Showing posts with label Jayalalitha. Show all posts
Showing posts with label Jayalalitha. Show all posts

Friday, December 12, 2008

மனங்களை வென்ற மகா கலைஞனுக்கு வாழ்த்துக்கள்!

லங்கையில் காயம்பட்டுத் துடிக்கும் நம் சகோதரர்களுக்காக இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடுங்கள் என்று என்னதான் ரஜினி கூறினாலும், ஏதோ இன்றுதான் தீபாவளி, கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு வந்துவிட்டதைப் போன்ற உணர்வு ரசிகர்களின் மனசுக்குள்...

இன்னொரு பக்கம், ரஜினியின் இந்த பிறந்த நாளுக்காகவே கிடைத்த நல்ல செய்தியைப் போல, இலங்கையில் போர் முனையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லி ஈழ மக்களைத் துன்புறுத்திய சிங்கள ராணுவமே தோற்றுப்போய் ஆயுதங்களை கீழே வீசிவிட்டு புறமுதுகிட்டு ஓடியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஜினியின் வாக்கு பலிக்கட்டும்... ஈழத் தமிழர்களின் மண் அவர்களுக்கு முழுமையாய் கிடைக்கட்டும்.

இந்த பிறந்த நாளில் உலகமே ரஜினிக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்க, அவரோ எங்கோ ஒரு தனிமையான இடத்தில் இந்த தினத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்.
ரஜினி பற்றி கடந்த சில மாதங்களில் சில முக்கிய பிரபலங்கள் கூறியவற்றின் தொகுப்பு இது:

மன்மோகன் சிங், பிரதமர், இந்தியா

‘ஒரு சிறந்த நடிகர், கலைஞருக்கு இந்த விருதைத் தருவதில் பெருமைப்படுகிறேன்.’ (என்டிடிவி விருது விழா)

‘எங்கள் நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் டான்சிங் மஹாராஜா இங்கே வெற்றி பெற்று இருநாட்டு கலாச்சார உறவுகள் பலப்பட காரணமாக இருந்ததை நினைவு கூறுகிறேன்...’ (ஜப்பான் பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்)

மு.கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு

அன்புத் தம்பி ரஜினி நிஜமாகவே ஒரு உச்ச நட்சத்திரம். வான மண்டலங்களையெல்லாம் தாண்டி, நட்சத்திரங்களைத் தாண்டி சூரியனுக்கு நிகராய் பிரகாசித்துக் கொண்டிருப்பவர். உண்மையிலேயே சூரியனுக்கு அருகில் வீற்றிருப்பவர்.

அவருடைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். புத்தகங்கள், பத்திரிகை வாயிலாக அவரது பழைய வாழ்கைகையும், இப்போது அவர் கடைப்பிடிக்கும் வாழ்க்கையையும் படித்து நான் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து, கண் கலங்கிப் இருக்கிறேன்.

...வாழ்க அவர் பல்லாண்டு, என்றும் இதே பெருமை, புகழுடன்.

-சிவாஜி வெள்ளி விழா

ஜெயலலிதா, முன்னாள் முதல்வர், தமிழ்நாடு

அன்புச் சகோதரர் ரஜினி ஒரு அரிய கலைஞர். மிகச் சிறந்த மனிதர். வித்தியாசமான நடிப்புக்கு உரியவர். அவர் என்னைப் பாராட்டியதைப் பெருமையாகக் கருதுகிறேன்...(ரீடிப் நேர்காணல்)

எல் கே அத்வானி:

ரஜினியைப் போன்ற மனிதரைப் பார்ப்பது அபூர்வம். அவரது மன உறுதி அசாத்தியமானது. என்னை வியக்க வைக்கிறது.

அமிதாப் பச்சன்:

ரஜினியை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எப்போதும் என் நலம் விரும்பும் நல்ல சகோதரன். மிகச் சிறந்த பண்பாளர்.

பாரதிராஜா:

மிக அருமையான மனிதன் ரஜினி. அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. பழகியதில்லை. மிக உயர்ந்த குணங்களுக்குச் சொந்தக்காரர். நான் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிடுவேன். பின்னர் பேசியதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன். ஆனால் என்றும் நிதானம் தவறாத மனிதன் ரஜினி.

அடித்த கரங்களுக்கே பூமாலை போடுகிற உயரிய பண்பு அவருக்கு உண்டு. அது எல்லோரிடத்திலும் காணக் கிடைக்காதது... (குசேலன் பிரச்சினையில்...)

வைகோ:

ரஜினியிடம் இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. கடின உழைப்பு, நேரம் தவறாமை, நேர்மை, உறுதியான பேச்சு அனைத்துக்கும் ரஜினியை உதாரணமாகச் சொல்லலாம்.

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை அவர் கையாளும் விதம் வியப்பைத் தருகிறது. (ரஜினி ரசிகர்களுக்காக வெளியிட்ட அறிக்கை)

இளையராஜா:

ரஜினி மனதளவில் ஒரு துறவியின் வாழ்க்கையை வாழும் உன்னதமான கலைஞர். திரையுலகில் இப்பெடிப்பட்ட அரிய குணங்களுடன் உச்ச நடிகராக இருப்பது சாதாரண விஷயமல்ல. மிக்க் கடினமான உழைப்பாளி. அதற்கான பலன்தான் கடவுள் அவரை வைத்துள்ள உயரம்... (பால் நிலா பாதை)

கமல்ஹாசன்:

ரஜினியைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொல்வதைப் போலத்தான். ரஜினியால் செய்ய முடியாத வேடம் கிடையாது. அவரால் எம்ஜிஆராகவும் நடிக்க முடியும். சிவாஜியாகவும் பிரதிபலிக்க முடியும்.

எங்கள் இருவருக்கும் உள்ள நட்பில் யார் பெரியவர், சின்னவர் என்ற பேதம் கிடையாது. வயதில் அவர் பெரியவர்தான். ஆனால் இருவருக்கும் உள்ள நட்பு வெளிச்ச வட்டத்துக்குள் சிக்காதது (மிட் டே).

டாக்டர் ராமதாஸ்:

ரஜினிகாந்த் நல்ல மனிதர். மிகச் சிறந்த பண்பாளர்... (மாலை மலர்)


தொகுப்பு: வினோஜாஸன்
http://www.envazhi.com

Sunday, September 7, 2008

சல்யூட்டும் அடிக்கணும் சவுக்காலும் அடிக்கணும்!


சர்க்கரையாய் இனிக்காதே... உன்னைக் கரைத்துக் காணாமலடித்து விடுவார்கள், என்ற பழமொழியை மீண்டும் ஒருமுறை இங்கே கூற விரும்புகிறேன்.

மீடியாக்காரர்களை ரொம்பக் கொஞ்சினால் முகத்தை நக்க வருவார்கள். ரொம்பவும் தூர வைத்தால், ரஜினியை கடித்துக் குதறுவது போலவும் செய்வார்கள். இவர்களுக்கு அவ்வப்போது கேஸ் போட்டு வாலை ஒட்ட நறுக்கி வைக்கும் அல்லது மானத்தை வாங்கும் ஜெயலலிதா, கருணாநிதிகள்தான் லாயக்கு.

இதோ மீண்டும் ஒருமுறை தன்னைப் பற்றி தாறுமாறாக எழுதிய ஆவி, ஜீவி, ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல... உடனே மன்னிப்பு கேளுங்கள்... இல்லாவிட்டால் கொடுங்கள் ரூ.10 கோடி நஷ்ட ஈடு என்றும் சூடு கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மூலம் நக்கீரன், ஜூவி, ரிப்போர்ட்டர் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் இதோ...

கட்சியின் பொதுச் செயலாளர் நான்தான்; போடுங்கள் கையெழுத்து என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

எனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவுபடியே அந்த செய்தி வெளியிடப்படடுள்ளது. இந்த பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும்.

மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மான நஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும்.

இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

மீடியா: ரஜினியும் ஜெயலலிதாவும்!

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு தான் திமுகவில் சேர முயன்று கருணாநிதிக்குத் தூது அனுப்பியதாக ஒரு பத்திரிகை எழுதியுள்ள கட்டுரைக்கு எதிராகவும் இதே போன்ற நோட்டீசை அனுப்பியுள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்குத் தெரியும், இந்தப் பத்திரிகைகளால் தனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை என்பது. காரணம் 1996-லிருந்து ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக நிலையை எடுத்து வருபவர்கள் இவர்கள்.
இனி ஒழிந்தார் ஜெயலலிதா என்ற இவர்களின் பிரச்சாரத்தைத் தாண்டி 2001-ல் அதிகாரத்துக்கு வந்தார். அதனால் இவர்களின் லட்சணம் என்ன, வாக்காளர்கள் மீது இவர்களை எந்த அளவு நம்புகிறார்கள் என்பதெல்லாம் அவருக்குப் புரிந்திருக்கிறது. அதனால்தான் தைரியமாக அடித்து நொறுக்குகிறார்.

அதற்காக நாம் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை. ஆனால் மீடியாவை அவர் அணுகும் விதம்தான் ஓரளவு சரியானது என்றே தோன்றுகிறது.

ரஜினி ரசிகர்கள், அனுதாபிகள், ஆதரவாளர்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது இது ஒன்றுதான்.

மீடியா விஷயத்தில் ரஜினி ஜெயலலிதாவை விட மிக மேம்பட்ட அணுகுமுறையக் கையாளுகிறார். அதாவது தன்னை விமர்சிக்கும் மீடியாவை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஒரு அணுகுமுறை அது.

ஆனால் அவரது கண்ணியத்தைப் புரிந்து கொண்டு மதிக்கும் அளவுக்கு இங்குள்ள மீடியாவுக்கு ஞானமும் இல்லை, இவர்களிடம் அப்படிப்பட்ட ஞானிகளும் இல்லை.

அதனால்தான் ரஜினி கேட்காத மன்னிப்பைக் கேட்டுவிட்டதாக தலைப்புச் செய்தியாக பிரஸ்தாபித்தார்கள்.

இனி ரஜினி 'ஆபீஸ் ரூம்' போட்டால்தான் அடங்குவார்களோ!

(மீடியாக்களுக்குத்தான் மக்களிடம் செல்வாக்கில்லையே... அப்படியெனில் குசேலன் பாதிக்கப்பட்டதாக எப்படிக் கூறுவீர்கள் என சிலர் கேட்கக் கூடும். சினிமா வேறு, அரசியல் வேறு. இதற்கு ஒரு தனிப் பதிவைத் தரும் திட்டமுள்ளது.)