Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, December 21, 2008

தமிழ்ப் பத்திரிகைகளின் 'நம்பகத்தன்மைக்கு' இதோ இன்னொரு சாம்பிள்!

மீண்டும் மீண்டும் தங்களின் நம்பகத் தன்மையை தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நிகர் எதுவுமில்லை.

மற்றவர்களுக்கு எப்படியோ, ரஜினி ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட இது பழகிப்போன விஷயமாகிவிட்டது.

இருவாரங்களுக்கு முன் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் ஒரு கவர்ஸ்டோரி.

‘ரஜினி பிறந்த நாளுக்கு ரசிகர்கள் தரும் அதிர்ச்சிப் பரிசு! - சத்தியநாராயணாவை ரஜினி கழற்றி விட்டுவிட்டதால், கோபித்துக் கொண்டுள்ள 14 மாவட்ட ரஜினி மன்ற தலைவர்கள், சத்தியின் ஆதரவாளர்களுடன் ரஜினி பிறந்த நாளன்று கூண்டோடு அதிமுகவில் சேரப் போகிறார்கள்!’


டிசம்பர் 12-ம் தேதியும் வந்தது... மாவட்டம் தோறும் நடந்த சிறப்பான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள்தான் இதுவரை வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
அன்றைய தினம் ஈ, காக்கா, குருவி கூட ரஜினி மன்ற நண்பர்களைச் சுற்றிச் சுற்றித்தான் வந்துகொண்டிருந்திருக்கும். காரணம் இங்குதானே சரியான ‘தீனி’ இருந்தது அன்றைக்கு.

எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்கள்... என்ற விவரத்தை இந்த கட்டுரை தயாரித்த குமுதம் ஆசிரியர் குழு, அட... அடுத்த இதழில்கூட வேண்டாம்... இப்போதாவது வெளியிடலாமே!

அன்று, சத்தி மன வருத்தத்தில் புழுங்குவதாக விகடன் குழுமமும் இதே குமுதமும் அட்டைப் படக் கட்டுரையும், அவரது பேட்டியையும் (‘ராமனின் அம்பு முனை பட்ட வலி!’ - விகடன்!) வெளியிட்டன.

இதோ... அதே ரிப்போர்ட்டர் இதழில் இன்று வந்துள்ள சிறப்புக் கட்டுரை!

படித்துவிட்டு, நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்... அப்படியே, சத்திக்கு ஓய்வளிப்பதாக ரஜினி மன்றத்திலிருந்து அறிவிப்பு வந்தபோது, நாம் வெளியிட்ட சத்தியநாராயணாவின் சிறப்புப் பேட்டியையும் நினைவில் கொள்ளுங்கள்!

ரஜினி பிறந்த நாளில் சத்தியநாராயணா செய்த யாகம்!!


கடந்த 12-ம்தேதி காலை பத்து மணி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைக்காட்டூர் என்ற குக்கிராமத்தில் உள்ள சித்தர் கோயிலில் வந்து நின்றது ஒரு ஸ்கார்பியோ கார். அந்த காரில் இருந்து இறங்கி அமைதியாக கோயிலுக்குள் நுழைந்தவர் வேறு யாருமில்லை. சத்தியநாராயணா.

சூப்பர் ஸ்டார் ரஜினியால் மன்றப் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டார் என்றும், ரஜினிக்கும் அவருக்கும் தற்போது ஏழாம் பொருத்தம் என்றும் சத்திய நாராயணாவைப் பற்றி பரபரப்புச் செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், சத்தியநாராயணா ரஜினியின் பிறந்தநாளும் அதுவுமாக திடுதிப்பென இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்தது அங்கிருந்த சொற்ப பக்தர்களுக்கும் திகைப்பைத் தந்தது.

வயல்வெளிகளுக்கு நடுவில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்த குட்டியூண்டு கோயிலில் சுமார் ஐந்து மணிநேரம் தங்கியிருந்து, ரஜினி மற்றும் லதா பெயரில் யாகம் நடத்திவிட்டு, அன்று மதியம் முந்நூறு பேருக்கு அன்னதானமும் செய்திருக்கிறார் சத்தி. ரஜினி பிறந்தநாளில் பிரபல சித்தர் கோயிலுக்கு வந்து ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் யாகம் செய்ததன் மர்மம் என்ன?

அதைத் தெரிந்து கொள்ள உடனே இடைக்காட்டூருக்குப் புறப்பட்டோம்.

மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் என்ற சிற்றூரின் வடப்புறமாகப் பிரியும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இடைக்காட்டூர். இந்த ஊரில் பிறந்து வளர்ந்து திருவண்ணாமலையில் ஜீவசமாதி ஆனவர்தான் இடைக்காட்டுச் சித்தர். இடைக்காடர் என்று அழைக்கப்படும் அவர் பதினெட்டுச் சித்தர்களில் தனித்தன்மை வாய்ந்தவராம்.

... ... ... அப்படி நவகிரக கோயில் என்று பெயர் கொண்ட அந்தச் சிறிய கோயிலில் மூலவரே நவகிரகங்கள்தானாம். கடந்த பத்தாண்டுகளாக திருவாதிரை பூஜையும், கடந்த ஐந்து மாதங்களாக பௌர்ணமி பூஜையும் நடந்து வருகிறது. அந்தக் கோயிலில்தான் 12-ம்தேதி நடந்த பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு யாகமும் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார் சத்தியநாராயணா.

சென்னையிலிருந்து 12-ம்தேதி அதிகாலை சத்தியஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜனுடன் விமானம் மூலம் மதுரை வந்த சத்தியநாராயணா, அங்கிருந்து காரில் பரமக்குடி வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருக்கிறார். அங்கே தனக்கு நெருக்கமான மாவட்ட நிர்வாகிகளை மட்டும் வரவழைத்துப் பேசிய சத்தியநாராயணா, 'நான் வந்த விஷயமோ, நோக்கமோ வேறு எக்காரணம் கொண்டும் வெளியில் கசியக் கூடாது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்குத் தெரியக் கூடாது' என்று கூறியிருக்கிறார். வெள்ளி, சனி ஆகிய இரண்டுநாட்கள் அவர் பரமக்குடியில் தங்கியிருந்தும் அவரது விசிட் அவரது விசுவாசிகளால் பொத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி பெயரில் சிறப்பு யாகம்!

12-ம்தேதி காலை பத்து மணியளவில் இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்து சேர்ந்த சத்தியநாராயணா, அங்கே ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகசாலையில் தியாகராஜனுடன் அமர்ந்தாராம். அதன்பிறகு நடந்தவற்றை அந்தக் கோயில் அர்ச்சகர் நம்மிடம் விவரித்தார்.

‘ஏறத்தாழ இரண்டு மணிநேரம் நடந்த அந்த யாகத்தில், சத்தியநாராயணா பயபக்தியுடன், முழு ஈடுபாட்டுடன் அமர்ந்திருந்தார். `யாருக்காக யாகம்? அவர்களது பெயர், நட்சத்திரங்களைக் கூறுங்கள்' என்று யாகம் நடத்தியவர் கேட்டபோது, `ரஜினிகாந்த், திருவோண நட்சத்திரம், லதா ரஜினிகாந்த், மகம் நட்சத்திரம்' என்று சத்தியநாராயணா கூறினார். யாகம் மிக எளிமையாக நடந்து முடிந்த பின், கோயிலுக்குள் நடந்த அன்னதானத்தில் அவரே எல்லோருக்கும் உணவு பரிமாறினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவர் புறப்பட்டுப் போகும் வேளையில் எங்களிடம், `கோயில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது' என்று சொல்லிவிட்டுச் சென்றார்’ என்றார் அந்த அர்ச்சகர்.

.... .... அந்த நவகிரக சித்தர் கோயிலை விட்டுக் கிளம்பும் முன் சத்தியநாராயணா, தன் சொந்தச் செலவில் கோயிலைச் சுற்றி பக்தர்கள் வலம் வர வசதியான ஏற்பாட்டைச் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் `அன்னதான மண்டபம்' ஒன்றையும் கட்டித்தருமாறு கோரிக்கை வைத்த கோயில் பக்தர்கள், அடுத்து வைத்த இன்னொரு கோரிக்கைதான் வித்தியாசமானது.


`ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமியன்று பதினெட்டு சித்தர்களும் இங்குள்ள நவகிரகங்களை வழிபட வருவதால் அந்த நாளில் கோயிலில் அதிர்வுகள் (வைபரேஷன்) அதிகமாக இருக்கும். ஆகவே வரும் சித்ரா பௌர்ணமியன்று சூப்பர் ஸ்டாரை இந்தக் கோயிலுக்கு அழைத்து வாருங்கள்' என்பதுதான் பக்தர்கள் வைத்த கோரிக்கை. அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாகச் சென்று விட்டாராம் சத்தி..."

-இப்படி முடியும் கட்டுரையில் மீண்டும் தங்கள் வக்கிரத்தைக் காட்டியுள்ளது குமுதம். அது,

"சத்தியநாராயணாவின் இந்தக் கோயில் விசிட், ரஜினி ரசிகர்கள் சிலருக்கு சிறிய சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைவரும் தளபதியும் தங்களுக்குள் `லடாய்' என்பது போல நாடகமாடுகிறார்களா? என்ற சந்தேகம்தான் அது. எது உண்மை என்பது அந்த இடைக்காட்டூர் சித்தருக்கே வெளிச்சம்!"

-நீங்கள்ளாம் திருந்தவே மாட்டீங்களாப்பா!!

ஒரு சின்ன நினைவூட்டல்: பசி என்பது நியாயமான விஷயம்தான்... அதற்காக வெந்தது... வேகாதது என கிடைப்பதையெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காமல் எடுத்துப்போட்டு விழுங்குவது ஆறறிவு பகுத்தறிவு கொண்ட மனிதன் செயலா... அதுவும் வாளை விட வலியது என தோள் தட்டும் பத்திரிகைத் தொழிலுக்கு அழகா?

http://www.envazhi.com

Thursday, December 4, 2008

புறம் பேசியவர்களிடமும் நட்பு பாராட்டும் ரஜினியின் பண்பு!

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்'

-இந்தக் குறள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... ரஜினிக்கு நூறு சதவிகிதம் பொருந்தம்.

வள்ளுவப் பெருமானின் வாக்கை அப்படியே ஏற்று நடக்கும் உண்மையான தமிழ் மகன் இந்த ‘தங்க மகன்’!

ரஜினியைப் புகழ்ந்து பேசுபவர்களின் பட்டியலுக்கு இணையானது அவரைப் பற்றி புறம் பேசுபவர்களின் பட்டியல்.

காரணம்... பொறாமையைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை!

அட, அவர்களுக்கும் ரஜினிக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் ரஜினி என்னமோ அவர்களது ஜென்மப் பகைவர் மாதிரி நினைத்துக் கொண்டு வார்த்தைகளில் வன்மத்தைக் கொட்டுவார்கள்.

சத்யராஜூக்கும் ரஜினிக்கும் என்ன பகை? இத்தனைக்கும் சத்யராஜ் ஆரம்ப காலத்தில் வாய்ப்பின்றி சும்மா கிடந்த நேரத்தில் தனது படங்களில் முக்கிய வேடங்கள் கொடுத்து அவரை ஸ்டார் வில்லனாக்கியவர் ரஜினி. மூன்று முகத்தில் தொடங்கி மிஸ்டர் பாரத் வரை எத்தனை படங்கள்... எவ்வளவு வாய்ப்புகள். இதை சத்தியராஜே எத்தனை மேடைகளில் நெகிழ்ச்சியுடன் (அப்படி நடித்தபடி?!) சொல்லியிருப்பார்!

ஆனால் இதே சத்தியராஜூக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது.

காவிரி மேடையில் தான் செய்த அநியாய பாவத்துக்கு, ஈழ மேடையில் கழுவாய் தேடிக் கொண்டார்.

இந்த மன்சூர் அலிகான்.... அவர் பேசிய நரகல் பேச்சுக்களை அச்சில் ஏற்ற முடியாது. ஆனால் அவர்தான் படையப்பாவில் ஒரு சின்ன ரோலில் வந்து பெரிய சம்பளத்துடன் போனார். இன்று ரஜினி புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்.

மனோரமா... ரஜினியின் இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்திருந்தால், மனோரமா என்ற நடிகையை தமிழ் ரசிகர்கள் இந்நேரம் மறந்துவிட்டிருப்பார்கள். அடுத்த ஜென்மத்துக்கும் சேர்த்து பாவங்களைச் சேர்த்துக் கொண்டார் மனோரமா... அந்த ஒரே தேர்தலில்.

ஒரு வருடம்... சீண்ட ஆளில்லை. ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை இந்த மனோரமாவுக்கு. ஆனால் ஆண்டவன், இந்த ‘அருணாச்சலம்’ பக்கத்தில் இருப்பது, அருணாச்சலத்தில் வாய்ப்பு கிடைத்த போதுதான் அந்தம்மாவுக்கே தெரிந்தது!!

ரஜினி எப்போதும் ஈர உள்ளத்துக்குச் சொந்தக்காரர். ஏதோ முதுமையின் தாக்கத்தில் மனோரமா பேசியதாக நினைத்து மறந்து மன்னித்து, பிறர் படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்தார். (அன்று எந்த ஜெயலலிதாவுக்காக ரஜினியை தாறுமாறாகப் பேசினாரோ, அதே ஜெயலலிதாவை சுத்தமாக மறந்து போனார் மனோரமா, தனக்கு கலைஞர் தலைமையில் நடந்த பாராட்டு விழாவின்போது!)

இப்போது வேலு பிரபாகரன்-

ரஜினியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்து இப்போது புகழ் பாடுபவராக மாறியுள்ள இயக்குநர்.
ரஜினி ஒரு நல்ல நடிகரே இல்லை என முழங்கியவர்தான் இவர். ஆனால் இன்று இப்படிச் சொல்கிறார்:

‘பகுத்தறிவு பிரச்சாரம் செய்த நான் வீடு இல்லாமல் நடுத் தெருவில் நின்றபோது, நண்பர் ரஜினிதான் உதவி செய்தார். சூப்பர் ஸ்டார் செய்த உதவி வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது...’ (நீங்க பேட்டி கொடுத்த அந்த பாவிகளுக்கு நன்கு உறைக்கும்படி சொல்லுங்கள்...பிரபாகரன்!)

இவரது முன்னாள் மனைவி ஜெயதேவி. இவரும் ரஜினியை இஷ்டத்துக்கும் விமர்சித்தவர்தான். ஆனால் அவருக்கும் சிவாஜியில் ஒரு வாய்ப்புக் கொடுத்து பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்தார் ரஜினி. இத்தனைக்கும் தீட்டிய மரத்திலேயே கூர் பாரப்பது போல, அந்த சிவாஜி ஷூட்டிங்கிலேயே கூட தகராறு செய்தவர் இந்தப் பெண்.

உடனே ரஜினி இப்படிச் செய்ததற்கு ஆயிரம் தப்பர்த்தங்களை சிலர் கண்டுபிடிக்கக் கூடும்.

உங்களைக் கேவலமாகப் பேசிய ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள். குறைந்தது அப்படிச் செய்யலாம் என்ற எண்ணமாவது உங்களுக்கு வருகிறதா என்று யோசித்துப் பாருங்கள். அப்புறம் ரஜினியை விமர்சிக்கலாம்.

கஷ்டப்படுபவர் எதிரியா நண்பனா என்று பார்ப்பதில்லை ரஜினி... கஷ்டப்படுகிறாரா... சரி அவர்களுக்கு முதலில் கையைக் கொடுப்போம். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்... இதுதான் ரஜினி.

இந்த வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள்... பாக்கியிருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு... என இளையராஜா சுவாமிகள் (ரஜினி இப்படித்தான் கூப்பிடுவார்!) பாடியது ஒவ்வொரு நாளும் நிஜமாகி வருகிறது.

ஓசியில் ஒரு பிளாக் கிடைக்கிறதே என்று வக்கிரங்களை வாரியிறைக்கும் அசமஞ்சங்கள்தான் முக்கியமாக இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரைப் பற்றி வந்த விமர்சனங்களுக்கு அளவில்லை. நாய் பேயெல்லாம் ஒரு மைக் கிடைத்ததே என்று குரைத்துத் தீர்த்தன, இன்றைய 'சில பிளாக்கர்கள்' போல. அறிவு ஜீவிப் பத்திரிகைகள் அவரை ஒரு ஆட்சியாளராகவே பொருட்படுத்தவில்லை. எம்ஜிஆருக்கு பக்கபலமாக இருந்த தினத்தந்தி பேன்ற பத்திரிகைகளை இவர்கள் எள்ளி நகையாடியது கொஞ்சமல்ல... (அதே தினத்தந்தியில் வரும் செய்திக்கு இன்று கெஜட்டுக்கு சமமான அந்தஸ்து!)

ஆனால் இன்று- இதே அசட்டு அஞ்ஞானிகளும் அரைவேக்காடுகளும் போட்டி போட்டுக் கொண்டு புகழ்ந்து தள்ளுகின்றன. அவரைப் போல ஒரு ஆட்சியாளர் உண்டா... மனிதாபிமானி, பொற்கால ஆட்சி தந்த புரட்சித் தலைவர் என்று போற்றிப் புகழ்கின்றன.
எம்ஜிஆர் பெயர் சொல்லாமல் ஓட்டுக் கேட்கிற தைரியம் இன்றைய கட்சிகளில் யாருக்காவது உண்டா... (இன்னும் பல படிகள் மேலே போய் கருப்பு சிவப்பு பழுப்பு பெயிண்ட் அடித்துக் கொள்கிறார்கள் தங்கள் முகங்களுக்கு!)

அன்றைக்கு செய்தது போல எம்ஜிஆருக்கு எதிராக எதையாவது பேசி ஓட்டுக் கேட்டுப் பார்க்கட்டும் இவர்கள் – திமுக உள்பட- டப்பா டான்ஸாடி விடும்!

ஏனென்றால், மகாபாரதம் சொல்வது போல ‘நல்லவர்களுக்கு காலமே தலை வணங்கும்... காலத்தின் கையிலிருக்கும் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்’!
http://www.envazhi.com