Showing posts with label Celebrations. Show all posts
Showing posts with label Celebrations. Show all posts

Friday, December 5, 2008

ரஜினிபேன்ஸ்.காம் ரத்த தான முகாம்... நாள், இடம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 58-வது பிறந்த நாளையொட்டி ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம் குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்போது இதற்கான இடம் மற்றும் இறுதி ஏற்பாடுகள் முடிவாகியுள்ளன.

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள மவுண்ட் மெடிக்கல் சென்டரில் (முகவரி: 5/66, பட் ரோடு சந்திப்பு, செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை-18).

வருகிற டிசம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமுக்கு டாக்டர் எம்.சச்சிதானந்தன், டாக்டர் சுபாஷிணி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். முகாமுக்காக நமது தளம் வடிவமைத்துள்ள பேனர்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.

உயரிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் ரத்த தானம் நடைபெற மருத்துவர் குழு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விழா முழுக்க முழுக்க www.rajinifans.com தனது சொந்த முயற்சியில் நடத்துவது. எந்த வித நிதியுதவியும் யாரிடமும் பெறப்படவில்லை. இதுவரை தலைவர் பிறந்த நாளுக்கு அப்படியொரு முயற்சியில் நாம் இறங்கவுமில்லை என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர் பிறந்த நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் www.rajinifans.com முயற்சியில் நீங்களும் கரம் கோர்க்கலாமே...

மேலும் விவரங்களுக்கு:
http://www.rajinifans.com/others/contactus.php

-எஸ்.சங்கர்
www.rajinifans.com

Tuesday, November 18, 2008

ஈழத் தமிழர் பிரச்சினை: வேண்டாம் பிறந்தநாள் கொண்டாட்டம் ! –ரஜினி

ஜினியின் பட வெளியீட்டை விட பத்து மடங்கு உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடும் விசேஷம் தங்கள் தலைவர் ரஜினியின் பிறந்த நாள் விழா.

ஆண்டுதோறும் டிசம்பர் 12-ம் தேதி ரத்ததானம், கண்தானம், உணவு தானம், சமபந்தி போஜனம், தங்கத் தேர் இழுத்தல், பூச்சட்டி ஏந்துதல் என தங்களுக்குத் தெரிந்து வழிகளிலெல்லாம் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வது அவர்கள் வழக்கம்.
திருச்சி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்கள் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்றவை.

ஆனால் இம்முறை இந்தக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் நிர்வாகியும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சுதாகர் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்தின் பிறந்தநாள், அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.

ஆனால் ஈழத் தமிழர்கள் துன்பப்படும் இந்த வேளையில், பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி, ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

இதுபற்றிய முறையான அறிக்கையை அவரே நேரடியாக வழங்கவிருக்கிறார். ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், என சுதாகர் கூறியுள்ளார்.

http://www.envazhi.com