Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

Saturday, December 20, 2008

300 பக்கங்களை ஒரே மூச்சில் படித்த எந்திரன்!


விஞ்ஞானியான ரஜினி, தன் அரிய கண்டுபிடிப்பால் எந்திரனை உருவாக்குகிறார். அந்த எந்திரன் தோற்றத்தில் இன்னொரு ரஜினியாக இருக்கிறது. மொழியைப் படிக்கவும், பேசவும் மற்ற மனிதர்களைப் போலவே இயங்கக்கூடிய விதத்தில் பார்வைக்கு மனிதனைப் போலவே தோற்றமளித்தாலும் அந்த எந்திரனுக்குள், கம்ப்யூட்டர் மூளை செயல்படுவதால்... மனித சக்திக்கு அப்பாற்பட்ட அரிய சக்திகள் பலவும் எந்திரனுக்கு இருக்கின்றன.

எந்திரனின் தோற்றம் மற்ற மனிதர்களுடன் ஒத்திருக்கிறதா, இல்லையா என்பதை சோதித்துப் பார்க்க விரும்பும் விஞ்ஞானி, அதைக் கூட்டிக் கொண்டு தான் வழக்கமாக முடி திருத்திக் கொள்ளும் சலூனுக்குப் போகிறார்.

உள்ளே போனதும், அங்கிருக்கும் முடி திருத்தும் கலைஞர்கள் எல்லோரும் ரஜினியுடன் இன்னொரு ரஜினியும் வருவதாப் பார்த்து அதிசயப்படுகிறார்கள். அதில் ஒருவர் விஞ்ஞானி ரஜினியிடம், ‘யார் இவர்... உங்களைப் போலவே இருக்காரே?’ என்று கேட்க, அதற்கு, இவர் என்கூட பிறந்தவர்...!” என்கிறார் விஞ்ஞானி ரஜினி.

கூடப் பிறந்தவன்னா, ‘இதுவரைக்கும் இவரை இங்கு கூட்டிக்கிட்டே வந்ததில்லையே...!” என்று பதிலுக்கு அவர் கேட்க, “இவர் நேத்துதானே பிறந்தார்...!!” என்று ரஜினி பதில் சொல்லி, பிறகு சமாளிக்கிறாராம்.

சலூனில், உட்கார்ந்து கொண்டிருக்கும் வேளையில், எந்திரன் ரஜினி படிக்க புத்தகம் கேட்க, அவரிடம் கொடுக்கப்படும் புத்தகங்கள் அத்தனையையும் உடனுக்குடன் படித்துக் கொடுத்துவிட்டு, வேறு புத்தகம் கேட்பாராம் எந்திரன் ரஜினி.

இந்த தொல்லை தாங்காத சலூன்காரர், 300 பக்கங்களுக்கு மேல் உள்ள ஒரு புத்தகத்தைக் கொடுக்க, அதையும் சில நிமிடங்களில் மண்டையில் ஏற்றிக் கொள்வாராம் எந்திரன்.

எதையும் படிக்காமல், சும்மா ஒப்புக்குத்தான் அவர் விளையாடுகிறார் என்று நினைத்த சலூன்காரர், எந்திரனிடம், அந்தப் புத்தகத்தில் அவர் படித்ததைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, இன்ன புத்தக்த்தில் இத்தனாம் பக்கத்தில் இந்த விஷயம் எழுதப்பட்டிருக்கிறது என்று, இதுவரை படித்ததையெல்லாம் எந்திரன் புட்டுப்புட்டு வைக்க, அதிர்ச்சியில் மயக்கம் போடாத குறையாக அங்கிருந்து விரைகிறாராம் சலூன்காரர்... நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருப்பார் இது அத்தனைக்கும் காரணகர்த்தாவான விஞ்ஞானி ரஜினி.

-இது எந்திரனில் இடம்பெறும் ஒரு காட்சி.

இதை நாம் லீக் செய்யவில்லை. எந்திரன் தயாரிப்பாளர்களே வெளியிட்டிருக்கும் காட்சி மற்றும் படங்கள் இவை. வெளிவந்த இதழ் குங்குமம்!!

அதைவிடுங்க...

இந்தக் காட்சியை ரஜினி எப்படிச் செய்திருப்பார்... அதுவும் இரண்டு ரஜினிகளும் ஒரே காட்சியில் தோன்றுவது நிஜமாகவே சுவாரஸ்யமான காட்சியமைப்புதான்.

ஒரு சாம்பிளுக்கே இப்படியென்றால்... இன்னும் படம் பற்றிக் கேட்க வேண்டுமா...!

எந்திரன்... சன்... சில பார்வைகள்!

ந்திரனை சன் குழுமம் வாங்கிவிட்டது!

இந்தச் செய்திக்கு எழுந்துள்ள எதிர்வினைகளைப் பாருங்கள்...

ரஜினி சன் நிறுவனத்திடம் பணிந்துவிட்டார்.... சன் குழுமமும் அதன் பத்திரிகைகளும் இனி ரஜினிக்கு ஜால்ரா அடித்து சம்பாதிக்கப் போகின்றன... சன் குழுமத்தைத் திட்டிய நீங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள்?

இந்த மூன்று கேள்விகளுக்குமே இனி அர்த்தமில்லை.

காரணம் இந்த ஒப்பந்தத்தை முன்நின்று முடித்துக் கொடுத்துள்ளவர் ரஜினி. அவரே இதைப் பற்றிக் கவலைப்படாத போது, வேறு யார் அதுபற்றி விசனப்படுவதும் அபத்தம்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒரு முக்கிய பிரமுகரின் விளக்கத்தைத் தரவிருக்கிறேன், அவர் அனுமதி கிடைத்தபிறகு.

ரஜினிக்கு தெரியாததையா ரசிகர்கள், ஆதரவாளர்கள் எனும் பெயரில் நீங்கள் சொல்லப் போகிறீர்கள்!

ரசிகர்கள் வருத்தப்படுவதற்கு இதில் ஒன்றுமே இல்லை. மேலே நாம் குறிப்பிட்ட இந்தக் கேள்விகள் ரஜினிக்குள் எழுந்திருக்காதா... அல்லது இவற்றைப் பற்றி யோசிக்காமலா ரஜினி கலாநிதி மாறன் வீட்டுக்குப் போயிருப்பார்!

நாம் ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயம் பற்றி தெளிவாகக் கூறியிருக்கிறோம்.
ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அவரது மிகச் சிறந்த நடிப்பை, ஸ்டைலை, நகைச்சுவையை, அதிர வைக்கும் ஸ்டன்ட் காட்சிகளைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் மட்டும்தான் ஒரு நல்ல ரசிகனுக்கு இருக்க வேண்டும்.

இதைத்தான் ரஜினியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் எல்லை தாண்டாமல், ரஜினி என்ற நடிகருக்கான ரசிகர்களாக இருங்கள் என்பதுதான் அவர் கொள்கை. அவர் அரசியலுக்கு வெளிப்படையாக வரும்போது தொண்டர்களாக மாறிக் கொள்ளுங்கள்...

அதைவிட்டுவிட்டு, அவர் எப்படி இதில் கையெழுத்திட்டார்... அப்போது யார் யாரெல்லாம் கூட இருந்தார்கள். ரஜினிக்கு இதில் எவ்வளவு பங்கு... அது மொத்தத்துக்கும் வரி கட்டினாரா... இதில் அவர் குடும்பத்தாருக்கு திருப்தியா...கலாநிதி மாறனுடன் கைதட்டி சிரித்துக் கொண்டிருக்கிறாரே அது ஏன்?

-இப்படியெல்லாம் தோண்டித் துருவிக் கொண்டிருப்பது ஒரு ரசிகனின் வேலையல்ல... அந்த உரிமையை அவர் மீடியா உள்பட யாருக்கும் தந்துவிடவில்லை. இவை ரசிகன் என்ற போர்வையில் சிலர் செய்யும் அதிகப்பிரசங்கித்தனங்கள்.

அடுத்து சன் குழுமம் குசேலனுக்கு செய்ததை மறந்துவிட்டாரா ரஜினி?

ஒருமுறை நடிகர் அஜீத் இப்படிக் குறிப்பிட்டார்:

“ரஜினி சார் மாதிரி எதையும் தொலைநோக்குப் பார்வையோட, ரசிகர்களை மட்டுமே மனசுல வச்சிக்கிட்டு முடிவு எடுக்கும் பக்குவம் நமக்கில்லை.

அவர் என்னிடம் சில நகைச்சுவை நடிகர்களைக் குறிப்பிட்டு, அவங்கெல்லாம் எனக்கு எதிரா என்னென்ன பேசினாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனால் நமக்கு ரசிகர்கள்தான் முக்கியம். அவங்க ஏமாந்துடக் கூடாது. இவர் நம்மாகூட சேர்ந்து காமெடி பண்ணியிருந்தா நல்லாருக்குமே என பேச வச்சிடக் கூடாது. அதுக்காகத்தான், நானே சிலரை அழைத்து என் படத்தில் நடிக்க வச்சேன். நீங்களும் இதை மனசுல வச்சிக்கிட்டு, எந்த காமெடியன் கூடவும் பிரச்சினை வச்சிக்காதீங்க... எல்லார் கூடவும் சேர்ந்து நடிங்க...” என்றார்.

இதுதான் ரஜினியின் மனது. எல்லாருக்கும் பொதுவான, ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றையே அவர் செய்கிறார்.

தனது லட்சியப் படமான பாபாவுக்கு எதிராக ராமதாஸ் செய்ததையே மறந்து, மீண்டும் ராமதாஸ் மற்றும் அவர் மகனிடம் நட்பு பாராட்டியவர் ரஜினி. யோசித்துப் பாருங்கள்... ராமதாஸ் பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் பாபா எத்தகைய படமாக திகழ்ந்திருக்கும் என்பதை!

அடுத்து குசேலன் விவகாரம்... அந்த விவகாரத்தில் சன் நடந்து கொண்டது தவறு என்று எழுதிய நாம், என்ன விரும்பினோம்? சன் குழுமம் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றுதானே... இதோ இப்போது அவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டே தீர வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ரஜினியின் புகழைப் பரப்பும் வலுவான மீடியாவாக சன், தினகரன் மாறும்போது அதில் ரசிகர்கள் கஷ்டப்பட என்ன இருக்கிறது...

இன்னொன்று இந்த முடிவை யாரோ ஒருவர் வந்து திணிக்கவில்லை... இது ரஜினி எடுத்த முடிவு... அந்தப் படத்துக்கு எது நல்லதோ அதை ரஜினி செய்திருக்கிறார்.

சன்-தினகரன் குழுமத்தை அவரே ஏற்றுக் கொண்ட பின், மேற்கொண்டு அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. அப்படியே இருந்தாலும், இந்த நேரத்தில் தன் சார்பாக பதில் சொல்லுங்கள் என்று ரஜினி யாருக்கும் உத்தரவிடவில்லை!

ஒரு பிரச்சினையின்போது பொதுவாக நியாயத்தைச் சொல்வது இயல்புதான். குசேலன் பிரச்சினையில் மீடியா செய்த தவறை அப்படித்தான் நாம் சுட்டிக் காட்டினோம்.
ஆனால் ஒரு வர்த்தகத்தின் இடையில் புகுந்து அதே நியாயத்தைப் பேச முடியாது.
இந்தியாவின் மிகச் சிறந்த படமாக, உலகத் தரத்தில் தயாராகும் எந்திரன் சிறப்பாக வரவேண்டும் என அவர் விரும்புகிறார்.

சிவாஜிக்கு கெட்ட பெயர் வந்த போதும் கைகட்டி நின்ற ஏவிஎம், குசேலனைக் கூறு போட்ட போது வாயில் ப்ளாஸ்டரோடு திரிந்த கவிதாலயம்... இவர்களோடு இப்போதும் ரஜினி நட்பு பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார். சொல்லமுடியாது, மீ்ண்டும் கூட நடித்துக் கொடுப்பார். இவர்கள் மாதிரி சன் இருக்காது என்று ஆற்றுதல் பட்டுக் கொள்ளுங்கள்.

படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கிய அவர்கள் நிச்சயம் கல்லா கட்டத்தான் செய்வார்கள். அதற்குத்தானே இவ்வளவு முதலீடு... இதற்கு முன் பாட்ஷா, சந்திரமுகி பரடத்தைப் போட்டு கல்லா கட்டும்போது இருந்த உரிமையை விட இப்போது அவர்களுக்கு அதிக உரிமை வந்திருக்கிறது.

எந்திரன் குறித்து சன்-தினகரன் இனி வெளியிடுவது முற்றிலும் அதிகாரப்பூர்வ செய்தியாகவே இருக்கும். எனவே இப்போதைக்கு ரஜினி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் ஒரே ஆதாரம் சன் குழும மீடியாதான்.

இந்தப் படத்தை ரஜினியே தயாரிதிருக்கலாமே... அவரிடம் இல்லாத பணமா? என்றும் சிலர் கேட்கிறார்கள்.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார்: “எழுதறவன், எந்தக் கவலையும் இல்லாம எழுதிக்கிட்டே இருக்கணும். கரன்சி நோட்டை கையில எடுத்து கணக்கு வழக்குல இறங்கினா அப்புறம் எழுத்துல உள்ள சுவாரஸ்யம் போய்டும்... அதுக்கு நாட்டுல இருக்கு நிறைய உதாரணங்கள்....”

இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நிஜ காரணம் அவரே சொன்னாலன்றி யாருக்கும் தெரியாது. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்... படம் வரும் வரை அதுகுறித்த செய்திகளை என்ஜாய் பண்ணுங்க என்று அவரே நினைக்கும்போது, நாம் எதற்கு அதுபற்றி விவாதிக்க வேண்டும்!

ரஜினி ஆதரவு தளங்களின் நிலை என்ன?

இதில் பெரிய நிலைப்பாடு எடுக்கும் அவசியம் எதுவுமில்லை. சன் குழுமம் எந்திரன் தயாரிப்பாளர். எனவே ரஜினி குறித்த அவர்கள் பார்வை அடியோடு மாறியிருக்கிறது. நேரம் வரும்போது மீண்டும் மீண்டும் யு டர்ன் எடுக்கும். இப்போதைக்கு ரஜினி பற்றி மோசமாக சித்தரிக்க மாட்டார்கள்.

ஆனால் அவர்களின் அரசியல் பார்வை, பிற செய்திகளை வெளியிடும் பாங்கு மாறாது அல்லவா... எனவே அவர்கள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்கள் நம் தளத்தில் தொடரும்.

-வினோஜாசன்

ஹாலிவுட் தரத்தில் ஃபேண்டஸி படம் எந்திரன்! - ரத்னவேலு

எந்திரன் திரைப்படம் மூலம் தன்னுடைய சீரியஸ் பட ஒளிப்பதிவாளர் இமேஜ் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஒள்ப்பதிவு இயக்குநர் ரத்னவேலு.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:

எந்திரன் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே 8 மாதங்களாக பட வேலைகளை பற்றி திட்டமிட்டு வந்தோம். ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும், எந்த லொகேஷன் உட்பட படத்தின் அனைத்து விஷயங்களையுமே தீர்மானித்துவிட்டோம். அதற்கு முக்கிய காரணம், ஷங்கரின் திட்டமிடுதல்தான்.

பெரு நாட்டில் ஒரு பாடல் காட்சியும் பிரேசிலில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கினோம். கோவா, சென்னையில் சில காட்சிகளை எடுத்துள்ளோம். அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நேற்று தொடங்கிவிட்டோம். பெரு பாடல் காட்சிகளின் ஸ்டில்களை பார்த்தவர்கள், ரஜினியை இளமையாக காட்டியிருப்பதாக பாராட்டினார்கள்.

ரஜினியுடன் இப்போதுதான் முதல்முறையாக பணியாற்றுகிறேன். மிகவும் எளிமையானவர். காட்சி நன்றாக வந்தால் உடனே பாராட்டுவார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் இப்படத்தின் மார்க்கெட்டிங் பலம் பல மடங்கு கூடியுள்ளது.

எனவே உலக அளவில் இப்படம் பேசப்படும். சேது, பிதாமகன், வாரணம் ஆயிரம் என சீரியசான படங்களில் மட்டுமே பணியாற்றுவதாக என்னை பற்றி கூறுவார்கள். எந்திரன், ஹாலிவுட் தரத்தில் உருவாகும் ஃபேன்டசி படம். எனவே இப்படம் மூலம் எனது இமேஜ் மாறும், என்கிறார் ரத்னவேலு.

நன்றி: தினகரன்

Friday, December 19, 2008

தினகரனின் இன்றைய 'எந்திரன் ஸ்பெஷல்'!


இனி சன் குழும பத்திரிகைகள் மற்றும் இதர ஊடகங்களில் எந்திரன்தான் கவர் ஸ்டோரி என ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்த ஹைப், நல்லதா... கெட்டதா என்பதை இப்போதே கணித்துச் சொல்வது அபத்தமாகிவிடும். ரஜினியே கூட இன்னும் சில தினங்களுக்கு அமைதியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறார். இதையெல்லாம் எதிர்பார்க்காமலா அவர் சன்னோடு கை கோர்த்திருப்பார்.

எனவே இப்போதைக்கு எந்திரன் குறித்த செய்திகளை ரசித்து அனுபவிப்போம். எந்திரன் – சன் புதுக் கூட்டணி குறித்த பல்வேறு பார்வைகளை விரைவில் தருகிறோம்.

இதோ தினகரனின் இன்றைய எந்திரன் ஸ்பெஷல்!

எந்திரனுக்காக சென்னையில் ஐஸ்வர்யா!

சென்னை, டிச.19: எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் சென்னை வந்துள்ளார்.

இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத மிக பிரமாண்டமான திரைப்படமாக ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

மணி ரத்னம் படத்துக்காக கேரளா சென்றிருந்த ஐஸ்வர்யா ராய், அந்த ஷெட்யூல் முடிந்து, எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார்.

பிப்ரவரி மாதம் வரை எந்திரன் படப்பிடிப்பில் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ரத்னவேலு கவனிக்கிறார்.

அடுத்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.envazhi.com

Thursday, December 18, 2008

‘பொறுத்திருந்து பாருங்க!’ - ரஜினி

ந்திரன் இந்தியாவிலேயே மிகப் பெரிய படம். பொறுத்திருந்து பாருங்க... நான் சொல்றது உங்களுக்கே புரியும் என்றார் ரஜினி.

எந்திரன் படத்தை 150 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு வேலைகளைத் துவங்கின ஈராஸ் நிறுவனமும், அய்ங்கரன் இன்டர்நேஷனலும்.

ஆனால் சர்வதேச நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்ட ஈராஸ், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. இப்படியொரு பிரமாண்ட படத்தை தனித்து நின்று தயாரிக்கவும் அய்ங்கரனால் முடியாது. எனவே மாற்று வழி யோசித்துக் கொண்டிருந்தது அந்நிறுவனம். ஆனாலும் படப்பிடிப்புக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக் கொண்டவர்கள் இருவர்.
ஒருவர் நமது சூப்பர் ஸ்டார்... அடுத்தவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

இன்னொரு பக்கம் படத்தை அய்ங்கரனை விட அதிக செலவில் தயாரிக்கும் பிரமாண்ட தயாரிப்பாளர்களையும் தேடி வந்தார் இயக்குநர் ஷங்கர்.

சில மாதங்களுக்கு முன் ரஜினி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நேரம்...

அவரை தனியாகச் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார் கலாநிதி மாறன். சன் நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்ற பிரிவை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு ரஜினி ஒரு படம் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ரஜினியும் அப்போது, கட்டாயம் படம் செய்யலாம் என்று கூறியிருந்தார்.

(இதே கோரிக்கையை ஸ்டாலின் மகன் உதய நிதியும் இரு ஆண்டுகளுக்கு முன் ரஜினியிடம் வைத்திருந்தார்.)

இப்போது, எந்திரன் படத்தையே செய்யச் சொல்லலாமே, என்ற யோசனை எழ, சன் தலைமைச் செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். அய்ங்கரன் நிறுவனம் செலழித்த தொகைக்கு மேலேயே தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதெல்லாம் நடந்தபிறகு, தீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படிச் சொன்னார் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா:

நாங்கள் இதுவரை, மற்ற நிறுவனங்கள் தயாரிப்பில் இருந்தவற்றை வாங்கி அவர்களது பேனரிலேயே வெளியிட்டு வந்திருக்கிறோம். காதலில் விழுந்தேன், தெனாவட்டு எல்லாமே அப்படித்தான். இப்போது வரவிருக்கும் சிவா மனசுல சக்தி, தீ, திண்டுக்கல் சாரதி, பூக்கடை ரவி எல்லாமே மற்றவர்கள் தயாரித்து எங்களுக்குத் தந்தவை.

ஆனால் முதல் முறையாக சன் நிறுவனம் தனது சொந்த பேனரில் முழுக்க முழுக்க தயாரிக்கும் படம் ஒன்றை அறிவிக்க உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத பிரமாண்ட படமாக அது இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். டிசம்பர் 2-ம் வாரம் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறோம், என்றார்.

சரியாக 15 நாட்களில் இந்த அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் சூப்பர் ஸ்டாரும், அவர் பெயரிலேயே அமைந்துவிட்ட இந்த பட நிறுவனமும்... (குழப்பமாக உள்ளதா... சூப்பர்ஸ்டார்=சன்... சரிதானே!)

இதுபற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியிருப்பதாவது:

சன் பிக்சர்ஸ் பேனரில் ஒரு படம் பண்ணலாம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கலாநிதி மாறன் கேட்டிருந்தார். நிச்சயம் பண்ணலாம் என்று நான் அப்போது கூறியிருந்தேன். இப்போது இந்தப் படம் பண்றோம். அதுவும் அவர்களுடைய முதல் படமா எந்திரன் அமைஞ்சிருக்கு. ரொம்ப ஆச்சயர்யமாயிருக்கு. வெயிட் பண்ணி பாருங்களேன்... நிச்சயம் பெரிய சக்ஸஸ்புல் படமா இந்தப் படம் அமையும்..., என்றார்.

இந்தப் படம் மற்றும் சன் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்களை சன் டிவி தனியாகப் பதிவு செய்துள்ளது. விரைவில் மிகப் பெரிய நிகழ்வாக அதை ஒளிபரப்பக் கூடும்.

குறிப்பு: சன் குழுமத்தின் மீது நீங்கள் வைத்த விமர்சனங்கள் என்னாச்சு என நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதுபற்றி விரிவான பதிவு விரைவில் வரும்.
http://www.envazhi.com

அசத்தும் எந்திரன்! சிறப்புப் படங்கள்!!

அசத்தல் எந்திரன் ஸ்டில்கள்... மனதை அள்ளும் ரஜினி!

ந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அசத்தல் ஸ்டில்களை சன் டிவியும் தினகரனும் இன்று வெளியிட்டுள்ளன.

சன் டிவியில் எப்படி நேற்று முழுக்க ரஜினியின் எந்திரன் சிறப்புச் செய்தியாக இருந்ததோ, அதே போல இன்று முழுக்க தினகரனில் எந்திரன் எட்டுகால தலைப்புச் செய்தி.

இதைத் தவிர இரண்டு பக்கங்களில் எந்திரன் சிறப்புப் படங்கள் (மாச்சு பிக்குவில் எடுத்த பாடல் காட்சிகள்), செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் படங்கள் ரஜினி ரசிகர்களுக்குப் புதியவை அல்லை. ஏற்கெனவே பல தளங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியாகி இருந்தன.

ரஜினியின் தோற்றம் உண்மையிலேயே அசத்தலாக இருக்கிறது இந்தப் படங்களில். பாபாவுக்கு முந்தைய ரஜினியின் தோற்றமும், இளமைத் துடிப்பும் அவர் முகத்தில் தெரிவதைப் பார்க்கலாம்.

ரகசியம் காப்பது ஷங்கரின் உத்தி என்றால், மெகா பப்ளிசிட்டி சன் நிறுவனத்தின் உத்தி.

எனவே செய்திகளுக்கோ ஸ்டில்களுக்கோ பஞ்சமிருக்காது.

இதுகுறித்து சன் தலைமைச் செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா இப்படிக் கூறுகிறார்:
ஷங்கரின் அனுமதியோடு இனி அடுத்தடுத்து, தொடர்ச்சியாக இப்படம் குறித்த செய்திகள் வெளியாகும். எனவே எந்திரன் குறித்த அனைத்தும் அதிகாரப்பூர்வமான செய்திகளாகவே மீடியா தரலாம். நோ மோர் காஸிப்ஸ்!

இது உலக அளவில் சரித்திரம் படைக்கப் போகும் படம், அதில் எந்த அளவும் சந்தேகம் வேண்டாம் என்றார்.

http://www.envazhi.com

Wednesday, December 17, 2008

எந்திரன் - சன் கூட்டு: ரஜினி – கலாநிதி மாறன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ந்திரன் – தி ரோபோ திரைப்படத்தை சன் டிவியின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனும்.

இன்று புதன்கிழமை மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான நாகராஜன் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மற்றும் சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து இதுகுறித்து இறுதி முடிவை அறிவித்தனர்.

இந்த புதிய கூட்டணி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படிக் கூறியுள்ளார்:

‘சன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக எந்திரன் – தி ரோபோ உருவாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே இது இந்தியாவின் மிகப் பெரிய படம். கலாநிதி மாறனுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி!’

கலாநிதி மாறன்:

‘சன் பிக்சர்ஸூக்கு இது மிகப் பெரிய படம். இந்தியாவிலேயே மிகப்பெரிய படமாக எந்திரன் இருக்கும் என உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையடைகிறேன். இந்தப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தைத் தொடும்.’

இயக்குநர் ஷங்கர்:

கலாநிதி மாறனின் சன் டிவியுடன் இணைவதில் பெருமையடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புகளுடன் உள்ள இந்தப் படம், சன் டிவியுடன் சேருவதால், மேலும் எதிர்பார்ப்பு கூடுவதுடன், விளம்பர வெளிச்சமும் உச்சகட்டமடையும்.

செய்திக் குறிப்பை சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பின்னர் பத்திகைகளுக்கு அனுப்பினார்.

ரஜினியும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் சந்தித்துக் கைகுலுக்கும் படம்.


இதோ அந்த அறிவிப்பு குறித்த பத்திரிகைச் செய்திக்குறிப்பு.





-வினோஜாஸன்

எந்திரன் இனி 'சன்' வசம்!

கைமாறியது ரஜினியின் எந்திரன்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!

இது அதிகாரப்பூர்வமான செய்தி...

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான எந்திரன் – தி ரோபோவை அய்ங்கரன் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவியின், சன் பிக்சர்ஸ்.

இன்று மாலை சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனை அவரது இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் கேமராமேன் ரத்னவேலு ஆகியோர் சந்திக்கின்றனர்.

ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தை அய்ங்கரன் நிறுவனம் 150 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய், ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பெரு நாட்டில் உள்ள உலக அதிசயமான மாச்சு பிக்குவில் இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அய்ங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தன. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன் விலகிக் கொண்டது.

இதனால் அய்ங்கரன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.
இந்நிலையில், இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.

பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக்க உறுதி பூண்டுள்ளது.

- நன்றி: தட்ஸ்தமிழ்

Wednesday, November 12, 2008

திட்டமிட்டபடி எந்திரன் 3-வது கட்ட படப்பிடிப்பு துவக்கம்!

ந்திரன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி குல்லு – மணாலியில் அடுத்த சில தினங்களில் தொடங்குகிறது.

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எந்திரன் படப்பிடிப்பின் அடுத்த கட்டம் எப்போது துவங்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி ஏற்கெனவே அறிவித்திருந்தார். வரும் நவம்பர் 16-ம் தேதி குல்லு மணாலியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதாக அவர் ரசிகர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் நிதி நெருக்கடி மற்றும் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக மீடியாவில் செய்தி பரவியது.
உடனே, எந்திரன் படத்துக்கும் நிதி நெருக்கடி எழுந்துள்ளதாக சில இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

உண்மை நிலவரம் என்ன?

ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியான விஜய்குமாரைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தோம்.

அவர் கூறியதாவது:

என்ன ஒரு மோசமான கற்பனை பாருங்கள்... சூப்பர் ஸ்டாரின் எந்திரன் உலகளாவிய படம். இந்தியாவின் திரையுலக சாதனையாக சர்வதேச அளவில் பேசப்படப்போகும் படம்.

அதன் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் எந்த சுணக்கமும் நேராமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த சிரத்தையுடன் ஏற்பாடு செய்து வருகிறோம்.

இந்த நிலையில் இப்படி ஒரு செய்தியா... வதந்திகள் பற்றிக் கவலை வேண்டாம். எந்திரன் தொடர்பான அனைத்தும் திட்டமிட்டபடி மிகச் சரியாக நடக்கும்... என்றார்.

http://www.envazhi.com

Tuesday, October 7, 2008

Exclusive: இதற்குப் பெயர்தான் ‘ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி’!

சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அளித்த பேட்டியைப் படித்துவிட்டிருப்பீர்கள்.

அதனால் ஒரு மாறுதலுக்காக, இதோ ஐஸ்வர்யாவின் புத்தம் புது படம், அதுவும் நம்ம ஸ்டைலிஷ் எந்திரனுடன் காதல் மொழி பேசும் காட்சி!
மக்களின் நாடித் துடிப்பை நன்கு தெரிந்து வைத்திருப்பவர் ரஜினி. இந்தக் கதைக்கு இப்படித்தான் வரவேற்பிருக்கும் என்பதை தெளிவாக முன்கூட்டியே சொல்லிவிடுவார்.
சந்திரமுகி, குசேலன் ஆடியோ வெளியீட்டு விழாக்களை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தனது படத்தில் ஐஸ்வர்யா ராயை நாயகியாக நடிக்க வைக்க தொடர்ந்து முயற்சிப்பது ஏன் என்பதற்கான விளக்கத்தை ரஜினி ஒரு மேடையில் சொல்லியிருந்தார். அதன் வீடியோ பதிவு கூட நமது தளத்தில் உள்ளது. இதோ அதன் சுருக்கம்:

‘என்னடா இந்தாளு எப்பப் பார்த்தாலும் ஐஸ்வர்யா ராய் நாயகியா வேணும்னு கேக்கிறானேன்னு சிலர் நினைக்கலாம்.

படையப்பாவில் நீலாம்பரியா, சந்திரமுகியில் நாட்டியக்காரி சந்திரமுகியா... ஐஸ்வர்யாவை கற்பனைப் பண்ணிப் பாருங்க. அதுக்காகத்தான் அவங்க வேணும்னு கேட்டேன்...’, என்று பேசியிருந்தார்.

எந்திரனில் இப்போது ஐஸ்வர்யா ராயைத் தவிர இன்னொரு நாயகியை ரஜினிக்கு ஜோடியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை அல்லவா?

இதுக்குப் பெயர்தான் திரை ரசாயணமோ... (அதாங்க ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி!)
http://www.envazhi.com