Friday, November 14, 2008

ஏன் இந்த புறக்கணிப்பு?

நண்பர்களே...

இந்தப் புறக்கணிப்பு தேவைதானா... இவ்வளவு தீவிமாக, பகிரங்கமாக நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமா என்று நம்மைக் கேட்ட நண்பர்கள் கூட இப்போது, 'விடக்கூடாது. ஒரு கை பார்த்துவிடலாம் இந்த விஷமிகளை!' என்று சொல்லும்அளவுக்கு நாளுக்குநாள் தங்களைத் தரம் தாழ்த்திக் கொண்டு வருகின்றன இந்த பத்திரிகைகள்.

தினமலர் – விகடன் புறக்கணிப்பு குறித்த ரசிகர்கள் மற்றும் ரசிகரல்லாத வாசகர்களிடமிருந்து தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தவண்ணமுள்ளன. இவர்களில் சிலருடைய விவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலமும் ரசிகர்கள் - வாசகர்கள் தங்கள் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவை அனைத்துமே ஒருங்கிணைக்கப்பட்டு நாளைய பதிவில் வெளியிடப்படும். இதற்கென்ற தனி பகுதி ஒன்றும் ஒதுக்கப்படும்.

அடுத்து ஒரு விளக்கம்...

தினமலர் – விகடன் புறக்கணிப்பை பகிரங்கமாகக் கோருவதால் அதுகுறித்து சில மிரட்டல் பாணி மின்னஞ்சல்களும், தொலைபேசி எச்சரிக்கைகளும் நமக்குக் வந்துள்ளன. அவர்களின் விவரமும் தனியாகத் தரப்படும்.

நமது நோக்கம் தெளிவானது. தினமலர்- விகடன் குழுமத்துடன் நமக்கு நேரடி மோதலோ, கொடுக்கல் வாங்கலோ கிடையாது!

யார் சம்பந்தப்பட்ட செய்தியாக இருந்தால் என்ன... நடுநிலையாகக் கொடுக்க வேண்டியதுதானே அவர்களின் கடமை...? ஆனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக, பல லட்சம் மக்கள் படிக்கும் ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை மட்டுமே நாம் எதிர்க்கிறோம்.

ரஜினி எதிர்ப்புச் செய்திகளை மட்டுமே அவர்கள் பிரதானப்படுத்துகிறார்கள். ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் எதிராக கருத்துத் திரிப்புகளை வெளியிடுவதில் மட்டுமே தனி கவனம் செலுத்துகிறார்கள். எனவே ரசிகர்கள் சார்பில் காட்டப்படும் காந்தீய வழியிலான எதிர்ப்பு இது.

இது அவர்கள் போட்டுக்கொடுத்த ரூட்டுதான்!

ரஜினி என்பவர் ஒரு சாதாரண நடிகர் அல்ல... சினிமா என்கிற ஒரு தொழிலையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழ்பவர். தன்னால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும் அவர், தன் பின்னால் உள்ள மக்கள் சக்தியை ஒருபோதும் சுயநலத்துக்காகப் பயன்படுத்தாதவர். அத்தகைய மனிதருக்கு எதிராக வேண்டுமென்றே இன துவேஷத்தையும், தனிமனித தாக்குதல்களிலும் இவ்விரு பத்திரிகைகளும் இறங்கியதாலேயே, ரசிகர்களின் கோபத்தைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

நாடறிந்த ஒரு நல்ல மனிதரையே இந்த அளவு குறிவைத்து, பாரபட்சமாக செய்தி வெளியிடும் இவர்கள் எப்படி பொதுநலத்துடன் செயல்படுவதாக நம்ப முடியும்... சமூக விரோதிகளுக்கும் இந்த நடுநிலையற்ற பத்திரிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?

ரசிகர்களின் கோபம் மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் என்பதை இந்த இரு பெரு வியாபாரிகளுமே நன்கு புரிந்தவர்கள் என்பதால் உடனடியாக அவர்களைக் குளிரவைக்கும் முயற்சிகளில் இறங்கக் கூடும்...

பாக்கெட்டை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்!!

-என்வழி

No comments: