Tuesday, November 4, 2008

‘வாழ்வின் பொன்நாள்...’ – ரஜினி ரசிகர்கள் பரவசம்!

ன்ன பேசுவதென்றே தெரியவில்லை... என் வாழ்நாளில் இப்படியொரு தெளிவான சிந்தனை கொண்ட மனிதரை, கலைஞரை, அற்புதமான தலைவரை நான் பார்த்ததில்லை. என் ஆயுசுக்கும் இந்த மனிதருக்கு ரசிகனாய் இருந்த பெருமை ஒன்றே போதும்...”

-பாண்டிச்சேரி மாநில ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியின் பரவச வார்த்தை இது.

“இப்பதான் சார் எனக்கு நிம்மதியா இருக்கு. இனி எவனாவது நம்ம தலைவர் பத்தி மூச்சுக் காட்ட முடியுமா.. இதுக்காகத்தான் சார் இத்தனை நாளும் தவம் கிடந்தோம். தலைவர் தன் திட்டப்பட்டி ஆண்டவன் உத்தரவோட வரும்போது வரட்டும். எங்களை நாங்க தயார்படுத்தி வச்சிக்கிறோம்...”

-இது கோவை மாவட்ட நிர்வாகியின் கருத்து.

“தலைவரின் மனசு எங்களுக்குப் புரியாமலில்லை... இந்த உலகத்துக்குப் புரிய வேண்டாமா (ஹை..ஹை!) அதற்காகத்தான் இந்தச் சந்திப்புக்கு இத்தனை பிடிவாதம் காட்டினோம். இப்போது எல்லாமே தெளிவாகிவிட்டது. தலைவர் எங்களுக்கு பதவி, அதிகாரம் எதையும் கொடுக்காவிட்டாலும் கூட, இந்த ஒரு சந்திப்பு மூலம் மட்டுமே எங்களுக்குப் புதிய அந்தஸ்து கிடைத்துவிட்டது. அந்த பவர் ரஜினியைத் தவிர வேறு யாருக்கு உண்டு?”

-இது ரஜினி மன்ற முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான ஓம்சேகர்.

“யார் என்ன வேணா சொல்லட்டும். எங்களுக்கு தலைவர்கிட்டேயிருந்து சரியான, தேவையான செய்தி கிடைத்துவிட்டது. இதுபோதும் எங்களுக்கு..” என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரி என்பதை நினைவூட்டி, ரஜினியின் பாராட்டுப் பெற்றவர்!)

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பரவச நிலையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்திலிருந்து வெளிவந்த ரசிகர்கள் நம் களப்பணியாளரிடம் பகிர்ந்து கொண்டவற்றில் ஒரு பகுதிதான் இங்கே நீங்கள் படிப்பவை.

இதுநாள் வரை, வருவாரா மாட்டாரா என்ற சந்தேகத்தோடே காலம் தள்ளிய ரசிகர்கள், இந்தச் சந்திப்புக்குப் பின், சந்தேகம் தீர்ந்து மிக ஆழமான, அழுத்தமான நம்பிக்கைகளைச் சுமந்தபடி ஊர் திரும்பியுள்ளனர்.

அதேநேரம், ரஜினி என்ற அப்பழுக்கற்ற மனிதருக்கு, தலைவருக்கு தொண்டராக இருக்க வேண்டுமென்றால் இன்னும் எப்படியெல்லாம் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மலைப்பும் இவர்களில் பலருக்கு இப்போதே எழுந்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

நேர்மை, தொண்டு மனப்பான்மை, நல்ல வழியில் பணம் சம்பாதிக்கத் தேவையான மனப் பக்குவம் இது மூன்றும் தன் ரசிகர்களிடம் இருந்தாக வேண்டும் என்கிறார் ரஜினி. இந்த மனப் பக்குவத்தை தன் ரசிகர்கள் அடைவதற்குத்தான் இந்த இடைவெளியைத் தந்திருப்பதாக ரசிகர்களும் நினைக்கிறார்கள்.

பணம், ஜனம் இரண்டும் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது. இருந்தால் அங்கே அரசியல் வந்துவிடும் என்ற ரஜினியின் வார்த்தைகளில் பொதிந்துள்ள அர்த்தங்கள் ஆயிரம்.

“எல்லா விஷயத்திலுமே தலைவர் ரொம்ப தீர்க்கமான முடிவோட இருக்காருப்பா... நாமதான் குழப்பத்தோட இருந்திருக்கோம் இத்தனை நாளா... இனி யார், என்ன சொன்னாலும், அதன் அடிப்படையில் தலைவருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை மட்டும் செய்யவே கூடாது... தலைவர் ஒரு ரூட்டு போட்டுக் கொடுத்திட்டார். அதில் போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்...” என்பதே, இந்த சந்திப்பின் முடிவின் ரசிகர்களின் மனநிலையாக இருந்தது.

ரஜினி சொல்வதுபோல, எதற்கும் நேரம், சூழல் சரியாக அமைய வேண்டாமா?

கள உதவி: கோபி
http://www.envazhi.com

1 comment:

Anonymous said...

இப்புடி பச்சப் புள்ளைங்களா இருக்கீங்களே....