Showing posts with label Birthday Specials. Show all posts
Showing posts with label Birthday Specials. Show all posts

Wednesday, December 17, 2008

இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

நாம் முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்க வேண்டும் என்று 'பக்கா'வாகக் கணித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. எந்த முடிவு எடுப்பதானாலும் கொட்டினோம், கவிழ்த்தோம் என்று பரபரக்கச் செய்ய மாட்டார். நிதானமாக, நன்கு யோசித்துத்தான் முடிவெடுப்பார்…

-ரஜினிக்கு இது யார் கொடுத்த சான்றிதழ் என்று யோசிக்கிறீர்களா...

இப்போது அவரைத் திட்டி எழுதி, தங்களது இருப்பை வெளிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள அதே விகடன் குழுமம்தான்.

நேரத்துக்கு ஒரு பேச்சு, ஆண்டுக்கு ஒரு நிலைப்பாடு என மாறிக் கொண்டே இருக்கும் இவர்கள், எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இயங்கும் ரஜினியை விமரிசிப்பதை என்னவென்று சொல்வது?

மதுரையில் நடந்த ஒரு விழாவில் ரஜினி பங்கேற்றுப் பேசியதை, ரஜினியின் பிறந்த நாளுக்காக தங்களது இலவச இணைப்பில் வெளியிட்டிருந்தனர்.

நியாயமாக இந்த வரிகளை அவர்கள்தான் தினசரி மனப்பாடம் செய்ய வேண்டும். தன் ரசிகர்களுக்கு ரஜினி தந்திருக்கும் இடம் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது விகடன் போன்ற பத்திரிகைகள்தான்.

அன்றும், இன்றும்... ‘என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களே...’ என்றுதான் ரஜினி அழைக்கிறார். இதை அவர் எப்போதும் மறக்கவில்லை. மீடியாதான் இந்த உண்மையை அடிக்கடி மறப்பதும், பின்னர் நினைவுக்கு வந்து தடுமாறுவதுமாக காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறது.

தன் ரசிகர்கள் குறித்து ரஜினி கூறிய வரிகள்:

"மதுரைக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய நட்பு உண்டு. நான் மதுரைக்கு முதன்முதலில் வந்தது 'மூன்று முடிச்சு' பட விழாவுக்கு. இதில் 'மூன்று' உண்டு. அதன்பின் 'திரிசூலம்' படத்தின் வெற்றி விழாவுக்கு வந்தேன். 'திரிசூலம்' - மூன்று சூலம். இதிலும் 'மூன்று' உண்டு.

பிறகு. 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவுக்கும் வந்தேன். இதிலும் 'மூன்று' உண்டு. மதுரை என்பதிலும் மூன்று எழுத்து. ரஜினி என்பதிலும் மூன்று எழுத்து. இப்படியாக எனக்கும் மதுரைக்கும் நெருங்கிய நட்பு உண்டு.

நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு அதிசயம். அதிலும் கதாநாயகன் அந்தஸ்து பெற்றது பெரிய அதிசயம். அதைவிட, ரசிகர்களாகிய உங்கள் உள்ளங்களை நான் வென்றது மிகப் பெரிய அதிசயம். இந்திப் படங்களில் நடிக்கச் சென்றதும் அதிசயம். அதன்பின் ஆங்கிலப் படத்தில் நடித்தது பேரதிசயம்.

நான் பிறந்தவுடன் டாக்டர்கள், 'இவன் பத்து நாள் கூடத் தாங்க மாட்டான். இறந்துவிடுவான்' என்று சொல்லிவிட்டார்களாம். நான் பிறந்த நட்சத்திரம் என்ன என்று எனக்குத் தெரியாது. 'மூன்று முடிச்சு' விழாவுக்கு வந்திருந்தபோது, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றேன்.

சக நடிகர்களெல்லாம் தங்கள் பிறந்த நட்சத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தார்கள். அர்ச்சகர் என்னிடம் 'உன் நட்சத்திரம் என்ன?' என்று கேட்டார். எனக் குத்தான் தெரியாதே! அப்போது என் நட்சத்திரம் என்ன என்று தெரியாது. இப்போது தெரிந்துவிட்டது'' என்று கூறவும், ரசிகர்கள் 'சூப்பர் ஸ்டார்' என்று உற்சாக மாகக் குரல் கொடுத்தனர்.

ரசிகர்களே என் தெய்வம்!

நான் ஒரு குதிரை மாதிரி. என் கண்மணிகளாகிய நீங்கள் என் மேல் அமர்ந்துள்ளீர்கள். எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குதிரைமேல் சாமியை வைத்து ஊர்வலம் வந்தார்கள். வரும் வழியில் எல்லோரும் வணங்கினார்கள். உடனே குதிரைக்குக் கர்வம் வந்துவிட்டது, எல்லோரும் தன்னை வணங்குகிறார்களே என்று!

கோயில் வந்ததும், சாமியை உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்கள். அப்புறம் யாரும் குதிரையை மதிக்கவில்லை. அதுபோலத்தான் நானும்! ரசிகர்களாகிய நீங்கள் இருக்கும் வரைதான் எனக்கு மரியாதை...!"

ஆக, ரஜினி அன்று சொன்னதை இன்று வரை காப்பாற்றி வருகிறார். ‘தலைவா எங்களுக்காக என்ன செஞ்சீங்க?’ என்று தன் ரசிகன் தன்னை நேருக்கு நேர் பார்த்துக் கேட்கும் அளவு அவர்களை சமமாக நடத்துகிறார். அந்த நேர்மையும் சத்தியமும் ரஜினிக்கு இருக்கிறது.

ஆனால் 15 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கும் தங்கள் வாசகர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி, யார் பக்கமும் சாயாமல், நடுநிலையாகச் சொல்லும் தொழில் தர்மமும், நேர்மையும் விகடனுக்கு இப்போது இருக்கிறதா?

-வினோஜாசன்

www.envazhi.com

Tuesday, December 16, 2008

ரஜினி: உலக சினிமாவுக்கு இந்தியா தரும் பதில்!!

ந்தக் கேள்விக்கு ஆயிரத்தெட்டு வியாக்கியானங்கள் தரும் நபர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை ஒன்றை ஜீ குழும இணையதளம் வெளியிட்டுள்ளது.

என்னதான் உலகத் தரத்தில் இருந்தாலும் உள்ளூர் சரக்குக்கு உரிய மரியாதை தாமதமாகவே கிடைக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ரஜினி பிறந்த இந்த தமிழ் மண்ணில் அவரை இன்னமும் விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்கள்த்தான், நல்ல பப்ளிசிட்டியோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருக்கவே இருக்கு வசதியாக அறிவுஜீவி முகமூடி!

ஆனால் வட நாட்டுப் பத்திரிகைகளோ ரஜினிதான் உலகுக்கு இந்திய சினிமாவின் முகம் என போற்றிப் புகழ்ந்த வண்ணம் உள்ளன.

என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் என வட இந்திய தொலைக்காட்சிகள், ‘இந்தியாவின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார் ரஜினிதான்’ என அழுத்தம் திருத்தமாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன.

பிரதமர் கையால் மிகச் சிறந்த கலைஞருக்கான விருதினையும் பெற வைத்தன. அந்த மேடையில் பிரதமர் முன்னிலையிலேயே ரஜினியின் பெருமைகளைப் பட்டியலிட்டார் என்டிடிவியின் பிரணாய் ராய் மற்றும் நிகழ்ச்சி நடத்துனர்கள்.

நடிப்புலகச் சக்கரவர்த்தி என அனைவரும் ஒருமித்த குரலில் கூறி ரஜினியை இந்த தேசத்தின் பெருமைக்குரிய குடிமகனாக பாராட்டின.

ஆனால் இங்குள்ளவர்களோ, இன்னமும் அவர் பிறந்த இடம் தேடி ‘மண் ஆராய்ச்சி’யில் இறங்குவதும், ரசிகர் மன்ற சந்திப்பில் என்ன குறை காணலாம் என்று பூதக்கண்ணாடியோடு அலைவதுமாய் திரிகிறார்கள்.

நல்லவர்களை, பெருமைக்குரியவர்களை மதிக்காத நாடு விளங்காது என மகாபாரதம் சொல்வதை இங்கே நினைவு கூறுகிறோம்.

ஜீ குழுமத்தின் www.zeenews.com இணைய தளத்தில் ரஜினியைப் பற்றி அங்கிதா சுக்லா என்ற செய்தியாளர், ரஜினி பிறந்த நாளுக்காக ஒரு சிறப்புக கட்டுரை எழுதியுள்ளார்.
அதன் ஒவ்வொரு வரிகளும் உண்மை ரசிகனை மட்டுமல்ல... ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பெருமிதம் கொள்ள வைக்கும்.

ரஜினி ஒரு சகாப்தம் – தலைவருக்கு வயது 59!

-இது கட்டுரையின் தலைப்பு.

‘எங்க ஊர் ஜேம்ஸ்பாண்ட் ரஜினி இருக்கும் போது, யாருக்கு வேணும் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட்?’ – இப்படித்தான் அந்தக் கட்டுரையே ஆரம்பமாகிறது!

‘ரஜினி – உலக சினிமாவுக்கு இந்தியா வைத்துள்ள பதில்தான் ரஜினி! இவரது ஒவ்வொரு பட வெளியீடும் திருவிழாவை மிஞ்சும் உற்சாகத்துடன் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்படுகின்றன.

சிவாஜி – தி பாஸ் வெளியான போனது ரசிகர்கள் ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், தேங்காய்கள் உடைத்து திருஷ்டி கழித்து கொண்டாடிய விதமும், இந்த மனிதர் மக்கள் மீது எந்த அளவு ஆளுமை செலுத்துகிறார் என்பதைக் காட்டியது.

இந்த நாட்டின் ஒவ்வொரு சினிமா ரசிகனும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நேசிக்கும், ரசிக்கும் ஒரே மனிதர், சகாப்தமாகத் திகழும் கலைஞர் ரஜினி ஒருவர்தான்.
அவரது சண்டைக் காட்சிகள் உலகப் புகழ் பெற்றவை. நகைச்சுவை மிளிரும் அவரது வசனங்களுக்கோ ஜப்பான், சீனாவிலும் ஏராளமான ரசிகர்கள். மிகச் சிறந்த, தரமான பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் ரஜினியின் படங்கள்...

-இப்படி ஒரு அசத்தலான அறிமுகத்துடன் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில், ரஜினியின் வாழ்க்கையை ரத்தினச் சுருக்கமாக, எந்தப் பிழையுமின்றி அவர் சொல்லியிருக்கும் விதம் அட்சரலட்சம் பெறும்.

‘சீனாவை வென்ற ரஜினி!’ எனும் துணைத் தலைப்பில், சீனாவில் ரஜினி படங்கள் எப்படி ரசிக்கப்படுகின்றன என இந்தக் கட்டுரையாளர் எழுதியுள்ள விதம் சிலிர்க்க வைக்கிறது. சமீபத்தில் ரஜினியைப் பற்றி இதயப்பூர்வமாக எழுதப்பட்ட அருமையான கட்டுரை இது.

விரிவாக ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள அந்தக் கட்டுரையை படித்து ரசியுங்கள்.

இங்கே தரப்பட்டுள்ள தொடர்பை கிளிக் செய்யுங்கள்.
http://www.zeenews.com/entertainment/movies-theatre/2008-12-12/490352news.html



www.envazhi.com

இந்த ரசிகர்களால் ரஜினிக்கு என்றும் பெருமைதான்!

ண்ணாமலை படத்தில் வினு சக்கரவர்த்தி ஒரு வசனம் பேசுவார்...

‘அம்மா...புள்ளன்னு பெத்தா இப்படியொரு புள்ளையத்தான் பெக்கணும்...’ என்பார் சூப்பர்ஸ்டார் ரஜினியைக் காட்டி.

அதே பெருமை அவரது ரசிகர்களுக்கும் இப்போது கிடைத்திருக்கிறது.

'ரசிகன்னு இருந்தா இப்படியில்ல இருக்கணும!' என்று அனைவரும் பெருமையுடன் குறிப்பிடும் வகையில், அமைதியாக, ஆனால் அர்த்தத்துடன் செயல்படத் துவங்கிவிட்டனர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி பிறந்த நாளன்று இனிப்பு கொடுத்து பட்டாசு வெடிப்பதோடு நின்றுவிடாமல், மக்களுக்குப் பயன்தரும் பல்வேறு நலத் திட்டப் பணிகளில் தங்களை அவர்கள் ஈடுபடுத்திக் கொண்டு வருவது பெருமைக்குரிய விஷயம். ரஜினி விரும்பிய மாறுதல் அவரது ரசிகர்களிடம் உருவாகி வருகிறது என்பதன் அடையாளமாகவே இது பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் துன்புறும் இந்த வேளையில், தன் பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று ரஜினி கூறிய பின்னர் நடந்த விழாக்களே இப்படி இருந்ததென்றால், அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்திருந்தால்... இந்த தமிழகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை ரஜினியின் ரசிகர்கள் ஒரே நாளில் காட்டியிருப்பார்கள்!!

ஏழைக் குழைந்தைகளைத் தத்தெடுப்பது, கண் சிகிச்சை முகாம்கள், ரத்த தான முகாம்கள், அன்னதானம் வழங்குதல், பள்ளிச் சீருடை வழங்குதல், உலக அமைதிக்காக அமைதிப் பிரார்த்தனை, மும்பையில் வீர மரணமடைந்த ஜவான்களுக்கு மரியாதை செலுத்துதல்... என தமிழகம் ரஜினிமயமாகக் காட்சியளித்தது இந்த டிசம்பர் 12-ம் தேதி.

இந்த தகவல்களை முழுமையாக இனிவரும் பதிவுகளில் தருகிறோம்...
ரஜினிபேன்ஸ்.காம் ரத்த தான முகாம்!

ரஜினி ரசிகர்களுக்கென்று முதல்முறையாக துவங்கப்பட்ட தளம் www.rajinifans.com. உலகில் வேறு எந்த நடிகருக்காவது ரசிகர்கள் இப்படியொரு ‘பக்கா’ இணையதளத்தை உருவாக்கி, அதுவும் இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பார்களா... என்பது சந்தேகமே...!

இந்த இணையதளத்தின் சார்பில் சென்னை பரங்கிமலை, மவுண்ட் மெடிக்கல் சென்டரில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்திருந்தனர். ரஜினிபேன்ஸ் தளத்தின் நிர்வாகி ஜெ.ராம்கி தலைமையில் 33 பேர் ரத்த தானம் அளித்தனர்.

தொடர்ச்சியாக 4-ம் ஆண்டாக இந்த ரத்த தான முகாம் மிகச் சிறப்பான முறையில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டு தளபதி சத்தியநாராயணா கலந்து கொண்டு பாராட்டும் அளவுக்கு சிறப்பாக நடந்த நற்பணி இது.

மவுண்ட் மெடிக்கல் சென்டர் டாக்டர் சச்சிதானந்தம் மேற்பார்வையில், மிகப் பாதுகாப்பான முறையில் ரத்தம் பெறப்பட்டு, அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிகழ்வில் நாம் பார்த்து பெருமைப்பட்ட விஷயம், வந்திருந்த ரசிகர்களின் வயது மற்றும் அவர்கள் காட்டிய உணர்வு. வேறு எந்த நடிகரின் ரசிகர்களுக்கும் இப்படியொரு உணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. இன்னும் கல்லூரிப் பருவம் கூடத் தாண்டாத இந்த இளம் நண்பர்கள், தங்கள் தலைவர் ரஜினி மீது உயிரையே வைத்திருப்பது பிரமிக்க வைத்தது.

ரஜினியே சொல்லியிருப்பது போல... இப்படிப்பட்ட அருமையான இளைஞர்களை மிகச் சரியாக வழிநடத்த வேண்டியது அவசியமல்லவா... அந்த பொறுமையும், பண்பும், ஆளுமையும் இன்று ரஜினிக்கு மட்டுமே உண்டு!

http://www.envazhi.com

Pics: www.rajinifans.com

Sunday, December 14, 2008

ரஜினி பிறந்த நாளும் ஊடகங்களும் - 1

து ஒரு சிறந்த கட்டுரை என்று இங்கே பிரசுரிக்கவில்லை. ரஜினி பிறந்த நாளில் தமிழ் அச்சு ஊடகங்கள் ரொம்பத்தான் 'பிகு' பண்ணிக்கு கொண்டன.

அவரது பிறந்த நாள் குறித்த செய்திகளை முன்னணி நாளிதழ்கள் வெளிவராமல் பார்த்துக் கொண்டன. ஏதாவது ஒரு கரை வேட்டியைக் கட்டிக் கொண்டு அலையும் அவர்களைச் சொல்லி என்ன ஆகப் போகிறது. இந்த விஷயத்தில் ஆங்கிலப் பத்திரிகைகள் ரஜினி பிறந்த நாளுக்கு சிறப்புப் பக்கம் போடுமளவுக்கு தங்களை மேம்படுத்திக் கொண்டுள்ளன. மக்களின் விருப்பம் புரிந்து இயங்கினால்தானே சர்க்குலேஷன் கூடும்? (தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்துமே சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிறப்பு மலர்கள் வெளியிட்டவைதான். அதிலும் தினகரனும், தினமலரும்...)


இணைய தளங்கள் இன்னும் கரை வேட்டி மனோபாவத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. பிரச்சினையென்றால் குறிப்பிட்ட கட்டுரையை உடனடியாகத் தூக்கிவிடுகிற வசதியால் வந்த தைரியம் போலிருக்கிறது!

வெப்துனியா சமயம் கிடைத்த போதெல்லாம் ரஜினியைக் குத்திப் பார்க்கும் கீழ்த்தரமான வேலையைச் செய்ததுதான்.

இப்போது ரஜினி பிறந்த நாளுக்காக ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஜஸ்ட்... உங்கள் பார்வைக்காக!



ர‌ஜினி 58 – முள்ளும் மலர்களும்

ர‌ஜினிக்கு இன்று 58 வது பிறந்த நாள். நடிகர் என்ற அடையாளத்துக்கு மேலாக அவரது பெயர் தமிழகத்தில் உருவாக்கியிருக்கும் தாக்கம் ஆச்ச‌ரியமானது. ர‌ஜினியின் பிரபல்யத்தை தனிப்பட்ட சாதனையாக ஏற்க மறுப்பவர்களுக்கும் வியப்பளிக்கக்கூடிய புதிர் அது. சிவா‌ஜிராவ் கெய்க்வாட் ர‌ஜினியாக ப‌ரிமாணம் அடைந்த நெடுங்கதையின் சாராம்சத்தில் ஒருவேளை இந்த புதிருக்கான விடையை ஒருவர் கா‌ண‌க்கூடும்.

பொருளாதார நெருக்கடியால் இடப்பெயர்வுக்கு நிர்ப்பந்திக்கப்ப‌ட்ட குடும்பம் ர‌ஜினியுடையது. மராட்டிய மன்னர் சிவா‌ஜியின் பாதுகாவலர்களின் வா‌‌ரிசுகளில் சிலர் கர்நாடாகாவுக்கு குடிபெயர்ந்தனர்.. சிலர் கிருஷ்ணகி‌‌ரி அருகிலுள்ள நாச்சிக்குப்பத்தில் குடியேறினர். அப்படி குடிபெயர்ந்து வந்த குடும்பத்தில் பிறந்தவர் ர‌ஜினியின் தந்தை ரானோ‌ஜிராவ் கெய்க்வாட். ர‌ஜினியை அவரது தாயார் ராம்பாய் நாச்சிக்குப்பத்தில் பெற்றெடுத்தார் என்பது சமீபத்தில் தெ‌ரியவந்திருக்கும் உண்மை. இதனை முன்னிறுத்தி தமிழின அடையாளத்தை அவர்மீது பூசும் வேலைகள் து‌‌ரிதப்படுத்தப்பட்டுள்ளது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் பரம்பரைக்கு ர‌ஜினியின் பூர்வீகம் குறித்த கவலை அவசியமற்றது. ரானோ‌ஜிராவுக்கு கர்நாடகா காவல்துறையில் வேலை கிடைத்ததை தொடர்ந்து கர்நாடகாவுக்கு மீண்டும் ஒரு இடப்பெயர்வை மேற்கொண்டது ர‌ஜினியின் குடும்பம்.

ர‌ஜினியின் நடத்துனர் வேலையும், அவரது சினிமா பிரவேசமும் அனைவரும் அறிந்தது. எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்த அற்புதமல்ல ர‌ஜினியின் திரை பிரவேசம். பசி, பட்டினி, அலைச்சல், அவமானங்கள், காத்திருப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் நிரம்பியது அவரது ஆரம்ப காலம். சினிமா பின்னணி வாய்க்கப்பெறாத ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் ர‌ஜினியும் எதிர்கொண்டார்.

கலைந்த சிகை, கறுத்த மேனி, அலட்சிய பார்வை, திரையில் அதுவரை பார்த்திராத ஸ்டைல் என ரசிகர்களை சுண்டி இழுத்தார் ர‌ஜினி. சினிமாவின் அழகியல் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட அவரை தங்களின் பிரதிநிதியாக பார்க்க தலைப்பட்டார்கள் சாதாரண ஜனங்கள். அவர்கள், ஆறிலிருந்து அறுபதுவரை, ப்‌‌ரியா, முள்ளும் மலரும் படங்கள் ரஜனியின் நடிப்புத் திறமைக்கு இன்றும் சான்றுகளாக திகழ்கின்றன.

இந்தப் பட்டியல் மேலும் வளராமல் நின்று போனதற்கு ஏவிஎம் தயா‌‌ரித்த முரட்டுக்காளைக்கு பெரும் பங்குண்டு. கதை நாயகன் கதாநாயகனாக மாற்றம் கொண்ட விபத்து இந்த காலகட்டத்தில்தான் நடந்தது. அதிலிருந்து இன்று வரை ர‌ஜினியால் மீண்டு வர முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

ரசிகர்கள், தயா‌‌ரிப்பாளர்கள் மற்றும் வியாபா‌‌ரிகளின் விருப்பத்திற்கேற்ப அவர் கட்டியெழுப்பிய கதாநாயக பிம்பத்திற்கு எதிராக செயல்பட்ட போதெல்லாம் அவருக்கு தோல்வியே ப‌ரிசானது. ராகவேந்திரராக அவர் நடித்த போதும், பாபாவில் சக்தி வேண்டி கடவுளிடம் கை ஏந்திய போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் அவரது ரசிகர்கள்.

இந்த இரு படங்கள் தவிர்த்து தனது ஆன்மீக ஈடுபாட்டை அனேகமாக அவர் யார் மீதும் திணித்ததில்லை. நான் யார் என்ற விடை தெ‌ரியாத கேள்வியை நோக்கியே அவரது

ஆன்மீகப் பயணம் இருந்து வந்திருக்கிறது. புகழின் உச்சியிலும் நிலைதடுமாறாத மனம், அவருக்கு கிடைத்த ஆன்மீக ப‌ரிசென்றால் அதில் மிகையில்லை. தனது தேடுதல் பயணத்தில் ராகவேந்திரர், அருணாச்சலேஸ்வரர், பாபா என பல தளங்களை கடந்து வந்திருக்‌கிறா‌ர் ர‌ஜினி.

பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதி‌‌ரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை.

மனோரமா, மன்சூர் அலிகான், வேலு பிரபாகரன் போன்றோர் அவரை விமர்சித்த போது ர‌ஜினியின் எதிர்தாக்குதல் அரவணைப்பாகவே இருந்ததை நாடறியும்.

இன்றைய தேதியில் அவரை தவிர்த்த தமிழக அரசியல் சாத்தியமில்லை. முத்து படத்தின்போது அவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு அவருக்கு எதிரான ஓட்டுகள் சிதறிப்போகாமல் ஓரணியில் திரள பெ‌ரிதும் உதவியது. இதனை ர‌ஜினியின் தனிப்பட்ட வெற்றியாக சோ போன்றோர் முன்னிறுத்தியது நாடாளுமன்ற தேர்தலிலேயே பொய்யாக்கப்பட்டது. வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிவிட்ட ர‌ஜினிக்கு அரசியலுக்கு‌‌ரிய பொறுமையும், சாதுர்யமும் கைவரப் பெறாததில் ஆச்ச‌ரியமில்லை.

திரையில் வரும் கதாநாயக பிம்பத்தை நிஜத்திலும் பேண வேண்டிய கட்டாயம் ர‌ஜினிக்கு முன்பு வரை இருந்தது. அந்த அவஸ்தையை உடைத்தெறிந்தவர் ர‌ஜினி. தனது வழுக்கை விழுந்த தலையை பொது இடங்களில் மறைக்க ஒருபோதும் அவர் முயன்றதில்லை.

ஆரம்ப காலத்தில் அவர்மீது படிந்த கலகக்கார சாயல் இன்று இல்லை. இன்று அவர் ஒரு ஆன்மீகவாதி. சிறந்த குடும்பத் தலைவர். சமூக ஒழுக்கங்களை மீறாத நல்ல குடிமகன். மரபான சமூக ஒழுக்கங்களின் நிழலில் பாதுகாப்பை தேடும் அனைத்து தரப்பினருக்கும் அவர் ஆதர்ஷ புருஷன். அவரை விரும்புவதன் மூலம் அந்த பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறது தமிழ் சமூகம்.

ர‌ஜினி என்பது இன்று ஒரு பெயர் மட்டுமல்ல. ர‌ஜினி என்பது ஒரு நபருமல்ல. அதையெல்லாம் தாண்டி அது ஒரு மிகை யதார்த்த பிம்பம். அந்த பிம்பத்திற்கு எதிராக ர‌ஜினியாலும் ஒன்றும் செய்ய இயலாது. ராகவேந்திரர், பாபா படங்கள் தோல்வி அடைந்ததற்கு இதுவே காரணம். ர‌ஜினி இல்லாமலே அவரது பெய‌ரில் கட்சி தொடங்குவதற்கும் காரணம் இதுவே.

இந்த பிம்பத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்கும் சிவா‌ஜி, எந்திரன் போன்ற படங்களையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்கிறார் ர‌ஜினி. சமூகத்தின் பிரக்ஞையில் பதிந்திருக்கும் அந்த பிம்பத்திற்கு இசைவாகவே குறைந்தபட்சம் தனது திரைவாழ்க்கையையாவது அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ர‌ஜினிக்கு இருக்கிறது. ஒரு ப்‌‌ரியா, ஒரு முள்ளும் மலரும், ஒரு ஆறிலிருந்து அறுபதுவரை அவரது வாழ்வில் இனி சாத்தியமா என்பது கேள்விக்குறி. குசேலனில் தன்னை சுற்றியிருந்த தங்க வேலியை நெகிழ்த்தும் சந்தர்ப்பம் ர‌ஜினிக்கு கிடைத்தது. அவர் விரும்பியும் அவரை சுற்றியிருந்த வியாபார நிர்ப்பந்தத்தால் அது முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.

ர‌ஜினிக்கு இன்று எதி‌‌ரிகள் யாருமில்லை. அவர் வெற்றி கொள்ள வேண்டியவர்கள் ஒருவருமில்லை. அவர் எட்ட வேண்டிய உயரங்களும் இல்லை. இன்று அவருக்கிருக்கும் ஒரே சவால், சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ர‌ஜினி என்ற பிம்பத்தை கடந்து வருவது. இதன் பொருள் தனது அடையாளத்தை அளிப்பதல்ல. ஒரே அடையாளத்தில் தங்கிப் போகாமல் இருப்பது.

இது சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியமே. ர‌ஜினியின் ஆதர்ஷ நடிகர் அமிதாப்பச்சனே இதற்கு சிறந்த உதாரணம். எத்தனையோ சவால்களை வெற்றி கொண்ட ர‌ஜினியால் இந்த சவாலையும் வெற்றி கொள்ள முடியும்.


மேலும், அடையாளங்களிலிருந்து மீள்வதுதானே உண்மையான ஆன்மீக விடுதலையும்கூட.
http://www.envazhi.com

Friday, December 12, 2008

தலைவருக்கு வாழ்த்து சொன்ன தலைவர்!

இன்று 58 வயது முடிந்து 59ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் சுல்தான் படப்பிடிப்பில் இருந்த ரஜினியை, தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதி வாழ்த்தினார்.

இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் உள்ள நிலையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததால், சற்று அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது ரசிகர்களுக்கு.

மேலும் ரஜினியும் இன்று சுல்தான் படப்பிடிப்புக்காக ஐதராபாத் போய்விட்டார். நேற்று பெங்களூரு போன அவர் தனது அண்ணனிடம் ஆசி பெற்றுக் கொண்டு ஐதராபாத் போய்விட்டார்.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி, ரஜினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அழகிரி - ஸ்டாலின் வாழ்த்து

முதல்வரின் மூத்த மகன் மு.க அழகிரி மற்றும் இளைய மகனும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஸ்டாலின் ஆகியோரும் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம்தெரிவித்தனர்.

சிரஞ்சீவி - சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரஜா ராஜ்யம கட்சித் தலைவர் சிரஞ்சீவி ஆகியோரும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

ப.சிதம்பரம்

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இன்று தனது வாழ்த்துக்களை பிறந்த நாள் காணும் ரஜினிக்குத் தெரிவித்துக் கொண்டார்.

இவர்களைத் தவிர இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினி்க்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

திரையுலகில் ரஜினிக்கு நெருக்கமான பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்க முயன்றதாகக் குறிப்பிட்டனர். இவர்களில் ஒரு சிலரால் மட்டுமே ரஜினியுடன் தொடர்பு கொள்ள முடிந்ததாம்.

தமிழகமெங்கும் நற்பணிகள் செய்த ரசிகர்கள்

சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தி.நகர் பகுதியில் ரஜினிகாந்த்தின் பிரமாண்ட கட் அவுட்டும் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கோவில்களில் விசேஷ வழிபாடுகள், பூஜைகளை நடத்தியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டும் கொண்டாடினர். எந்திரன் படம் வெற்றி அடைய வேண்டும் எனவும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இன்று மாலையிலும் பல்வேறு நல உதவி நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்துள்ளனர் ரசிகர்கள்.

தலைவருக்கு வாழ்த்து சொன்ன தலைவர்!

இன்று 58 வயது முடிந்து 59ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் சுல்தான் படப்பிடிப்பில் இருந்த ரஜினியை, தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதி வாழ்த்தினார்.

இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் உள்ள நிலையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததால், சற்று அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது ரசிகர்களுக்கு.

மேலும் ரஜினியும் இன்று சுல்தான் படப்பிடிப்புக்காக ஐதராபாத் போய்விட்டார். நேற்று பெங்களூரு போன அவர் தனது அண்ணனிடம் ஆசி பெற்றுக் கொண்டு ஐதராபாத் போய்விட்டார்.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி, ரஜினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அழகிரி - ஸ்டாலின் வாழ்த்து

முதல்வரின் மூத்த மகன் மு.க அழகிரி மற்றும் இளைய மகனும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஸ்டாலின் ஆகியோரும் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம்தெரிவித்தனர்.

சிரஞ்சீவி - சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரஜா ராஜ்யம கட்சித் தலைவர் சிரஞ்சீவி ஆகியோரும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

ப.சிதம்பரம்

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இன்று தனது வாழ்த்துக்களை பிறந்த நாள் காணும் ரஜினிக்குத் தெரிவித்துக் கொண்டார்.

இவர்களைத் தவிர இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினி்க்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

திரையுலகில் ரஜினிக்கு நெருக்கமான பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்க முயன்றதாகக் குறிப்பிட்டனர். இவர்களில் ஒரு சிலரால் மட்டுமே ரஜினியுடன் தொடர்பு கொள்ள முடிந்ததாம்.

தமிழகமெங்கும் நற்பணிகள் செய்த ரசிகர்கள்

சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தி.நகர் பகுதியில் ரஜினிகாந்த்தின் பிரமாண்ட கட் அவுட்டும் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கோவில்களில் விசேஷ வழிபாடுகள், பூஜைகளை நடத்தியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டும் கொண்டாடினர். எந்திரன் படம் வெற்றி அடைய வேண்டும் எனவும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இன்று மாலையிலும் பல்வேறு நல உதவி நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்துள்ளனர் ரசிகர்கள்.

ஒரு தலைவனுக்காக இந்தத் தவம்...


தேசத்துக்காக
தலைவன் காத்திருந்தது ஒரு காலம்...
உன் வருகை அந்த பழைய
சரித்திரத்தை மாற்றியிருக்கிறது...

இதோ
உன்னைத் தலைவனாகக் காண
இந்த தேசம் காத்திருக்கிறது...

இந்தப் பிறந்த நாள்
மக்களின் புதிய நம்பிக்கைகள் பலிக்கும்
துவக்க நாளாக அமையட்டும்...!

இது வழக்கமான வாசகமாக இருக்கலாம்...
ஆனால் உனக்காகவே எழுதப்பட்ட வாசகம்;
தலைவா நீ விரும்பும்போதே வா...
தலைமைப் பீடம் தவம் கிடக்கிறது!!


-சங்கநாதன்

அவர் பிறவியிலேயே தலைவர்தான்!! – சோ

ன்றைய நாளிதழ்கள் பெரும்பாலானவற்றில் முக்கியச் செய்தி ரஜினியின் பிறந்த நாள்தான்.
டெக்கான் கிரானிக்கிள் நாளிதழ், இரண்டாவது பக்கத்தை முழுமையாக ரஜினி ஸ்பெஷலாகவே வெளியிட்டுள்ளது.

ஆனால் அதில் முக்கிய கட்டுரையின் தலைப்புக்கும் உள்ளே எழுதப்பட்டுள்ள சமாச்சாரத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் வெளியிட்டுள்ளனர். ‘ரஜினி மேனியா’ எனத் தலைப்பிடப்பட்ட இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது என்னவோ ‘எந்திரனு’க்கு எதிரான செய்திகள்!

அடுத்து ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் அவரது ரசிகர்கள் மற்றும் அதற்கு ரஜினியின் நிலைப்பாடு குறித்தும் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பக்கத்தின் ஹைலைட் சோவின் பேட்டி. பல முறை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட அதே கருத்தைத்தான் இங்கும் சொல்லியிருக்கிறார்.

“மிகப்பெரிய மக்கள் செல்வாக்கும் ஆளுமைத் திறனும் உள்ள ரஜினி அரசியல் கட்சி துவங்கி தேர்தலில் நின்றால் ஒட்டுமொத்த வாக்குகளையும் அள்ளிவிடுவார். கைவசம் உள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு அவர் அரசியலுக்கு வருவார் என்பது என் நம்பிக்கை.

தலைமைப் பண்பு மற்றும் ஆளுமைத் திறன் ரஜினியின் பிறப்பிலேயே அவருக்கு வந்துவிட்ட ஒன்று. இதை அவர் புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. எந்த முடிவுக்கும் அத்தனை சாதாரணமாக வரமாட்டார். அனைவரிடமும் கருத்து கேட்பார், ஆனால் அவரது சொந்த முடிவைத்தான் எடுப்பார். பிறவியிலேயே அவர் தலைவர்தான்.

அது கடவுள் அவருக்குக் கொடுத்த வரம். ஒருமுறை செயலில் இறங்கிவிட்டால் அப்புறம் யாராலும் அவரைத் தடுத்து நிறுத்த முடியாது...” என்று தெரிவித்துள்ளார் சோ.

அவரது பேட்டியின் ஆங்கில வடிவம்:

Rajini is born Leader! - Cho

I wish Rajini well on his 58th birthday today. He has been one of my best friends for over two decades. We have been meeting quite often and discussing everything under the sun.

He is one person who has not changed after gaining so much of success, popularity and wealth. He remains detached from all worldly success. I am enamored of the idea that a person can remain untouched by such fame, glory and money.

He is not giving any thought to politics at the moment. He is now engrossed in the current film projects. I think his spiritual inclination and the resultant confidence will only help him do well in politics. But he cannot be pressurized on any subject by anyone at any given point of time. Fans will not be able to force his political entry.

As a commanding personality with a large fan following, he can sweep the polls if he takes the political plunge. I don’t think he is impulsive; he is intuitive. Whenever he has to take a decision on an important subject, he consults several experts on the subject. And takes a decision on his own weighing all the pros and cons.

He is a born leader and everyone cutting across religion, gender, caste likes him. That is a great gift from God for his humility. Once absorbed into work, he will not think of anything else.

டைம்ஸ் ஆப் இந்தியாவும் தன் பங்குக்கு ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

-வினோஜாஸன்
http://www.envazhi.com