Friday, December 19, 2008

தினகரனின் இன்றைய 'எந்திரன் ஸ்பெஷல்'!


இனி சன் குழும பத்திரிகைகள் மற்றும் இதர ஊடகங்களில் எந்திரன்தான் கவர் ஸ்டோரி என ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்த ஹைப், நல்லதா... கெட்டதா என்பதை இப்போதே கணித்துச் சொல்வது அபத்தமாகிவிடும். ரஜினியே கூட இன்னும் சில தினங்களுக்கு அமைதியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறார். இதையெல்லாம் எதிர்பார்க்காமலா அவர் சன்னோடு கை கோர்த்திருப்பார்.

எனவே இப்போதைக்கு எந்திரன் குறித்த செய்திகளை ரசித்து அனுபவிப்போம். எந்திரன் – சன் புதுக் கூட்டணி குறித்த பல்வேறு பார்வைகளை விரைவில் தருகிறோம்.

இதோ தினகரனின் இன்றைய எந்திரன் ஸ்பெஷல்!

எந்திரனுக்காக சென்னையில் ஐஸ்வர்யா!

சென்னை, டிச.19: எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் சென்னை வந்துள்ளார்.

இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத மிக பிரமாண்டமான திரைப்படமாக ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

மணி ரத்னம் படத்துக்காக கேரளா சென்றிருந்த ஐஸ்வர்யா ராய், அந்த ஷெட்யூல் முடிந்து, எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார்.

பிப்ரவரி மாதம் வரை எந்திரன் படப்பிடிப்பில் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ரத்னவேலு கவனிக்கிறார்.

அடுத்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.envazhi.com

No comments: