
-இப்படிப் பேசியவர் டாக்டர் காயத்ரி. நேற்று வரை யாரென்றே தெரியாமல் இருந்து இன்றைக்கு ரஜினி என்ற மந்திர வார்த்தைகளை பக்கம் பக்கமாக எழுதியதன் மூலம் தமிழ்நாட்டின் பிரபல புள்ளியாக மாறிவிட்ட அதே டாக்டர் காயத்ரிதான் இப்படிப் பேசினார் நேற்றைய மேடையில்.
நான்கு எழுத்தாளர்கள் வந்துவிட்டால், அவர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகருக்குப் புத்தகம் எழுதியவர் என்று காட்டிக் கொள்ள வெட்கம் வந்து விடுகிறது பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு. தானும் அந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை காயத்ரியே ஒப்புக் கொள்வது போலிருந்தது அவர் பேசிய விதம்.
தலைவரைப் பற்றி புத்தகம் எழுதியவரை இப்படி விமர்சிக்கிறீர்களே என சிலர் கேட்கக் கூடும். தானாக வலிய வந்துதான் இவர் இந்தப் புத்தகத்தை எழுதினார். இப்படியொரு புத்தகம் எழுதினால் அதன் வீச்சு எப்படி இருக்கும், எந்த அளவுக்குப் பேசப்படுவோம் என்று தெரிந்துதான் மருத்துவத் தொழிலைக் கூட விட்டுவிட்டு இந்த வேலையில் இறங்கினார் (கவனிக்க: இவர் ரஜினி ரசிகர் அல்ல. அவர் மீதுள்ள ப்ரியத்திலும் இதை எழுதவில்லை). அதற்குள் அறிவுஜீவித்தனம் எட்டிப்பார்த்து ஆறாவது அறிவை அடக்கிவிட்டதோ...!
இதைச் சுட்டிக் காட்டவே இந்தக் குட்டு!
No comments:
Post a Comment