
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
எந்திரன் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே 8 மாதங்களாக பட வேலைகளை பற்றி திட்டமிட்டு வந்தோம். ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும், எந்த லொகேஷன் உட்பட படத்தின் அனைத்து விஷயங்களையுமே தீர்மானித்துவிட்டோம். அதற்கு முக்கிய காரணம், ஷங்கரின் திட்

பெரு நாட்டில் ஒரு பாடல் காட்சியும் பிரேசிலில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கினோம். கோவா, சென்னையில் சில காட்சிகளை எடுத்துள்ளோம். அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நேற்று தொடங்கிவிட்டோம். பெரு பாடல் காட்சிகளின் ஸ்டில்களை பார்த்தவர்கள், ரஜினியை இளமையாக காட்டியிருப்பதாக பாராட்டினார்கள்.
ரஜினியுடன் இப்போதுதான் முதல்முறையாக பணியாற்றுகிறேன். மிகவும் எளிமையானவர். காட்சி நன்றாக வந்தால் உடனே பாராட்டுவார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் இப்படத்தின் மார்க்கெட்டிங் பலம் பல மடங்கு கூடியுள்ளது.
எனவே உலக அளவில் இப்படம் பேசப்படும். சேது, பிதாமகன், வாரணம் ஆயிரம் என சீரியசான படங்களில் மட்டுமே பணியாற்றுவதாக என்னை பற்றி கூறுவார்கள். எந்திரன், ஹாலிவுட் தரத்தில் உருவாகும் ஃபேன்டசி படம். எனவே இப்படம் மூலம் எனது இமேஜ் மாறும், என்கிறார் ரத்னவேலு.
நன்றி: தினகரன்
No comments:
Post a Comment