Tuesday, December 16, 2008

இந்த ரசிகர்களால் ரஜினிக்கு என்றும் பெருமைதான்!

ண்ணாமலை படத்தில் வினு சக்கரவர்த்தி ஒரு வசனம் பேசுவார்...

‘அம்மா...புள்ளன்னு பெத்தா இப்படியொரு புள்ளையத்தான் பெக்கணும்...’ என்பார் சூப்பர்ஸ்டார் ரஜினியைக் காட்டி.

அதே பெருமை அவரது ரசிகர்களுக்கும் இப்போது கிடைத்திருக்கிறது.

'ரசிகன்னு இருந்தா இப்படியில்ல இருக்கணும!' என்று அனைவரும் பெருமையுடன் குறிப்பிடும் வகையில், அமைதியாக, ஆனால் அர்த்தத்துடன் செயல்படத் துவங்கிவிட்டனர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி பிறந்த நாளன்று இனிப்பு கொடுத்து பட்டாசு வெடிப்பதோடு நின்றுவிடாமல், மக்களுக்குப் பயன்தரும் பல்வேறு நலத் திட்டப் பணிகளில் தங்களை அவர்கள் ஈடுபடுத்திக் கொண்டு வருவது பெருமைக்குரிய விஷயம். ரஜினி விரும்பிய மாறுதல் அவரது ரசிகர்களிடம் உருவாகி வருகிறது என்பதன் அடையாளமாகவே இது பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் துன்புறும் இந்த வேளையில், தன் பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று ரஜினி கூறிய பின்னர் நடந்த விழாக்களே இப்படி இருந்ததென்றால், அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்திருந்தால்... இந்த தமிழகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை ரஜினியின் ரசிகர்கள் ஒரே நாளில் காட்டியிருப்பார்கள்!!

ஏழைக் குழைந்தைகளைத் தத்தெடுப்பது, கண் சிகிச்சை முகாம்கள், ரத்த தான முகாம்கள், அன்னதானம் வழங்குதல், பள்ளிச் சீருடை வழங்குதல், உலக அமைதிக்காக அமைதிப் பிரார்த்தனை, மும்பையில் வீர மரணமடைந்த ஜவான்களுக்கு மரியாதை செலுத்துதல்... என தமிழகம் ரஜினிமயமாகக் காட்சியளித்தது இந்த டிசம்பர் 12-ம் தேதி.

இந்த தகவல்களை முழுமையாக இனிவரும் பதிவுகளில் தருகிறோம்...
ரஜினிபேன்ஸ்.காம் ரத்த தான முகாம்!

ரஜினி ரசிகர்களுக்கென்று முதல்முறையாக துவங்கப்பட்ட தளம் www.rajinifans.com. உலகில் வேறு எந்த நடிகருக்காவது ரசிகர்கள் இப்படியொரு ‘பக்கா’ இணையதளத்தை உருவாக்கி, அதுவும் இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பார்களா... என்பது சந்தேகமே...!

இந்த இணையதளத்தின் சார்பில் சென்னை பரங்கிமலை, மவுண்ட் மெடிக்கல் சென்டரில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்திருந்தனர். ரஜினிபேன்ஸ் தளத்தின் நிர்வாகி ஜெ.ராம்கி தலைமையில் 33 பேர் ரத்த தானம் அளித்தனர்.

தொடர்ச்சியாக 4-ம் ஆண்டாக இந்த ரத்த தான முகாம் மிகச் சிறப்பான முறையில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டு தளபதி சத்தியநாராயணா கலந்து கொண்டு பாராட்டும் அளவுக்கு சிறப்பாக நடந்த நற்பணி இது.

மவுண்ட் மெடிக்கல் சென்டர் டாக்டர் சச்சிதானந்தம் மேற்பார்வையில், மிகப் பாதுகாப்பான முறையில் ரத்தம் பெறப்பட்டு, அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிகழ்வில் நாம் பார்த்து பெருமைப்பட்ட விஷயம், வந்திருந்த ரசிகர்களின் வயது மற்றும் அவர்கள் காட்டிய உணர்வு. வேறு எந்த நடிகரின் ரசிகர்களுக்கும் இப்படியொரு உணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. இன்னும் கல்லூரிப் பருவம் கூடத் தாண்டாத இந்த இளம் நண்பர்கள், தங்கள் தலைவர் ரஜினி மீது உயிரையே வைத்திருப்பது பிரமிக்க வைத்தது.

ரஜினியே சொல்லியிருப்பது போல... இப்படிப்பட்ட அருமையான இளைஞர்களை மிகச் சரியாக வழிநடத்த வேண்டியது அவசியமல்லவா... அந்த பொறுமையும், பண்பும், ஆளுமையும் இன்று ரஜினிக்கு மட்டுமே உண்டு!

http://www.envazhi.com

Pics: www.rajinifans.com

No comments: