Monday, October 20, 2008

தெரிந்து கொள்ளுங்கள் இந்த பதவி வெறியரை!

மாமன்னர் அக்பர் ஒரு முறை, ஒரு பெரிய கோட்டை அழிக்காமல் சின்னதாக்கிக் காட்ட முடியுமா என்றார்.

அதற்கு பீர்பால் பதிலேதும் பேசாமல், பெரிய கோட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னக் கோடு போட்டு, “மன்னா... இப்போது பெரிய கோடு அழிக்காமலேயே சின்னதாகிவிட்டது. அதேநேரம் சின்னக் கோடு இருப்பதாலேயே பெரிய கோட்டின் மகத்துவமும் புரிகிறதல்லவா...!” என்றாராம்.

இது கதையல்ல...மாமன்னர் அக்பரின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் ஒன்று. பரவலாக நீங்களும் கேள்விப்பட்டதும் கூட.

நல்ல மனிதர்களின் புகழை, பெருமையை அவர்களது நலம் விரும்பிகள் மூலம் அல்லாமல் தெரிந்து கொள்வது எப்படி?

சில மோசமான மனிதர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம்.
தமிழக மக்களுக்கு, குறிப்பாக வாக்குச் சாவடிகளில் மணிக்கணக்கில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

நல்ல மனிதர்கள் யார் என்பதைத் தாமதமாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் கெட்டவர்களை உடனே தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்தில் சற்றே எட்டிப்பார்க்கத் துவங்கியிருக்கிற ஒரு தீய சக்தி விஜய்காந்த்!

இதைப் படிக்கும்போது, ‘ரஜினியின் புகழ் பரப்ப தளம் நடத்துபவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று சிலர் முணுமுணுப்பது புரிகிறது.

பரந்து விரிந்த இநத வானத்தின் கீழே நடக்கும் அத்தனை நல்லது கெட்டதுகளையும் என்வழியில் அலச வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனாலேயே முன்பு விஜய் காந்த் – வடிவேலு சண்டையையும், எந்தளவு கீழ்த்தரமான அரசியல்வாதி விஜய்காந்த் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தேன்.

இப்போது மாநாடு எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் வித்தைக்காரன் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் இவரின் நிஜமுகத்தை அம்பலப்படுத்துவது அவசியமல்லவா!

இந்த மாநாடு எதற்காக?

சில தனியார் தொழிலதிபர்களின் தயவோடும், மீடியா உலக ஆக்டோபஸாகத் திகழும் சன் குழுமம் ஆதரவோடும் விஜய்காந்த் இப்படியொரு மாநாட்டை சென்னையில் நடத்தக் காரணம் என்ன?

தனக்கு சென்னை மக்களிடம் உள்ள செல்வாக்கைக் காட்டவும், தமிழகம் முழுக்க உள்ள தன் இளைஞர் சேனையை சென்னை மக்களுக்குக் காட்டவும்தான் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார் விஜய்காந்த்.

உலகத்தில் இப்படியொரு அற்ப காரணத்துக்காக மாநாடு நடத்திய ஒரே நபர் விஜய்காந்தாகத்தான் இருப்பார்.

ஒருவிதத்தில் அவர் அன்று உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.

இந்த மாநாட்டை இப்போது நடத்த ஒரு காரணமும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கண்டித்து எல்லோரும் கறுப்பு பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லவா ரூ.10 கோடி செலவில் இப்படியொரு மாநாடு கூட்டினார்! அப்படியென்றால் எதற்கு இத்தனை வெட்டிச் செலவு... ஒரு அறிக்கையில் முடிக்க வேண்டிய விஷயமல்லவா இது!

மின்வெட்டு, வேலைவாய்ப்பு, கூட்டணி... இதெல்லாம் இன்று மக்கள் அறிந்தவை. அன்றாடம் விவாதிக்கிற பிரச்சினைகள். இதில் இந்த அரசின் பக்கம் உண்மையில் தவறு இருந்தால் மக்கள் தேர்தலில் பார்த்துக் கொள்வார்கள். இதை மாநாடு கூட்டிச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. தினம் நான்கு முறை இந்த விஷயங்களுக்காகத்தானே இவர் அறிக்கை விட்டு பப்ளிசிட்டி தேடி வருகிறார்!

ஆமா... பதவிதான் முக்கியம்!

நிஜத்தில் எந்த கொள்கையும் இல்லாத, பதவி வெறியும், பணப் பேராசையும் கொண்ட ஒரு மனிதர் இவர்.

இதை இந்த திடீர் தலைவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்! அவரது மாநாட்டு அறிவிப்பைப் பாருங்கள்:

“விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததே ஆட்சியை பிடிக்கத்தான் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தொடங்குவது ஆட்சியை பிடிக்காமல், காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போகவா?

ஓர் இடத்தை அடைய வேண்டுமானால் குறிக்கோள் இருக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்கவே கட்சியை ஆரம்பித்தோம். ஆட்சியைப் பிடிக்க ஏன் ஆசைப்படக்கூடாது? ஆட்சியைப் பிடிக்கவே கட்சி. நான் மறைக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் நெருங்குகிறது. அதற்குத் தயாராகுங்கள். கட்சியினர் ஒவ்வொருவரும் நூறு ஓட்டுகளையாவது வாங்கித்தர வேண்டும். தேர்தலில் எதற்கும், யாருக்கும் பயப்படக்கூடாது.
மக்களே... தேமுதிகவை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு, அப்புறம் பாருங்கள்!”

-அப்புறம் என்னத்தைப் பார்ப்பது... இவரும், இவர் மனைவி – மைத்துனர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தைப் பட்டா போட்டு விற்கும் கோலாகலக் காட்சியையா?

குறிப்பு: தேமுதிக மாநாட்டின் ‘சாதனை’களை அடுத்த பதிவில் பார்க்க!

http://www.envazhi.com

No comments: