Showing posts with label ரஜினி பேரக் கேட்டாலே.... Show all posts
Showing posts with label ரஜினி பேரக் கேட்டாலே.... Show all posts

Thursday, November 27, 2008

ரஜினி பேரக் கேட்டாலே...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் டாக்டர் காயத்ரி சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியிட்டது நினைவிருக்கும்.
இதன் தமிழ்ப் பதிப்பு ரஜினி பேரைக் கேட்டாலே... எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) வெளியிடப்படுகிறது.

கனிமொழி எம்பி முதல் பிரதியை வெளியிட, சவேரா குரூப்ஸ் சேர்மன் நீனா ரெட்டி பெற்றுக் கொள்கிறார். (விழா நடக்குமிடம், மற்ற விவரங்கள் முழுமையாக அழைப்பிதழில்)
இந்த விழாவின் சிறப்பு, எழுத்தாளர் – கார்டூனிஸ்ட், எல்லாவற்றுக்கும் மேல் ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவரான மதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து

கொள்கிறார்.

மற்றொரு சிறப்பு விருந்தினர் ரஜினி ரசிகர்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே கருதப்படும் எஸ்பி முத்துராமன். விழாவை இறைவணக்கம் பாடித் துவக்கி வைப்பது யார் தெரியுமல்லவா... விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்!

ஆங்கிலப் புத்தகத்தில் சில பிழைகள் இருந்தன. அவற்றை விழா நடந்து கொண்டிருக்கும்போதே, காயத்ரியின் பிஆர்ஓ நிகில் மூலம் முதல்முறையாக நாம்தான் சுட்டிக் காட்டினோம். பின்னர் ஏராளமான ரசிகர்களும் அதுகுறித்து கடிதங்களும் மின்னஞ்சல்களும் அனுப்பியிருந்தனர்.

அதனடிப்படையில் இப்போது பல்வேறு பிழைகள் திருத்தப்பட்டு, முழுமையான புத்தகமாக, தமிழில் சூப்பர் ஸ்டாரின் முதல் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் எனும் சிறப்போடு வெளிவருகிறது ரஜினி பேரக் கேட்டாலே...!

இந்த விழாவில் ரஜினிக்கு நெருக்கமான இன்னும் சில விவிஐபிக்களும் கடைசி நேரத்தில் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது!
http://www.envazhi.com