Wednesday, October 22, 2008

‘தலைவா உன்னை நேரில் பார்க்கணும்!'


நான் அரசியலுக்கு வரும்போது வருகிறேன். நீங்கள் அதுவரை உங்கள் வேலையைப் பாருங்கள் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் நிலைப்பாடு.

ஆனால் தங்கள் தலைவர் அரசியலில் ஈடுபட வேண்டும், அதுவும் இப்போதே நடக்க வேண்டும் என்பது தொண்டர்களாக மாறத் துடிக்கும் ஏராளமான ரசிகர்களின் விருப்பம்.

அதன் விளைவு, ரஜினி அறிக்கை வெளியிட்ட பின்னரும் அவரை அரசியலுக்கு அழைத்து கடிதங்களையும் தந்திகளையும் அவருக்கு ஏராளமாய் அனுப்பி வருகிறார்கள்.

இவற்றில் ரசிகர்கள் குறிப்பிட்டுப்பது இரண்டே விஷயங்கள்தான்:

தலைவா... உன்னை நேரில் பாக்கணும்!

சீக்கிரம் கட்சி ஆரம்பிச்சு, இந்த அரசியல்வாதிகளிடமிருந்து எங்களைக் காப்பாத்துங்க!

ரசிகர்களின் இந்தக் குரலுக்கு ஓரளவு பலன் கிடைத்த மாதிரிதான்.

இவர்களின் இரு கோரிக்கைகளின் முதலாவதை இன்னும் சில தினங்களில் ரஜினி நிறைவேற்றப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வரவிருப்பதாக ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பத்திரிகை மற்றும் இணைய தளங்களில் இத்தகைய செய்திகளைப் பார்த்த உடனே அதையே நிஜமென்று நம்பி ரகசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்துவிடுகிறார்களாம். இதனால் அவர்களுக்கும் கஷ்டம், சாருக்கும் தேவையற்ற சங்கடம். அவர் சொன்ன பிறகு வந்தால் போதுமே, என்கிறார்கள் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

http://www.envazhi.com

No comments: