Friday, December 12, 2008

ஒரு தலைவனுக்காக இந்தத் தவம்...


தேசத்துக்காக
தலைவன் காத்திருந்தது ஒரு காலம்...
உன் வருகை அந்த பழைய
சரித்திரத்தை மாற்றியிருக்கிறது...

இதோ
உன்னைத் தலைவனாகக் காண
இந்த தேசம் காத்திருக்கிறது...

இந்தப் பிறந்த நாள்
மக்களின் புதிய நம்பிக்கைகள் பலிக்கும்
துவக்க நாளாக அமையட்டும்...!

இது வழக்கமான வாசகமாக இருக்கலாம்...
ஆனால் உனக்காகவே எழுதப்பட்ட வாசகம்;
தலைவா நீ விரும்பும்போதே வா...
தலைமைப் பீடம் தவம் கிடக்கிறது!!


-சங்கநாதன்

1 comment:

R.Gopi said...

தலைவா நீ வாழி பல்லாண்டு

12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி சிறப்புண்டு
12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி இடமுண்டு
இன்று என் தலைவனின் பிறந்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

நிலவை காட்டி சோறு ஊட்டினாள் அன்று
திரையில் உன்னை காட்டி சோறு ஊட்டுகிறாள் இன்று

உலகெங்கும் உன் படம் அனைவரையும் வசீகரிக்க
சிறியோரும், பெரியோரும் அதைக்கண்டு குதூகலிக்க
உன் படம் வரும் நேரமே பாரெங்கும் பண்டிகையாம்

உன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள நல்ல பல விஷயங்கள் உண்டு - ஆகவே என் குரு நீ
நல்ல பல விஷயங்களை போதித்ததால் - என் ஆசிரியனும் நீ
வழிநடத்திச் செல்வதால் - தலைவனும் நீ

துணிந்தபின் உனக்கு அரியணையே இலக்கு
இன்று எங்கள் இதய சிம்மாசனம் - முடிவெடு
நாளை இந்நாட்டின் சிம்மாசனம்

வாழிய நீ பல்லாண்டு

ஆர்.கோபி,லாரன்ஸ் ‍ துபாய்