Showing posts with label Sun TV. Show all posts
Showing posts with label Sun TV. Show all posts

Wednesday, December 17, 2008

எந்திரன் - சன் கூட்டு: ரஜினி – கலாநிதி மாறன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ந்திரன் – தி ரோபோ திரைப்படத்தை சன் டிவியின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனும்.

இன்று புதன்கிழமை மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான நாகராஜன் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மற்றும் சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து இதுகுறித்து இறுதி முடிவை அறிவித்தனர்.

இந்த புதிய கூட்டணி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படிக் கூறியுள்ளார்:

‘சன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக எந்திரன் – தி ரோபோ உருவாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே இது இந்தியாவின் மிகப் பெரிய படம். கலாநிதி மாறனுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி!’

கலாநிதி மாறன்:

‘சன் பிக்சர்ஸூக்கு இது மிகப் பெரிய படம். இந்தியாவிலேயே மிகப்பெரிய படமாக எந்திரன் இருக்கும் என உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையடைகிறேன். இந்தப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தைத் தொடும்.’

இயக்குநர் ஷங்கர்:

கலாநிதி மாறனின் சன் டிவியுடன் இணைவதில் பெருமையடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புகளுடன் உள்ள இந்தப் படம், சன் டிவியுடன் சேருவதால், மேலும் எதிர்பார்ப்பு கூடுவதுடன், விளம்பர வெளிச்சமும் உச்சகட்டமடையும்.

செய்திக் குறிப்பை சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பின்னர் பத்திகைகளுக்கு அனுப்பினார்.

ரஜினியும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் சந்தித்துக் கைகுலுக்கும் படம்.


இதோ அந்த அறிவிப்பு குறித்த பத்திரிகைச் செய்திக்குறிப்பு.





-வினோஜாஸன்

எந்திரன் இனி 'சன்' வசம்!

கைமாறியது ரஜினியின் எந்திரன்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!

இது அதிகாரப்பூர்வமான செய்தி...

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான எந்திரன் – தி ரோபோவை அய்ங்கரன் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவியின், சன் பிக்சர்ஸ்.

இன்று மாலை சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனை அவரது இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் கேமராமேன் ரத்னவேலு ஆகியோர் சந்திக்கின்றனர்.

ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தை அய்ங்கரன் நிறுவனம் 150 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய், ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பெரு நாட்டில் உள்ள உலக அதிசயமான மாச்சு பிக்குவில் இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அய்ங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தன. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன் விலகிக் கொண்டது.

இதனால் அய்ங்கரன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.
இந்நிலையில், இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.

பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக்க உறுதி பூண்டுள்ளது.

- நன்றி: தட்ஸ்தமிழ்

Tuesday, December 2, 2008

கேளாதீர்கள்; கிளறாதீர்கள்!!

ந்தச் செய்திக்கு தனியாக ஒரு கமெண்ட் எழுத வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு கலைஞர் பார்த்துக் கொண்டது அவரது இலக்கிய மேதைமையைக் காட்டுகிறது.

அழகிரியும் ஸ்டாலினும் மாறன் சகோதரர்களுடன் சமாதானமான பிறகு பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பேட்டி (கேள்வி கேட்பதில் நம்மாளுங்க எவ்வளவு வீக்குன்னு தெரி்ஞ்சுக்க இன்னொரு சான்ஸ்!):

இந்த சந்திப்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது?

சந்தோஷமாக இருக்கிறது.

இந்த சந்திப்பு எதனால் நடந்தது?

இதயத்தால் நடந்தது.

தயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா?

அதுபற்றி எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை.

உணர்வுபூர்வமாக எப்படி இருந்தீர்கள்?

எனக்கு கோபம் வரும்போதும், வருத்தம் வரும்போதும் எப்படி இருந்தேனோ அப்படித்தான் மகிழ்ச்சியின்போதும் இருந்தது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட அறிக்கை மோதல் நடந்தது. இதனிடையே இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்?

இதற்கு மூல காரணமாக இருந்து நிறைவேற்றி வைத்து எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்த பொறுப்பு மு.க.அழகிரியை சார்ந்தது. அவருடன் இணைந்து மு.க.ஸ்டாலின் செயல்பட்டு, இந்த நல்ல முடிவு ஏற்பட்டது.

குருபெயர்ச்சியால் ஏற்பட்ட விளைவா இது?

எங்கள் குருவையே நாங்கள் எதிர்த்த பிறகு, அந்த குருவுடன் இணைந்து செயல்பட்டதுதான் திராவிட இயக்க வரலாறு.

பேரன்கள் எல்லோரையும் பார்த்ததில் ஏற்பட்ட உணர்வு எப்படியிருந்தது?

கண்கள் பனித்தன; இதயம் இனித்தது.

அழகிரியின் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?

மனமிருந்தது. எனவே மாற்றம் ஏற்பட்டது.

மதுரையில் சன்டிவி, கே டிவி தெரியாத நிலை இருந்தது. இதன் பிறகு சுமூக தீர்வு ஏற்படுமா?

கேளாதீர்கள். கிளறாதீர்கள்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. அப்படி இதை எடுத்துக் கொள்ளலாமா?

அது உங்கள் பொறுப்பு. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

அடுத்தகட்டமாக அரசியல் ரீதியாக, தொலைக்காட்சி ரீதியாக என்ன செய்வீர்கள்?

கலந்து பேசி தேவைப்படும் உரிய முடிவுகளை எடுப்போம்.

இந்த இணைப்பு விழாவுக்கு கனிமொழி வரவில்லையே?

எம்.பி.க்கள் குழுவுடன் விமான நிலையம் சென்று விட்டார். அதன் பிறகுதான் இவர்கள் வந்தார்கள். இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.

தயாநிதி மாறன் மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தாரா?

பேசுவதற்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை.

நாளை டெல்லி செல்லும் எம்.பி.க்கள் குழுவில் பங்கேற்பாரா?

மனித சங்கிலிக்கு வந்தார் அல்லவா.

இனிமேலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று வாக்குறுதி தந்திருக்கிறீர்களா?

இந்த கேள்வி ஒன்று போதும். அவர்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்த.

சமரசத்தின் பின்னணி என்ன?

அழகிரி, ஸ்டாலின்.

கேட்க மறந்த அல்ல மறக்கடிக்கப்பட்ட கேள்விகள்:

மதுரை தினகரன் அலுவலக ஊழியர்கள் எரிப்பு விவகாரம் இனி என்ன ஆகும்?

'மதுரையில் அராஜகம் செய்யும் ரவுடி அழகிரியும் அவர் கும்பலும்' என்று வாசித்து வந்த சன் டிவி, இனி 'மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் அழகிரி' என வர்ணிக்குமா...?

கலைஞர் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு சங்குதானா...?

தினகரனில் மீண்டும் கருத்துக் கணிப்பு வருமா?

சன் டிவி ஜெயலலிதாவுடன் செய்து கொண்டதாகச் சொல்லப்பட்ட ஒப்பந்தம் என்னாச்சு?

அடிக்கடி தன் முகத்தை சன்னில் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்ட 'கருப்பு எம்ஜிஆர்கள்' கதி என்ன?

Monday, November 24, 2008

மனசாட்சியை அடகு வைத்த மாறன் பிரதர்ஸ்!

நெய்க்கு தொன்னை ஆதாரமா... தொன்னைக்கு நெய் ஆதாரமா?

இந்த சாதாரண கேள்விக்குக் கூட விடை தெரியாத சின்னப் புள்ளத்தனத்துடன் சன் நிர்வாகிகளான கலாநிதி, தயாநிதி மாறன்கள் நடந்து கொள்ளும் விதம் சிரிப்பைத்தான் தருகிறது.

இன்றைக்கு சன்டிவி வளர்ந்துவிட்டிருக்கலாம். ராஜநாயகம் போன்ற சந்தர்ப்பவாதிகள், பொய்யர்களின் கருத்துக் கணிப்புகளில் முதலிடம் வகிக்கலாம்.

ஆனால் கலைஞரின் நிழல்தான் இந்த மாறன் சன்களையும் அவர்களின் ‘சன்’னையும் முழுக்க முழுக்க காப்பாற்றி வந்துள்ளது, நேற்றுவரை.

ஆனால் இந்த வளர்த்த கடாக்கள் இப்படியெல்லாம் பிரஸ்மீட் வைத்து, திமுகவின் அஸ்திவாரத்தையே கேள்விக்குறியாக்குவார்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சமாய் அன்றே இந்த 'சன்'னின் கழுத்தை நெறித்திருப்பார் கலைஞர்.

இன்றைக்கு மாறனை ஒரு மக்கள் தலைவனைப்போல் சித்தரிக்க முயல்கின்றன சன் நெட்வொர்க் ஊடக அங்கங்கள். இது எத்தனைப் பெரிய கேலிக் கூத்து.

மக்களை மட்டுமல்ல... மக்கள் மன்றத்தையே சந்திக்க விரும்பாதவர் மாறன் ... சந்திக்கவும் பிடிக்காது அவருக்கு. பெரும்பாலும் ராஜ்யசபா உறுப்பினராகப் போனவர், சிலமுறைதான் நேரடிப் போட்டியில் எம்பியாகியிருக்கிறார். அதுகூட திமுகவுக்கு அமோக ஆதரவிருந்த கால கட்டங்களில், அதுவும் பாதுகாப்பான சென்னைத் தொகுதிகளில்.

மாறன் என்ற ஒரு சாதாரண மனிதர், எம்பி, முன்னாள் மந்திரி என பல உயர்வுகளை அடையக் காரணமாக இருந்தது திமுகவும் கருணாநிதியும்தான். அந்தக் கருணாநிதி ஆட்சியின் தயவில்தான் சன் குழுமம் அசுரத்தனமாய் வளர்ந்து அச்சுறுத்தும் விதத்தில் கிளைபரப்பி நிற்கிறது.

அப்படியானால் மாறனுக்கு திறமையில்லையா எனக் கேட்கலாம். வாய்ப்பு... வாய்ப்புதான் ஒருவனுக்கு முக்கியம். ரஜினி சொல்வது போல சந்தர்ப்பம் சூழ்நிலை முக்கியம்.

மாறனுக்கு கிடைத்தது போல் மாமாக்களும், வாய்ப்புகளும் உங்களுக்கும் எனக்கும் கிடைத்திருந்தால், ஆயிரம் 'கத்தார் சாதனை'களை, கலாநிதிகளை, தயாநிதிகளை நாமும் உருவாக்கியிருப்போம்!

கலைஞரால்தான் சன்னுக்கு லாபமே தவிர, அந்த லாபத்துடன் ஒப்பிடும்போது சன் மூலம் திமுக பெற்ற நன்மைகள் குறைவுதான். அவ்வளவு ஏன்... ஆசியாவின் முதல்நிலை தொழிலதிபராகவும், துடிப்பான இளம் மத்திய மந்திரியாகவும் இந்த பிரதர்ஸுக்கு எப்படி பெயர் வந்தது? சன் மூலமா... தாத்தா கலைஞர் மூலமா...

கட்சியில் எத்தனையோ மூத்த நிர்வாகிகள் பதவிக்குக் காத்திருக்க, எல்லா விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு அல்லது உதாசீனப்படுத்திவிட்டு தயாநிதிக்கு எம்பி வாய்ப்புக் கொடுத்து, முதல் ‘அட்டெம்டி’லேயே டிஸ்டிங்ஷன் பெற்றதற்குச் சமமாய் கேபினட் மந்திரி பதவியும் வாங்கிக் கொடுத்த (அதுவும் பத்திரிகைகள் விமர்சிக்கும் அளவு அடம் பிடித்து) கலைஞருக்கு அந்திம காலத்தில் இது தேவைதான்.

அவருக்குப் பிடித்தமான ‘வளர்த்த கடா...’ பாடலுக்கு ரொம்ப அழுத்தமான அர்த்தம் தெரிய வேண்டாமா... அதற்கு இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பம் இது!

தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பது போல, ‘சன்’னுக்கு அறிவாலய வீட்டில் இடமளித்த கலைஞரின் குடும்பத்துக்கே உலை வைக்கப் பார்த்து, வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக் கொண்டது சன்னின் தவறா, அழகிரியின் தவறா?

அழகிரியோ ஸ்டாலினோ... யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர் வந்துவிட்டுப் போகிறார். இவர்களைப் பிரிந்து நின்று அடித்துக் கொள்ளத் தூண்டிவிடும் சகுனி வேலை செய்தது சன்தானே!

முரசொலியில் பிறந்து, அந்த வளாகத்தில் காலம் தள்ளி, அறிவாலயத்தில் அசுர பலம் பெற்ற அந்த ‘சன்’னின் இன்றைய ஏகபோக நிர்வாகிகள் சொல்கிறார்கள், திமுக ஆட்சிக்கு வர பெரிதும் காரணமாக இருந்தது சன்னும் தினகரனும்தானாம்.

அப்படியெனில் மக்களிடம் பொய் சொல்லி திமுகவுக்கு அரியணை கிடைக்கச் செய்தோம் என்கிறார்களா?

நேற்று மழையில் இன்று முளைத்த இந்த மாறன் பிரதர்ஸ்தான், கருணாநிதி என்ற 90 வயதைத் தொடும் தமிழ்க் கிழவனின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டதாகக் கூறுகிறார்களா...

ஒரு ஆதரவுக்கு தோளைப் பிடித்து நடந்ததற்கு, அவரது கால்களையே வெட்டிவிட முயலும் இந்த மாறன் பிரதர்ஸ் எவ்வளவு பெரிய சூழ்ச்சியாளர்கள்!

இப்போதாவது புரிகிறதா...சன் டிவியின் அஸ்திவாரம் பொய் மட்டுமே என்று நாம் அடிக்கடி கூறுவதன் காரணம்!

குறிப்பு: இது கலைஞரை ஆதரிப்பதற்கான பதிவன்று. ஒரு பக்கத்துப் பொய் முகத்தை அம்பலப்படுத்த முனைகையில் இன்னொரு தரப்பு நிரபராதிகளாகவே தெரிவார்கள். இங்கே நம் நோக்கம், சன் குழும நிர்வாகிகளின் துரோகத்தை வெளிச்சமிடுவது மட்டுமே.

மற்றபடி கலைஞரின் அரசியல் குறித்து நாட்டுக்கே தெரியும், இதில் நாமென்ன புதிதாகச் சொல்வது!


-இமானுவேல்

http://www.envazhi.com

Thursday, November 13, 2008

‘பாக்ஸ் ஆபீஸ் பாதுஷா’ ரஜினி!

வெள்ளித்திரையில் மட்டுமல்ல... சின்னத்திரையிலும் கூட தன் படத்தின் நிழலைக் கூட வேறு எந்தப் படமும் தொடமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

இந்த முறை தீபாவளிக்கு தமிழில் வெளியான படங்கள் இரண்டுதான். அவையும் பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லாத நிலையில் வெளியாகின. இதற்குக் காரணம், தீபாவளியை முன்னிட்டு இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ரஜினியின் சந்திரமுகி ஒளிபரப்பாகும் என சன் டிவி அறிவித்திருந்ததுதான். (இதுகுறித்து ஏற்கெனவே, ‘கல்லா கட்டும் சன் டிவி’ எனும் தலைப்பில் நாம் வெளியிட்ட கட்டுரையை நினைவில் கொள்க.)

இதற்குப் போட்டியாக, புதுப் படமான பில்லாவை ஒளிபரப்பப் போவதாக கலைஞர் தொலைக்காட்சி அறிவித்தது. இதுவும் ஒருவிதத்தில் ரஜினியின் படம்தான். அவரது பழைய பில்லாதான் அஜீத் நடித்த இந்தப் புது பில்லா என்பது உலகறிந்த உண்மை. ஆனால் நயன்தாராவையும் நமீதாவையும் முக்கால் நிர்வாணத்தில் நடமாட விட்டு இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்க விடாமல் செய்திருந்தனர்.

தீபாவளியன்று சன் டிவியில் சந்திரமுகி படம் ஒளிபரப்பாகத் தொடங்கியபோது பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்த ரஜினியின் ரசிகர்கள், படம் ஆரம்பித்ததும் பட்டாசு வெடிப்பதையே நிறுத்திவிட்டு படத்தில் மூழ்கிவிட்டதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன.
அந்த வகையில் சந்திரமுகியை ஒளிபரப்பிய சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் யாரும் தொட முடியாத உயரத்துக்கு எகிறியிருக்கிறது.

மும்பையின் TAM நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி சந்திரமுகியை ஒளிபரப்பிய சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் 20.82 ஆக இருந்துள்ளது!
இதே நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சி பில்லா படத்தை ஒளிபரப்பியது. ஆனால் இதற்குக் கிடைத்த டிஆர்பி ரேட்டிங் 4.28 சதவிகிதமே!

இந்தப் புத்தம் புதிய பில்லாவுக்கு ரசிகர்களிடம் இந்த அளவு மோசமான வரவேற்பு கிடைக்கும் என யாரும் நம்பவே இல்லை என்கின்றனர் சின்னத் திரையுலகில்.
ரஜினியின் சந்திரமுகிக்கு அடுத்து அதிக வரவேற்பைப் பெற்ற படம் வேட்டையாடு விளையாடு. இதற்கு கிடைத்த ரேட்டிங் 11.29. அன்று அதே நேரத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மருதமலைக்கு கிடைத்த புள்ளிகள் 7.74.

விளம்பர வருவாய் என்று பார்த்தால் இந்தப் படத்தை வாங்கிய விலையைவிட இருமடங்குக்கும் மேல் சன் தொலைக்காட்சி சம்பாதித்துவிட்டது இந்த ஒரே நாளில்.
இனி இதே படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பாகும் போதும் கிடைக்கும் தொகை போனஸ் மேல் போனஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிஞ்சிப்பூ போல அரிதாக படங்கள் கொடுத்தாலும் அடுத்த படம் வெளியாகும் வரை தமிழ் பொழுதுபோக்குத் துறையை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பாதுஷா, இந்த ‘பாட்ஷா ரஜினி’தான் என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபணமாகியிருக்கிறது!
http://www.envazhi.com

Thursday, October 23, 2008

சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!


ஜினியின் தயவில் இந்த ஆண்டும் சன் டிவிக்கு அமர்க்கள தீபாவளியாக விடிகிறது.
சூப்பர் ஸ்டாரின் சாதனைப் படம் சந்திரமுகியை தீபாவளி சிறப்புத் திரைப்படமாக அக்டோபர் 27-ம் தேதி ஒளிபரப்புகிறது சன் டிவி.

சந்திரமுகியின் சாதனை உலகமறிந்தது. ரஜினியின் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம், அதிக திரையரங்குகளில் 100 நாட்கள் கொண்டாடிய படம், விநியோகஸ்தர்கள் ஷேர் என்ற வகையில அதிக லாபம் சந்பாதித்துக் கொடுத்து, அந்த சாதனையை இதுவரை எந்தப் படமும் தொட முடியாத உயரத்தில் உள்ள படம்.

சந்திரமுகியை மிகப்பெரிய விலைக்கு சன் டிவி வாங்கியிருந்தது. இப்போது அதைவிட பல மடங்கு அதிக விளம்பரதாரர் வருவாயுடன் ஒளிபரப்பப் போகிறது.

ரஜினியின் பாட்ஷா என்ற ஒரு படத்தின் மூலம் சன் சம்பாதித்த தொகை அந்தப் படத்தை வாங்கிய விலையை விட 20 மடங்கு அதிகம் என்கிறார்கள் சன்னில் பணியாற்றும் நமது நண்பர்கள்!

அதிக விலைக் கொடுத்து வாங்கினார்கள், இப்பேது அந்த ரிஸ்க் எடுத்த்தற்கு பலனாக நல்ல லாபம் சம்பாதிக்கப் போகிறார்கள். இதில் உங்களுக்கென்ன வந்தது என சிலர் கேட்கக் கூடும். வியாபாரத்தில் சென்டிமெண்ட் பார்க்கக் கூடாதுதான்.

ஆனால் சிவாஜி, குசேலனை தங்களுக்குத் தராத கோபத்தில் சன் நிகழ்த்திய கோயபல்ஸ் பிரச்சாரம் இருக்கிறதே... சகிக்க முடியாத, மனிதத்தன்மையற்ற செயல் அது. அது என்ன வகை வியாபார தர்மம்?
தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒரேயடியாகத் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், அவரே வேண்டாதவராகிவிட்டால், ஒரேயடியாக குழிதோண்டிப் புதைக்க முயல்வதும் சன் குழும நியாயங்கள்.

ரஜினி படங்களை ஒளிபரப்புவதற்கான வர்த்தக உரிமை வேண்டுமானால் சன்னுக்கு இருக்கலாம். ஆனால் தார்மீக உரிமை கிடையவே கிடையாது!
http://www.envazhi.com/

Monday, September 29, 2008

அட கேவலமே...!


இன்றைய தேதிக்கு உலகிலேயே வசூலில் சாதனைப் படைத்த, முதல் தரமான, யாராலும் தொட முடியாத உயரத்துக்குப் போய் விட்ட ஒரே திரைப்படம் எது தெரியுமா?

சின்ன குழந்தையைக் கேட்டால் கூடச் சொல்லிவிடுவார்கள், 'காதலில் விழுந்தேன்' என்று!!
சன் டிவி(களின்)யின் அன்றாட தலைப்புச் செய்தியே இந்தப் படத்தின் வரலாறு காணாத சாதனை பற்றித்தான்...

அட கேவலமே, என்று நீங்கள் தலையில் அடித்துக் கொள்வது எனக்கும் தெரிகிறது. என்ன செய்ய... நாம்தானே அவர்களை மேலும் மேலும் வளர்த்து, நம்மையே தின்னும் அசுரர்களாக மாற்றி வைத்திருக்கிறோம்! நமக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!!

சன் நெட்வொர்க் மற்றும் அவர்கள் தொடர்புடைய அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் எப்படியெல்லாம் தவறாக, கிரிமினல்தனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை இந்த வலைப்பூவில் நாம் ஏற்கெனவே அலசியிருக்கிறோம்.

இப்போது மீண்டும் ஒரு முறை நமது வாதங்களுக்கான ஆதாரங்களை சன் குழுமத்தினரே உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

காதலில் விழுந்தேன் என்ற மட்டமான மூன்றாம் தர படத்துக்கு சன் டிவியும் அதன் சார்பு மீடியாவும் செய்கிற விளம்பரத்தைப் பார்க்கும்போதுதான் மீடியா உலகின் கேவல நிலையும் கயமைத்தனமும் பலருக்கும் புரிய வந்துள்ளது.

இந்தப் படத்தை மதுரையிலும் ராமநாதபுரத்திலும் ரிலீஸ் செய்ய விடவில்லையாம் அழகிரியின் ஆதரவாளர்கள். நல்ல வேளை, ஒரு பெரிய கொடுமையிலிருந்து அந்த இரு மாவட்ட மக்களையும், அவர்களின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் காப்பாற்றியிருக்கிறார் அழகிரி!

இதற்காக இவர்கள் குய்யோ முறையோ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வைக்கும் 'செய்தி ஒப்பாரி' இருக்கிறதே... சகிக்கலை!

அதேநேரம் இது இந்திய அரசியல் சாசனம் மீடியாவுக்கு வழங்கியுள்ள உரிமைகளை சன் நிறுவனம் எ்படியெல்லாம் மீறுகிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

சன் நிறுவனம் மத்திய அரசிடமிருந்து செய்தி ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஒரு மிகப் பெரிய ஊடகம். செய்தி என்ற பெயரில் யாரும் எதை வேண்டுமானாலும் தொலைக்காட்சியில் வாசித்துவிட முடியாது. அதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகள், சட்ட விதிகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டு செய்தி ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள சன் தொலைக்காட்சி, இப்போது மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறது பாருங்கள்.

ஒரு மூன்றாம் தர படத்தை இவர்கள் வாங்கிவிட்டார்கள் என்பதற்காக, தலைப்புச் செய்தியிலேயே, 'காதலில் விழுந்தேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி, மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்', என்றெல்லாம் செய்தியாகவே தருகிறார்கள்.

விளம்பரம் என்ற பெயரில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தப் படத்தின் டிரெயிலர், பாட்டு என படுத்துகிறார்கள். நிமிடத்துக்கொரு முறை விளம்பரம் செய்துவிட்டுப் போகட்டும், நமக்கென்ன... ஆனால் ஒரு உண்மைச் செய்தியாகவே இதைத் திணிக்க முயற்சிப்பது எத்தனை பெரிய குற்றம்?

தனது சொந்த லாபத்துக்காக, மக்களின் பாக்கெட்டைச் சுரண்டுவதற்காக, பாரபட்சமில்லாமல் உண்மைத் தகவல்களை மட்டுமே செய்தியாகக் கூறவேண்டிய முக்கிய நேரத்தில், நன்கு தெரிந்தே ஒரு பெரும் பொய்யைக் கூறிக்கொண்டிருக்கும் சன் டிவியை, மத்திய அரசு மனது வைத்தால் முழுமையாக முடக்கிவிட முடியும்.

இதுகுறித்து, மாநில அரசின் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி ஒரு கடிதம் எழுதினாலே போதும். ஆனால் செய்வார்களா...? நிச்சயம் மாட்டார்கள். அதுதான் அவர்கள் குடும்பத்துக்கே உரிய அரசியல் ஸ்டைல்!

அழகிரி மேட்டருக்கு வருவோம்...

இந்தப் படம் மதுரையிலும் பிற தென் மாவட்டப் பகுதியிலும் ரிலீஸ் ஆகவிடாமல் அழகிரி தடுப்பதாக சன் டிவி, தினகரன் செய்திகள் உளறுவது போதாதென்று, அந்தப் படத்தின் இயக்குநரை விட்டு பத்திரிகைகளுக்கும் செய்தி கொடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

நாம் அழகிரி அல்லது அவரது ஆட்கள் செய்வதை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அழகிரிக்கு எதிராக ஆதாரமிருந்தால் போலீசுக்குப் போக வேண்டியதுதானே, சன் நிறுவனம்?
அட கருணாநிதியின் போலீஸ் மீது நம்பிக்கை இல்லையென்ற வைத்துக் கொள்வோம்... கோர்ட்டுக்குப் போகலாமே.

அதைவிட்டுவிட்டு, வடிவேலுவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் விஜய்காந்த், தன் கட்சியின் பெயரைக் கூட மறந்துவிட்ட சரத்குமார், மகனைக் கண்டிக்க வக்கற்ற ராஜேந்தர்... அட நேற்று வரை கருணாநிதியின் வீட்டு வாசலில் பழியாய் கிடந்துவிட்டு, இன்று முறுக்கிக் கொண்டு அவரது எதிரிகள் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து வெட்டிப் பஞ்சாயத்துப் பேசிக்கொண்டிருக்கும் விளங்காத கம்யூனிஸ்டுகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்..?

விதி வலியது.... இதே சன் நிறுவனம், ரஜினியின் குசேலன் படத்தைத் தங்களுக்குத் தரவில்லை என்ற கடுப்பில் எப்படியெல்லாம் அந்தப் படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள்...! விநியோகஸ்தர்களை, தியேட்டர்காரர்களைத் தூண்டிவிட்டார்கள்?

அன்று அவர்கள் குசேலனுக்கு எதிராக விதைத்தை வினையை அறுவடை செய்யும் நேரமல்லவா இது!

பிரஸ் கவுன்சில் மற்றும் மத்திய அரசிடம் சன்னுக்கு எதிரான ஆதாரங்களை இப்போதாவது சமர்ப்பிக்கவேண்டும்.

செய்யுமா தமிழக அரசு?

Wednesday, September 10, 2008

இரு பொய்யர்களின் மோதல்!


தினமலரும் சன் டிவியும் ஆரம்பத்திலிருந்தே மோதி வருகின்றன. ஒருவர் அந்தரங்கத்தை (அசிங்கத்தை) மற்றவர் அம்பலப்படுத்தி, தமிழ் மக்களுக்கு தங்கள் சுய முகங்களை வெளிப்படுத்தி வருகின்றன.

ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்வதில் இரு நிறுவனங்களுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

குசேலன் நஷ்டம்... மாபெரும் நஷ்டம், மக்கள் பார்க்க வரவில்லை என எழுதியும் பேசியும், தியேட்டர்காரர்களைத் தூண்டிவிட்டும் தன் வயிற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டன சன்டிவியும் அதன் சகோதர பத்திரிகைகளும்.

ஆனால் இன்றைக்கு சன் டிவியில் காமெடி, சிறப்புக் காட்சிகள், பாடல்கள், டாப் டென் என சகலத்திலும் குசேலன்தான் முன்னிலையில் இருக்கிறது.

மக்கள் பார்க்காத படம் என்று பிரச்சாரம் செய்துவிட்டு, இன்று அதே படக்காட்சிகளை கசாப்புக் கடைக்காரன் மாதிரி கூறுபோட்டு விற்று காசு பார்த்துக் கொண்டிருக்கிறது சன் டிவி.
அதேபோல தினமலர் நிர்வாகிகள் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது சன் நிர்வாகம், தினகரன் நாளிதழை தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்ததிலிருந்து. தினமலர் ரமேஷ் எந்த ஓட்டலில் தண்ணியடிக்கிறார் என்பதில் தொடங்கி, அவர் யார் யாரிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது வரை அந்தரங்கமான பல விஷயங்களை அம்பலப்படுத்தி வருகிறது சன்.

இதற்கு சாட்சிகளைத் தயார் செய்வதிலும் கில்லாடித்தனமாக செயல்படுகிறார்கள் சன் குழுமத்தினர்.

அதற்கு நிகராக, சன் நிர்வாகம் மற்றும் அதனைச் சார்ந்தவர்களின் ஊழல்களைப் பட்டியலிடுகிறது தினமலர்.

இப்படி பரஸ்பரம் குற்றச்சாட்டிக் கொண்டிருந்தாலும் இதுவரை ஒருவர் மீது ஒருவர் நேரடியாக போலீஸ் புகார் வரை போகாமலிருந்தனர்.

இதன் அடுத்த கட்டம், நபிகள் நாயகத்தை தினமலர் மோசமாகச் சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்துவிட்டது என்ற பிரச்சாரத்தை சன் டிவி தொடங்கியது. ஒரு நாளைக்கு நூறு முறையாவது இந்தச் செய்தியை ஒளிபரப்பியபடி இருந்தனர் சன் தரப்பில்.
இது தினமலருக்கு எதிராக வட மாவட்ட முஸ்லிம்கள் போராட்டம் நடத்தும் அளவுக்குப் போய்விட்டது.

இப்போது, மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் சன் டிவி செயல்பட்டு வருவதாக தினமலர் போலீஸில் புகார் கொடுத்துள்ளது.

சன் செய்தி ஆசிரியர் ராஜா, சன் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கவும் முடிவு செய்து களமிறங்கியுள்ளது போலீஸ்.

முதல்வர் கலைஞருக்கும் தினமலர் ஆகாத பத்திரிகைதான் என்றாலும், இப்போதைக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கையின் அடிப்படையில், போலீஸின் இந்த நடவடிக்கைக்கு கலைஞர் ஆசி உண்டென்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

இன்னும் சில தினங்களில் இது மிகப் பெரிய மீடியா யுத்தமாகவும் வெடிக்கக் கூடும்.

பத்திரிகை வாங்கமாலேயே நமக்கும் பொழுதுபோகும்!

தினமலர் கொடுத்த போலீஸ் புகார் குறித்த செய்தி:

வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வெளியானது தொடர்பாக பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி ஒளிபரப்பியதாக சன் டிவி மீது தினமலர் நாளிதழ் புகார் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சன் டிவியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வத்தை போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.

தினமலர் நாளிதழின் (சென்னை எழும்பூர் அலுவலகம்) செய்தி ஆசிரியர் பார்த்திபன் சென்னை காவல்துறை ஆணையர் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம் ஒன்று வெளியானது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்த பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.


ஆனால் இது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில், சன் டிவி செய்தி வெளியிட்டது. இது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல் ஆகும். இதுதொடர்பாக சன் டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.

இந்தப் புகார் மனு மீது அரசு வக்கீலின் ஆலோசனை பெற்று சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், 153-ஏ, 505-2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலில் செய்தி ஆசிரியர் பார்த்திபனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாதான் செய்திகளுக்கு முழுப் பொறுப்பு என்று பார்த்திபன் போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ராஜாவுக்கு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பினர். ஆனால் ராஜா வரவில்லை.


இந்த நிலையில் சன் டிவி சார்பில் நேற்றுமத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு கடிதம் தரப்பட்டது. அதில், செய்திகளுக்கு ராஜா பொறுப்பில்லை. நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம்தான் பொறுப்பு என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து முரசொலி செல்வத்திடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது.

முரசொலி செல்வம், மறைந்த முரசொலி மாறனின் தம்பி ஆவார். இவர் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தட்ஸ்தமிழ்

Sunday, August 31, 2008

விகடன் சர்வே – எங்கே நடுநிலை?


‘என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள்... துடைத்துப் போட்டு விடுகிறோம். எங்களிடம் இருக்கவே இருக்கிறது நடுநிலை எனும் முகமூடி. ரஜினியை அட்டையில் போட்டு காசு சம்பாதிக்க இதைவிட மிகச் சிறந்த ஆயுதம் எங்களிடம் இல்லை...’ என மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லியிருக்கிறது விகடன் குழுமம், ரஜினி பற்றிய ஒரு அரைவேக்காட்டு சர்வேயை நடத்தியதன் மூலம்!

விகடனைத் திட்டுவதல்ல நமது நோக்கம்... ஆனால் இவர்கள் நடத்துவதுதான் பத்திரிகை, அதற்குப் பெயர்தான் பத்திரிகை தர்மம் என்று பிதற்றித் திரிகிறார்களே... அதைத் தோலுரிக்காமல் இருக்க முடியாதல்லவா?

ஒரே ஒரு சின்ன கேள்வியில் அம்பலப்பட்டு விடுகிறது விகடனின் அரைவேக்காட்டுத்தனம்...

ரஜினி அரசியலுக்கு வரலாமா... வேண்டாமா?

இந்தக் கேள்வியை அவர்கள் கேட்க வேண்டியது யாரிடம்? ஓட்டுப் போட்டு அரியணைக்கு அமர்த்தப் போகிற வாக்காளர்களிடம்...

ஆனால் இவர்கள் நடத்திய சர்வேயில் வாக்களித்தவர்களில் பெரும்பான்மை வாசகர்கள் யார் தெரியுமா? இணையத்தில் வக்கிரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் வாசகர்கள். (சற்று கடுமையான வார்த்தைப் பிரயோகம். எல்லோருக்கும் இது பொருந்தாதுதான்... ஆனால் வேறு வழியில்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு, உதைக்க உடனடியாக யாரும் வரமாட்டார்கள் எனும் தைரியத்தில், ரஜினியைப் பற்றி கேவலமாக விமர்சிக்கும் கும்பல் மட்டுமே அதிகம் பங்கேற்ற கருத்துக் கணிப்பு இது!)

இவர்கள் முழுமையாக அல்லது பெரும்பாலும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். விகடனை இதழாக வாங்கிப் படிக்க முடியாமல் ஆன்லைன் சந்தா செலுத்தி படிப்பவர்கள். தேர்தலுக்காக நேரில் வந்து வாக்களிக்கும் வாய்ப்பற்றவர்கள். ஆக, நியாயமாக இவர்கள் விகடனுக்குப் போட்டிருக்கும் ஓட்டே செல்லாதது!

சாவடிக்கு வந்து வாக்களிக்க வக்கில்லாதவர்கள்தான், இந்த நாட்டின் அரசி யலைப் பற்றியும், ஆட்சி முறைப் பற்றியும் வாய் கிழியப் பேசுகிறார்கள்.

‘தேர்தல் வந்துடுச்சா... ஒரு நாள் லீவு கிடைச்சதுதான் லாபம்’ என்று கூறி வீட்டுக்குள்ளே மனைவியை விதவிதமாக சமைக்கச் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தீர்த்தவாரி நடத்தும் ஹைகிளாஸ் குடிகார கூட்டத்தின் கருத்தை பொதுமக்கள் மீது திணிக்கும் முயற்சி இது.

அல்லது, தங்களால் நேரடியாகச் சொல்ல முடியாத விஷயத்தை, வாசகர்கள் கருத்துக் கணிப்பு என விகடனே நடத்துகிற திணிப்பு.

இந்த சர்வேயில் விகடன் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்திலும் விஷமத்தனம் ஒளிந்திருப்பதை, சாதாரணமாக நாள், வார இதழ்களைப் படிக்கும் ஒவ்வொருவராலும் உணர முடியும்.
கன்னடர்களிடம் எந்தக் கட்டத்திலும் மன்னிப்புக் கேட்கவில்லை ரஜினி. அவர் வார்த்தைகளில் சொன்னால் 'It is just a clarification to the people of Karnataka!'.

ஆனால் இவர்களோ இரண்டு கேள்விகளில் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாகவே எழுதியுள்ளனர்.

மன்னிப்புக்கும் வருத்தத்துக்கும் வித்தியாசம் என்னவென்று விகடனுக்கு தெரியவில்லையோ? கொஞ்சம் பிளாஷ்பேக்கை ஓட்டிப்பாருங்க...

1996-ல் ஜெயலலிதாவின் பாதாரவிந்தங்களில் விழுந்து பணிந்தார்களே... இந்த விஷக் குழுமத்தினர், அதற்குப் பெயர்தான் மன்னிப்பு... சமீபத்தில் ஜெயமோகனிடமும் எம்ஜிஆர் பக்தர்களிடம் அசடு வழிந்து நின்றார்களே அதற்குப் பெயர் வருத்தம் (விரிவாக ஆதாரங்களுடன் ஒரு பதிவு தயாராக இருக்கிறது!).

சூப்பர்ஸ்டார் ரஜினி இப்படி எந்தக் கேவலமான செயலையும் செய்யவில்லை என்பதை விகடனுக்கு இன்னும் எப்படி விளக்கிச் சொல்வது?

சரி... ஆன்லைன் வாக்களிப்பைத்தான் குறை சொல்கிறீர்கள்... ஊர் ஊராய் போய் கணித்தார்களே அது கூடவா தவறு? என அடுத்த கேள்வி உங்கள் மனதில் எழுகிறதல்லவா...

இதோ அவர்கள் கருத்து சேகரித்த லட்சணம்...

இதற்காக அமைப்பு ரீதியான எந்தக் குழுவும் ஊர் ஊராகச் செல்லவில்லை. குறிப்பிட்ட சில ஊர்களிலிருக்கும் விகடன் ஏஜென்டுகளும், லோக்கல் நிருபர்களும் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களின் அடிப்படையில் இவர்களாகவே ஒரு கணிப்புக்கு வந்திருக்கிறார்கள்.


கரூரிலிருக்கும் என் நண்பர் ஒருவர் மட்டுமே 10 படிவங்களை நிரப்பிக் கொடுத்திருக்கிறார்!
இப்படி கணிக்க என்ன Research Methodology-ஐ உபயோகித்தார்கள், Sampling கருவிகள் என்ன... ம்ஹூம்...

'அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? ரஜினி பெயரில் என்ன போட்டாலும் வாங்கிப் படிக்கிறீர்கள் அல்லவா... பிறகென்ன... நாளையே, 'ரசிகர்களைக் காக்க தேர்தல் களத்தில் ரஜினி', என ஒரு கவர் ஸ்டோரி போட்டால் போகிறது!' - இதுதான் விகட மனோபாவம்.

ரஜினிக்கு பகிரங்க கடிதம் என யாரோ ரசிகரின் பெயரில் எடிட்டோரியல் குழுவே ஒரு மொட்டைக் கடிதம் எழுதிய பிறகு, இவர்களிடம் என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்! நியாயமாக இவர்கள் மீண்டும் ஒருமுறை ரஜினி பெயரைக் கூட அச்சடிக்க அருகதையற்றவர்கள்.

‘ரஜினி நின்றாலும் செய்தி, நடந்தாலும் செய்தி....’ – சர்வே கட்டுரை ஆரம்பத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வாக்கியம் இது.

அது தெரிந்துதானே கடந்த 15 வருடங்களாக ரஜினி நாமத்தை ஜெபித்தபடி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

இவர்களுக்குத் துணிச்சலிருந்தால்,

யார் அடுத்த முதல்வர்- அழகிரியா? ஸ்டாலினா?

ஒகேனக்கல் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி அடித்த பல்டி சரியா?

பொய்களை உண்மை போலவே பரப்புவதில் சன் குழுமத்துக்கு நிகர் எது?


இப்படி ஒரு பத்துக் கேள்வியை வரிசைப்படுத்தி, அட குறைந்த பட்சம் அறிவிப்பாவது செய்து பார்க்கட்டும்.

அடுத்த நாள், விகடன் ஒளித்திரையை இருட்டிப் போகச் செய்திருப்பார்கள் மாறன்கள்...
கருணாநிதி கவிதை வடிவில் சாபம் கொடுத்திருப்பார்... அதற்கும் முன்பே அதைப் படிக்கக்கூட அவகாசம் தராமல் அழகிரியும் ஸ்டாலினும் விகடன் அலுவலகத்தை காலி செய்திருப்பார்கள்...!!

Saturday, August 23, 2008

குசேலனுக்கு எதிராக ஒரு விஷ (சன்) நெட்வொர்க்!


கோயபல்ஸை நம்மில் யாரும் பார்த்ததில்லை... சன் - தினகரன் குழுமத்தினர் பெரிய மனது பண்ணி அந்த விஷ மனிதனின் வாரிசுகளாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தினகரன் குழும இதழ்கள் சன் நெட்வொர்க்குக்கு கை மாறியபோது ஒரு வாரப் பத்திரிகை இப்படி எழுதியிருந்தது.

“ஏற்கெனவே சாராயத்தைக் குடித்த குரங்கை ஒரு குளவியும கொட்டிவிட்டால் எப்படியிருக்கும்.... அப்படி ஒரு ஆட்டத்தை இனி இந்த குழுமம் தமிழகத்தில் நிகழ்த்துவதைப் பார்க்கலாம். சக பத்திரிகைகளான தினத்தந்தி, தினமலருக்கு மட்டுமல்ல... ஒட்டு மொத்த பத்திரிகை உலகத்துக்குமே ஒரு அபாய மணியாகத்தான் இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது...”

கிட்டத்தட்ட அதை 100 சதவிகிதம் உறுதிப்படுத்தி வருகிறார்கள் சன் குழுமத்தினர். கோயபல்ஸ் பிரச்சாரம் என்ற வார்த்தை திமுக முகாம்களில் அடிக்கடி பிரயோகிக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த ஒரிஜினல் கோயபல்ஸ் வாழ்ந்தது ஹிட்லர் காலத்தில். இந்த தலைமுறை அவனைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைத்துள்ளது சன் நெட்வொர்க்.

ஒரே பொய்யை தன்னிடம் உள்ள அத்தனை வித மீடியா மூலமாகவும் உண்மை போலவே ஜோடனை செய்து வெளிப்படுத்தும் இவர்களது டெக்னிக்கைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அந்த ஒரிஜினல் கோயபல்ஸே வெட்கித் தலைகுனிந்திருப்பார்.

அறவழிப் போராட்டமாவது செய்யுங்கள்!

இனி ரஜினி படங்கள் தங்கள் தொலைக்காட்சிக்கு கிடைக்காது என்ற உண்மை ஒருபக்கம், கலைஞருக்குப் பிந்தைய வெற்றிடம் ரஜினிக்காக என்று ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்... இப்படி அவர்களின் நடவடிக்கைகளுக்கு சுயநல காரணங்கள் நிறைய.
எனவே இவர்கள் செய்தியைப் பார்த்து நண்பர்கள் மனக் கவலையடைவதை விட, அறவழிப் போராட்டம் எதையாவது உடனே செய்யலாம்.

குசேலன் விவகாரம் நிஜமாகவே தீர்ந்து விட்டாலும் கூட, இவர்கள் வேண்டுமென்றே அதைக் கிளறிக் கொண்டுதான் இருப்பார்கள்.

முதல் நாள் 40 கோடி நஷ்டம் என்று தியேட்டர்காரர்கள் சொன்னதாகப் போட்டார்கள். இப்போது 40 கோடி, 7 கோடியாகக் குறைந்திருக்கிறது. வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ரஜினி சிறப்புப் பேட்டி கொடுக்க ஒப்புக் கொண்டால், குசேலன், குபேரனாகிவிடும்! நஷ்டப் பழி போயே போய்விடும்!!

ஊரெல்லாம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகப் பிதற்றும் பத்திரிகைகள் தங்களுக்குள்ளேயே பெரும் பயங்கரவாதியாய், சமூகத்தை அரிக்கும் கிருமியாய் உருவெடுத்து வரும் இந்த மோசமான பத்திரிகை பயங்கரவாதத்தை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறார்கள்?
குறைந்தபட்சம் எதிர்த்து, கண்டித்து ஒரு எடிட்டோரியல் எழுதும் தைரியமாவது இவர்களுக்கு உள்ளதா...(சோ விதிவிலக்கு)?

காலை விடிந்ததிலிருந்து இரவு முடியும் வரை ரஜினி படங்கள், ரஜினி பாடல்கள்,. ரஜினி பட காமெடி என்று கல்லா கட்டும் இவர்கள், அடுத்து தங்கள் செய்திகளில் அவதூறு பரப்பவும் அதே ரஜினி தலையைத்தான் உருட்டுகிறார்கள்.

பால் கொடுத்த தாயின் மார்பை அறுத்துப் பார்க்கும் ஈன புத்திக்காரர்களுக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கும் வித்தியாசம் ஏதாவது உள்ளதா...?

இவர்களுக்கு பாடம் புகட்ட, ரசிகர்களுக்கு உடனடித் தேவை நிறைய அழகிரிகள்!

ரஜினியிடமிருந்து ஒரு முடிவான ஆனால் பாஸிடிவ் பதில் வந்தால் போதும், அழகிரிகளுக்குக் கூட அவசியமிருக்காது!!