Showing posts with label Sudhakar. Show all posts
Showing posts with label Sudhakar. Show all posts

Thursday, December 4, 2008

தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்

சிகர் மன்றங்கள் ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி எந்த வகையான வசூலிலும் இறங்கக் கூடாது, இதில் தலைவர் முன்னெப்போதையும் விட மிகக் கடுமையாக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நல்ல நோக்கமாகவே இருந்தாலும் கூட, அந்தந்த ரசிகர்கள் தங்களால் ஆன உதவியை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யட்டும். ஆனால் பொது மக்களிடமோ, ரசிகர்களிடமோ எந்தக் காரணம் கொண்டும் ஒரு பைசா கூட வசூல் என்று பெறக் கூடாது.

இந்த வசூல்தான் பல அடிப்படைக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது. பல அப்பாவி ரசிகர்கள் நல்ல நினைப்பில் தருகிற உதவிகளை, சிலர் தங்கள் சுய லாபத்துக்காகப் பயன்படுத்துவது தலைவர் காதுகளுக்கு வருகிறது. இதனால்தான் இப்போது மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது!

அவருடைய பெயரைப் பயன்படுத்தி செய்யப்படும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது ஏழை மக்களுக்கு சரியான விதத்தில் போய்ச் சேர வேண்டும். அந்த அக்கறைதான் இத்தனை முன்னெச்சரிக்கைகளுக்கும் காரணம். இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!”

-ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் திரு.சுதாகர் அவர்கள் கூறியது.

-எஸ். சங்கர்
Courtesy: www.rajinifans.com

Tuesday, November 18, 2008

ஈழத் தமிழர் பிரச்சினை: வேண்டாம் பிறந்தநாள் கொண்டாட்டம் ! –ரஜினி

ஜினியின் பட வெளியீட்டை விட பத்து மடங்கு உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடும் விசேஷம் தங்கள் தலைவர் ரஜினியின் பிறந்த நாள் விழா.

ஆண்டுதோறும் டிசம்பர் 12-ம் தேதி ரத்ததானம், கண்தானம், உணவு தானம், சமபந்தி போஜனம், தங்கத் தேர் இழுத்தல், பூச்சட்டி ஏந்துதல் என தங்களுக்குத் தெரிந்து வழிகளிலெல்லாம் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வது அவர்கள் வழக்கம்.
திருச்சி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்கள் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்றவை.

ஆனால் இம்முறை இந்தக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் நிர்வாகியும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சுதாகர் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்தின் பிறந்தநாள், அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.

ஆனால் ஈழத் தமிழர்கள் துன்பப்படும் இந்த வேளையில், பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி, ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

இதுபற்றிய முறையான அறிக்கையை அவரே நேரடியாக வழங்கவிருக்கிறார். ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், என சுதாகர் கூறியுள்ளார்.

http://www.envazhi.com

சத்தியநாராயணாவை நீக்கவில்லை! – சுதாகர் பேட்டி

கில இந்திய ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்து சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாக வந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவை மவெறும் வதந்திகளே. சத்தியநாராயணா நீக்கப்படவில்லை. தற்காலிக ஓய்விலிருக்கிறார், என ரஜினியின் நெருங்கிய நண்பரும், மன்றப் பணிகளை கவனிப்பவருமான சுதாகர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் கூறியுள்ளதாவது:

ரஜினி ரசிகர் மன்றத்தில் இப்போதும் சத்தியநாராயணா பொறுப்பில்தான் உள்ளார். அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுவது வீண் வதந்தி.

கடந்த 3-ந் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து பேசியபோது, சத்யநாராயணாவை மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மன்ற பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்வீர்களா? என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டார்.

அந்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கும்போது, சத்யநாராயணாவுக்கு உடல் நலம் இல்லை. அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி நான்தான் கூறியிருக்கிறேன். அவருடைய தாயார் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார். தந்தைக்கு 88 வயது ஆகிறது. அவரை, சத்யநாராயணாதான் கவனிக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் கொஞ்சநாளைக்கு ஓய்வு எடுத்துக்கப்பா... உனக்கு பதில் நானே அதுவரை மன்றத்தைப் பார்த்துக்கிறேன், என்று கூறினார். இப்போது தான் சொன்னதைப் போலவே சத்திக்கு ஓய்வளித்துள்ளார் ரஜினி.

ஆனால் சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாகவும், அவருக்கு பதில் என்னை நியமித்து இருப்பதாகவும் கண், காது, மூக்கு வைத்து வதந்தியைப் பரப்பி விட்டார்கள். அதில், கொஞ்சமும் உண்மை இல்லை. சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாக ரஜினிகாந்த் சொல்லவில்லை. சத்திக்கு உடல் நலம் இல்லாததால், தற்காலிகமாக ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்.

நானே பார்த்துக் கொள்வேன்! - ரஜினி

இனிமேல் மன்ற பணிகளை நான்தான் கவனிப்பேன், என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதற்காக ராகவேந்திரா மண்டபத்தில் 2 பணியாளர்களை வேலைக்கு நியமித்துள்ளார். அவர்கள் ரசிகர்களிடம் இருந்து வருகிற போன்கள் மற்றும் தகவல்களைக் குறித்து வைத்து என்னிடம் தருகிறார்கள். ரசிகர்களின் நிறை, குறைகளைக் கேட்டு, அவற்றை ரஜினிகாந்திடம் கூறவும், ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கூறும் பதில்களை, ரசிகர்களிடம் கூறுவதற்காகவும்தான் அவர் என்னை நியமித்து இருக்கிறார்.

அவர் உத்தரவுப்படி, நான் என் பணிகளைச் செய்து வருகிறேன். இதுதான் உண்மை, என சுதாகர் தெரிவித்துள்ளார்.

எனவே மன்றப் பொறுப்பை தன் கையில் நேரடியாக ரஜினியே எடுத்துக் கொண்டிருப்பதால், பல அதிரடி முடிவுகள் அடுத்தடுத்து வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.envazhi.com

மீடியாவின் எல்லை மீறிய செயல்! - சத்யநாராயணா

ன்றப் பொறுப்பாளர் பதவியிலிருந்து சத்தியநாராயணா நீக்கம், புதிய தலைவராக சுதாகர் நியமனம் என்றெல்லாம் இரு தினங்களாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

உண்மையில் நடந்தது என்ன?

சத்தியநாராயணா மீது ரஜினிக்கு உண்மையிலேயே அதிருப்தியா... அவர் தனக்கென்று தனி கோஷ்டி சேர்க்கிறார் என்பது உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெறும் யூகங்களின் அடிப்படையில் ‘அவல்’ தர முடியாது.
எனவே இதுகுறித்த தீவிர விசாரணையில் இறங்கினோம். முதலில் ராகவேந்திரா மண்டப பொறுப்பாளர்கள் சொன்ன தகவல்:

“சத்தி சார் நீக்கப்பட்டார் என்று ரஜினி இதுவரை எங்கும் சொல்லவில்லை. எந்த அறிக்கையும் விடவும் இல்லை. ஏற்கெனவே சத்திக்கு கொஞ்சநாள் ஓய்வு தர வேண்டும் என்று ரஜினி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் உடல் நலக் கோளாறு. மறுபக்கம் தாயை இழந்த சோகம். இப்போது வயதான தந்தையைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு.

தாய் தந்தைக்குத்தான் முதலிடம் என்று அடிக்கடி சொல்வார் ரஜினி. எனவேதான் இப்போது சத்திக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ரஜினி ரசிகர் மன்றத்தின் எந்த முடிவாக இருந்தாலும் அதை ரஜினிதான் முதலில் சொல்ல வேண்டுமே தவிர மீடியா இஷ்டத்துக்கு சொல்லவிட முடியாது... சத்தி எப்போதும்போல இந்த குடும்பத்தின் ஓர் அங்கம்தான்...”

இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லக் கூடிய இருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. மற்றொருவர் சத்தியநாராயணாதான். மிக நீண்ட முயற்சிக்குப்பின் சத்தியைத் தொடர்பு கொண்டோம். நேரில் சந்திக்கக் கேட்டபோது, ‘இப்போது வேண்டாமே’ என்றவர், தனது நிலை குறித்து சுருக்கமாக கருத்து சொல்லி முடித்துக் கொண்டார்.

எனக்கு உடல் நலம் சரியில்லை. ரெஸ்டில் இருக்கிறேன். ரஜினி சாரே என்னை ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். சார் அடிக்கடி சொல்வார்... ஏம்பா இவ்ளோ கஷ்டப்படற... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ, என்பார். இப்போது சில வாரங்கள் ஓய்வுக்காக வீட்டிலிருக்கிறேன். அதற்குள் மீடியா இப்படியெல்லாம் கதை எழுதுவது வேடிக்கையாக உள்ளது.

நான் விடுமுறையில் போனால், அந்த வேலையை இன்னொருவர் கவனித்துக் கொள்ளமாட்டாரா... அப்படித்தான் நண்பர் சுதாகர் இப்போது பார்த்துக் கொள்கிறார். அதற்குள் நான் ராஜினா செய்துவிட்டேன் என்றும், வேறு சில வேண்டாத கோணத்திலும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

நேற்றிலிருந்தே ரசிகர்களின் போன் கால்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இன்று இன்னும் அதிகம்.

இந்தச் செய்திகளைப் படித்துவிட்டு, சாரே கோபப்பட்டார். ஒரு விஷயம் கேள்விப்பட்டால் குறைந்தபட்சம் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூட மாட்டார்களா பத்திரிகைக்காரர்கள்...! இது அவர்களின் எல்லை மீறிய செயல்...” என்றார்.