
கமல்ஹாசனின் தசாவதாரம் இன்று 100-வது நாள் விழா கொண்டாடுகிறது. அதைப் பற்றி என்ன சொன்னாலும் விமர்சனமாகிவிடும் என்பது தெரியும். இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியாது நம்மால்.
ஆளவந்தானுக்குப் பிந்தைய கமல் படங்களில் ஹேராம், விருமாண்டி போன்றவை பேசப்பட்டாலும் வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவையே அவருக்குத் தந்தன.
பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ்... இந்த 10 ஆண்டுகளில் கமலின் தோல்விப் பட வரிசை அவரது சாதனைகளை மிஞ்சும் அளவுக்குப் பெரியதுதான்.
வேட்டையாடு விளையாடு ஓரளவுக்கு ஓடியது. இந்நிலையில் ஏகப்பட்ட குறைகள், லாஜிக் மீறல்களுடன் வந்தது தசாவதாரம். கமலும் அவற்றை மறுக்கவில்லை.
ஆனாலும் வசூல் ரீதியாக கமலுக்கு நிறைவைத் தந்த படம் தசாவதாரம்.
இன்று அந்தப் படத்தின் 100-வது நாள் விழா.
எப்படியும் ஒரு தியேட்டரிலாவது சில்வர் ஜூப்ளி கொண்டாடிவிடும் இந்தப் படம் என்ற நம்பிக்கை கமல் ரசிகர்களுக்கு.
இருக்கட்டும்...
தசாவதாரம் 100 நாள் கொண்டாடியதில் நமக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சச்சின் போன்ற படங்கள் 200 நாள் கொண்டாடும்போது தசாவதாரம் கொண்டாடக் கூடாதா என்ன...?
நம் விமர்சனம் கமல் மீதல்ல...
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் மீதுதான். அவருக்கு சிவாஜி படத்தின் பிரம்மாண்டம் மற்றும் வெற்றியைப் பார்த்து வந்த காய்ச்சல் இருக்கிறதே... அது டபுள் நிமோனியாவை விட அதிகம். அப்போதே தனது விஷமத்தனத்தை ஆரம்பித்துவிட்டார்.
சிவாஜியின் பிரமாண்டத்தை மிஞ்சும் விதத்தில் ஒரு படம் எடுக்கப் போகிறேன் என ஆரம்பித்து, ரஜினி படத்தை விட ஒரு ரூபாயாவது அதிக விலைக்கு என் படத்தை விற்பேன் (நான் கற்பனையாக சொல்லவில்லை... ஆதாரங்களோடுதான் சொல்கிறேன்!!) என்று சபதம் போட்டது வரை பல கதைகள் நமக்குத் தெரியும்.

ஆனால் அதற்கும் இவருக்கு சிவாஜிதான் வழிகாட்டியது. பின்னே... இவரிடம் ஏது சொந்த சரக்கு... இவர் கம்பெனி பேனரே காப்பிதானே. அதற்காக அமெரிக்காவின் ஆஸ்கார் அகாடமி இவரைக் காய்ச்சி எடுத்ததும், பிறகு அந்த பெயரை இவர் இழந்ததும் தனிக்கதை. அது முழுமையாக நமக்கும் தெரியும், பிறகு சொல்கிறேன்.
இப்போது சிவாஜியைவிட தசாவதாரம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறிவருகிறார் இந்த ‘வெறும்’ ரவிச்சந்திரன்.
அது உண்மைதானா...
சில விவரங்கள்:
சென்னையில் 6 திரையரங்குகளில் தசாவதாரம் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வெளியே மாயாஜாலில் தொடர்ந்து 100-வது நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.
சிவாஜி உலகமெங்கும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களைத் தாண்டியது, நல்ல வசூலுடன்.
உலகெங்கும் 121 திரையரங்குகளில் 100-வது நாள் விழாவைக் கொண்டாடிய ஒரே இந்தியத் திரைப்படம் சிவாஜி மட்டுமாதான் (சிவாஜி தமிழ் 108 திரையரங்குகளில் 100 நாள், தெலுங்கு 13 திரையரங்குகள்).
வெளிநாடுகளில் ஓரிரு வாரங்களைத் தாண்டுவதே இந்தியத் திரைப்படங்களுக்கு பெரும் சிரமம். ஆனால் 16 வெளிநாட்டுத் திரையரங்குகளில் சிவாஜி 100 நாட்களைக் கடந்து ஓடியது.
மலேஷியா – 6 தியேட்டர்கள்
சிங்கப்பூர் – 2 தியேட்டர்கள்
அமெரிக்கா – சியாட்டில் சிட்டி
மஸ்கட் – ரூபி சினிமா
தென்னாப்பிரிக்கா – 2 தியேட்டர்கள்
கனடா – 2 தியேட்டர்கள்
இலங்கை – கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 100 நாள்
சிவாஜி வெள்ளி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
சென்னை: பால அபிராமி – பகல் காட்சி (சென்னையில் 17 தியேட்டர்களில் ரிலீசாகியிருந்தது)
காஞ்சிபுரம்: பாபு – 4 காட்சிகள்
அம்பத்தூர்: ராக்கி – 4 காட்சிகள்
பெங்களூர் பிவிஆர் – 2 காட்சிகள்
மலேஷியாவில் சிவாஜியின் வசூல் சாதனை மகத்தானது. எட்டு வார கலெக்ஷன் மட்டும் 2,422,788 டாலர்கள். கிட்டத்தட்ட ரூ. 11 கோடியே 63 லட்சம்!
ஆனால் தசாவதாரம் வசூல் 7 கோடியே 80 லட்ச ரூபாய்தான்.
பிரிட்டன் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே திரைப்படம் சிவாஜி மட்டுமே. முதல்வாரம் 9-ம் இடத்தில் இருந்தது சிவாஜி. பிரிட்டனில் மொத்தம் ஏழு வாரங்கள் ஓடியது சிவாஜி. மூன்றாவது வார முடிவில் சிவாஜியின் வசூல்: 5 கோடியே 74 லட்சம் ரூபாய்.
ஆனால் தசாவதாரம் டாப் டென் வரிசைக்குள்ளும் வரவில்லை. வசூலித்ததோ: 4 கோடி ரூபாய்தான், அதுவும் கடைசிநாள் தூக்கப்படும் வரையிலான வசூல்!

எல்லாம் சரி... இந்தப் படம் எதுக்குன் னுதானே கேக்குறீங்க... தசாவதாரம் 100-வது நாள் விழா கொண்டாட்ட லட்சணம்...(நன்றி அருண்) உலகத்தரம் கொடிகட்டிப் பறக்குதுல்ல, மொழியிலும், கலாச்சாரத்திலும்!!
நன்றி: www.rajinifans.com,



