இன்று புதன்கிழமை மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான நாகராஜன் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மற்றும் சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து இதுகுறித்து இறுதி முடிவை அறிவித்தனர்.
இந்த புதிய கூட்டணி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படிக் கூறியுள்ளார்:
‘சன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக எந்திரன் – தி ரோபோ உருவாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே இது இந்தியாவின் மிகப் பெரிய படம். கலாநிதி மாறனுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி!’
கலாநிதி மாறன்:
‘சன் பிக்சர்ஸூக்கு இது மிகப் பெரிய படம். இந்தியாவிலேயே மிகப்பெரிய படமாக எந்திரன் இருக்கும் என உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையடைகிறேன். இந்தப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தைத் தொடும்.’
இயக்குநர் ஷங்கர்:
கலாநிதி மாறனின் சன் டிவியுடன் இணைவதில் பெருமையடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புகளுடன் உள்ள இந்தப் படம், சன் டிவியுடன் சேருவதால், மேலும் எதிர்பார்ப்பு கூடுவதுடன், விளம்பர வெளிச்சமும் உச்சகட்டமடையும்.
செய்திக் குறிப்பை சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பின்னர் பத்திகைகளுக்கு அனுப்பினார்.
ரஜினியும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் சந்தித்துக் கைகுலுக்கும் படம்.

இதோ அந்த அறிவிப்பு குறித்த பத்திரிகைச் செய்திக்குறிப்பு.


-வினோஜாஸன்
No comments:
Post a Comment