Showing posts with label Analysis. Show all posts
Showing posts with label Analysis. Show all posts

Sunday, December 7, 2008

ஒரு 'தோல்வி'ப் படம், 'அருமை'யான படமான விந்தை!

ருவேளை கடவுள் மட்டும் இன்று கண்ணெதிரில் தோன்றினால்... பாபா படத்துக்கு ஒரு டிக்கெட் வேண்டும் என்றுதான் முதல் கோரிக்கை வைப்பார்கள் தமிழ் மக்கள்!

-தினமணி நாளிதழில், பாபா வெளியீட்டுக்கு முந்தைய வாரம் எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு தரப்பட்டிருந்த முன்னுரை இது!

சிவாஜிக்குக் கூட அவ்வளவு செய்திகள் வந்திருக்குமா தெரியவில்லை... அவ்வளவு பரபரப்பு செய்திகள்... சிறப்புக் கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனங்கள், எதிர் விமர்சனங்கள் என பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்.

தனது வியாபாரத்துக்கும் ரஜினி, விமர்சனத்துக்கும் ரஜினி, அறிவுஜீவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும் ரஜினி என ரஜினியை வைத்து எக்கச்சக்கமாய் சம்பாதித்து வரும் விகடன் குழும பத்திரிகைகள், பாபாவுக்கு மட்டும் 60-க்கும் மேற்பட்ட அட்டைப் பட சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டன. குமுதம் மட்டும் சளைக்குமா... அவர்களும் போட்டுத் தாக்கினார்கள்.

இத்தனைக்கும், ரஜினி தொடர்பான செய்திகளை வெளியிட சட்ட ரீதியான அனுமதி பெற வேண்டும் என லதா ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்த நேரம் அது.

எதிர்பார்ப்பு என்ற சொல்லுக்கு நிஜமான அர்த்தம் பாபா பட வெளியீட்டின்போது அருகிலிருந்து கவனித்தவர்களுக்குத்தான் புரியும். ஒரு பக்கம் பெருமை... மறுபக்கம் படபடப்பு...
ரசிகர்களுக்கே இப்படியென்றால், சூப்பர் ஸ்டாருக்கு எப்படி இருந்திருக்கும்... ஆனால் அதை அவர் காட்டிக் கொள்ளவே இல்லை.

‘தி வெயிட் ஈஸ் ஓவர்’ என்ற வாசகத்தோடு, பாபா டிக்கெட்டுகளை நமக்கு ஒரு நாள் முன்பே அனுப்பி வைத்தார் ரஜினியின் பிஆர்ஓ நிகில்.

படத்தின் சிறப்புக் காட்சிகள் சத்யம் வளாகத்திலிருந்த 5 திரையரங்குகளிலும் ஒரு நாள் முன்பே விடியவிடிய திரையிடப்பட்டன. சென்னையின் மற்ற திரையரங்குகளிலும் சிறப்புக் காட்சிகளில் கூட்டம் திமிலோகப்பட்டது.

படம் முடிந்து வெளியில் வந்தபோது, உடன் வந்திருந்த சில நண்பர்கள், “என்னய்யா... தலைவர் இப்படி ஏமாத்திட்டாரே... “ என புலம்பத் தொடங்கிவிட்டனர். அதுவரை, ‘ஆஹா... சொல்ல வந்த விஷயத்தை நெத்தியடியா சொல்லிட்டார் தலைவர்” என நம்பிக் கொண்டிருந்த நமக்கு பக்கென்றது.

அவர்களிடமிருந்து விடைபெற்று, மாண்டியத் சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, சில நிமிடங்கள் கண்ணை மூடி யோசித்த போது, இன்னொரு நண்பர் போன் செய்தார். அவரும் நம்மைப் போன்ற மனநிலையில்தான் இருந்தார்.

“தலைவர் எடுத்திருப்பது நல்ல படம்தான். இன்றில்லாவிட்டாலும், போகப் போக மக்கள் புரிந்து கொள்வார்கள். இப்போது கிடைக்காத பாராட்டும் புகழும் பின்னால் கிடைக்கலாம்... நீ வேணும்னா பாரு...” என்று அமைதியாக, அழுத்தமாகக் கூறினார்.

அடுத்த நாளே தினமலர் ஒரு சர்வே நடத்தியது. அதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இந்தப் படம் அருமையாக இருப்பதாகவும், அரசியல் குறித்த ஒரு நல்ல செய்தியை ரஜினி தங்களுக்கு அதில் கூறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனாலும் பாபாவுக்கு எதிரான விஷமப் பிரச்சாரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது. படப்பெட்டிகள் சூறையாடல், தியேட்டருக்கு தீவைத்தல், திரைக் கிழிப்பு என அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டதை யாரும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

வழக்கமாக ஒரு வாரம் கழித்து விமர்சனம் வெளியிடும் விகடன், அடுத்த நாளே மட்டமான விமர்சனம் எழுதி தங்கள் ‘நடுநிலை’யைக் காட்டியது.

இந்த நேரத்தில் இதை வெளியிடக் காரணம் இருக்கிறது. பாபாவைப் பற்றி இன்னும் கூட சிலர் ‘குரைத்து’க் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் பலவிதத்திலும் சிறப்பான படைப்பு என இன்றைக்கு பலரும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
குறிப்பாக கடந்த இரு மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாம் சந்திக்கும் நண்பர்கள், நடுநிலை விமர்சகர்கள் அனைவருமே பாபாவுக்கு நற்சான்று அளித்து வருகிறார்கள்.

சக பத்திரிகையாளர் நண்பர் ஒருவரின் மகன் (கல்லூரிக்குப் போகும் வயசு!) வாரம் ஒருமுறையாவது அந்தப் படத்தைப் போட்டுப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். இத்தனைக்கும் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து ஒரு வார இதழில் கட்டுரை எழுதியவர் அவர் (பெயர் வெளியிடுவது தர்மம் ஆகாது!)

அன்று பாபாவால் பெரும் நஷ்டம் என்ற பிரச்சாரம் எழுவதற்கு முன்பே, விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் அழைத்து அவர்கள் குறிப்பிட்ட நஷ்டத் தொகைக்கு மேல் ஒரு தொகையை ரஜினி கொடுத்தார்.

ஆனால் அவர்களே இன்று சொல்கிறார்கள், ‘பாபா தோல்விப் படமல்ல. எங்களுக்கு அந்தப் படத்தால் லாபம் கிடைத்தது உண்மைதான்’ என்று. (இதுகுறித்து ஏற்கெனவே ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளோம்)

இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது அந்த மகாவதார் பாபாஜியின் விருப்பம் போலிருக்கிறது...

இந்தப் படம் குறித்த நடுநிலையாளர்கள் சிலரது இன்றைய பார்வைகளை நம்மால் முடிந்த அளவு தொகுத்திருக்கிறோம். கூடவே அதுபற்றி சூப்பர் ஸ்டாரின் கருத்தும். அது அடுத்த பதிவில்...

-ஷங்கர்
http://www.envazhi.com

Monday, October 20, 2008

தேமுதிக மாநாட்டு ‘சாதனை’!


விஜய்காந்த் ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாய் சட்டசபை, நாடாளுமன்ற செட் போட்டு எடுத்த ‘இளைஞர் அணி மாநாடு சினிமா ரிசல்ட்’ என்ன?

வழக்கமாக சினிமாக்காரர்கள், சீசனில் படம் ரிலீஸானதும் ஒரு டயலாக் சொல்வார்கள்:

‘படம் பிரமாதமா இருக்குன்னு தமிழ்நாடே பாராட்டுது சார்...நல்ல கலெக்ஷன். தீபாவளி ரிலீஸ்லயே இந்தப் படம்தான் நம்பர் ஒன்...’
-இப்படி பேட்டி கொடுத்த மூன்றாவது நாளே படம் தியேட்டரைவிட்டு ஓடியிருக்கும்!

இந்த இளைஞரணி 'மாநாடு சினிமாவும்' இந்த லட்சணத்தில்தான் அமைந்தது.

நான் வித்தியாசமானவனாக்கும்... என்று மஞ்சள் கொடியோடு வந்து நின்ற விஜய்காந்த், இன்றைக்கு கழகங்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பொய்யிலும் புனை சுருட்டிலும் ஓங்கி நிற்கிறார். பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதில் இன்றைய தேதிக்கு இவரை அசைச்சுக்க முடியாது!

இவரது தொண்டர்கள் மட்டும் சளைத்தவர்களா... ராவண ராஜ்யத்தில் வானரப் படைகள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் ராமாயணக் காட்சிகள்தான் மனக் கண்ணில் நிற்கின்றன. அப்படியொரு ஆட்டம் போட்டிருக்கிறார்கள் இந்த விஜய்காந்த் சேனைகள், சிங்காரச் சென்னையில்...
ஒரு நபருக்கு 300 ரூபாய் கூலி, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி கொடுத்து இந்த கொள்கைச் சிங்கங்களைக் கூட்டி வந்திருக்கிறார் அவர்களின் கேப்டன்!

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தட்ஸ்தமிழ் செய்திகளைப் பாருங்கள்!


தேமுதிக மாநாட்டு சாதனை!

...விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.

கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.

திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.

இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.

'தொண்டர்கள் எனும் பெயரில் இவர்கள் செய்திருந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்ய நியாயமாக சென்னை மாநகராட்சிக்கு பெரிய தொகையை வழங்கியிருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர். அரசியல் கட்சி என்ற பெயரில் இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்', என்று அதிருப்தி தெரிவித்தார் இந்த மண்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
கடற்கரையே இப்படியென்றால் தீவுத்திடல்....?
அங்கு இதை விட பலமடங்கு மோசமான நிலை. இதையும் மாநகராட்சிதான் சுத்தம் செய்தாக வேண்டும்.
இன்னொரு பக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரத்துக்கும் மேலாக நடுச் சாலையில் மழையில் அவதிப்பட்டனர் பொதுமக்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய மாநாடுகளை அனுமதிக்கக் கூடாது என பலவேறு மக்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் அரசு கேட்பதாக இல்லை. அதனால்தான் மக்களுக்கு இவ்வளவு தொல்லை!


நெரிசலில் விழிபிதுங்கிய சென்னை!

ஒரு சின்ன மழைக்கே கடும் போக்கு வரத்து நெரிசலில் திணறும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டது சென்னை நகரம்.

இதில் அவ்வப்போது மாநாடு, பேரணிகள் என்று அரசியல்வாதிகள் விளையாடுவார்கள். நேற்று விஜய்காந்தின் முறை.

பிற்பகல் அவர் கட்சியின் மாநாடு துவங்குவதற்கு முன் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு தாண்டியும் நீடித்தது.

வார இறுதி, தீபாவளி சீசன், கூடவே இந்த மாநாட்டு கலாட்டக்களும் சேர்ந்து கொண்டதால் கிண்டியிலிருந்து, தி.நகர், பீச், அண்ணாசாலைக்கு சென்ற பலரும் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு முன்னேறவும் முடியாமல் பின்செல்லவும் வழியில்லாமல் தவித்தனர்.

பேருந்துகளில் சென்றோர் சாதாரண தூரத்தைக் கடக்கவே பல மணி நேரம் ஆனது. வாகனங்களைத் திருப்பிவிட வழியின்றி போக்குவரத்து போலீசார் மிகவும் திணறிப்போனார்கள்.

கடற்கரை காமராஜர் ரோடு, அண்ணாசாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் பலர் அதிருப்தியுடன் திட்டியபடி வாகனங்களில் பல மணி நேரம் ஊர்ந்து சென்றனர்.


-இதுக்குமேல வித்தியாசமான கட்சிய, தலைவரை உலகத்துல எங்காவது உங்களால காட்ட முடியுமா...!

குறிப்பு: தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தொண்டர்கள் குடிக்காமல் இருக்கிறார்கள்... திமுக, அதிமுக, மது ஒழிப்பு மாநாடு நடத்தும் பாமக, காந்தியடிகளைத் தலைவராகப் போட்டுக் கொள்ளும் காங்கிரஸ்... இப்படி எல்லா கட்சித் தொண்டர்களுமே குடிப்பதில் பிஎச்டியே வாங்கியிருக்கும் போது, விஜய்காந்தையும் அவர் கட்சிக்காரர்களையும் மட்டும் குடிகாரர்கள் என திட்டுவது சரியா என பல நண்பர்கள் கருத்து எழுதக் கூடும்.

அப்படி எழுதும் முன், 'நான் வித்தியாசமானவனுங்கோ... எங்க கட்சி வித்தியாசமோ வித்தியாமுங்கோ...' என்றெல்லாம் கவுண்டர் ஸ்டைலில் கூப்பாடு போட்டு வரும் விஜய்காந்தைக் கொஞ்சம் மனக் கண்ணில் நிறுத்திப் பார்க்கவும்.

அதே பதவி வெறி, அதே பணப் பேராசை, அதே துஷ்பிரயோகம், அதே கட்சிகளுடன் கூட்டு... அப்புறம் எதற்கு இந்தக் கருமம் வேறு... ஏற்கெனவே உள்ள கழகங்களே போதுமே!

தெரிந்து கொள்ளுங்கள் இந்த பதவி வெறியரை!

மாமன்னர் அக்பர் ஒரு முறை, ஒரு பெரிய கோட்டை அழிக்காமல் சின்னதாக்கிக் காட்ட முடியுமா என்றார்.

அதற்கு பீர்பால் பதிலேதும் பேசாமல், பெரிய கோட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னக் கோடு போட்டு, “மன்னா... இப்போது பெரிய கோடு அழிக்காமலேயே சின்னதாகிவிட்டது. அதேநேரம் சின்னக் கோடு இருப்பதாலேயே பெரிய கோட்டின் மகத்துவமும் புரிகிறதல்லவா...!” என்றாராம்.

இது கதையல்ல...மாமன்னர் அக்பரின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் ஒன்று. பரவலாக நீங்களும் கேள்விப்பட்டதும் கூட.

நல்ல மனிதர்களின் புகழை, பெருமையை அவர்களது நலம் விரும்பிகள் மூலம் அல்லாமல் தெரிந்து கொள்வது எப்படி?

சில மோசமான மனிதர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம்.
தமிழக மக்களுக்கு, குறிப்பாக வாக்குச் சாவடிகளில் மணிக்கணக்கில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

நல்ல மனிதர்கள் யார் என்பதைத் தாமதமாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் கெட்டவர்களை உடனே தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்தில் சற்றே எட்டிப்பார்க்கத் துவங்கியிருக்கிற ஒரு தீய சக்தி விஜய்காந்த்!

இதைப் படிக்கும்போது, ‘ரஜினியின் புகழ் பரப்ப தளம் நடத்துபவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று சிலர் முணுமுணுப்பது புரிகிறது.

பரந்து விரிந்த இநத வானத்தின் கீழே நடக்கும் அத்தனை நல்லது கெட்டதுகளையும் என்வழியில் அலச வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனாலேயே முன்பு விஜய் காந்த் – வடிவேலு சண்டையையும், எந்தளவு கீழ்த்தரமான அரசியல்வாதி விஜய்காந்த் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தேன்.

இப்போது மாநாடு எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் வித்தைக்காரன் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் இவரின் நிஜமுகத்தை அம்பலப்படுத்துவது அவசியமல்லவா!

இந்த மாநாடு எதற்காக?

சில தனியார் தொழிலதிபர்களின் தயவோடும், மீடியா உலக ஆக்டோபஸாகத் திகழும் சன் குழுமம் ஆதரவோடும் விஜய்காந்த் இப்படியொரு மாநாட்டை சென்னையில் நடத்தக் காரணம் என்ன?

தனக்கு சென்னை மக்களிடம் உள்ள செல்வாக்கைக் காட்டவும், தமிழகம் முழுக்க உள்ள தன் இளைஞர் சேனையை சென்னை மக்களுக்குக் காட்டவும்தான் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார் விஜய்காந்த்.

உலகத்தில் இப்படியொரு அற்ப காரணத்துக்காக மாநாடு நடத்திய ஒரே நபர் விஜய்காந்தாகத்தான் இருப்பார்.

ஒருவிதத்தில் அவர் அன்று உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.

இந்த மாநாட்டை இப்போது நடத்த ஒரு காரணமும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கண்டித்து எல்லோரும் கறுப்பு பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லவா ரூ.10 கோடி செலவில் இப்படியொரு மாநாடு கூட்டினார்! அப்படியென்றால் எதற்கு இத்தனை வெட்டிச் செலவு... ஒரு அறிக்கையில் முடிக்க வேண்டிய விஷயமல்லவா இது!

மின்வெட்டு, வேலைவாய்ப்பு, கூட்டணி... இதெல்லாம் இன்று மக்கள் அறிந்தவை. அன்றாடம் விவாதிக்கிற பிரச்சினைகள். இதில் இந்த அரசின் பக்கம் உண்மையில் தவறு இருந்தால் மக்கள் தேர்தலில் பார்த்துக் கொள்வார்கள். இதை மாநாடு கூட்டிச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. தினம் நான்கு முறை இந்த விஷயங்களுக்காகத்தானே இவர் அறிக்கை விட்டு பப்ளிசிட்டி தேடி வருகிறார்!

ஆமா... பதவிதான் முக்கியம்!

நிஜத்தில் எந்த கொள்கையும் இல்லாத, பதவி வெறியும், பணப் பேராசையும் கொண்ட ஒரு மனிதர் இவர்.

இதை இந்த திடீர் தலைவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்! அவரது மாநாட்டு அறிவிப்பைப் பாருங்கள்:

“விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததே ஆட்சியை பிடிக்கத்தான் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தொடங்குவது ஆட்சியை பிடிக்காமல், காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போகவா?

ஓர் இடத்தை அடைய வேண்டுமானால் குறிக்கோள் இருக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்கவே கட்சியை ஆரம்பித்தோம். ஆட்சியைப் பிடிக்க ஏன் ஆசைப்படக்கூடாது? ஆட்சியைப் பிடிக்கவே கட்சி. நான் மறைக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் நெருங்குகிறது. அதற்குத் தயாராகுங்கள். கட்சியினர் ஒவ்வொருவரும் நூறு ஓட்டுகளையாவது வாங்கித்தர வேண்டும். தேர்தலில் எதற்கும், யாருக்கும் பயப்படக்கூடாது.
மக்களே... தேமுதிகவை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு, அப்புறம் பாருங்கள்!”

-அப்புறம் என்னத்தைப் பார்ப்பது... இவரும், இவர் மனைவி – மைத்துனர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தைப் பட்டா போட்டு விற்கும் கோலாகலக் காட்சியையா?

குறிப்பு: தேமுதிக மாநாட்டின் ‘சாதனை’களை அடுத்த பதிவில் பார்க்க!

http://www.envazhi.com

Saturday, October 4, 2008

ரஜினி ரசிகர்களின் போக்கு தவறா?


சற்றுக் கடினமான மனதுடன் இந்தப் பதிவைத் தருகிறேன். புரிந்தவர்கள் கோபப்படாமல் சிந்திக்கட்டும். மற்றபடி எந்தப் பலனும் எதிர்பாராமல் ரஜினி என்ற ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட ரசிகர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!

ரஜினியை அரசியலுக்கு வாருங்கள் என அழைக்க இதுவே சரியான தருணம் என வாதிடும் ரசிகர்கள் ஒருபக்கம்...

வேண்டாம்... அவர் இஷ்டப்படி விட்டுவிடுவோம். ரஜினி என்ற பிம்பத்தை மட்டும் ரசித்து மகிழ்வோம் என அறிவுபூர்வமாக பேசும் கூட்டம் இன்னொரு பக்கம்.

தாமாகவே ஒரு முடிவெடுத்து அந்த முடிவு நிறைவேற வழியில்லாத நிலையில் தாங்களாகவே எதிர்மறையாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள் என மேதாவித்தனம் காட்டும் விமர்சகர்கள் இன்னொரு கூட்டம்.

இதுதான் ரஜினி ரசிகர்கள் என்ற சமூகத்துக்குள் இன்று நிலவும் முரண்பாடு.

இந்த முரண்பாடு அந்த சமூகத்துக்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிலர் தங்கள் எழுத்து வல்லமையைக் காட்டுவதாக எண்ணி மீடியாவில் வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை இது ரஜினிக்கு எதிராக வேலை செய்யும் கூட்டத்தின் பிரச்சாரமாகவும் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் சந்தோஷமே... குறைந்தபட்சம் ரஜினி ரசிகர்களுக்குள் எந்த கருத்து பேதமுமில்லை என்ற சந்தோஷமாவது மிஞ்சும் சத்தியநாராயணா போன்றவர்களுக்கு!

ஒவ்வொரு முறையும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பது தவறா... இந்தக் குரலின் பின்னணியில் இருப்பது அரசியல் வியாபாரமா... ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வைத்து லட்சக் கணக்கில் சம்பாதித்துவிடத் துடிக்கிறார்களா ரசிகர்கள்?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளில் கொஞ்சம் கசப்பு தட்டினாலும், உண்மை உண்மைதானே!

இவற்றைப் பற்றி தீவிர பார்வையில் எழுதத் தொடங்கினால் பல ரசிகர்களால் மட்டுமல்ல... இன்று அறிவுஜீவித்தனம் பேசும் ஒருவராலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் ரஜினி என்ற நல்ல நடிகரை, மனிதரை ரசிக்க முடியாத அளவுக்குக் கொண்டு போய்விட்டுவிடும் இந்த விவாதம்!

ஆரவாரம் இருந்தால்தான் திருவிழா!

ரசிகர்கள் பாலாபிஷேகம், பீரபிஷேகமெல்லாம் செய்யக் கூடாது. கட் அவுட் வைக்காமல், பேனர் கட்டாமல், பூமழை தூவாமல் அமைதியாக ரஜினி படத்தை ரசிக்க வேண்டும் என அறிவுரைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

குறைந்த பட்சம் இப்படியொரு சூழலில் அடுத்த வருடம் அமைதியாக எந்திரன் ரிலீசானால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்?

பட்டாசு கொளுத்தாமல், வாண வேடிக்கை இல்லாமல், தீப அலங்காரம் செய்யாமல், ஊர்கூடி வடம் பிடிக்காமல் ஒரு திருவிழா நடந்தால் எப்படி இருக்குமோ அப்படியாகிவிடும்!!

அப்படியொரு சூழல் நிலவும் போது, ‘என்ன ஆச்சு... ரஜினி படமா இது... ரசிகர்களுக்குப் பிடிக்காத மாதிரி எடுத்துவிட்டார்களே!’ என விமர்சனம் வைப்பவர்கள் நிச்சயம் இதே கூட்டத்தினராகத்தான் இருப்பார்கள். ‘ரஜினி தன் ரசிகர்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்’ என்பதற்கான அறிகுறி இது என கூலாகச் சொல்லிவிட்டுப் போவார்கள்.

ரஜினி படம் ரிலீசாவது ஒரு திருவிழா மாதிரி என எழுதிக் கிழிக்கும் யாருக்கும், அந்தத் திருவிழாவை யார் தயவுமின்றி சுயமாக நடத்தும் ரசிகர்களைப் பற்றிக் குறை சொல்லும் யோக்கியதை கிடையாது. எங்கோ ஒரு சில ரசிகர்கள் வரம்பு மீறியிருக்கலாம்... ஆனால் பரந்து விரிந்த சமுத்திரத்துக்குள் செம்மீனும் உண்டு, காதறுந்த செருப்பும் உண்டு.

ரஜினியும் அரசியலும்!

பின்னாளில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே எந்தத் தொண்டனும் பாலாபிஷேகம் செய்யவில்லை. திரைக்கு முன்னால் சில்லறையை வாரி இறைக்கவில்லை. ஆனால் அந்தத் ரசிகனுக்குத் தொண்டனாகும் ஆசையைத் தூண்டிவிட்டது யார்? பல ரசிகர்களால் வெளிப்படையாகக் கேட்க முடியாத கேள்வி இது! ஆனால் இதற்கான பதில் ரஜினி உள்பட அனைவருக்கும் தெரியும்.

ரஜினி அரசியல் ஆசை துறந்தவரல்ல... அரசியலை இதற்கு முன் முயற்சித்துப் பார்க்காதவருமல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் தானும் ஒரு சக்தியாக அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தே வந்திருக்கிறார். இதை அவர் மறைக்கவில்லை. அதன் தாக்கம் அவரது ரசிகர்களிடமும் இருப்பது இயல்புதானே!

யாருக்கும் கிடைக்காத மக்கள் ஆதரவு எனும் அரிய வரம் ரஜினிக்கு மட்டும்தான் தானாகத் தேடி வந்தது. மூப்பனார் எனும் நியாயமான மனிதர் ஆதரவும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் திமுகவுக்கு வாரி வழங்கியவர் நமது ரஜினிதான்.

ரஜினிக்கு அரசியல் விருப்பமே இல்லை என்று வாதாடுபவர்களுக்காகத்தான் இதையெல்லாம் இங்கே குறிப்பிடுகிறேன்.

இன்றும் கூட எந்த தொலைக்காட்சி அல்லது பத்திரிகைப் பேட்டியிலும், தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதில்ல. ரசிகர்கள் வீணாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். அவரவர் வேலையைப் பாருங்கள். படம் வந்தால் ரசித்துவிட்டுப் போங்கள், என்று ரஜினி நேரடியாக பொட்டிலடித்த மாதிரி சொல்லவில்லை.

குசேலன் ரிலீசுக்கு இரு வாரங்களுக்கு முன் கைரளி டிவிக்கு அளித்த பேட்டியில் தனது அரசியல் பிரவேசத்தைக் காலம் முடிவு செய்யும் என்றுதான் அவர் கூறியுள்ளார்.
எனவேதான் வெறும் சூப்பர் ஸ்டார் என்ற நிலையைத் தாண்டி அவரை தலைவர் என விளித்து மகிழ்கிறார்கள் ரசிகர்கள். இதில் எங்கே தவறு வந்துவிட்டது?

ரஜினியின் இந்த மனநிலைக்கு எதிராக ரசிகர்கள் அமைதி காத்திருந்தால், அது ரஜினியின் செல்வாக்கை அல்லவா கேள்விக் குறியாக்கியிருக்கும்? கிட்டத்தட்ட அவரை அவமானப்படுத்துவதற்குச் சமானமாகிவிடும்.

இன்னொன்று, எல்லா ரசிகர்களும், தொண்டர்களும் அமைதியாக நன்கு சிந்திப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகை புத்திசாலித்தனம் என்று புரியவில்லை!

ஒவ்வொருவர் பார்வையும் வேறு வேறு கோணத்தில்தான் இருக்கும். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதிலேயே ஆயிரம் பேர் ஆயிரம் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா... அப்படித்தான்.

தனக்குப் பிடித்த நாயகன் தலைமைப் பொறுப்புக்கு வந்து இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தன் கைக்காசை செலவழித்து போஸ்டர் அடிப்பவர்கள் மீது என்ன தவறு கண்டு விட்டார்கள் இவர்கள்?

இப்படி செலவழித்ததை திரும்ப எடுக்க வேண்டும் என்ற ஊழல் சிந்தனையோடேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அடிமட்ட ரசிகர்கள் கிடையாது, அனைத்தும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளும் அறிவு ஜீவிகளே!

இது ரஜினிக்கும் தெரியும். அதனால்தான் தன் ரசிகர்களிடம் அவர் கோபப்படுவதில்லை.
ரஜினியின் மன நிலை புரியாமல் ரசிகர்கள் அவரை நிர்பந்தப்படுத்துவதாக சிலர் விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் ரஜினியின் மனம் புரிந்துவிட்டதா என்ன... பிரதமரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ‘நான் அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தீர்மானிக்கட்டும்’ என்கிறார் ரஜினி.

இவர்களோ... ரஜினிக்கு அரசியல் பிடிக்காது. அவர் வழியில் அமைதியாக எளிமையாக வாழ்ந்து, விதவிதமாக ஸ்டைல் காட்டி தங்களை மகிழ்வித்து ரிட்டையர் ஆனால் போதும் என்கிறார்கள்.

இதை எடுத்துச் சொல்பவர்களுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ என்று பட்டம் வேறு...

ரொம்ப்ப கஷ்டம்யா...!

குறிப்பு: ரசிகர்கள் ஏன் ரஜினியை திரும்பத் திரும்ப அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் அடுத்த பதிவில்... சொல்லப் போனால் இதை எழுதியது மட்டும்தான் நான். கருத்து சொன்னவர்கள் திருவாளர் பொதுஜனம்!

Friday, September 5, 2008

உருவாகிறது ஒரு பரபரப்பு கவர் ஸ்டோரி!


‘ஏ... என்னப்பா... இந்த இஷ்யூவுக்கு என்ன போடப்போற... முன்ன கூட்டிச் சொல்லிடுய்யா... நானும் பார்த்துக்கிறேன். அப்புறம் நம்மைப் போட்டு ராவிடுவானுங்க..’
-இது தமிழகத்தின் பிரபலமான இரண்டு வாரமிருமுறைப் பத்திரிகை நிருபர்கள் தினசரி பேசிக் கொள்ளும் வழக்கமான வசனங்கள்.

சென்னை பெருநகரில் மட்டுமல்ல... ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அவர்களின் நிருபர்கள் இப்படித்தான் கூடிப் பேசி வாரமிருமுறை கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே விஷயத்தை தலைப்புச் செய்தியாகச் சொல்ல இரண்டு குழுமம் இரண்டு வித பத்திரிகைகளை நடத்துவானேன்..!

நாம் என்னமோ கற்பனையாக இங்கே எழுதுவதாக சிலர் இங்கே கமெண்ட் எழுதக் கூடும். உங்கள் பங்குக்கு நீங்களே கூட ஒருமுறை புலனறிந்து பாருங்கள், உண்மை புரிந்து அதிர்ந்து நிற்பீர்கள்.

இந்த வாரம் ரஜினிதான் டாபிக் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...
‘வீழும் மவுசு – அதிர்ச்சியில் ரஜினி’, என ஒரு அரைவேக்காடு எழுதியிருக்கும். அதே நாளில் வெளியான போட்டிப் பத்திரிகை எனக் கூறிக்கொள்ளும் நிகழ்காலக் குரலோ, ‘ரஜினியின் புகழ் இன்னும் ஒருபடி உயர்வு’ – என செய்தி வெளியிட்டிருப்பார்கள். அவர்கள் நோக்கம் பத்திரிகை தர்மமல்லா... கல்லாப் பெட்டி தர்மம்.

‘நான் அடிக்கிற மாதிரி அடிப்பேனாம், நீ தடவிக் கொடுப்பியாம். எப்படியோ ரெண்டு பேர் மேலேயும் பார்வை இருந்து கொண்டே இருக்குமல்லவா... அதுதான் பிழைக்கும் வழி. இதிலிருந்து மட்டும் மாறவே கூடாது’ - இந்த இரு குழுமங்களின் எடிட்டோரியல் விதி இதுதான்!


எக்ஸ்க்ளூசிவ் மேட்டர் என்று போஸ்டர், அட்டைப் படம், பத்திரிகை விளம்பரம் என எல்லா வழியிலும் இவர்கள பிரம்மாண்டப் படுத்துவார்கள். வாங்கிப் படித்துப் பார்த்தால், இருவருமே ஒரே விவகாரத்தைதான் எழுதியிருப்பார்கள், அதுவும் ஒரே மாதிரியாக! அப்போதுதானே உங்களைப் போன்று காசு கொடுத்துப் பத்திரிகை வாங்குபவர்கள் இவர்களின் பொய்யை உண்மையென்று நம்புவார்கள்.

சரி... ரஜினி விவகாரத்தில் மட்டும் ஏன் ஒருவர் எதிர்ப்பு, ஒருவர் ஆதரவு என்ற நிலையை எடுத்தார்கள். பத்திரிகை விற்பனைதான்.

இதே அழகிரி விவகாரமென்றால் இருவரும் ஒரே மாதிரிதான் எழுதியாக வேண்டும். இல்லாவிட்டால் சென்னைய விட்டே காலி செய்துகொண்டு ஓட வேண்டி வரும். ஆனால் ரஜினியைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், எந்த மாதிரி எழுதினாலும் இவர்கள் பத்திரிகை விற்கும்.

இனி இந்த சனியன்களை வாங்கவே கூடாது என சபதமேற்றவர்கள் கூட, காசு கொடுத்து அந்த இரு குழுமப் பத்திரிகைகளையும் வாங்கக் காரணம், ஏதாவது ஒரு வழியில் மீண்டும் மீண்டும் ரஜினி, ரஜினி படங்கள், சௌந்தர்யா, அல்லது இருக்கவே இருக்கிறது ரஜினி அரசியல் பிரவேச ‘எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை’... என போட்டுத் தாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

காரணம் வற்றாத செய்திச் சுரங்கம் ரஜினி!

இவர்கள் மட்டும் என்றில்லை... பிற வார, மாத செய்தி இதழ்களும் கூட வேறு யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையிலோ அல்லது அவர்களின் பொது வாழ்க்கை – நிர்வாகத் திறன் பற்றியோ எழுதத் திராணியற்றுக் கிடக்கின்றன. ஆனால் ரஜினி விவகாரம் என்று வந்துவிட்டால் மட்டும் தங்கள் அபார கற்பனைத் திறனைக் காட்டுகின்றன.

அரசு இலவச கலர் டிவி, இலவச நிலம், இலவச வீடுகள் என எல்லாம் பணக்காரர் வீடுகளில் தஞ்சமடைகின்றன. அல்லது கட்சிக்காரன் மட்டுமே அனுபவிக்க வசதியாகக் கொடுக்கப்படுகின்றன. இதை எழுத ஒரு பத்திரிகைக்கும் வக்கில்லை.

தொழில் வளர்ச்சி எனும் பெயரில் விளை நிலங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகின்றன. சென்னையைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு வயல்கள் கிடையாது. ஆங்காங்கே சின்னச் சின்னத் தீவுகள் மாதிரிதான் சொற்ப அளவில் விவசாய வயல்கள் தெரிகின்றன. இதைப் பெரிதாக எழுத ஒரு ஜோல்னா பையனுக்கும் துப்பில்லை.

இம்மாதிரித் தகவல் கிடைக்கும் போது இரு குழும நிருபர்களுமே ஒன்றாகப் போய்த்தான் லோக்கல் அரசியல் பிரபலங்களைப் பார்க்கிறார்கள். கனமான ‘கட்டோடு’ வீடு திரும்புகிறார்கள். பின்னர் விஷயம் கமுக்கமாகிவிடும்.

இதிலும் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் நேர்மையாய் இருந்து என்ன பலன், அந்த நிர்வாகங்கள்தான் ஏற்கெனவே அடிமாடுகளாகப் போய்விட்டனவே...

ஆனால் ரஜினி... வாய்ஸ் என்ற இரு வார்த்தைகள் இருந்தால் போதும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகின்றன எழுதுவதற்கு.

பிரபலமான ஒரு மனிதரைப் பற்றி எப்படி எழுதாமல் இருக்க முடியும்?
நியாயமான கேள்விதான். ஆனால் நியாயமாக எழுத வேண்டும் அல்லவா... மலிவான வியாபார நோக்கத்துக்காக, ரஜினி போன்ற நல்ல மனிதர்களின் இமேஜை சிதைக்கும் உரிமையை, அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது?

குறிப்பு: இந்தப் பதிவுக்கும், அடுத்து வரும் குமுதம் சர்வே குறித்த கட்டுரைக்கும் நீங்களாகவே முடிச்சுப் போட்டுக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!!

Sunday, August 24, 2008

காழ்ப்புணர்வன்றி வேறில்லை!


ரஜினி மீது மீண்டும் விஷம் கக்கியிருக்கிறது சன் டிவி, குசேலனுக்கு விமர்சனம் எனும் பெயரில்.

குசேலன் நல்ல கதையாம்... அருமையான நடிப்பாம். ஆனால் ரஜினிகாந்த் பகுதி மிகவும் செயற்கையாம். லாஜிக் இல்லாத மேஜிக் நடத்திக் காட்ட முயன்று தோற்றுப் போய் விட்டார்களாம்.

படம் வெளியாகி 25 நாட்கள் கழித்து சன் டிவி கண்டுபிடித்திருக்கும் மாபெரும் உண்மை இது. ஆனால் இதே விமர்சனத்தை சாக்காக வைத்து திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டி பல லட்சம் ரூபாயை விளம்பர வருவாயாக கல்லா கட்டினார்களே (25 விளம்பரங்கள். சன் டிவியில் ஒரு விளம்பரத்துக்கான கட்டணம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் - 10 நொடிகளுக்கு!) அப்போதி தெரியவில்லையா இந்த லாஜிக் இல்லா மேஜிக்.

இவர்கள் என்ன நோக்கில் அரை மணி நேர நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டினார்களோ... அதே லாஜிக்கில்தானே வாசுவும் இந்தப் படத்தை எடுத்திருப்பார்?

இந்த மாதிரி மூன்றாம் தர விமர்சனம் பார்த்த பிறகுதான், மக்கள் அந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என்ற நிலைமை ரஜினியின் எந்தப் படத்துக்கும் இல்லைதான்.

ஆனால் குசேலன் விஷயத்தில் மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு கடும் விஷத்தைக் கக்கி வருகிறது சன் நெட்வொர்க்.
ரஜினியின் விறுவிறு ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே விரும்பும் ரசிகர்களுக்கு குசேலன் திரைப்படம் ஏமாற்றமாக இருந்தாலும், அது ஒரு நல்ல படம் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

துப்பாக்கி குண்டு எதேச்சையாகப் பாய்ந்ததில் தொண்டையிலிருந்த கேன்சர் நீங்கிவிட்டது என்றும், 12-ம் நூற்றாண்டில் கடலில் போடப்பட்ட ரங்கநாதர் சிலை 10 நூற்றாண்டுகள் கழித்து ரங்கராஜன் நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க சுனாமியை உருவாக்கியது எனும் கேயாஸ் தியரி பகுத்தறிவையும் (பெரியார் இருந்திருந்தால் தாடியாலேயே தூக்கு மாட்டிக் கொண்டிருந்திருப்பார்.... என்னே பகுத்தறிவு!) சிலாகிக்கும் இந்த மோசடிக் கும்பலுக்கு, வாழ்வின் வலிகளையும், நட்பின் உன்னதத்தையும் சொல்லும் குசேலன் லாஜிக் இல்லாத படமாகத்தான் தெரியும்.

கலைஞர் டிவி ரூ.7 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கிவிட்ட குசேலனை இன்னும் எந்தெந்த வழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளிலும் தாக்கவே செய்யும் இந்த நச்சுக் கும்பல்.
என்ன கொடுமையென்றால்... இந்த நச்சுப் பிரச்சாரத்துக்கு அடிமையாகி ரஜினி ரசிகர்கள் சிலரும், குசேலனை நினைத்து வெறுத்துப்போய் உட்கார்ந்திருப்பதுதான்.

முன்பெல்லாம் மொத்த மீடியாவும் தங்கள் தனிப்பட்ட வெறுப்பை விட்டுவிட்டு வியாபாரத்துக்காக ரஜினி படங்களைக் கொண்டாடுவார்கள். ஞானி மாதிரி சிலர் கூனி வோலை செய்வார்கள். அதனால் அது பெரிதாகத் தெரியவில்லை. துரதிருஷ்டவசமாக இன்று பெரும்பாலும் மீடியாவை கூனிகளே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

ரஜினி நல்ல படம்தான் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைய மோசமான நச்சுத்தனம் மிக்க மீடியா உலகில், அவர்களுக்குரிய 'பங்கு' சரியாகப் போய் சேராததன் விளைவுதான் இந்த விமர்சனத் தாக்குதல்கள்.

மாநிலத்துக்கு மாநிலம் நாராயண கவுடாக்களும், வட்டாள் நாகராஜாக்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் வந்தாரை வாழ வைத்துக் கிழித்து விட்டோம் என்ற ஜம்பம் வேறே...‍!

இது ‘விகட’ துவேஷம்!


பத்திரிகைகளைத் திட்டுவதல்ல நமது நோக்கம். உலகத்தின் அழுக்குகையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட முயல்வதாகக் கூறிக்கொள்ளும் அவர்களின் உள்ளழுக்குகள் பற்றி அவ்வப்போது சுட்டிக் காட்டி நம்மைநாமே விழிப்பாக்கிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

கமர்ஷியல் – (போலி) அறிவு ஜீவித்தனம் இந்த இரண்டின் சரிவிகித கலவையாக்கும் நாங்கள் என மார்தட்டிக் கொள்ளும் விகடன் குழுமத்தில் உள்நீரோட்டம் போல மாறாமல் இருப்பது அவர்களின் கேவலமான ஜாதி வெறுப்புணர்வு!

வெளியிலிருந்து பார்க்கும் போதும், அவர்கள் தரும் அசைவ உணவுக் குறிப்புகள், தலித் இலக்கிய பீத்தல்களைப் படிக்கும்போதும், ‘என்னய்யா சொல்ற... அவங்க ரெம்ப்ப்ப நல்லவங்களாச்சே...’ என உங்களுக்கும் சொல்லத் தோன்றும்.

எரிகிற கொள்ளியில் இவர்கள் நல்ல கொள்ளிகள்...!
அப்படி வேண்டுமானால் சமாதானப்பட்டுக் கொள்ளுங்கள்.

ஆரம்ப நிலையில், திறமைகள் மொட்டவிழும் தருவாயில் உள்ள பலரையும் இவர்களின் குழுமப் பத்திரிகைகள் மட்டம் தட்டியே வந்திருக்கின்றன. அதே நபர்கள் மேலெழுந்து ஒரு சமூக அந்தஸ்தை எட்டிவிட்டால், அவர்களின் அறிவிக்கப்படாத பிஆர்ஓவாக செயல்படவும் துணிந்து விடும் மானமுள்ளவர்கள் இவர்கள்.

அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி சொல்லவில்லை. அண்ணாமலையில் அரசியல்வாதி ஒருவரை எதிர்த்துப் பேசினார். அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி சர்க்குலேஷனைப் பெருக்கி காசு பார்த்தனர்.

ரஜினி செய்தது சரியா என்று கேட்காதீர்கள்... அதை அலசும் தருணமும் இதுவல்ல.
அடுத்து இளையராஜா.

தமிழ் சினிமாவின் போக்கையே தலைகீழாக மாற்றிக் காட்டிய பெருமைக்குரியவர். அவரது அறிமுகப் படம் அன்னக்கிளி.

அன்னக்கிளி என்னும் படம் யாருக்காக ஓடியது என்று கேட்டால் இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தை கூடச் சொல்லவிடும்.

அந்தப் படம் தயாராகும் போது பஞ்சு அருணாச்சலத்துக்குப் பெயரே ‘பாதிப் படம் பஞ்சு’ என்பதுதான். அதாவது அவர் எடுக்கிற படம் பாதியிலேயே நின்றுவிடுமாம். அதனால் அப்படியொரு பெயர்.

ஆனால் கஷ்டப்பட்டு முழுசாகவே எடுத்து முடித்து திரையிட்டார் அன்னக்கிளியை. முதல் சில வாரங்கள் படம் படு சுமாராகத்தான் போனது. பல திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள்.

அப்போதுதான் கல்யாண வீடுகள், திருவிழா கோயில்களில் மச்சானைப் பாத்தீங்களா... எனும் தெம்மாங்குப் பாட்டு சக்கை போடு போடத் துவங்கியது. அடுத்த வாரமே படத்தின் தலைவிதி மாறிப்போனது. பிளாக் பஸ்டர்!

அந்தப் படத்துக்கு விகடன் எழுதியுள்ள விமர்சனத்தைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

‘இவ்வளவு கேவல எண்ணம் கொண்ட நீங்கள்தானா உங்களை தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்...?’ எனக் கேட்டுத் துப்பி விடுவீர்கள்.

அந்தப் படத்தின் விமர்சனத்தில் எங்குமே இளையராஜாவின் பெயரே கிடையாது. அட குறாந்தது.. 'இந்தப் படத்துக்கு இசை யாரோ ஒரு புது இசையமைப்பாளர் இளையராஜாவாம்', என்று கூடப் போடவில்லை.

நல்லவேளை இதற்கு ஆதாரம் தேடும் சிரமம் கூட வைக்காமல், அவர்களே மலரும் நினைவுகள் எனும் பெயரில் குட்டி இணைப்பு வெளியிட்டு ‘எங்கப்பன் குதிருக்குள்தான் இருக்கான்’ என்று உறுதிப்படுத்தி விட்டார்கள்.

அவர்கள் கவனக்குறைவுக்கு நன்றி!

ஆனால் இன்றைக்கு, இளையராஜாவுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ இந்தப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரும், அதோ பத்திரிகையின் ஒரு புகைப்படக்காரரும்தான்.
இவர்கள் சொல்லாமல் யாருக்கும் பேட்டி கூடத் தரமாட்டார் ராஜா என்ற அளவுக்கு அழுத்தமான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டாரகள். (தன்னை மனதளவில் ஒரு பிராமணராகவே இளையராஜா மாற்றிக் கொண்டதன் விளைவு இது என்றும் சொல்லலாம். அதுபற்றி வேறொரு சமயத்தில் பேசலாம்...!)

சிம்பனி, திருவாசகம் ஆரட்டோரியோவுக்கு இளையராஜா பணம் வாங்கினாரோ இல்லையோ... அந்த செய்தியை ஆவி, ஜூவிகளில் முடிந்தவரை தலைப்புச் செய்தியாக்கி நன்கு காசு பார்த்தவர்கள் இவர்கள்தான்.
இப்படி அவமானப்படுத்தி, பின்னர் இவர்களால் அரணைவனைக்கப்பட்ட கொண்ட மேதைகள் ஒருவரல்ல இருவரல்ல.. இன்னும் நிறைய.

வானத்தின் கீழே... அந்தப் பட்டியல் தொடரும்!

Saturday, August 23, 2008

சிங்கம் சிங்கிளாகவே ஜெயிக்கும்!


ஆம்... கடவுள் நிறைய சோதித்துப் பார்த்து கடைசியில் கைவிடாமல் ரஜினி என்ற நல்லவரைக் காப்பாற்றியிருக்கிறார். (ஆனாலும் இது ஒரு தற்காலிக காப்பாற்றல்தான். இன்னும் நிறைய சோதனைகள் காத்திருக்கின்றன. அதற்கு முன் ரஜினி செய்ய வேண்டிய காரியங்களும் நிறைய உள்ளன. அடுத்து வரும் பதிவுகளில் அவற்றைப் பார்க்கலாம்.)

பேராசை பிடித்த திரையரங்கு உரிமையாளர்களின் நச்சரிப்பு மற்றும் மீடியாக்களின் பொய்ப் பிரச்சாரங்களை முழுமையாக நிறுத்த ரஜினியே முன் வந்து திரையரங்கு உரிமையாளர்களின் பிரிதிநிதிகளைச் சந்தித்து ஒரு சமரசத் தீர்வு கண்டிருக்கிறார்.

திரையுலகின் பவர்புல் அமைப்புகள் என்று பீற்றிக்கொள்ளும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவு்சில், பிலிம் காட்டும் பிலிம் சேம்பர்... போன்ற அமைப்புகளின் தயவில்லாமல் தனியாகச் சாதித்திருக்கிறார் ரஜினி இம்முறையும். இந்த முயற்சியில் ஆரம்பத் தடைகள் இருந்தாலும் நாளை காலைக்குள் பிரச்சிநை முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ஆரம்பத்தில் வந்த செய்தி, அதன் பின்னர் ஏற்பட்ட திருப்பங்கள் ஆகியவற்றின் முழு வடிவத்தையும் அப்படியே தருகிறோம். அதற்கு முன் சில விஷயங்களில் ஒரு தெளிவு காண்பது நல்லது.

இனி விஜய், அஜீத், கமல் படங்களுக்கும் இதே சுறுசுறுப்பைக் காட்டுவார்களா தியேட்டர்காரர்கள்.... (மும்பை எக்ஸ்பிரசுக்கு என்ன கணக்கு?)

விஜயகாந்தின் 7 படங்கள் வரிசையாகத் தோல்விப் படங்களே... இந்த நஷ்டம் எப்படி ஈடுகட்டப்பட்டது என்ற பேருண்மையைச் சொல்வார்களா...

வெற்றிப் படங்களுக்கு பதில் வெற்றுப் படங்களை மட்டுமே தந்து கொண்டிருக்கும் சரத்குமாரின் படங்களை திரையிடும் போதும் இந்த நடைமுறை தொடருமா...

மேலே நாம் கூறிய அத்தனை நடிகர்களின் தோல்விப் பட நஷ்டங்களையும் ஈடு கட்டியவை ரஜினியின் படங்கள்தான். இன்று அவர் படத்துக்கே பொய்க் கணக்கு காட்டி நஷ்ட ஈடு கேட்டு மிரட்டிப் பார்க்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

எல்லாம் நேரம்தான்...

இனி அந்த செய்தியின் ஒரு பகுதி- (From thatstamil.com)

குசேலன் விவகாரம் – சுமூகமாக முடித்து வைத்த ரஜினி!!

ஒரு வழியாக குசேலன் பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. குசேலன் படத்தின் நாயகன் ரஜினியே முன் நின்று இந்த நஷ்ட விவகாரத்தில் சுமுகமான தீர்வு கண்டு, திரையரங்க உரிமையாளர்களையும் திருப்தியோடு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனாலும் சிலரது அதிருப்தி முணுமுணுப்புகள் ஓய்ந்தபாடில்லை...!

இந்தப் படத்தைத் திரையிட்ட பிரமிட் சாய்மிரா நிறுவன திரையரங்குகள் தவிர, மற்ற திரையரங்குகளின் உரிமையாளர்கள் தாங்கள் செலுத்திய மினிமம் கேரண்டி தொகையை எடுக்க முடியாமல் நஷ்டத்துக்கு உள்ளானதாகக் குரல் எழுப்பினர்.

படம் வெளியாகி 23 நாட்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், படம் ஓட அவகாசம் தராமல், மக்களைப் படம் பார்க்க வரவிடாமல் தடுக்கும் வகையில் தியரையரங்க உரிமையாளர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

பதிலுக்கு, இந்த தயாரிப்பாளர்களுக்கு எதிர்வரும் நாட்களில் ஒத்துழைக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் சென்னையில் திரண்ட இவர்கள் அனைவரும், தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினிகாந்த் உதவ வேண்டும் எனக் கோரினர்.

நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தங்களுக்கு 70 சதவிகித மினிமம் கியாரண்டி தொகையைத் திரும்பத் தரவேண்டும் எனக் கோரினர்.

இறுதியில் பிரமிட் சாய்மிரா அல்லாத திரையரங்குகளுக்கு மட்டும் விற்கப்பட்ட தொகையைக் கணக்கிட்டு, அவர்களிடம் பெற்ற மினிமம் கியாரண்டி தொகையில் 33 சதவிகிதம் வரை அதாவது 7 கோடி ரூபாய் வரை திருப்பித் தர ஏற்பாடு செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். அதை பன்னீர்செல்வம் தலைமையிலான திரையரங்கு உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தனர்.

இந்தத் தொகையை ரஜினிகாந்த் செலுத்த வேண்டியதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமிட் சாய்மிராவிடமிருந்து வாங்கிக் கொடுத்தால் போதும் என்றும் இந்தப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆனால் பாலச்சந்தரிடம் எக்காரணம் கொண்டும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தானே அந்தப் பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் ரஜினி கூறியதாக திரையரங்க உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தற்போது பிரமிட் சாய்மிரா மற்றும் ஜிபி விஜயகுமார் இருவரும் இந்தத் தொகையில் ஒரு பகுதியைத் தர முன்வந்துள்ளனர். இதைத்தவிர பிரமிட் சாயம்மிராவின் சரோஜா படத்தையும் குறைந்த விலையில் தர ஒப்புக் கொண்டுள்ளார்களாம். நஷ்ட ஈடு வேண்டாதவர்களுக்கு மட்டும் சரோஜாவை முழுவதும் இலவசமாகத் தருவதாகத் திட்டம்.

ஒரு பிரிவினர் எதிர்ப்பு:

மேற்கண்ட செய்தி வெளியான சிலமணி நேரங்களில், மீண்டும் ஒரு கும்பல் பிரஸ் மீட் என்ற பெயரில் நடத்திய நாடகம் பற்றிய குறிப்பு இது.

ரஜினியின் சமரச முயற்சியை அவர் எதிரில் ஒப்புக் கொண்டுவிட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல நேர்மையற்ற முறையில் நடக்க ஆரம்பித்து விட்டனர் சில தியேட்டர்காரர்கள்.

இவர்களில் 25 பேர் மட்டும் சமரசத் தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளனர்.

தங்களுக்கு 75 சதவிகித தொகை வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்த 75 சதவிகிதம் 80 ஆகிவிட்டது (சன் குழும கைங்கர்யம்?)

இப்படிப் பார்த்தால், ஒரு பைசா கூட வசூலாகவில்லை. மொத்த பணத்தையும் கொடுங்கள் என்கிறார்களா... அப்படியெனில் தியேட்டர்களில் முதல் வாரம் முழுக்க நாம் பார்த்தது ஆட்டு மந்தைக் கூட்டமா.. யாரும் காசு கொடுத்து டிக்கெட்டே வாங்கவில்லையா...

அடப் பாவிகளா... ரஜினி இந்த கொள்ளைக் கும்பலை அழைத்துப் பேசியதுதான் தவறு.

இந்த நிலை குறித்து கலைப்புலி சேகரன் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து, தான் ஒரு சிறந்த மனிதன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினி.

ஆனால் இதையும் ஒப்புக்கொள்ளாமல் பிரச்சினை செய்தால், மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் தரப்பில் ரஜினிக்கு ஆதரவு தொடரும் என விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன் தெரிவித்துள்ளார்.

ஒரு சதி உருவாகிறது!!


இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் நம் உதடுகள் முணுமுணுக்கும் வார்த்தை... அட கேவலமே...!

செய்யும் தொழிலுக்கு இதைவிட ஒரு கேவலத்தை வேறு எந்தப் பத்திரிகையாலும் ஏற்படுத்த முடியாது.

இந்தப் புகைப்படம் தினகரனில் மட்டும் நேற்று வெளிவந்தது.

இந்தப் புகைப்படத்தில் போஸ் கொடுப்பவர்கள் ஆந்திராவிலிருந்து வந்த (வரவழைக்கப்பட்ட?) சில வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டார்கள்.

ஆந்திராவின் மேற்கு மாவட்டங்களில் குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடுவை வெளியிட்டவர்களாம். இப்போது நஷ்டமாகிவிட்டதாம். எனவே குசேலன் நஷ்டத்தை ஈடு செய்யாவிட்டால் ரஜினியை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதமிருப்பதாக அறிவித்திருக்கிறார்களாம்.

அட அதைக்கூட விடுங்கள்... ஏதோ சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிவிட்டார்கள்...

சென்னைக்கு இவர்கள் எதற்கு வந்தார்கள்...? குசேலன் உண்மை நிலையை விசாரித்துவிட்டுச் செல்ல. ஆனால் இங்குள்ள சிலரோ, சும்மா பார்த்துட்டுப் போனா எப்படிய்யா... போய் குசேலனுக்கு எதிரா உண்ணாவிரதம்னு போஸ் குடு... தானாவே மேட்டர் பெரிசாயிடும். போங்கய்யா, துணையா நாங்க இருக்கோம், என ஏத்திவிட, அவர்களும் அந்த விடுதியின் ஒரு அறையில் உட்கார்ந்து குசேலனுக்கு எதிராக போஸ் கொடுத்தனர்.

அப்போதுதான் அந்தப் பத்திரிகையின் புகைப்பாடக்காரர் ஒருவர், ரெட்டி சார், சும்மா உக்காராதீங்க. அந்த காதாநாயகுடு பேனரோடு உட்காருங்க எனச் சொல்ல அவர்கள் திகைத்திருக்கிறார்கள். திடீரென பேனருக்கு எங்கே போவார்கள்!

ஆனால் எல்லா பொய்களையும் அக்மார்க் உண்மை போலவே காட்டும் பவர்புல் மீடியாவை மொத்தமாக வைத்திருப்பவர்கள் ஆயிற்றே... இப்படி ஒரு பேனர் தயாரிப்பதா அவர்களுக்குக் கஷ்டம்!

இரு தினங்களுக்கு முன்பே பக்காவாக ஏற்பாடு செய்து வைத்திருந்த ஒரு பேனரை அவசர அவசரமாகக் கொண்டுபோய், அங்கிருந்தவர்களில் இருவரை ஆளுக்கொருபக்கம் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, வேண்டிய மட்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் இவர்கள் பத்திரிகையில் மட்டும் வருகிறது... இந்தச் செய்தியும் படமும்.

“குசேலனுக்கு எதிராக தெலுங்கு திரையரங்க உரிமையாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!”
-எக்ஸ்க்ளூசிவாம்!

உண்மையாகவே உண்ணாவிரதமிருக்கப் போவதாகக் கூறினீர்களா என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டால், லேது லேது.... என்று மறுத்தவர்கள், இவர்களின் மீடியா பயங்கரவாதத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியது முதல், பத்திரிகைகளுக்கு வீராவேசமாய் பேட்டி கொடுத்தது வரை எதுவும் எங்கள் சொந்தக் கருத்தில்லை. இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தவர்கள் அந்த நம்பர் ஒன் நாளிதழ் நடத்துபவர்கள்தான், என்கின்றனர் ஆந்திரப் பார்ட்டிகள்.

தினகரனில் வெளியான இந்தப் படத்தின் நிஜப் பின்னணியும், குசேலன் ரிலீசிலிருந்து இன்று வரை, இந்த குறிப்பிட்ட நாளிதழில் மட்டும் ரஜினிக்கு எதிராக வெளியாகும் திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் நிஜமான பின்னணி யார் என்பது புரிகிறதா...

அண்ணாமலையில் ரஜினி இப்படிச் சொல்வார்:

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஏன்யா இந்த புனிதமான அரசியலைக் (பத்திரிகைத் தொழிலை) கெடுக்கறீங்க...,
என்பார்.
எத்தனை சத்தியமான வார்த்தைகள்! இந்த சதிப் பேர்வழிகளுக்காகவே எழுதப்பட்ட மாதிரியல்லவா இருக்கின்றன!

இதே தினகரன் வளர்ந்த விதத்தை நினைத்துப் பாருங்கள்...

திமுக துணையின்றி, மதிமுக ஆதரவுமின்றி தவித்த 90களின் மத்தியில், ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் இந்தப் பத்திரிகையை உயிரோடு வைத்திருக்க பெரிதும் உதவியது.

எங்கோ ஒரு குக்கிராமத்தலிருக்கும் ரஜினி ரசிகன் ஒரு சின்ன தகவல் சொன்னால்கூடப் போதும், தினகரனில் கட்டம் கட்டிப் போடுவார்கள்.

அந்த தினகரன் செய்திருக்கும் வேலையா இது!

அட கேவலமே...!