Showing posts with label enthiran. Show all posts
Showing posts with label enthiran. Show all posts

Saturday, December 20, 2008

300 பக்கங்களை ஒரே மூச்சில் படித்த எந்திரன்!


விஞ்ஞானியான ரஜினி, தன் அரிய கண்டுபிடிப்பால் எந்திரனை உருவாக்குகிறார். அந்த எந்திரன் தோற்றத்தில் இன்னொரு ரஜினியாக இருக்கிறது. மொழியைப் படிக்கவும், பேசவும் மற்ற மனிதர்களைப் போலவே இயங்கக்கூடிய விதத்தில் பார்வைக்கு மனிதனைப் போலவே தோற்றமளித்தாலும் அந்த எந்திரனுக்குள், கம்ப்யூட்டர் மூளை செயல்படுவதால்... மனித சக்திக்கு அப்பாற்பட்ட அரிய சக்திகள் பலவும் எந்திரனுக்கு இருக்கின்றன.

எந்திரனின் தோற்றம் மற்ற மனிதர்களுடன் ஒத்திருக்கிறதா, இல்லையா என்பதை சோதித்துப் பார்க்க விரும்பும் விஞ்ஞானி, அதைக் கூட்டிக் கொண்டு தான் வழக்கமாக முடி திருத்திக் கொள்ளும் சலூனுக்குப் போகிறார்.

உள்ளே போனதும், அங்கிருக்கும் முடி திருத்தும் கலைஞர்கள் எல்லோரும் ரஜினியுடன் இன்னொரு ரஜினியும் வருவதாப் பார்த்து அதிசயப்படுகிறார்கள். அதில் ஒருவர் விஞ்ஞானி ரஜினியிடம், ‘யார் இவர்... உங்களைப் போலவே இருக்காரே?’ என்று கேட்க, அதற்கு, இவர் என்கூட பிறந்தவர்...!” என்கிறார் விஞ்ஞானி ரஜினி.

கூடப் பிறந்தவன்னா, ‘இதுவரைக்கும் இவரை இங்கு கூட்டிக்கிட்டே வந்ததில்லையே...!” என்று பதிலுக்கு அவர் கேட்க, “இவர் நேத்துதானே பிறந்தார்...!!” என்று ரஜினி பதில் சொல்லி, பிறகு சமாளிக்கிறாராம்.

சலூனில், உட்கார்ந்து கொண்டிருக்கும் வேளையில், எந்திரன் ரஜினி படிக்க புத்தகம் கேட்க, அவரிடம் கொடுக்கப்படும் புத்தகங்கள் அத்தனையையும் உடனுக்குடன் படித்துக் கொடுத்துவிட்டு, வேறு புத்தகம் கேட்பாராம் எந்திரன் ரஜினி.

இந்த தொல்லை தாங்காத சலூன்காரர், 300 பக்கங்களுக்கு மேல் உள்ள ஒரு புத்தகத்தைக் கொடுக்க, அதையும் சில நிமிடங்களில் மண்டையில் ஏற்றிக் கொள்வாராம் எந்திரன்.

எதையும் படிக்காமல், சும்மா ஒப்புக்குத்தான் அவர் விளையாடுகிறார் என்று நினைத்த சலூன்காரர், எந்திரனிடம், அந்தப் புத்தகத்தில் அவர் படித்ததைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, இன்ன புத்தக்த்தில் இத்தனாம் பக்கத்தில் இந்த விஷயம் எழுதப்பட்டிருக்கிறது என்று, இதுவரை படித்ததையெல்லாம் எந்திரன் புட்டுப்புட்டு வைக்க, அதிர்ச்சியில் மயக்கம் போடாத குறையாக அங்கிருந்து விரைகிறாராம் சலூன்காரர்... நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருப்பார் இது அத்தனைக்கும் காரணகர்த்தாவான விஞ்ஞானி ரஜினி.

-இது எந்திரனில் இடம்பெறும் ஒரு காட்சி.

இதை நாம் லீக் செய்யவில்லை. எந்திரன் தயாரிப்பாளர்களே வெளியிட்டிருக்கும் காட்சி மற்றும் படங்கள் இவை. வெளிவந்த இதழ் குங்குமம்!!

அதைவிடுங்க...

இந்தக் காட்சியை ரஜினி எப்படிச் செய்திருப்பார்... அதுவும் இரண்டு ரஜினிகளும் ஒரே காட்சியில் தோன்றுவது நிஜமாகவே சுவாரஸ்யமான காட்சியமைப்புதான்.

ஒரு சாம்பிளுக்கே இப்படியென்றால்... இன்னும் படம் பற்றிக் கேட்க வேண்டுமா...!

Thursday, December 4, 2008

ரஜினியின் இன்றைய தோற்றம்!

னது வெளித்தோற்றம் பற்றிக் கவலைப்படாத ஒரே நடிகர் உலகில் அநேகமாக சூப்பர் ஸ்டார் ரஜினியாகத்தான் இருக்கும். நேற்று இன்று நாளை என எந்தக் காலமாக இருந்தாலும் ரஜினியின் தோற்றமும் சரி உள்ளமும் சரி... பளீர் வெள்ளை!

மேக்கப்பில் இருந்தாலும் சரி, தாடி, கலைந்த தலைமுடியுடன் இருந்தாலும் சரி, இங்கே நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல ‘உலக அழகர்’தான் அவர்.

ரஜினி ரசிகர் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களும் கூட இப்படித்தான் நினைப்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

காரணம், ரஜினியின் மனதை இந்த தமிழக மக்கள் ஏற்கெனவே படித்துவிட்டதுதான்.

பல நடிகர்கள் தங்கள் உள்மனசுக்கும் சேர்த்தே மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள். காரணம் அவர்களது நம்பிக்கையின்மை. இந்த திரைத் தோற்றமும், பிம்பமும் கலைந்துவிட்டால் நம்மை மக்கள் சீண்டுவார்களா என்ற அவநம்பிக்கை அவர்களுக்கு.

ஆனால் ரஜினி அப்படியல்ல.

அவர் பிம்பங்களைத் தாண்டி வெளியில் வந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லாவிட்டால், கதீட்ரல் சாலையின் போக்குவரத்து நெரிசலில் கார் மாட்டிக் கொண்டதும், ஜஸ்ட் காரை விட்டிறங்கி நடந்து போய் பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி கொளுத்தியபடி நிற்பாரா? (ஒரே நிமிடத்தில் அந்தப் பகுதியே கிடுகிடுத்துவிட்டது கூடிய மக்கள் கூட்டத்தைப் பார்த்து. பலர் தங்கள் வாகனங்களை அப்படி ஓரமாகப் போட்டுவிட்டு ரஜினி தரிசனத்துக்கு ஓடிவந்தனர். அதைப் பார்த்துப் பதறிப்போய் ரஜினியை போலீசார் கெஞ்சிய கெஞ்சல் இருக்கிறதே... காணக் கண் இரண்டு நிச்சயம் போதாது!)

இதோ பரபரப்பான எந்திரன் ஷூட்டிங்குக்கு நடுவில் ரஜினியின் இன்றைய தோற்றம். ரஜினி பேரக் கேட்டாலே புத்தகத்தைக் கொடுத்து ரஜினியிடம் வாழ்த்துப் பெற வந்த காயத்ரியிடம் புத்தகம் பெற்றுக் கொண்ட ரஜினி, புத்தகத்துடன் போஸ் தரும் காட்சி.

தெய்வீகப் புன்னகையய்யா...!

http://www.envazhi.com

Saturday, November 22, 2008

சுல்தான்: வெற்றி நிச்சயம்! – சௌந்தர்யா ரஜினி


ந்தியத் திரையுலகில் சுல்தான் நிச்சயம் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்தப் படம் நிச்சயம் அப்பாவின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். இன்னொன்று இது என் கனவுப் படமும் கூட. தரத்திலும் வசூலிலும் உலக அளவில் பேசப்படும், என்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

சமீபத்தில் சுல்தான் படப்பிடிப்பிலிருந்த சௌந்தர்யாவிடம் சுல்தான் படம் மற்றும் அதன் இப்போதைய நிலை குறித்து கேட்கப்பட்டது.

சௌந்தர்யா கூறியதாவது:

சுல்தான் படம் என்னுடைய பல வருட கனவு, உழைப்பின் விளைவு என்றுகூடச் சொல்லலாம். இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் நான் திட்டமிட்டேன். 
இல்லாவிட்டால் அப்பாவை அத்தனை சீக்கிரம் யாராலும் கன்வின்ஸ் பண்ணவே முடியாது. தன் மகள் என்பதற்காகவெல்லாம் எந்த வாய்ப்பையும் தந்துவிடமாட்டார் அவர்.

ஆனால் அப்பா ஒரு முறை முடிவு செயதுவிட்டால், கடவுளே நினைத்தாலும் அதை மாற்றமுடியாது. அதுதான் அவரது இயல்பு. ஆரம்பத்திலேயே இந்தப் படம் குறித்த ஒவ்வொரு காட்சிக்கும் அவருக்கு போதிய விளக்கம் கூறி அவருக்கு திருப்தி வரும் வகையில் கதையை அமைத்தேன்.

மற்றபடி எந்தக் காட்சியிலும் அப்பா ஒரு திருத்தம்கூடச் சொன்னதில்லை.

இந்தப் படத்தில் நாயகி விஜயலட்சுமி என்றபோது அப்பா ஒரு நிமிடம் சங்கடப்பட்டார். பின்னர் அதற்கான காட்சி அமைப்புகளைச் சொன்னேன். மக்கள் என்ன பேசுவார்கள் என்பதை அவர்களுக்கு முன்னதாகவே கணித்துச் சொல்லிவிடுவார் அப்பா. எத்தனையோ படங்களுக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது.

எந்த மகளுக்கும் கிடைக்காத பெருமையை ஒரு அப்பாவாக எனக்குத் தந்திருக்கிறார். அந்தப் பெருமையைக் காப்பாற்றும் விதத்தில் இந்தப் படத்தை எடுத்திருப்பதாகவே நம்புகிறேன்.

இந்தப் படம் அப்பாவின் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு இனிய அதிர்ச்சியாக இருக்கும். இதன் மூன்றாவது டிரெயிலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. குழந்தைகள் மற்றும் மாணவர்களின் குதூகல மாதமான ஏப்ரலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எந்திரனுக்கு முன், உலகம் முழுக்க வெளியாகப்போகும் படம் சுல்தான்தான். 2000க்கும் கூடுதலான பிரிண்டுகள். அனிமேஷன் தவிர்த்து அப்பா ரியலாக வரும் சில காட்சிகளையும் ஸ்பெஷலாக வைக்கும் உத்தேசமுள்ளது, என்றார்.

அடுத்து இந்தியில் ஒரு வித்தியாசமான படம் இயக்கும் முயற்சியில் உள்ளார் சௌந்தர்யா. இதற்காக ஹ்ரித்திக் ரோஷனுடன் பேசி வருகிறாராம்.

சூப்பர் ஸ்டார் மகள்னா சும்மாவா... 32 அடி பாயும் புலிக்குட்டியல்லவா!

http://www.envazhi.com/

Wednesday, November 12, 2008

திட்டமிட்டபடி எந்திரன் 3-வது கட்ட படப்பிடிப்பு துவக்கம்!

ந்திரன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி குல்லு – மணாலியில் அடுத்த சில தினங்களில் தொடங்குகிறது.

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எந்திரன் படப்பிடிப்பின் அடுத்த கட்டம் எப்போது துவங்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி ஏற்கெனவே அறிவித்திருந்தார். வரும் நவம்பர் 16-ம் தேதி குல்லு மணாலியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதாக அவர் ரசிகர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் நிதி நெருக்கடி மற்றும் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக மீடியாவில் செய்தி பரவியது.
உடனே, எந்திரன் படத்துக்கும் நிதி நெருக்கடி எழுந்துள்ளதாக சில இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

உண்மை நிலவரம் என்ன?

ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியான விஜய்குமாரைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தோம்.

அவர் கூறியதாவது:

என்ன ஒரு மோசமான கற்பனை பாருங்கள்... சூப்பர் ஸ்டாரின் எந்திரன் உலகளாவிய படம். இந்தியாவின் திரையுலக சாதனையாக சர்வதேச அளவில் பேசப்படப்போகும் படம்.

அதன் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் எந்த சுணக்கமும் நேராமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த சிரத்தையுடன் ஏற்பாடு செய்து வருகிறோம்.

இந்த நிலையில் இப்படி ஒரு செய்தியா... வதந்திகள் பற்றிக் கவலை வேண்டாம். எந்திரன் தொடர்பான அனைத்தும் திட்டமிட்டபடி மிகச் சரியாக நடக்கும்... என்றார்.

http://www.envazhi.com

Friday, November 7, 2008

விகடன், தினமலர் குழும இதழ்களைப் புறக்கணிப்போம்!

லைவர் மீடியாவுக்குத் தரும் மரியாதையைப் பற்றி பெரிசாக எழுதினீர்களே, அதற்கு அவர்கள் திரும்பக் காட்டும் மரியாதையைப் பார்த்தீர்களா? என நிறையப்பேர் கேட்கிறார்கள்.

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், தினமலர், எக்ஸ்பிரஸ், டைம்ஸ் என பல பத்திரிகைகள் ரஜினி நடத்திய இந்த நேர்மையான ரசிகர் சந்திப்புக்கு உள்ளர்த்தம் கற்பித்து வருகின்றன.

ஆனால் இவர்களில் ரஜினி எதிர்ப்பில் இப்போது மிகவும் தீவிரம் காட்டத் துவங்கியிருப்பது விகடன் குழுமம். இந்த லட்சணத்தில் ரஜினி ரசிகர்களிலேயே கூட நிறையப்பேர் காலிப் பெருங்காய டப்பா விகடனின் நடுநிலைத்தனத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.

எந்த வித சமூக அக்கறையும், குறைந்தபட்ச தொழில் நேர்மையும் கூட இல்லாத விகடன், எந்திரன் திரைப்படத்தை ஓட்டுவதற்காகத்தான் ரஜினி இந்த சந்திப்பை மேற்கொண்டார் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை சின்னப்புள்ளத்தனமாக கூவிக் கொண்டிருக்கிறது. அதன் கொடுக்கு ஜூவியிலும் இதே பல்லவிதான்.

பஞ்சமா பாதகர்கள் என தமிழில் உள்ள சொல்லுக்கு புதிய விளக்கமாக விகடன் குழுமம் என்று போட்டுக் கொள்ளலாம்.

இவர்களை இன்னும் எத்தனை முறை திட்டுவது... இவர்களின் திருட்டுத்தனங்களை இன்னும் எத்தனைமுறை அம்பலப்படுத்துவது...

இவர்கள்தான் திருடர்கள் என்று புரிந்துவிட்டதல்லவா... இனி புறக்கணியுங்கள்.

புறக்கணிப்பது முடியாத காரியம் என்று யாரும் சொல்லாதீர்கள். என்ன எழுதினாலும் அதைப் படித்து திட்டவாவது ஒரு கூட்டம் இருக்கிறதே என்ற துணிச்சலில்தான் அவர்கள் ரஜினி என்ற மனிதனின் சமூகப் பொறுப்புணர்வைக் கூட மதிக்காமல் எந்த எல்லைக்கும் போகத் துணிந்திருக்கிறார்கள்.

எப்போது விஜய்காந்த் என்ற அரசியல்’வியாதி’யின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக விகடன் குழுமத்தினர் மாறிவிட்டார்களோ, அப்போதே தங்கள் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் தொலைத்துவிட்டு கேவலமாக நிற்கிறார்கள்.

இலங்கை இனப் பிரச்சினைக்காக உண்ணாவிரதமிருந்த ரஜினி இறுதியில் அனைவரது மனங்களையும் வெல்லும் விதத்தில் நிகழ்த்திய எழுச்சியுரையைக் கேட்டு மேடையிலேயே அவரைக் கைகுலுக்கி தோளில் தட்டி தன் பாராட்டைத் தெரிவித்து, சரணாகதிப் படலத்தை ஆரம்பித்து வைத்தார் சத்யராஜ். இது உலகறிந்தது.

ஆனால் போட்டோ கமெண்ட் எனும் பெயரில் அந்தப் படத்துக்கு ஜூவி கக்கியிருக்கும் விஷம் ஒன்றே போதும், விகடன் குழுமத்தினர் எந்த மாதிரி இழி பிறவிகள் என்பதைப் புரிந்து கொள்ள.

விகடன் இந்த அளவு கதிகலங்கிப் போய் ரஜினிக்கு எதிராக பிதற்றுவதற்கு இன்னொரு காரணம், அவர்கள் இதுவரை கிண்டலடித்து வந்த அனைத்து விஷயங்களையும் ரஜினி ஒரே சந்திப்பில் தவிடு பொடியாக்கி விட்டதுதான்.

ரஜினி குழப்பவாதி

ரஜினி சுயநலவாதி

அரசியல் ஆசை காட்டி ஏமாற்றுகிறார்...

இப்படி விதவிதமான பொய்களை அடுக்கி அட்டைப் படக் கட்டுரைகளாகப் போட்டு, ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினரைச் சுரண்டி வந்தனர் இந்த விஷமிகள்.

ஆனால் ரஜினி ஒரே சந்திப்பில் தனது சமூகத்தையும் பொதுமக்களையும் தெளிய வைத்துவிட்டார். இனி என்ன சொன்னால் ரசிகர்களைச் சுரண்ட முடியும் எனத் தெரியாமல் ஜுர வேகத்தில் பிதற்றிக் கொண்டுள்ளனர்.

இன்னொரு பக்கம், அயோக்கியத்தனத்தில் விகடனுக்கு தான் சற்றும் சளைத்ததல்ல என முழங்கியபடி வரும் பொய்மலர்...தினமலர்.

ஏற்கெனவே மீடியா உலகில் மானங்கெட்ட பத்திரிக்கை என்ற பெயரைச் சம்பாதித்துள்ள இந்த தினமலர் கும்பல் முழுமையாக அழியும் காலம் நெருங்கி வருகிறது. அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டியதில்லை. தினமலர் பார்ட்னர்களே செய்து வருகின்றனர்!

ரசிகர்கள் மனநிலைப் புரிந்து அவ்வப்போது பாராட்டு, அவ்வப்போது விமர்சனம் என காலத்தை பாதுகாப்பாக ஓட்டிக் கொண்டிருக்கின்றன குங்குமம், குமுதம் குழுக்கள்.

ரஜினி சொன்ன குருவும் தேளும் கதையெல்லாம் இந்த சந்தர்ப்பவாதிகளுக்குப் புரியாது.

தேள் கொட்டுகிறதா... பார்த்தவுடனே அடித்துக் கொல்லுங்கள் அதை..!

கடமையைச் செய்; பலனை எதிர்பார் என புதிய வேதம் சொன்னவரின் ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டியது இனி இந்த அதிரடியைத்தான்!

அதை விட்டுவிட்டு சும்மா புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!

-SS

http://www.envazhi.com

Friday, October 10, 2008

'எந்திரன்' போட்ட ஆட்டோகிராஃப்...!


எந்திரன் கோவா படப்பிடிப்புக் காட்சிகள் தொடர்பான மேலும் சில புகைப் படங்களை நண்பர் அனுப்பியிருந்தார். இங்கே நீங்கள் பார்ப்பது அவற்றைத்தான்.

எந்திரன் படப்பிடிப்பு நடக்கும் ஒரு ரிசார்ட் வளாகத்தில், படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினி ஓய்வாக அமர்ந்திருக்கும் காட்சி இது.

ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் ஆடிப்பாடும் காதல் காட்சி படமாக்கப்படுவதையும் தனது கேமராவில் கிளிக்கித் தந்துள்ளார் அந்த நண்பர்.

இன்னும் அதிக படங்களைப் பார்க்க விரும்புவோர், www.paddu.in என்ற இணைய தளத்துக்குப் போகவும்.

ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் கோவாவுக்கே போய், ஷூட்டிங்கிலிருந்த ரஜினியைப் பார்த்ததுடன், படப்பிடிப்பில் ரஜினியைச் சுற்றி நிகழ்ந்தவைகளை படம் எடுத்து, அவற்றில் 78 ஸ்டில்களை தனது இந்த வலைப்பூவிலும் பதிந்துள்ளார். கூடவே ரஜினியிடம் ஆட்டோகிராப்பும் வாங்கியுள்ளார்.

படப்பிடிப்பு இடைவேளையில் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அடம் பிடித்தவர்களைச் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பிய ரஜினி, அவர்களின் மனம் சங்கடப்படக் கூடாதே என மீண்டும் அழைத்து ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்ததும் நடந்துள்ளது.

கோவாவுக்கு வரும் பல வெளிநாட்டுப் பயணிகளும் ரஜினியைப் பற்றிக் கேள்விப்பட்டு, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்துவிடுகிறார்களாம்.

படப்பிடிப்புக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வேடிக்கைப் பார்க்கும் இந்த வெள்ளைக்கார ரசிகர்கள் ரஜினியைப் பார்த்த பிறகுதான் அந்த இடத்தை விட்டே நகர்கிறார்களாம்.

கோவாவின் பனாஜி பகுதிக்கே ரஜினியால் ஒரு தனி களை வந்திருக்கிறது என அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் ககெண்ட் அடிப்பதாகத் தெரிவிக்கிறார் பிரபல ஆங்கில நாளிதழின் கோவா நிருபர் ஒருவர்.

பின்னே... அவர் சும்மா ஸ்டாரா... சூப்பர் ஸ்டாராச்சே!
http://www.envazhi.com

Friday, September 5, 2008

ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்! - 'இப்ப என்னங்கடா செய்வீங்க'!!


தன்னைப் பார்த்து குரைப்பவர்களைப் பற்றிக் கவலைப் படாமல், உலக அளவில் ஒரு பிரமாண்டப் படத்தை உருவாக்கும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
இயந்திரன் - தி ரோபோ என தமிழ்ப் படத்துக்குத் தலைப்பு வைத்திருக்கும் ரஜினியும் இயக்குநர் ஷங்கரும், இதன் தெலுங்கு மற்றும் இந்தி வடிவங்களை ரோபோ எனும் பெயரிலேயே வெளியிட முடிவு செய்துள்ளனர். ஷாரூக்கான் 9 தலைப்புகளைப் பதிவு செய்திருந்தாலும், அவை ஷங்கர் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்புக்கு சம்பந்தமில்லாதவை என்றே கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கமும் தி ரோபோ எனும் பெயரிலேயே ரிலீசாகப் போகிறதாம்.

இனி படம் குறித்து ஷங்கர் அதிகாரப்பூர்வமாக இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கை:

இயந்திரன் – தி ரோபோ: இந்தியாவின் முதல் சர்வதேசப் படம்!

முழுக்க முழுக்க ஹாலிவுட்டில் தயாராகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையுடன் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் படப்பிடிப்பு துவங்குகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயந்திரன் – தி ரோபோ (நேற்று எந்திரம் என்று குறிப்பிட்டிருந்தோம். அது இயந்திரன் என மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் ஷங்கரின் மீடியா மேனேஜர் நிகில்!) படத்துக்காக.
இந்தப் படத்தில் பணியாற்றுபவர்களில் பாதிக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஹாலிவுட்டில் பெரும் வெற்றிப் படங்களில் பணியாற்றியவர்கள் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இன்று ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மென் இன் பிளாக், பேட்மென்ஸ் ரிட்டர்ன், இன்ஸ்பெக்டர் காட்கெட்ஸ் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் மேரி இ வோக்ட், ரோபோவின் காஸ்ட்யூமராகப் பணியாற்றுகிறார். இவருடன் இந்தியாவின் நம்பர் ஒன் காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவும் இணைகிறார்.

இயந்திரனுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளைச் செய்யப் போகிறவர்கள் ஹாவலிவுட்டின் நெம்பர் ஒன் ஸ்டுடியோ எனப்படும் ஸ்டான் வின்ஸ்டன். இவர்கள்தான் டெர்மினேட்டர், டெர்மினேட்டர் -2, ஜூராஸிக் பார்க், பிரடேடர், பியர்ல் ஹார்பர், சமீபத்தில் உலகைகே கலக்கிய அயர்ன் மேன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு மிரட்டலான கிராபிக்ஸ் பணிகளைச் செய்தவர்கள். இந்தியப் படம் ஒன்றில் இவர்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறை.

படத்துக்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் தர ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்கள் ஐஎல்எம், கேப் இஎப்எக்ஸ், ஹாங்காங்கின் சென்ட்ரோ, மென்போர்டு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்கள்.

ஹாலிவுட்டின் எந்தப் படத்துக்கும் சவால் விடும் வகையில் ரஜினியின் இயந்திரனை உருவாக்குவதற்காகவே இவ்வளவு பெரிய முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

‘நிச்சயம் இந்தப் படம்தான் இந்திய சினிமாவின் சர்வதேச முகவரியாக இருக்கப் போகிறது. டெர்மினேட்டரை விட பல மடங்கு மிரட்டலான ஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் உலகம் முழுக்க வெளியாகப் போகிறது இயந்திரன்’ –என்கிறார் அவர்.

இனி ரஜினி டார்கெட், உலக மார்க்கெட்!

இந்த பிரமாண்டங்களுப் பின்னணியில் ஒரு முக்கியக் காரணம் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

ரஜினி படங்களின் வீச்சை இந்திய திரை உலகை விட ஹாங்காங், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ரஜினி நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இயந்திரன் என்று கூடச் சொல்லலாம். இந்தப் படத்தின் மார்க்கெட் உலகளாவியதாக இருக்கும். அப்போது தமிழ்நாடு, ஆந்திரா என்று மாநிலம் தழுவிய விற்பனை உரிமை ஒரு பொருட்டாகவே இருக்காது.

தேவையில்லாமல் சிறு விஷயங்களையும் ஊதிப் பெரிதாக்கும் போக்கும் நின்று போகும். எனவேதான் ரஜினி இத்தனை பிரமாண்டங்ககளையும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் வார்னர் பிரதர்ஸ் உருவாக்கவிருக்கும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திட்டமும் ரஜினிக்கு உள்ளது. அதற்கான வெள்ளோட்டம்தான் இயந்திரன், என்கிறார்கள்.

எப்படியோ, ரஜினியின் படம் ஒன்று முழுக்க முழுக்க ஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு இணையாகத் தயாராவது ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் வியாபார எல்லைகளையே விரிவடையச் செய்திருக்கிறது என்பதே உண்மை.

ரியலி கிரேட்!

நன்றி: எஸ்சினிமா, தட்ஸ்தமிழ்

Shankar officially announced Enthiran – The Robot!

Here is the official press release of Director Shankar on the forthcoming Grandeur of Superstar Rajinikanth’s Robot (Enthiran – The Robot).
“With Super Star Rajnikanth and Aishwarya Rai Bachan in lead rolls, the film is start rolling on September 8th at America.
The big movie production houses which involved into this grandeur venture are Ayngaran International Films Pvt Ltd. and Eros International.
Two fantastic numbers in A. R. Rahman’s music, is about to shot in beautiful locations of America and surrounding countries.
The other cast and crew: Cinematography R. Ratnavelu. Art: Sabu Cyril, Lyrics: Vairamuthu, Pa. Vijay, Editing: Antony, Choreography: Raju Sundaram, Costume Design: Manish Malhotra.
The Costume Designer of Men in Black, Batman returns, Inspector Gadget Mary E Vogt is designing the scientific outfits.
Stan Winston Studio (USA) who has worked for Predator, Jurassic Park, Pearl Harbor, Iron man, Terminator and I - Robot is doing Animatronics.
Yuen Woo Ping who handled stunt for many Hollywood movies like Crouching Tiger Hidden Dragon, Matrix and Kill Bill is currently working for Endhiran – The Robot.
All the three world renowned people working for an Indian movie is for the first time.
Hollywood companies like ILM, Tippet, Café EFX; and Hong Kong companies like Centro and Menfond are going to work in the field of VFX. Visual Effects and Animatronics co-ordination: Indian Artiste.
K. Karunamurthi and C. Arunpandian produced the film behalf of Ayngaran films international and Eros. K. Vijayakumar is the Executive Producer.

www.rajinifans.com