காவல்துறையில் உள்ள திமுக போலீஸ், அதிமுக போலீஸ் ஒழிய வேண்டும். காவல்துறையினரின் போக்கையெல்லாம் பார்த்து விட்டு, காக்கி டிரஸ் போட்டு நடிக்கவே கூடாது என்று முடிவெடுக்கும் நிலைக்கு நான் வந்து விட்டேன். என்ன பேசினாலும் கேஸ், எத்தனை பொய் கேஸ்.

என்னை எப்படி ஒழிக்க முடியும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார். என் வீட்டைச் சுற்றி போலீஸ். நல்லதைச் சொல்லி அவரால் ஓட்டு வாங்க முடியாது. எல்லாமே ஊழல். எல்லாமே பொய்க் கேஸ். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

கருணாநிதியே போட்டியிட்டாலும் கவலை இல்லை!

வடிவேலு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார். தேர்தலில் நிற்பேன் என்கிறார். யார் வேண்டுமானாலும் நிற்கலாம், இது ஜனநாயக நாடு. கருணாநிதியே என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு தெரியும் எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று.

இந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓய மாட்டேன். தைரியத்தை சோதித்துப் பார்த்தால் அது முடியாது. நான் தைரியமானவன். மக்கள் பிரச்சினைகளுக்காக உள்ளே தூக்கிப் போட்டால் தைரியமாக போவேன்(தூக்கி உள்ளே போடுங்கப்பா முதல்ல... எத்தை நாள் தாக்குப்பிடிக்கும் இவர் கட்சி பார்க்கலாம்!)

காவல்துறை நல்லவர்களுக்காக பாடுபட வேண்டும். கெட்டவர்களுக்குத் துணை போகாதீர்கள். அடுத்த ஆட்சி மாறினால், நீங்கள் எங்கே போய் விழுவீர்கள் என்று தெரியாது. அத்தனையும் தூசு தட்டி எடுக்கப்படும். அப்போது நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நீங்கள் சம்பாதித்த காசை திரும்ப வாங்குவோம்.

இப்போது எனது பேச்சை மக்கள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பவர் கட் (!!) என எனக்கு செய்தி வந்துள்ளது. இதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம். இதுதான் சர்வாதிகார ஆட்சி என்றார் விஜயகாந்த்.

ரெம்பத்தான் கண்ணைக் கட்டுதே... என்கிறீர்களா...

வடிவேலு சொன்னதைத்தான் நானும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்னும் ஆட்சியின் அருகில்கூட வரவில்லை... அதற்குள் என்னமா சவுண்ட் விடுறார்... அடுத்த தேர்தல்ல இவருக்கு கூடுதலா ஒரு சீட் கெடச்சா கூட தமிழ் மக்களுக்கு ரொம்ப இருட்டான காலமாயிடும் போலருக்கே!

விஜய்காந்த் ஜெயிச்சா... நாடு தாங்காதுண்ணே...! – இது வடிவேலு வெடி!!


ஒரு இடத்தில் ஜெயித்ததற்கே இந்த ஆளு (விஜயகாந்த்) இந்த பாடுபடுத்துறாரே... நாளைக்கு பத்து இடத்தில் ஜெயிச்சிட்டா இந்த நாடு என்னாகுமோன்னு பயமா இருக்குண்ணே... அவருக்கு மட்டும்தானா மக்கள் செல்வாக்கு... எனக்கும்தாண்ணே இருக்கு. நான் நின்னா ஓட்டுப்போட மாட்டாங்களா நம்ம மக்கள்... இப்ப சொல்றண்ணே... அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். நானா, விஜயகாந்த்தா பார்த்துடுவோம்ணே...

-விஜய்காந்த் தொண்டர்களின் வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட வடிவேலு அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது.

நடிகர் வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகளும், அதுதொடர்பான மோதல்களும் இருந்து வருவது தெரியும்தானே...

சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு, அதில் வடிவேலு கடுமையாக தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீஸில் விஜயகாந்த் மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இன்று வடிவேலு சாட்சியம் அளிக்கவுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்டோர் 20-க்கும் மேற்பட்ட பைக்குகள், ஆட்டோக்களில் சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் வடிவேலு வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டனர். வீடு மற்றும் அலுவலகம் மீது சரமாரியாக பெரிய பெரிய கற்களை வீசி அடித்ததில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், வீட்டின் வரவேற்பரையில் இருந்த ஷோகேஸ் ஆகியவை உடைந்து சிதறின.

வீட்டுக்குள் இருந்தவர்கள் மீதும் கற்கள் விழுந்ததில் வடிவேலு வீட்டினரில் ஒருவர் காயமடைந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக வடிவேலு உள்ளிட்டோர் உயிர் தப்பினர்.

இந்த கொலை வெறித் தாக்குலைப் பார்த்து அந்த தெருவே பரபரப்பாகியது. அனைவரும் தெருவில் கூடிவிட்டனர். சிறிது நேர தாக்குதலுக்குப் பின்னர் அந்த கும்பல் வந்த வண்டிகளில் திரும்பி விட்டது.

போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.

'எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறார்?'

நடந்த சம்பவம் குறித்து வடிவேலு இப்படிக் கூறுகிறார்:

20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். வந்தவுடன் கற்களை எடுத்து வீட்டின் மீதும், அலுவலகம் மீதும் சரமாரியாக வீசினர். தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தனர். பக்கத்து வீடுகளிலும் போய் கற்கள் விழுந்தன.

என் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயா என்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கினர்.

நான் ஒரு நகைச்சுவை நடிகன். என்னை தாக்கி விட்டு எந்தக் கோட்டையை இவர் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னை அடித்துதான் இவர் கோட்டையைப் பிடிக்க வேண்டுமா? அந்த அளவு வீக்கான பார்ட்டியா இவரு...

ஒரு இடத்தில்தான் ஜெயித்திருக்கிறார். அதற்கே இப்படியா? என்னை எதற்காக குறி வைக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே என்னை தாக்கி வருகிறார்கள். பலமுறை கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதையெல்லாம் நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.

ஒரே எதிரி... அது விஜய்காந்த்தான்!

நான் காமெடி நடிகன். ரவுடி அல்ல. ஜனங்களை சிரிக்க வைப்பது மட்டுமே எனது தொழில். ஜனங்கள்தான் எனது கடவுள். கல் வீசியவர்களுக்கும், அதைத் தூண்டியவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.

எனக்கு இந்த உலகிலேயே ஒரேயொரு எதிரிதான் இருக்கிறார். வேறு யாரும் எனக்கு எதிரிகள் இல்லை. அஜீத் படத்தை வைத்திருந்தார்கள் என்று கூறுகிறார்கள். அது திசை திருப்பும் செயல்.

நானா, விஜயகாந்த்தா பார்த்து விடுவோம்ணே!

விஜயகாந்த்தான் என்னைக் கொலை செய்ய ஆளை அனுப்பியுள்ளார். கடந்த ஒரு வருடமாகவே இதை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

மக்கள் செல்வாக்கு என்று நீ கூறுவாயானால் எனக்கும்தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அடுத்த தேர்தலில் நீ எங்கே வேண்டுமானாலும் போட்டியிடு. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். மக்கள் செல்வாக்கு எனக்கா, விஜயகாந்த்துக்கா என்று பார்த்து விடுவோம்ணே...

நீ ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறாய். நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். அத்தனை கட்சிகளின் ஆதரவுடனும் உன்னை எதிர்த்துப் போட்டியிடுவேன். பார்த்து விடலாம்.

எம்ஜிஆர் பேரச் சொல்லக்கூட தகுதியில்ல!

என்னை ஆள் வைத்து அடிச்சீல்ல, உனக்கு எந்தத் தகுதியும் இல்லை. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். அதில் நீ ஜெயித்து விட்டால் இந்த தமிழ் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்.

ஒரு இடத்தில் ஜெயிச்சதுக்கே இந்தாளு இந்த பாடு படுத்துறாரே..., நாளைக்கு பத்து இடத்தில் ஜெயிச்சுட்டா இந்த நாடு என்னாகுமோன்னு பயமா இருக்குண்ணே...

இந்த லட்சணத்துல இந்தாளு எம்ஜிஆர் பெயரையெல்லாம் எந்த தகுதில உபயோகப்படுத்துறார்னே தெரியலயே...உண்மையில அந்த புரட்சித் தலைவரோட பெயரைச் சொல்லக்கூட இந்தாளுக்குத் தகுதியில்ல!!”

இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள் தமிழ்ப் பெருங்குடி மக்களே...!


விஜயகாந்த் நடிப்பு அல்லது அரசியல் குறித்து இதுவரை நமக்கு பெரிதாக எந்த அபிப்பிராயமும் இருந்ததில்லை. இரு கழகங்களின் மீதுள்ள வெறுப்பு, ரஜினி வருவார் என்ற நம்பிக்கை தாமதமாகிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட சலிப்பு போன்றவைதான் மக்களுக்கு அவர் மீதான ஆர்வமாக மாறியிருக்கிறது என்பதே நடுநிலையாளர்கள் கருத்து (அது யார் நடுநிலையாளர்கள் என்கிறீர்களா... ஒட்டுப் போடக் கூட போகாமல் ஏஸி அறைக்குள் அல்லது மரத்தடிகளில் பஞ்சாயத்து பேசும் பார்ட்டிகள்!).

களத்தில் இறங்கி ஓட்டுப் போடும் மக்களின் நாடித் துடிப்பை அறிய ஊர் ஊராய்ச் சுற்றும் என்னைப் போன்றவர்கள் பெரும்பாலானோரின் கருத்து இதற்கும் ஒருபடி கீழ்... தினமலர், சன்டிவி, தினகரன், மாலைமுரசு போன்றவை கொஞ்சம் மூடிக்கிட்டிருந்தா இந்த ஆள் இருக்கிற இடமே தெரியாது..., என்பதே அந்த அபிப்பிராயம்.

ஆனால் சில பத்திரிகைகளும், கருத்துப் பரப்பிகளும் விஜய்காந்த்தான் இந்த மாநிலத்துக்கு நல்ல மாற்று என்பது போன்ற விஷ வித்தை விதைக்க முயற்சித்து வருகிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது... கலைஞரை விட மோசமான குடும்ப அரசியல், ஜெயலலிதாவை விட கொடுமையான அதிகார வெறி இரண்டுக்கும் சொந்தக்காரராகத்தான் விஜய்காந்த் திகழ்வார் என்பது.

விஜய்காந்த் சமீபத்திய ஒரு பிரஸ்மீட்டில் சொன்னது:

சார், உங்க கொள்கை என்ன?

மக்கள் நல்லா வாழணும்... இதாங்க என் கொள்கை..!

அதான் எப்படி நல்லா வாழ்வாங்க... என்ன திட்டமிருக்கு?

அதெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக்கிடுவோம்...

கட்சியில உங்க மனைவி, மச்சினன் ஆதிக்கம் அதிகமிருக்கே...

நீங்க திமுக ஆளா...

ஏன்... நடுநிலையாளர் யாரும் இப்படிக் கேட்க மாட்டார்களா...

பாருங்க... என் மனைவிக்கு, மச்சின்னுக்கு என் மேல அளவு கடந்த பாசம், அக்கறை இருக்கு... அப்படிப்பட்டவங்க என் கட்சி மேலயும் அதே அளவு அக்கறை காட்றதுல உங்களுக்கு என்ன கஷ்டம்!

அடக் கடவுளே... இப்படி ஒரு ஆளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கவும் நாலுபேர் இருக்கிறார்களே என்பதுதான் வேதனை.

இந்த நபருக்காக திமுகவை, பாமகவை திட்டுவது எவ்வளவு தவறானது பாருங்கள். கலைஞராவது, தன் கடைசி காலம் நெருங்கிவிட்டதை அறிந்தும், தன் மகனுக்கு முடி சூட்ட முடியாமல், எதிரிகள் விமர்சிப்பார்களே என்ற தயக்கத்தில் அமைதி காக்கிறார். ராமதாஸ் இன்னும் கூட பதவியை நேரடியாக அனுபவிக்காமல் தனக்கு வேண்டப்பட்ட, குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுக்கிறார்.

ஆனால் இந்த விஜய்காந்துக்கு எந்த பொது நல நோக்கமும் கிடையாது. அவரது ஒரே குறி, பதவி. ஒரு வேளை தப்பித் தவறி கிடைத்துவிட்டால், அதை மனைவி, மச்சான் கையில் ஒப்படைத்துவிட்டு குனியமுத்தூர் தோப்பில் குறிகேட்டபடி உட்கார்ந்துவிடுவார்.

ஆண்டாள் அழகர் கல்லூரி மாதிரி... ‘பிரமலதா - சுதீஷ் தமிழ்நாடு அரசு’ என்ற நிறுவனத்தை உருவாக்கவே அவரும் அவர் மனைவியும் பேராசைப் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் உள்ளடி வேலைகள் பலவற்றில் இறங்கிக் கொண்டிருக்கிறார் விஜய்காந்த்.

இது ஒரு பக்கமிருக்கட்டும்...

இவரது ஆட்களுக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை இருக்கிறதே... அது ‘பிரிட்டிஷ் பிரச்சினை’யாகிவிட்டது இப்போது!

இருவர் வீடும் ஒரே தெருவில், அதுவும் எதிரெதிரில்தான் அமைந்திருக்கிறது.
வடிவேலு தன் படங்களில் தொடர்ந்து நடிக்க மறுப்பது ஒரு பக்கம் கோபமென்றால், ‘பெரிய தலைவராகி’விட்ட பின்னும் தன்னிடம் பணிய மறுப்பதில் கட்டுக்கடங்காத கோபம் விஜய்காந்துக்கும் அவர் மச்சான் சுதீஷுக்கும்.

இந்தக் கோபம்தான் வடிவேலு மற்றும் விஜய்காந்த் ஆதரவாளர்களிடையே பெரும் மோதலாகி, இப்போது விஜய்காந்த் ஆட்கள் வடிவேலு வீட்டுக்குள் நள்ளிரவில் கல்லெறியும் கேவலம் வரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே ஏற்பட்ட பழைய மோதல் கேஸே இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது அதற்குத்தான் நாளை சாட்சி சொல்ல கோர்ட்டுக்குப் போகத் தயாராக இருந்தார் வடிவேலு.
இதைத் தடுக்க சினிமா பாணியில் ஒரு நாள் முன்பே கல்லெறிந்து மிரட்டியிருப்பதாக வடிவேலு கூறியிருக்கிறார்.

‘என்னைப் பணிய வைக்க அவரும் (விஜய்காந்த்), அவரோட ஆட்களும் எவ்வளவோ பண்ணிட்டாய்ங்க... ஆனா நான் என் பாட்டுக்கு வேலைய பார்த்துக்கிட்டுப் போயிட்டே இருக்கேன். இப்ப கல்லக் கொண்டெறியற லெவலுக்கு வந்திருக்காய்ங்க... இந்தக் காமெடியனோட மோதி கோட்டைக்குப் போயிடலாம்னு கனவு காணுறாரே... எவ்வளவு கேவலம் பாருங்க..., என்கிறார் வடிவேலு. காமெடியானாக இருந்தாலும் அவர் வார்த்தைகளில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளன பாருங்கள்!

இப்போது வடிவேலு கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜய்காந்த் உள்ளிட்ட 30 பேர் பேர் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். இதில் விஜய்காந்த் கைதாகவும் வாய்ப்பிருக்கிறது.

உடனே கலைஞர் அரசு பழிவாங்குவதாக விஜய்காந்த் சீன் கிரியேட் பண்ணும் வாய்ப்பும் ஏராளமிருக்கிறது. இதை வைத்தே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவர் மனைவி மந்திரம் ஓதி, கேப்டனை (இதென்ன படிச்சி வாங்கின பட்டமா... இல்ல மிலிட்டரில டப்பு டப்புனு சுட்டு வாங்கின ரேங்கா...!) களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

இதையெல்லாம் யோசிக்க ஏது நம்மாளுங்களுக்கு நேரம்... இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள், எம்ஜிஆர் பெயரை தவறாகப் பிரயோகிக்கும் கறுப்பு ஆடுகள் வரவேண்டும் என்பதற்காகத்தானே அவர்களும் காத்துக் கிடந்தார்கள்... வேணும்... நல்லா வேணும்!