Showing posts with label shooting. Show all posts
Showing posts with label shooting. Show all posts

Wednesday, November 12, 2008

திட்டமிட்டபடி எந்திரன் 3-வது கட்ட படப்பிடிப்பு துவக்கம்!

ந்திரன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி குல்லு – மணாலியில் அடுத்த சில தினங்களில் தொடங்குகிறது.

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எந்திரன் படப்பிடிப்பின் அடுத்த கட்டம் எப்போது துவங்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி ஏற்கெனவே அறிவித்திருந்தார். வரும் நவம்பர் 16-ம் தேதி குல்லு மணாலியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதாக அவர் ரசிகர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் நிதி நெருக்கடி மற்றும் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக மீடியாவில் செய்தி பரவியது.
உடனே, எந்திரன் படத்துக்கும் நிதி நெருக்கடி எழுந்துள்ளதாக சில இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

உண்மை நிலவரம் என்ன?

ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியான விஜய்குமாரைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தோம்.

அவர் கூறியதாவது:

என்ன ஒரு மோசமான கற்பனை பாருங்கள்... சூப்பர் ஸ்டாரின் எந்திரன் உலகளாவிய படம். இந்தியாவின் திரையுலக சாதனையாக சர்வதேச அளவில் பேசப்படப்போகும் படம்.

அதன் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் எந்த சுணக்கமும் நேராமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த சிரத்தையுடன் ஏற்பாடு செய்து வருகிறோம்.

இந்த நிலையில் இப்படி ஒரு செய்தியா... வதந்திகள் பற்றிக் கவலை வேண்டாம். எந்திரன் தொடர்பான அனைத்தும் திட்டமிட்டபடி மிகச் சரியாக நடக்கும்... என்றார்.

http://www.envazhi.com

Friday, October 10, 2008

'எந்திரன்' போட்ட ஆட்டோகிராஃப்...!


எந்திரன் கோவா படப்பிடிப்புக் காட்சிகள் தொடர்பான மேலும் சில புகைப் படங்களை நண்பர் அனுப்பியிருந்தார். இங்கே நீங்கள் பார்ப்பது அவற்றைத்தான்.

எந்திரன் படப்பிடிப்பு நடக்கும் ஒரு ரிசார்ட் வளாகத்தில், படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினி ஓய்வாக அமர்ந்திருக்கும் காட்சி இது.

ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் ஆடிப்பாடும் காதல் காட்சி படமாக்கப்படுவதையும் தனது கேமராவில் கிளிக்கித் தந்துள்ளார் அந்த நண்பர்.

இன்னும் அதிக படங்களைப் பார்க்க விரும்புவோர், www.paddu.in என்ற இணைய தளத்துக்குப் போகவும்.

ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் கோவாவுக்கே போய், ஷூட்டிங்கிலிருந்த ரஜினியைப் பார்த்ததுடன், படப்பிடிப்பில் ரஜினியைச் சுற்றி நிகழ்ந்தவைகளை படம் எடுத்து, அவற்றில் 78 ஸ்டில்களை தனது இந்த வலைப்பூவிலும் பதிந்துள்ளார். கூடவே ரஜினியிடம் ஆட்டோகிராப்பும் வாங்கியுள்ளார்.

படப்பிடிப்பு இடைவேளையில் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அடம் பிடித்தவர்களைச் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பிய ரஜினி, அவர்களின் மனம் சங்கடப்படக் கூடாதே என மீண்டும் அழைத்து ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்ததும் நடந்துள்ளது.

கோவாவுக்கு வரும் பல வெளிநாட்டுப் பயணிகளும் ரஜினியைப் பற்றிக் கேள்விப்பட்டு, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்துவிடுகிறார்களாம்.

படப்பிடிப்புக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வேடிக்கைப் பார்க்கும் இந்த வெள்ளைக்கார ரசிகர்கள் ரஜினியைப் பார்த்த பிறகுதான் அந்த இடத்தை விட்டே நகர்கிறார்களாம்.

கோவாவின் பனாஜி பகுதிக்கே ரஜினியால் ஒரு தனி களை வந்திருக்கிறது என அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் ககெண்ட் அடிப்பதாகத் தெரிவிக்கிறார் பிரபல ஆங்கில நாளிதழின் கோவா நிருபர் ஒருவர்.

பின்னே... அவர் சும்மா ஸ்டாரா... சூப்பர் ஸ்டாராச்சே!
http://www.envazhi.com

Thursday, September 4, 2008

இயந்திரன் ஆனது ரோபோ!


சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து ஷங்கரின் நடிக்கவிருந்த ரோபோபடத்தின் பெயர் இயந்திரன் - தி ரோபோ என மாற்றப்பட்டுள்ளது.

இதோ அதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி:

இந்தியாவின் ஷோமேன் எனப் புகழப்படும் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படமான ரோபோவுக்கு, இயந்திரன் – தி ரோபோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிவாஜிக்கு அடுத்து ரஜினிகாந்த்தும் ஷங்கரும் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்யப் போவதாக அறிவித்தனர். அதற்கு ரோபோ என்று தலைப்பும் சூட்டினர். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும், தமிழின் முதல் பிரமாண்ட விஞ்ஞானப் படம் இது.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் (சுமார் ரூ.140 கோடி) அய்ங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உருவாக்கும் இந்தப் படத்துக்கு பொருத்தமான தமிழ் தலைப்பு சூட்டப்படும் என ரஜினி முன்பு அறிவித்திருந்தார்.

தமிழில் பெயர் வைத்தால் கிடைக்கும் வரிச் சலுகைக்காக இந்தப் பெயர் மாற்றம் இல்லை என்றும், தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என தமிழக அரசின் விருப்பத்தை மதிக்கும் வகையில் இப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் ரஜினி ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இயந்திரா என்ற பெயர் முதலில் பரிசீலிக்கப்பட்டது. பின்னர் இயந்திரன் என மாற்றப்பட்டது. ஆனால் இதில் ரஜினிக்கு அவ்வளவாக திருப்தி இல்லையாம்.
கடைசியில் அவரது யோசனைப்படி இயந்திரன் – தி ரோபோ என இந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 3 போட்டோ செஷன்கள் முடிந்து விட்டன. கடந்த வாரம் அமெரிக்காவில் ஹாலிவுட் ஸ்டுடியோவில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாளை மறுதினம் முழு வீச்சில் பிரேஸ்ல் நாட்டில் படப்பிடிப்புத் துவங்குகிறது.

ஏற்கெனவே ரோபோ படப்பிடிப்புக்காக ஷங்கருடைய ஒரு குழு பிரேஸிலில் முகாமிட்டுள்ளது.
ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் நாளை புறப்படுகின்றனர். படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் நேராக பிரேஸிலுக்கு 7-ம் தேதி வந்து விடுவார் எனக் கூறப்படுகிறது.

நன்றி- தட்ஸ்தமிழ், எஸ்சினிமா