ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கிட்டத்தட்டமுழுமையான பதிலை ரசிகர்களுக்கு அவர் தந்திருக்கிறார். 'கண்ணா நான் வரும்போது உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்... அதுவரை உன் விருப்பப்படி இரு... அவசரப்படாதே!' - இதுதான் அவர் பாணியில் இந்த அறிக்கைக்கு அர்த்தம்!

தனக்காகக் காத்திருக்க முடியாமல் அவசரப்படும் ரசிகர்கள் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்பதே தன் ரசிகர்களுக்கு அவர் சொல்லியிருக்கும் செய்தி. மற்றபடி தன் பெயரில் கட்சி, தனிக் கொடி என்றெல்லாம் எல்லை மீறுபவர்கள் மீது நிச்சயம் சட்டப் பூர்வ நடவடிக்கை உண்டு என்று எச்சரித்துள்ளார்.
என்னை அரசியலுக்கு வருமாறு யாரும் வற்புறுத்தவும் முடியாது, அதே நேரம் வந்தால் யாரும் தடுக்கவும் முடியாது. அப்படி நான் வரும்போது என் ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை என்னுடன் இணைத்துக் கொள்வேன், என ஒரு அசத்தல் பன்ச் வைத்து அறிக்கையை முடித்திருக்கிறார் ரஜினி.
ரஜினி அறிக்கையின் சுருக்கம்:
அண்டை மாநிலங்களிலும் தமிழகத்திலும் சக நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருப்பதும், அதன் விளைவாக என் ரசிகர்கள் நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம் எனக்கு நன்றாகப் புரிகிறது.
அரசியல் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான கட்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
என் பெயரில் கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் எனது ரசிகர்களோ மற்றவர்களோ ஈடுபடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ]
...இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியலுக்கு வருமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது. அப்படி துவங்கும் நிலையில் நான் இருந்தால் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழைத்துக் கொள்வேன், என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை அப்படியே இங்கு முழுமையாக தரப்பட்டுள்ளது. பெரிதாக்கிப்படிக்கவும்.
http://www.envazhi.com



