Showing posts with label Dr Ramadass. Show all posts
Showing posts with label Dr Ramadass. Show all posts

Friday, December 12, 2008

மனங்களை வென்ற மகா கலைஞனுக்கு வாழ்த்துக்கள்!

லங்கையில் காயம்பட்டுத் துடிக்கும் நம் சகோதரர்களுக்காக இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடுங்கள் என்று என்னதான் ரஜினி கூறினாலும், ஏதோ இன்றுதான் தீபாவளி, கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு வந்துவிட்டதைப் போன்ற உணர்வு ரசிகர்களின் மனசுக்குள்...

இன்னொரு பக்கம், ரஜினியின் இந்த பிறந்த நாளுக்காகவே கிடைத்த நல்ல செய்தியைப் போல, இலங்கையில் போர் முனையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லி ஈழ மக்களைத் துன்புறுத்திய சிங்கள ராணுவமே தோற்றுப்போய் ஆயுதங்களை கீழே வீசிவிட்டு புறமுதுகிட்டு ஓடியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஜினியின் வாக்கு பலிக்கட்டும்... ஈழத் தமிழர்களின் மண் அவர்களுக்கு முழுமையாய் கிடைக்கட்டும்.

இந்த பிறந்த நாளில் உலகமே ரஜினிக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்க, அவரோ எங்கோ ஒரு தனிமையான இடத்தில் இந்த தினத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்.
ரஜினி பற்றி கடந்த சில மாதங்களில் சில முக்கிய பிரபலங்கள் கூறியவற்றின் தொகுப்பு இது:

மன்மோகன் சிங், பிரதமர், இந்தியா

‘ஒரு சிறந்த நடிகர், கலைஞருக்கு இந்த விருதைத் தருவதில் பெருமைப்படுகிறேன்.’ (என்டிடிவி விருது விழா)

‘எங்கள் நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் டான்சிங் மஹாராஜா இங்கே வெற்றி பெற்று இருநாட்டு கலாச்சார உறவுகள் பலப்பட காரணமாக இருந்ததை நினைவு கூறுகிறேன்...’ (ஜப்பான் பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்)

மு.கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு

அன்புத் தம்பி ரஜினி நிஜமாகவே ஒரு உச்ச நட்சத்திரம். வான மண்டலங்களையெல்லாம் தாண்டி, நட்சத்திரங்களைத் தாண்டி சூரியனுக்கு நிகராய் பிரகாசித்துக் கொண்டிருப்பவர். உண்மையிலேயே சூரியனுக்கு அருகில் வீற்றிருப்பவர்.

அவருடைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். புத்தகங்கள், பத்திரிகை வாயிலாக அவரது பழைய வாழ்கைகையும், இப்போது அவர் கடைப்பிடிக்கும் வாழ்க்கையையும் படித்து நான் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து, கண் கலங்கிப் இருக்கிறேன்.

...வாழ்க அவர் பல்லாண்டு, என்றும் இதே பெருமை, புகழுடன்.

-சிவாஜி வெள்ளி விழா

ஜெயலலிதா, முன்னாள் முதல்வர், தமிழ்நாடு

அன்புச் சகோதரர் ரஜினி ஒரு அரிய கலைஞர். மிகச் சிறந்த மனிதர். வித்தியாசமான நடிப்புக்கு உரியவர். அவர் என்னைப் பாராட்டியதைப் பெருமையாகக் கருதுகிறேன்...(ரீடிப் நேர்காணல்)

எல் கே அத்வானி:

ரஜினியைப் போன்ற மனிதரைப் பார்ப்பது அபூர்வம். அவரது மன உறுதி அசாத்தியமானது. என்னை வியக்க வைக்கிறது.

அமிதாப் பச்சன்:

ரஜினியை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எப்போதும் என் நலம் விரும்பும் நல்ல சகோதரன். மிகச் சிறந்த பண்பாளர்.

பாரதிராஜா:

மிக அருமையான மனிதன் ரஜினி. அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. பழகியதில்லை. மிக உயர்ந்த குணங்களுக்குச் சொந்தக்காரர். நான் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிடுவேன். பின்னர் பேசியதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன். ஆனால் என்றும் நிதானம் தவறாத மனிதன் ரஜினி.

அடித்த கரங்களுக்கே பூமாலை போடுகிற உயரிய பண்பு அவருக்கு உண்டு. அது எல்லோரிடத்திலும் காணக் கிடைக்காதது... (குசேலன் பிரச்சினையில்...)

வைகோ:

ரஜினியிடம் இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. கடின உழைப்பு, நேரம் தவறாமை, நேர்மை, உறுதியான பேச்சு அனைத்துக்கும் ரஜினியை உதாரணமாகச் சொல்லலாம்.

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை அவர் கையாளும் விதம் வியப்பைத் தருகிறது. (ரஜினி ரசிகர்களுக்காக வெளியிட்ட அறிக்கை)

இளையராஜா:

ரஜினி மனதளவில் ஒரு துறவியின் வாழ்க்கையை வாழும் உன்னதமான கலைஞர். திரையுலகில் இப்பெடிப்பட்ட அரிய குணங்களுடன் உச்ச நடிகராக இருப்பது சாதாரண விஷயமல்ல. மிக்க் கடினமான உழைப்பாளி. அதற்கான பலன்தான் கடவுள் அவரை வைத்துள்ள உயரம்... (பால் நிலா பாதை)

கமல்ஹாசன்:

ரஜினியைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொல்வதைப் போலத்தான். ரஜினியால் செய்ய முடியாத வேடம் கிடையாது. அவரால் எம்ஜிஆராகவும் நடிக்க முடியும். சிவாஜியாகவும் பிரதிபலிக்க முடியும்.

எங்கள் இருவருக்கும் உள்ள நட்பில் யார் பெரியவர், சின்னவர் என்ற பேதம் கிடையாது. வயதில் அவர் பெரியவர்தான். ஆனால் இருவருக்கும் உள்ள நட்பு வெளிச்ச வட்டத்துக்குள் சிக்காதது (மிட் டே).

டாக்டர் ராமதாஸ்:

ரஜினிகாந்த் நல்ல மனிதர். மிகச் சிறந்த பண்பாளர்... (மாலை மலர்)


தொகுப்பு: வினோஜாஸன்
http://www.envazhi.com

Friday, November 7, 2008

ரஜினிக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு!

லங்கைப் பிரச்சினை மற்றும் ரஜினி – ரசிகர் மன்ற சந்திப்பு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்து வரும் பேட்டிகள் பெரும் ஆச்சர்யத்தைத் தருவதாக உள்ளன.

ரஜினியை பகிரங்கமாகப் பாராட்டும் ராமதாஸ், அரசியல் பிரவேசம் ரஜினியின் தனிப்பட்ட விஷயம் என்றும், அவர் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கும்போது அதுபற்றி கருத்து சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே சில வாரமிருமுறைப் பத்திரிகைகளில் ரஜினியைப் பாராட்டிப் பேசியுள்ள ராமதாஸ், இப்போது இணையதளங்களுக்கும் அதே போன்றதொரு பேட்டியை அளித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கணக்குகள் தலைகீழாக மாறிவரும் சூழலில் ராமதாஸின் ரஜினி ஆதரவுப் பேச்சுகள் பலவிதமாக திரித்துக் கூறப்பட்டாலும், நாம் அதுபற்றிக் கவலைப்பட வேடியதில்லை. அவர்களுக்கான பதிலை ராமதாஸே கூறிவிடுவார்.

ஒரு ரஜினி எதிர்ப்பாளராக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த ராமதாஸ், தன்னை எதிர்த்து 2004 பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் சொல்லி பகிரங்கமாகக் குரல் கொடுத்தவர் ரஜினி என்பதையும் தாண்டி அவரைப் பாராட்டியிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

இன்றைய தட்ஸ்தமிழ் இணையதளத்தில் அவர் அளித்துள்ள பேட்டி தமிழ் மக்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி. ஆனால் அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற பொது நியதியை மனதில் கொண்டு தொடர்ந்து படியுங்கள் (ரஜினி பற்றி டாக்டர் கூறியவற்றை மற்றும் இங்கே பிரசுரித்துள்ளோம். முழுமையாகப் படிக்க www.thatstamil.com-ஐக் கிளிக்கவும்!)

ரஜினியைப் பாராட்டுகிறேன்! -டாக்டர் ராமதாசு

-ஷங்கர்

அட... என பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சமீபத்தில் ரஜினி பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்து வரும் பேட்டிகள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், நடிகர் ரஜினிக்கு இருக்கும் மன உறுதியும் தைரியமும் கூட கருணாநிதிக்குக் கிடையாது எனவும் சமீபத்தில் கூறியிருந்தார் ராமதாஸ்.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் எந்த எதிர்மறைக் கருத்தும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை.

ரஜினியின் நேர் எதிரியாகக் கருதப்பட்டு வந்த ராமதாஸ் மற்றும் அவரது மகனும் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ஆகியோர் திடீரென ரஜினியைப் பாராட்டத் துவங்கியிருப்பது ஏன்...

இந்தக் கேள்வியை டாக்டர் ராமதாசிடமே கேட்டோம். தட்ஸ்தமிழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் அதற்கான பதிலைத் தெரிவித்தார் ராமதாஸ்.

பேட்டி விவரம்:

ரஜினிக்கு உங்களிடமிருந்து கிடைத்துள்ள இந்த திடீர் பாராட்டின் பின்னணி என்ன?

இதிலென்ன பெரிய பின்னணி இருக்கிறது... யாரையும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் அரசியலை நான் ஒருபோதும் நடத்தியவனில்லை. நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்டுபவன் இந்த ராமதாஸ்.

இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ரஜினி வரமாட்டார் என்றெல்லாம் பலர் சொல்லிக் கொண்டிருந்தபோது பொறுப்புடன் உண்ணாவிரதம் முடியும் வரை இருந்து, மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்திருந்த ரஜினியைப் பாராட்டியதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு தமிழன் என்ற முறையில், தமிழர்களுக்கு ஆதரவு எங்கிருந்து கிடைத்தாலும் அதை ஏற்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். எனக்கு உண்மையிலேயே ரஜினியின் பேச்சு ஆச்சரியத்தையும், பிரச்சினையை அவர் சரியாகப் புரிந்து கொண்டு பேசியது மகிழ்ச்சியையும் அளித்தது.

போர்க் களத்தில் துன்புற்று அடிபட்டுக் கிடக்கும் தமிழர்கள் அனைவருக்கும் ஒத்தடம் கொடுப்பது போலிருந்த அவரது பேச்சை நான் மட்டுமல்ல, தமிழுணர்வாளர்கள் அனைவருமே வரவேற்கிறார்கள்.

அதேபோல பாமகவின் வேண்டுகோளுக்கிணங்கி திரைப்படங்களில் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளையே நீக்கியிருக்கிறார். இன்றைக்கு உள்ள சின்ன நடிகர்கள் கூட, நீ சொல்லி நாங்க என்ன திருந்தறது என்று கேட்கும் நேரத்தில், இவர் எங்கள் கோரிக்கையை ஏற்றுத்தான் திரைப்படத்தில் அத்தகைய காட்சிகளை வைக்காமல் தவிர்ப்பதாக வெளிப்படையாகக் கூறியது பாமகவின் வெற்றிதானே... நாம் சொன்னதை அவர் மதித்து நடந்து கொண்டார். அதற்கும் திட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா...

ரஜினிக்குள்ள தைரியம் கருணாநிதிக்குக் கூட இல்லை என்று கூறியிருக்கிறீர்களே...?

நான் எதையும் மறைத்துப் பேசவில்லையே... உண்மையில் அன்று ரஜினியின் பேச்சில் இருந்த துணிச்சலும் தெளிவும் ஒரு மாநில முதல்வரான கருணாநிதிக்குக் கூட இல்லை (குறிப்பு: இந்தப் பேட்டி அவர் இரு தினங்களுக்கு முன்பு அளித்தது). இதை இப்போதும் நான் மறுக்கவில்லை.

இலங்கை அரசு தன் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கூறிய விதம் தமிழர்களின் வெற்றியை பிரபலப்படுத்தியிருக்கிறது. இதைக்கூட இங்குள்ள ஆட்சியாளர்கள் சொல்ல பயப்படுகிறார்களே... சிங்கள அரசின் பேடித்தனத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார் ரஜினி. முதல் முறையாக அவரது நட்சத்திர அந்தஸ்து ஒரு மிகச் சரியான காரணத்துக்காகப் பயன்பட்டிருப்பதில் மகிழ்ச்சியே.


ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்கள், அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பது போன்றவை குறித்து...?

அதில் நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லையே... அவர்களுக்குள் நடக்கிற பேச்சுக்களை ஒரு பொது நிகழ்வாக்க நான் விரும்பவில்லை. அவர்தான் இப்போதைக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாரே... அவர் வரும்போது பார்க்கலாம். ஆனால் குடும்பத்தை, வேலையைப் பாருங்கள் என்று அவரே சொன்ன பிறகும், இந்த இளைஞர்கள் வீணாகப் போவதுதான் என்னைப் போன்றவர்களின் கவலை.

ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் வந்து விட்டுப் போகட்டும். அதில் எங்களுக்கென்ன இருக்கிறது. ஆனால் பொதுவாகவே, நடிகர்கள் பின்னால் இந்த நாட்டு இளைஞர்கள் போவதை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

http://www.envazhi.com